Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் தோழி .......!!

Featured Replies

29803019299630071js.gif

தோல்வி எனைத் தொடும் முன்னே

தோழமையுடன் தோள் கொடுப்பாயடி.

கவலைகள், மனதை காயப்படுத்தும் முன்னே

காயத்தை ஆற்றும், மருந்தாக, வருவாயடி,,,!

ஒரு நாள் பேசாவிட்டால்

ஒரு ஜென்மம் போனதடி - என

நீ துடிப்பதை நான் நன்கு அறிவேனடி!

நினைவினில் நிஜமானவளே - என்

கனவிலும் கரைந்தாயடி..

என் தோழி என்ற உரிமையுடனே

உன் தோளில் சாய்வேனடி..

உன் சிநேகிதி என்ற உரிமையுடனே

உனை நான் அதிகாரமும் செய்வேனடி!

என் ஒற்றை விழியாக

என் தோழி ,- நீ

என்னில்,

என்றுமே வாழ்வாயாடி.. !

ஆகா அனி தோழியை பற்றிய கவிதை அருமை அதுவும் அந்த படங்கள் இன்னும் சூப்பர். வாழ்த்துக்கள்.

தோல்வி எனைத் தொடும் முன்னே

தோழமையுடன் தோழ் கொடுப்பாயடி.

கவலைகள்இ மனதை காயப்படுத்தும் முன்னே

காயத்தை ஆற்றும்இ மருந்தாகஇ வருவாயடிஇஇஇ!

அழகான வரிகள். உங்களுக்கு நல்லதொரு கிடைத்திருக்கின்றா. கொடுத்து வைத்தவர்.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் அனிதா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை அனித்தா.

படங்களும் பரவாயில்லை. எம்மவர் படங்களை இணைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

தோழி கவிதை நல்லா இருக்கு. யாரந்த தோழி? நான் தானே :P :P :P

தோழி கவிதை நல்லா இருக்கு. யாரந்த தோழி? நான் தானே :P :P :P

ஆகா..தோழிக்கு ஒரு கவி..அழகா இருக்கு அனி..படங்களும் சூப்பர் :P தொடருங்கள் :arrow:

தோழி கவிதை நல்லா இருக்கு. யாரந்த தோழி? நான் தானே

ஹிஹி..இது என்ன எதிரொலியா..இல்லை கோர்ட்டா? ஒண்டுக்கு ரண்டு தடவை கேட்கிறீங்க நிலா.. :roll: :wink:

ஆஹா... படங்களும் கவிதையும் அருமை...தொடர்ந்து எழுதுங்கள் :lol: 8)

  • தொடங்கியவர்

ஆகா அனி தோழியை பற்றிய கவிதை அருமை அதுவும் அந்த படங்கள் இன்னும் சூப்பர். வாழ்த்துக்கள்.

நன்றி ரசி அக்கா.... :P

அழகான வரிகள். உங்களுக்கு நல்லதொரு கிடைத்திருக்கின்றா. கொடுத்து வைத்தவர்.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் அனிதா.

ம்ம்... உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்,ரமா அக்கா...! :lol:

நல்ல கவிதை அனித்தா.

படங்களும் பரவாயில்லை. எம்மவர் படங்களை இணைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

நன்றி செல்வமுத்து அங்கிள்...! :P ... ம்ம் படங்கள் தேடினன் ஆனா பெருசா ஒன்னும் கிடைக்கல அதால இந்த படங்களை இணைத்தேன்...! 8)

  • தொடங்கியவர்

தோழி கவிதை நல்லா இருக்கு. யாரந்த தோழி? நான் தானே :P :P :P

:P :P :P .... ம்ம் நன்றி வெண்ணிலா....ம்ம் நீங்களும் என் தோழி தானே....! :lol:

ஆகா..தோழிக்கு ஒரு கவி..அழகா இருக்கு அனி..படங்களும் சூப்பர் தொடருங்கள் ..!

ம்ம் தோழிக்கு ஒரு கவி... :wink: நன்றி சகி ... :P

ஹிஹி..இது என்ன எதிரொலியா..இல்லை கோர்ட்டா? ஒண்டுக்கு ரண்டு தடவை கேட்கிறீங்க நிலா..

ஹிஹி சகி ... நானும் இதைத்தான் கேக்கனும் எண்டு இருந்தன் .. நிலா அடிக்கடி இப்படித்தான் இரண்டுதரம் தான் கிளிக் பண்ணுறா...என்ன ஆச்சு நிலாக்கு.... :wink: :wink: :lol:

ஆஹா... படங்களும் கவிதையும் அருமை...தொடர்ந்து எழுதுங்கள்

நன்றி கௌரி பாலன்....! :lol:

மேற்கோள்:

என் ஒற்றை விழியாக

என் தோழி ,- நீ

என்னில்,

என்றுமே வாழ்வாயாடி..

மற்ற விழி நீங்கள் என்று - நட்புக்கு - நிறைய பேசாமல் -உதாரணம் !

ஆகா அனிதா - பின்னிட்டிங்களே! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் அனித்தா.. உங்கள் அன்புத்தோழிக்கக நீங்கள் வரைந்த உங்கள் கவி நன்றாக இருக்கிறது. உங்கள் தோழமை வாழ வாழ்த்துக்கள். நல்ல கிரபிக்ஸும் செய்கிறிங்க... செல்வ முத்து அங்கிள் சொன்னமாதிரி நம்மவர் படங்களை இணைத்திருக்கலாமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் அன்புத்தோழிக்கான காட்சியும் கவிதையும்

நன்றாக உள்ளது. நட்பின் வலிமை தெரிகிறது.

வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

மேற்கோள்:

என் ஒற்றை விழியாக

என் தோழி ,- நீ

என்னில்,

என்றுமே வாழ்வாயாடி..

மற்ற விழி நீங்கள் என்று - நட்புக்கு - நிறைய பேசாமல் -உதாரணம் !

ஆகா அனிதா - பின்னிட்டிங்களே! 8)

உங்கள் கருத்துக்கும் நன்றி வர்ணன்... :)

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் அனித்தா.. உங்கள் அன்புத்தோழிக்கக நீங்கள் வரைந்த உங்கள் கவி நன்றாக இருக்கிறது. உங்கள் தோழமை வாழ வாழ்த்துக்கள். நல்ல கிரபிக்ஸும் செய்கிறிங்க... செல்வ முத்து அங்கிள் சொன்னமாதிரி நம்மவர் படங்களை இணைத்திருக்கலாமே.

வாழ்த்துக்களுக்கு நன்றி விஸ்ணு.. ம்ம் .. படங்கள் தேடினன்பா கிடைக்கல... :roll:

உங்கள் அன்புத்தோழிக்கான காட்சியும் கவிதையும்

நன்றாக உள்ளது. நட்பின் வலிமை தெரிகிறது.

வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்ருதி...!

தோழி கவிதை நன்றாக இருக்கிறது. கிராபிக்ஸ் வேற செய்து கலக்குறீங்க வாழ்த்துக்கள்.

நீங்க கவிதையை குறிப்பிட்டிருக்கும் தோழி இதை படிச்சு சந்தோஷப்பட்டிருப்பார் என்று நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழிக்காக எழுதிய கவிதை நல்லா இருக்கு..அனி...வாழ்த்துக்கள்....

  • தொடங்கியவர்

தோழி கவிதை நன்றாக இருக்கிறது. கிராபிக்ஸ் வேற செய்து கலக்குறீங்க வாழ்த்துக்கள்.

நீங்க கவிதையை குறிப்பிட்டிருக்கும் தோழி இதை படிச்சு சந்தோஷப்பட்டிருப்பார் என்று நினைக்கிறன்.

நன்றி மதண்... ஹும் சும்மா செய்து பார்த்தன்.... :D

ம்ம் என் தோழி ரொம்ப சந்தோசப் பட்டவள் கவிதையை பார்த்திட்டு... :P

சரி எங்க அடிக்கடி காணாமல் போகுறீங்க மதண் ? :roll:

  • தொடங்கியவர்

தோழிக்காக எழுதிய கவிதை நல்லா இருக்கு..அனி...வாழ்த்துக்கள்....

நன்றி ஜெனனி அக்கா... :P

அனித்தா,

தோழியைப் பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது.

எங்கேயோ வாசித்த ஒரு கூற்று உங்களிடமே கருத்தக் கேட்கிறேன். திருமணத்தின் பின்னர் ஆண்களளவுக்குப் பெண்கள் நண்பிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில்லையாமே. உண்மையா? (மற்றவர்களும் கருத்துக்களைச் சொல்லலாம்.)

(அடடா! நாரதன் கலகத்தைத் தொடக்கி விட்டிட்டான்யா விட்டிட்டான்)

அன்புடன்

மணிவாசகன்

அனித்தா,  

தோழியைப் பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது.  

எங்கேயோ வாசித்த ஒரு கூற்று உங்களிடமே கருத்தக் கேட்கிறேன். திருமணத்தின் பின்னர் ஆண்களளவுக்குப் பெண்கள் நண்பிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில்லையாமே. உண்மையா? (மற்றவர்களும் கருத்துக்களைச் சொல்லலாம்.)

(அடடா! நாரதன் கலகத்தைத் தொடக்கி விட்டிட்டான்யா விட்டிட்டான்)

அன்புடன்

மணிவாசகன்

முந்திய காலத்தில்தான் அப்படி இப்ப அப்படி இல்லை. இளமைக்காலத்தில் உள்ள மாதிரி தொடர்பு வைக்காவிட்டாலும் முடிந்த அளவு தொடர்பு வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அத்துடன் ஆண்களை போல வெட்டியா சுத்த பெண்களுக்கு எங்க நேரம் இருக்கும். வேலை குழந்தை குட்டி எண்டு எத்தனை பிரச்சினைகள். அவர்கள் தொடர்புகள் வைக்காவிட்டாலும். அவர்கள் மனதில் தோழியூடனான நினைவுகள் எப்பவும் பசுமையாக இருக்கும்.

  • தொடங்கியவர்

அனித்தா,

தோழியைப் பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது

நன்றி மணிவாசகன்..!

அத்துடன் ஆண்களை போல வெட்டியா சுத்த பெண்களுக்கு எங்க நேரம் இருக்கும். வேலை குழந்தை குட்டி எண்டு எத்தனை பிரச்சினைகள். அவர்கள் தொடர்புகள் வைக்காவிட்டாலும். அவர்கள் மனதில் தோழியூடனான நினைவுகள் எப்பவும் பசுமையாக இருக்கும்.

ஹிஹி சரியா சொன்னீங்கள் ரசி அக்கா.... :wink:

அதை விட பெண்கள் கல்யாணம் கட்டினால் பிறகு கணவன் இருக்குற இடத்தில் தானே வாழ்க்கை ,அப்படி செல்வதினாலும் ஒன்றாக படித்த நெருங்கிய தோழிகளை பிரிய நேரிடுகிறது.. அப்படி பிரிந்து சென்றாலும் டெலிபோனிலாவது கதைக்கினம் , நேரம் கிடைக்கும் போது சந்தித்துக் கொள்ளினம் எண்டுதான் நான் சொல்லுவன்.. உண்மையான நெருங்கிய தோழியாக இருந்தால் , நிச்சயம் தொடர்பு இல்லாமல் இருக்க மாட்டினம், அப்படி அந்த தோழி எங்கு இருக்குறாள் எண்று தெரியாவிட்டாலும் , அவளுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயலுவினம். எப்படி அப்படி தொடர்பே இல்லாமல் இருப்பது என்னால முடியாதுப்பா... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் தோழமை என்றும் தொடரட்டும்.. அனி ஓவியம் வரைவதில் வல்வர் என்று பாத்தால் நல்லாய் படங்களை இணைத்து அசத்திறியள்.. அது சரி என்ன மென்பொருள் பாவிக்கிறியள் (என்ர குணத்தை காட்டீட்டனா. நம்ம புழைப்பே அதுவாச்சே என்ன பண்ண.)

தோழிகளை பல காரணங்கள் பிரிச்சாலும் அவற்றை சாக்காய் வைத்து தொடர்பின்றி இருப்பதை விட.. முயற்சித்து கடித தொடர்பாவது வைத்திருக்கலாம்.. வருடங்கள் எத்தனை போனாலும் தோழமை மாறுமா என்ன..?? பசுமையான நினைவுகளில் அத்தனை சுகம் இருக்கும்.. :(

வாழ்த்துக்கள் அருமையான கவிவரிகள்

நட்பு என்ற உறவு புனிதமானது அது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் எடுப்பார்கள் சிலபேர் தங்கள் சுய நனலத்துக்காக கூட நட்பை பயன்னடுத்துவார்கள்

உங்கள் புனிதமான நட்பு என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்

ஒரு நாள் பேசாவிட்டால்

ஒரு ஜென்மம் போனதடி - என

நீ துடிப்பதை நான் நன்கு அறிவேனடி!

நினைவினில் நிஜமானவளே - என்

கனவிலும் கரைந்தாயடி..

தோழியைப்பற்றி வடித்த கவிதை மிகவும் அருமை நன்றிகள் அனிதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.