Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒழுங்காய்ச் சுற்றத் தொடங்கிவிடும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ஆண்டு மூன்றுகள் ஓடி மறைந்தது

அத்தனை அவலம் நடந்து முடிந்தது

எத்தனை அழிவுகள் எம்மினம் கண்டது

இன்னும் தான் எனக்கு [/size][size=5]மறக்கவில்லை

பண்பட்டு நாங்கள் பயணித்தோம்

பார் புகழ நாம் பார்த்திருந்தோம்

பச்சை வயல்களாய் எம் வாழ்வு

பரந்திருந்ததாய்க் கனவு கண்டோம்

பெண்ணின் சுதந்திரப் பெருமை கண்டோம்

போரில் அவர்தம் வீரம் கண்டோம்

எண்ணிலடங்கா எக்களிப்பில்

எதிரி அறியாதிருந்துவிட்டோம்

வண்ணக் கோலம் நாம் போட்டு

வட்டத்துள்ளே நாம் நின்றதனால்

எதிரி போட்ட கோலத்தை

எட்டிப் பார்க்க மறந்துவிட்டோம்

மானம் தானே பெரிதென

மாண்டுவிடும் மாண்புமிக்க

மானர்குலத் தமிழர் நாம்

மாளாதின்னும் இருக்கின்றோம்

எங்கள் நிலத்தை எடுப்பவனை

எங்கள் பெண்ணை வதைப்பவனை

ஏதும் செய்யாத் துணிவோடு

ஏனோ இன்னும் இருக்கின்றோம்

பாலுக்கழும் பாலகனுக்காய்

பிணம் தின்னும் பேய்களுக்குப்

பலியாகும் பெண்களுக்குப்

பார்த்திருக்கும் நீ என்ன செய்தாய்

அங்கம் இழந்து அரைப் பசியோடு

ஆட்கள் ஆயிரம் அங்கிருக்க

ஆடம்பரமாய் இங்கு நீ

ஆட்டம் போட்டுக் களிப்பதென்ன

பேதைமை கொண்ட பேடித் தமிழா

பெண்ணின் அடிமையாய்க் கிடந்தது போதும்

நாடே அற்று நடைப் பிணமாய்

நாங்கள் இன்னும் வாழ்ந்தது போதும்

ஊர் கூடி உலகு கூடி

உணர்வு கொண்டு நம் எழுந்திட்டால்

உலகம் கூட எமைக் கண்டு

ஒழுங்காய்ச் சுற்றத் தொடங்கிவிடும் [/size]

அங்கம் இழந்து அரைப் பசியோடு

ஆட்கள் ஆயிரம் அங்கிருக்க

ஆடம்பரமாய் இங்கு நீ

ஆட்டம் போட்டுக் களிப்பதென்ன

பேதைமை கொண்ட பேடித் தமிழா

பெண்ணின் அடிமையாய்க் கிடந்தது போதும்

நாடே அற்று நடைப் பிணமாய்

நாங்கள் இன்னும் வாழ்ந்தது போதும்

ஊர் கூடி உலகு கூடி

உணர்வு கொண்டு நம் எழுந்திட்டால்

உலகம் கூட எமைக் கண்டு

ஒழுங்காய்ச் சுற்றத் தொடங்கிவிடும்

சுமே........... இப்ப சரியா சுத்தத் தொடங்கியிருக்கிறியள் , சாட்டையை . இதைப்போல் மேலும் மேலும் பல கவி படைக்க எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர்,

பெண்களின் வேதனையைச் சொல்ல பெண்கள் எழவேண்டும். பெண்கள் எழாதவரை பெண்களுக்கு வேதனை இல்லை என்றுதானே அர்த்தம். :(

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர் அக்கா,

மாற்றம் என்பது என்னிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அந்த மாற்றத்தை வேண்டுகிற உங்கள் எழுத்துக்கு உதாரணமாய் உங்கள் உதவிகள் பலரை வாழ வைத்திருக்கிறது தொடர்ந்து வாழ வைக்கிறது. எல்லோரையும் வாவென்றழைக்கிற உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பதித்த அனைவருக்கும் நன்றி. செய்வதைச் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லைச் சாந்தி.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மானம் தானே பெரிதென[/size]

[size=5]மாண்டுவிடும் மாண்புமிக்க[/size]

[size=5]மன்னர் குலத் தமிழர் நாம்[/size]

[size=5]மாளாதின்னும் இருக்கின்றோம்[/size]

இந்த மானமும், மாண்பும் தான் எமது மரணங்களுக்கும், அழிவுக்கும் காரணமானது என்பதே உண்மை!

எமது வளர்ச்சி கண்டு, எமது வரலாறு கண்டு, தமது எதிர்காலத்தை எண்ணிப் பயந்தவர்களால் தான் எமக்கு அழிவு ஏற்பட்டது!

இது வெறும் தற்புகழ்ச்சியல்ல. இது தான் உண்மை!

நாம் எந்தத் திசையில் நகர்ந்திருந்தாலும், எமது மறவர் குலத்தை எப்படியும், உலகம் அழித்தே முடித்திருக்கும்!

தனித்துவம் வேண்டி நிற்கும், எந்த இனத்திற்கும், எமது போராட்டத்தின் அழிவு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவே 'முள்ளிவாய்க்கால்' திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது!

தங்கள் கவிதையின் ஏக்கம் புரிகின்றது! நன்றிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கையூரன் கருத்திட்டமைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பெண்ணின் சுதந்திரப் பெருமை கண்டோம்

போரில் அவர்தம் வீரம் கண்டோம்

எண்ணிலடங்கா எக்களிப்பில்

எதிரி அறியாதிருந்துவிட்டோம்

வண்ணக் கோலம் நாம் போட்டு

வட்டத்துள்ளே நாம் நின்றதனால்

எதிரி போட்ட கோலத்தை

எட்டிப் பார்க்க மறந்துவிட்டோம்

மானம் தானே பெரிதென

மாண்டுவிடும் மாண்புமிக்க

மானர்குலத் தமிழர் நாம்

மாளாதின்னும் இருக்கின்றோம்[/size]

ஏமாந்தோமா..?ஏமாற்றப்பட்டோமா..?விடை தெரியாத விடுகதைகள் தொடர்கதையாய்..எல்லாவற்றையும் உதறி விட்டு தப்பி ஓடி வந்த எம் பாவங்களை கழுவவேண்டும்...

[size=4]அங்கம் இழந்து அரைப் பசியோடு

ஆட்கள் ஆயிரம் அங்கிருக்க

ஆடம்பரமாய் இங்கு நீ

ஆட்டம் போட்டுக் களிப்பதென்ன

பேதைமை கொண்ட பேடித் தமிழா

பெண்ணின் அடிமையாய்க் கிடந்தது போதும்

நாடே அற்று நடைப் பிணமாய்

நாங்கள் இன்னும் வாழ்ந்தது போதும்

ஊர் கூடி உலகு கூடி

உணர்வு கொண்டு நம் எழுந்திட்டால்

உலகம் கூட எமைக் கண்டு[/size]

ஒழுங்காய்ச் சுற்றத் தொடங்கிவிடும்

நன்றி சுமேரியர் அக்கா கவிதைக்கு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுபேஸ் கருத்துக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.