Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லை, கிளி மாவட்டங்களில் இராணுவத்தினருக்கு தமிழ் யுவதிகளை கட்டாய திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முல்லை, கிளி மாவட்டங்களில் இராணுவத்தினருக்கு தமிழ் யுவதிகளை கட்டாய திருமணம்
சிறீலங்கா | ADMIN | DECEMBER 15, 2012 AT 22:38
 
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைப்பகுதியிலுள்ள சில கிராமங்களில் கட்டாயப்படுத்தி இராணுவத்தினருக்கு தமிழ் யுவதிகளை திருமணம் செய்து கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக தெரியவருகின்றது.
மிகவும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த தகவல் குறித்து தமிழ் அரசியல் தலைமைகள் அறிந்திருக்காமை மிகவும் ஆபத்தானது என சமுக ஆர் வலர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
குறிப்பாக இவ்விரு மாவட்டங்களினதும் எல்லைப்பகுதியிலுள்ள விசுவமடு, பிரமந்தனாறு, குமாரசாமிபுரம், போன்ற கிராமங்களில் சுமார் 100பேருக்கு ஒரு பெண் இராணுவச் சிப்பாயை திருமணம் முடித்திருப்பதாக சில ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
மேலும் இராணுவச் சிப்பாயை குடும்பத் தலைவராக கொண்டு இந்தக் குடும்பங்களுக்கு குடும்ப பங்கீட்டு அட்டைகளும் வழங்கப்பட்டிருப்பதுடன், இவ்வாறு இராணுவச் சிப்பாய்களைத் திருமணம் முடித்துக்கொண்ட குடும்பங்களுக்கு அதிக வசதி வாய்ப்புக்களும் செய்து கொடுக்கப்படுகின்றது.
எனினும் இந்த திருமணங்கள் அனைத்தும் இராணுவத்தினரின் கட்டாயத்தின் பெயரிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
மேலும் இந்த நடவடிக்கை ஒரு திட்டமிட்ட இனக்கலப்பிற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவும் அமைந்திருக்கின்றது.

பாதிக்கப்பட்ட எம்மின மக்களின் வாழ்க்கை தொடர்பாக செயல்பட்டோமா? சொந்த இனத்தின் விடுதலை காட்டி மற்றவர்களின் காசை அடிப்பவர்கள், அடித்தவர்கள் தங்களுக்குள் அடிபட்டு தொலைந்தே போவார்கள்.

பாதிக்கப்பட்ட எம்மின மக்களின் வாழ்க்கை தொடர்பாக செயல்பட்டோமா? சொந்த இனத்தின் விடுதலை காட்டி மற்றவர்களின் காசை அடிப்பவர்கள், அடித்தவர்கள் தங்களுக்குள் அடிபட்டு தொலைந்தே போவார்கள்.

 

இந்த கருத்திற்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு? நன்றிகள்.

போராட்டத்திற்குச் சேர்த்த பணத்தை அந்தப் அந்த மக்களுக்கு, பெண்களிற்கு கொடுத்திருந்தால், அவர்கள் ஏழ்மையில் வாடியிருக்க மாட்டார்கள். காலம் போகும் மட்டும் பார்த்திருந்து அவர்களின் வயிற்றில் அடிக்கக் கூடாதென்பதே கருத்து.

தலைப்பிற்கு மாத்திரம் கருத்து எழுதுவதென்று ஏதும் கட்டாயம் உள்ளதா? இந்தத் தலைப்பிற்கான காரணத்தையும் ஆராய வேண்டும்.

போராட்டத்திற்குச் சேர்த்த பணத்தை அந்தப் அந்த மக்களுக்கு, பெண்களிற்கு கொடுத்திருந்தால், அவர்கள் ஏழ்மையில் வாடியிருக்க மாட்டார்கள். காலம் போகும் மட்டும் பார்த்திருந்து அவர்களின் வயிற்றில் அடிக்கக் கூடாதென்பதே கருத்து.

 

சரி பணம் இருந்திருந்தால் அவர்களுக்கு யார் எவ்வாறு உதவி இருக்க முடியும்?

அது நிரந்தர உதவியாக இருந்திருக்குமா?

சேர்த்த பணத்தை அவர்களின் தொழிலுக்கு மூலதனமாக்கியிருந்தால் நிச்சயம் முடிந்திருக்கும்.

சேர்த்த பணத்தை அவர்களின் தொழிலுக்கு மூலதனமாக்கியிருந்தால் நிச்சயம் முடிந்திருக்கும்.

 

நான் சொல்லவந்தது என்ன என்றால், காசை ஒளித்து வைத்திருக்கின்றார்கள் என்பதை அதற்குரிய திரியில் கருத்தாடுவது ஆரோக்கியமானது அதற்காக அதை சம்பந்தமில்லாத இடத்தில் எழுதுவது இல்லை அதனால் தான் இன்று இந்த கட்டாய திருமணங்கள் நடக்கின்றது என கூறுவது தவறு என்பதே.

Edited by akootha

நிரந்தர உதவி என்பது தேவையில்லை. அவர்களை பொருளாதார ரீதியிலாவது சுயமாக வாழ வழி சமைத்திருக்கலாம்.

நிரந்தர உதவி என்பது தேவையில்லை. அவர்களை பொருளாதார ரீதியிலாவது சுயமாக வாழ வழி சமைத்திருக்கலாம்.

 

நிச்சயம் முடிந்திருக்காது.

நிச்சயம் முடிந்திருக்காது என்பது இப்பொழுது விளங்குகிறது. பணத்தைச் சேர்த்தவர்களே தங்களுக்குள் அடிபட்டுக் கொள்கிறார்களே. இதற்குள் போய் சேர்த்த காசை கொடு என்பது மகா முட்டாள்தனம் என்பதை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

நிச்சயம் முடிந்திருக்காது என்பது இப்பொழுது விளங்குகிறது. பணத்தைச் சேர்த்தவர்களே தங்களுக்குள் அடிபட்டுக் கொள்கிறார்களே. இதற்குள் போய் சேர்த்த காசை கொடு என்பது மகா முட்டாள்தனம் என்பதை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

 

தாயக மக்களுக்கு தேவை அரசியல் தீர்வே.

அவர்களுக்கு தங்களைத் தாங்களே சுயமாக ஆளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றே நிரந்தரத் தேவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே வேளை அவர்களை வைத்து யாரும் வியாபாரம் செய்யக் கூடாதென்பதும் முக்கியமானது. நன்றி.

அவர்களுக்கு தங்களைத் தாங்களே சுயமாக ஆளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றே நிரந்தரத் தேவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே வேளை அவர்களை வைத்து யாரும் வியாபாரம் செய்யக் கூடாதென்பதும் முக்கியமானது. நன்றி.

 

அவர்கள் வியாபாரம் செய்தால், செய்வது என்பது தவறு. அந்த தவறை அதற்கு உரிய முறையில் அணுகவேண்டும்.

 

மாறாக தாயகத்தில் நடக்கும் எல்லா பிரச்சனைக்கும் இந்த பதுக்கிய பணம் தீர்வாக அமைந்துவிடும் என்பது நியாயமற்றது.

 

நன்றி.

அந்தப் பணத்தைக் கொண்டு அதிகம் போரால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் வாழ்வை மாற்றி இருக்கலாம். போராட்டத்திற்குச் சேர்த்த பணத்தை போராளிகளுக்கு கொடுக்காமல் பதுக்கி வைப்பது கொடும் செயல். பதுக்கிய பணம் ஏதோ ஒரு வடிவில் பதுக்கியவர்களுக்கு வந்து சேரும்.

  • கருத்துக்கள உறவுகள்
ஆமாம் அகூதா எப்ப பார்த்தாலும் காசு சேர்த்தவர்களுக்கு ஆதரவாகவே கதைக்கிறீங்களே அது ஏன் என தெரிந்து கொள்ளலாமா?
தப்பிலி சொன்னதில் என்ன பிழை போராட்டத்திற்கு என சேர்த்த காசு போராட்டத்திற்கு தான் பயன்படுத்த முடியவில்லை...போராடியவர்களுக்காவது பயன்படுத்தலாம் தானே!
எல்லாத் தமிழரும் சிங்களவனாக கொஞ்சம்,கொஞ்சமாக மாறிக் கொண்டு இருக்கையில் அரசியல் தீர்வு,மண்ணாங்கட்டி என கதைப்பது கேவலமாய் இல்லை...முதலில் அதைத் தடுக்க வழி பாருங்கள்.பிறகு அரசியல் தீர்வு பற்றி பேசலாம்...முழுத் தமிழனையும் சிங்களவனாக மாற்ற சிங்களவன் முயற்சி செய்து கொண்டு இருக்கிறான் ஆனால் நாங்களோ அடிச்ச காசை பங்கு போடுவதிலும்,பதுக்கி வைப்பதிலும்,அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதிலும்,அரசியல் தீர்வு தான் உடனடியாக தேவை என சொல்லிக் கொண்டு காலத்தை கடத்துவோம்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அண்ணாவிடம் இது விடயத்தில் தெளிவான பார்வை உள்ளது.

 

புகலிடத்தில் இருந்து காசு போனா அது புலிக்காசு.

 

புகலிடத்தில் இருந்து உதவி போனா அது புலி உதவி.

 

புகலிடத்தில் இருந்து ஆட்கள் போனா அது புலி.

 

இப்படியான ஒரு சந்தேகக் கண்ணோடத்தில் உள்ள ஒரு அரசிடமும் அதன் இன அழிப்பு இராணுவத்திடமும் சிக்கி உள்ள மக்களை பணத்தால் மட்டும் மீட்க முடியாது.

 

கட்டாயத் திருமணங்களை எப்படி புகலிடத்தில் இருந்து போகும் பணம் தடுக்க முடியும்..????!

 

சில அடிப்படை விடயங்களைக் கூட புரிந்து கொள்ள முடியாமல்.. சிலர் சும்மா குறை சொல்லிக் கருத்தெழுதிறாங்க.. இதனால ஒரு பிரயோசனமும் இல்ல.

 

புகலிடத்தில் உள்ள பணத்தை வீண் விரயம் செய்ய முடியாது. அது சரியானவர்களை சரியான நேரத்தில் சென்றடைவதே துன்பப்படும் மக்களின் பொருண்மிய மீட்சிக்கு உதவும்.

 

இன்றைய நிலையில்.. ஆக்கிரமிப்பு இராணுவத்தை வைச்சுக் கொண்டு எதனையும் செய்ய முடியாது. அதனை அகற்றி மக்களின் சுதந்திர வாழ்விற்கு வழிவகுத்துக் கொடுத்துக் கொண்டுதான்... அடுத்த நகர்வுகளைச் செய்ய வேண்டி இருக்கும். தற்போதைக்கு தற்காலிக உதவிகளை ஓரளவு சுய பொருண்மியத்தை ஈட்டக் கூடிய உதவிகளை மட்டுமே புலம்பெயர் மக்களாலும் செய்ய முடியும். அந்த வகையில் எமக்கு எமது மண்ணில் ஒரு தீர்க்கமான அரசியல் முடிவு அவசியம்.

 

ஒரு வர்த்தக நிலையத்தை இயக்குவதில் கூட அரசியல்.. அரச ஆணைகள்.. சட்டங்கள் செலுத்தும் பங்களிப்பை விளங்கிக் கொள்ள முடியாத மக்கள் கூட்டத்தால் அகூதா அண்ணாவின் கருத்தை விளங்கிக் கொள்வது கடினமாகவே இருக்கும். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்
அகூதா அண்ணாவிடம் இது விடயத்தில் தெளிவான பார்வை உள்ளது.

 

புகலிடத்தில் இருந்து காசு போனா அது புலிக்காசு.

 

புகலிடத்தில் இருந்து உதவி போனா அது புலி உதவி.

 

புகலிடத்தில் இருந்து ஆட்கள் போனா அது புலி.

 

இப்படியான ஒரு சந்தேகக் கண்ணோடத்தில் உள்ள ஒரு அரசிடமும் அதன் இன அழிப்பு இராணுவத்திடமும் சிக்கி உள்ள மக்களை பணத்தால் மட்டும் மீட்க முடியாது.

 

கட்டாயத் திருமணங்களை எப்படி புகலிடத்தில் இருந்து போகும் பணம் தடுக்க முடியும்..????!

 

சில அடிப்படை விடயங்களைக் கூட புரிந்து கொள்ள முடியாமல்.. சிலர் சும்மா குறை சொல்லிக் கருத்தெழுதிறாங்க.. இதனால ஒரு பிரயோசனமும் இல்ல.

 

புகலிடத்தில் உள்ள பணத்தை வீண் விரயம் செய்ய முடியாது. அது சரியானவர்களை சரியான நேரத்தில் சென்றடைவதே துன்பப்படும் மக்களின் பொருண்மிய மீட்சிக்கு உதவும்.

 

இன்றைய நிலையில்.. ஆக்கிரமிப்பு இராணுவத்தை வைச்சுக் கொண்டு எதனையும் செய்ய முடியாது. அதனை அகற்றி மக்களின் சுதந்திர வாழ்விற்கு வழிவகுத்துக் கொடுத்துக் கொண்டுதான்... அடுத்த நகர்வுகளைச் செய்ய வேண்டி இருக்கும். தற்போதைக்கு தற்காலிக உதவிகளை ஓரளவு சுய பொருண்மியத்தை ஈட்டக் கூடிய உதவிகளை மட்டுமே புலம்பெயர் மக்களாலும் செய்ய முடியும். அந்த வகையில் எமக்கு எமது மண்ணில் ஒரு தீர்க்கமான அரசியல் முடிவு அவசியம்.

 

ஒரு வர்த்தக நிலையத்தை இயக்குவதில் கூட அரசியல்.. அரச ஆணைகள்.. சட்டங்கள் செலுத்தும் பங்களிப்பை விளங்கிக் கொள்ள முடியாத மக்கள் கூட்டத்தால் அகூதா அண்ணாவின் கருத்தை விளங்கிக் கொள்வது கடினமாகவே இருக்கும். :icon_idea::)

 

முதலில் கருத்தை வாசித்து கருத்தெழுதவும் உங்களைப் போல வேண்டும் என வீம்புக்கு கருத்தெழுதுபவர்களுக்கு பதில் எழுதி ஒரு பயனும் இல்லை...அகூதா வந்து எழுதட்டும் அதற்கு நான் பதில் எழுதுகிறேன்

அரசியல் தீர்வு கிடைக்கும் வரை காசு கதை கதைக்கவேண்டாம் ,இதைதான் திரும்ப திரும்ப சிலர் இங்கு சொல்லுகின்றார்கள் .அதாவது தாங்கள் கொள்ளையடித்த காசு எக்காலமும் திரும்பாது .

மனமிருந்தால் இடமுண்டு ,ஏன் நாடு கடந்த அரசே ஊரில் உள்ளவர்களுக்கு உதவி செய்கின்றார்கள் .என்னிடம் அவர்கள் தந்த விண்ணப்பம் இருக்கு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்துக்கு என்று மாத கொடுப்பனவுகளை கொடுக்க மறுத்தவர்களே, பெரும்பாலும் இங்கும், எங்கும், கணக்கு கேட்பதும் அதை பாற்றி பேசுவதுமாகவும் இருக்கிறது. கொடுத்தவன் போராளிகள் போய்விட்டார்களே என்று பெருமூச்செறிகிறன். அவர் அவருக்கு  அதன்மீதுதான் கவலை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு கேள்வி.. இதை உணர்ச்சிவசத்துடன் சிந்திக்காமல் தார்மீக நியாயத்தின்படி சிந்திக்கவும். :D

 

  • போர்க்காலத்தில் என்னிடம் ஒருவர் பணம் கேட்டு வருகிறார். நான் ஒரு $5000 தருகிறேன் என வைத்துக் கொள்வோம்.
  • போர் முடிந்தபின், நான் அவரிடம் செல்கிறேன். எனக்கு அந்தப் பணம் திருப்பித் தரப்பட வேண்டும் என்கிறேன்.
  • ஆனால் அந்தப் பணம் தாயகத்தில் செலவழிக்கப்படவேண்டும் என்கிறார்கள் வேறு சிலர்.
  • இந்தப் பணத்தை எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்பதில், எனக்கு உரிமை உள்ளதா?
  • அல்லது அந்த வேறு சிலருக்கு உரிமை உள்ளதா?
  • அல்லது காசை வைத்திருப்பவருக்கு உள்ளதா?

எனது பதில்..

 

காசை வாங்கியவர்கள் பதிவு செய்த அமைப்பாக இருக்கும் பட்சத்தில், அந்த அமைப்புக்கே பணம் சொந்தம். :blink:

 

பதிவு செய்யப்படாத அமைப்பென்றால் காசைக் கொடுத்தவருக்கே அதைக் கேட்கும் உரிமை இருக்கிறது. :rolleyes:

 

இதில் காசை தாயகத்தில் செலவழிக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு அவ்வாறு சொல்லுவதற்கு ஒரு உரிமையும் கிடையாது என்பது புலனாகிறது...! :icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பற்றி  எழுதமட்டுமே எனக்கு உரிமையுண்டு

 

இறுதி நிதிச்சேர்ப்புக்கு நான் கொடுத்தது

4 பூச்சியங்களைக்கொண்ட  தொகை.

 

அதை கொடுக்கும்போது மட்டுமே பேச்சுவார்த்தை  நடாத்தப்பட்டது

கொடுக்கப்பட்டது எதற்காக?

அது எவரிடம்  பொறுப்பளிக்கப்படுமாறு பொறுப்பிலுள்ளவரால்  கேட்கப்பட்டதோ

அவரிடமே அளிக்கப்பட்து

அத்துடன் அந்த தொகைக்கான எனது உரிமம் முடிவுக்கு வருகின்றது.

 

அது போய்ச்சேர்ந்ததா?

இல்லையா என எனக்கும் தெரியாது

 

ஆனால் இதுவரை அது பற்றி  ஒருவரிடமும் நான் கேட்டதில்லை

காரணம்

அதை பெற்றவரிடமும்  இல்லை என்பதும்

அதை அவர் ஒப்படைத்தவரிடமும்  அது இல்லை என்பதும்  எனக்குத் தெரியும்

 

அதற்கு அடுத்தவர் தலைவருக்கு மட்டுமே  தெரிந்த உண்மையானவர் அவர்.

 

எனவே எனக்கு தற்பொழுது அதற்கு அவசியமில்லை.

 

இங்கு முன்பு ஒருவர் எழுதியிருந்தார்

விசுகு அண்ணா போன்ற  பணக்காரர்களுக்கு அது தேவையற்றிருக்கலாம் என்று.

எனது தனிப்பட்ட  வாழ்க்கை பற்றி இதற்கு பதில் அளிக்காவிட்டாலும் இதற்கான பதிலை  இவ்வாறு எழுதலாம்

உலகின் முதற் பணக்காரரே   இன்னும் பணத்தை  ஓடிக்கொண்டிருக்கின்றார்.

எவரும்  பணத்தை குப்பைத்தொட்டியில்  போடுவதில்லை.      அது என்றுமே எவருக்குமே பெறுமதியானது தான்.

 

மற்றும்படி கொடுத்தவர்களுக்கு கேட்க உரிமையுண்டு.  அந்தவகையில் அவர்கள் எவரிடம் கொடுத்தார்களோ அவர்களிடம் இதற்கான பதிலைப்பெறமுடியும்.

இணையங்களில் இது பற்றி  எழுதுபவர்கள் அவர்களுடன் தொடர்பற்றவர்கள்.  அதாவது கொடுக்காதவர்கள் மட்டுமே.

 

 

ஒருமுறை

ஒரு வயதானவர் தனது  மகனுடன் பிரச்சினைப்பட்டு  காவல்துறையிடம் வந்தபோது

தனது வீட்டை விற்று வாழலாம் என எழுதியிருந்தேன்.  அதற்கு  அர்யூன்  சொத்தை விற்று சாப்பிடச்சொல்ல  உங்களுக்கு வெட்கமாக இல்லை என்பது போல் எழுதியிருந்தார்.

 

புலிகளின் சொத்துக்கள் ஏன் வாங்கப்பட்டன  என்ற தெளிவு எனக்குண்டு

அதற்கான காலம் இன்னும்      முடிந்துவிடவில்லை என்பதே இன்றைய  எனது நிலைப்பாடு.

தமிழருக்கான ஒரு தீர்வு பிறக்கும்போது நிச்சயம் அது தாயகம்நோக்கி  திரும்பும் என்பவர்களை  நான் இன்றும் நம்புகின்றேன்.

அதை அவர்களிடம் ஒப்படைத்தவர் நான் மதிக்கும் தலைவன் என்பதால்.

 

அத்துடன்

தாயக மக்களுக்கான

பல போராளிகள் குடும்பத்துக்கான கொடுப்பனவுகளை அவர்கள் செய்ததை அறிவேன்.

தொடர்ந்தும் செய்வார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

நன்றி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் விசுகு அண்ணா.. உங்களைப் போன்றவர்கள் எழுதும்போதுதான் நல்ல தெளிவு பிறக்கின்றது.

போராட்டத்துக்கு  ஆள் சேர்ததும் கட்டாயத்தில்

 

போராட்டத்தில் பணம் சேர்த்ததும்  கட்டாயத்தில்

 

சிங்களவன் தமிழ் பெண்களை இராணுவத்தில்  சேர்த்ததும் கட்டாயத்தில்.

 

அவர்களின் கற்பை சூரையாடுவதும் கட்டாயத்தில்.

 

விடுதலை வேண்டி நின்ர மக்கள் பாவம்.

இங்கு சொல்ல வருவது. போராட்டத்திற்குச் சேர்த்த பணம் போராளிகளின் மறு வாழ்வுக்காகப் போய்ச் சேர வேண்டும் என்பதே. சிங்கள இராணுவத்திற்கு கொடுக்கச் சொல்லவில்லை. அடிபட்ட போராளிகளின் மறுவாழ்வுக்கு அதனைப் பயன்படுத்துவது பிழையா? அரசியல் தீர்வு வரும் வரை அவர்கள் போக்கிடம் கெட்டுத் திரிய வேண்டுமா?

ஆயிரம் காரணம் காட்டி தங்களின் வாழ்வுக்கு பயன்படுத்த நினைப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இந்தப் பணத்தைப் பற்றிக் கதைத்தால் ஆயிரம் காரணங்களுடன் பதில்கள் வரும். உடனடியாக எதிர்ப்புகளும் வரும். இன்றைய நிலையில் வேடதாரிகளை ஒன்றும் செய்ய முடியாது.

இந்த மூன்று வருடங்களில் இணையங்களில் ஒருவருடன் ஒருவர் அடிபட்டாலும், அந்தப் பணத்தைப் பற்றி கதைப்பதைத் தவிர்த்தே வருகிறார்கள். அதில் நிறைய மாத்திரம் ஒற்றுமையுண்டு.

போராட்டத்துக்கு  ஆள் சேர்ததும் கட்டாயத்தில்

 

போராட்டத்தில் பணம் சேர்த்ததும்  கட்டாயத்தில்

 

சிங்களவன் தமிழ் பெண்களை இராணுவத்தில்  சேர்த்ததும் கட்டாயத்தில்.

 

அவர்களின் கற்பை சூரையாடுவதும் கட்டாயத்தில்.

 

விடுதலை வேண்டி நின்ர மக்கள் பாவம்.

 

நாம் செயல்பட முடியும், அவர்கள் பாவத்தை போக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.