Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழிய புங்கையாரே வாழியவே!!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புங்கையூரானுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு புங்கையூரான் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ அல்லது அவர்களை மனம் நோக வைக்க கூடாது என்பதற்காக அவர் மனதில் நினைப்பதை வெளிப்படையாக,தைரியமாக எழுதுவதில்லை என நான் நினைக்கிறேன்...க.களத்தில் வயதானவர்கள் என்டால் சிறியவர்கள் அவர்களை அதிகம் எதிர்த்து எழுதக் கூடாது போன்ற கொள்கைகள் புங்கையூரானிம் இருக்கிறது...எது எப்படி இருந்தாலும் நல்ல எழுத்தாளார்,மனதிற்கு பிடித்த கருத்தாளார்  

 

நன்றிகள், ரதி!

 

உங்களிடம் ஒருக்காப் பேச்சு வாங்கினது, எனக்குப் பெரிய கவலை! :D

 

பிறகு, ஆறுமுக நாவலரைத் தவிர, எல்லோரும் ரதியிட்டப் பேச்சு வாங்கின ஆக்கள் தான் என்று அறிந்த போது, எனது கவலை, காற்றில் கரைந்து விட்டது!

 

இண்டைக்கும், உங்கள் கருத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி!

 

ஏனெனில் உங்கள் கை, மோதிரக்கை! :icon_idea:

 

;இனிய உளவாக இன்னாத கூறல்,

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று!

  • Replies 93
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
இவரை  வாழ்த்துவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி  எனக்கு.

 

தொடர்க தமது எழுத்துப்பணி

வெல்க தமிழ்

 

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றிகள், விசுகர்!

 

உலகப் படத்திலேயே, இல்லாத ஒரு ஊரில் பிறந்து, உலகின் ஒவ்வொரு மூலை                    முடுக்கெங்கும்  இருக்கிறோமே, என நினைக்கும் போது, அந்த மண்ணின் மகிமையை, எண்ணி வியப்படையாமலிருக்க முடியவில்லை! :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புங்கையூரான் அண்ணா

 

நன்றிகள், வாதவூரான்!

 

காரோட்டமெல்லாம் , இப்போது எப்படிபோகின்றது? :D

புங்கையூரனுக்கு வாழ்த்துக்கள்!

நன்றிகள், மல்லை!

 

அரசியல், தமிழன் வரலாறு, கதைகள், கவிதைகள் என்று எல்லாவற்றையும் தொட்டுச் செல்பவர் நீங்கள்!

 

நீங்கள், ஆரம்பித்த அந்தப் 'பேய்க்கதை' அப்படியே தொங்குகின்றது!

 

எப்ப முடிக்கிற உத்தேசம்? :D

வாழ்த்துக்கள் புங்ஸ்

 

நன்றிகள், ஈழப்பிரியன்!

 

'யூ டியூப்' முழுவதும் சிதறிக்கிடக்கும் உங்கள் இணைப்புக்களே, எம்மினத்தின் மீதான உங்கள் அளவில்லாத பற்றுக்கு ஆதாரமாகும்!

புங்கையூரனுக்கு வாழ்த்துக்கள்!

 

நன்றிகள், நவீனன்!

  • கருத்துக்கள உறவுகள்
புங்கையின் ..... யாழ் இந்துக் கல்லூரி, "லை போய்" சோப்பை என்றும் மறக்க மாட்டேன்.

 

நானும், நீங்கள் உங்கள் புதிய பெண் மேற்பார்வையாளரைக் கவர்வதற்காக, விலையுயர்ந்த Perfume அடித்துக் கொண்டு, வேலைக்குப் போனதை, எப்படி மறக்க முடியும்? :D

 

ஒரு இந்தி நடிகையின், குளியல் காட்சியைத் திண்ணையில் இணைத்து விட்டு, மூன்று நாட்களுக்கு யாழுக்கு வராமல், ஒளித்திருந்ததையும், என்னால் மறக்க முடியாது!  :lol:

வாழ்த்துக்கள் புங்கையூரன்...

யாழின் சுறுசுறுப்பான படைப்பாளிகளில் புங்கையூரான் அண்ணாவும் ஒருவர். புனைபெயரை வைத்துக் கொண்டு முகம் தெரிவதில்லை. ஆனாலும் அனேகர் அண்ணா என்று விளித்திருப்பதால் இதுவரை புங்கையூரான் என்று விளித்ததைப் பொறுத்தருள்க. தொடர்ந்து நல்ல பல ஆக்கங்கதத் தர வாழ்த்துக்கள்....

புங்கையூரனின் ஆக்கங்களை நானும் வாசித்துள்ளேன். நல்ல தமிழ்ப்புலமை, பரந்த ஆளுமை உள்ளன. எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

 

புங்கையூரானுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு புங்கையூரான் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ அல்லது அவர்களை மனம் நோக வைக்க கூடாது என்பதற்காக அவர் மனதில் நினைப்பதை வெளிப்படையாக,தைரியமாக எழுதுவதில்லை என நான் நினைக்கிறேன்...க.களத்தில் வயதானவர்கள் என்டால் சிறியவர்கள் அவர்களை அதிகம் எதிர்த்து எழுதக் கூடாது போன்ற கொள்கைகள் புங்கையூரானிம் இருக்கிறது...

 

நீங்கள் இக்கருத்தை பதிந்தபோது வாசித்தேன், எனது கருத்தையும் இதுபற்றி தெரிவிக்கவிரும்பினேன். இவ்விடயத்தை ஓர் தனித்திரியிலேயே விவாதிக்கலாம். சுருக்கமாக இவ்விடயமாகக்கூறக்கூடியது:

 

கருத்துக்களத்தில் எழுதும் பாணி, வாதிடும் பாணி ஒவ்வொரு தனிநபர்களின் தனித்தன்மை. ஒருவரின் தைரியத்தை அவர் எழுதும் கருத்தை வைத்து எடைபோடுவது முட்டாள்தனமானது. வெளிப்படைத்தன்மை என்பது தனித்தன்மையின் சுய விருப்பு, வெறுப்பு, செளகரியத்தின் பாற்பட்டது. இவ்வாறே மரியாதை என்பதும் அடங்குகின்றது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய வாழ்த்துக்கள், புங்கை.

சிலரின் தமிழ் எழுத்து நடை, வாசிக்க கவர்ந்திழுக்கும்... அச்சக்தி உங்கள் எழுத்தில் உள்ளது, புங்கை. அதனால்தான் நீங்கள் 'தமிழ் வாத்தி'யோ என அறிமுகத்தில் கேட்டேன்! :)

வாழியவே!

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய வாழ்த்துக்கள், புங்கை.

சிலரின் தமிழ் எழுத்து நடை, வாசிக்க கவர்ந்திழுக்கும்... அச்சக்தி உங்கள் எழுத்தில் உள்ளது, புங்கை. அதனால்தான் நீங்கள் 'தமிழ் வாத்தி'யோ என அறிமுகத்தில் கேட்டேன்! :)

வாழியவே!

புங்கையாருக்கு... தமிழ் படிப்பித்த வாத்திமார் மிக்க திறமையானவர்கள் வன்னியன்.

  • கருத்துக்கள உறவுகள்
புங்கையாருக்கு... தமிழ் படிப்பித்த வாத்திமார் மிக்க திறமையானவர்கள் வன்னியன்.

 

அப்படித்தான் இருக்க வேண்டும், சிறி. அவரை புடம் போட்டு, மெருகூட்டிய தமிழாசிரியருக்கும் நன்றி.

 

முன்பு யாழில், 'யாழ்நிலவன்' என்ற பெரியவர் இருந்தார். மிகச் சரளமான, பிசிறற்ற வசீகரிக்கும் (ஈழத்)தமிழ் நடை அவருக்குரியது. அவர்தான், 'புங்கை'யோ என ஒருகணம் ஆரம்பத்தில் நினைத்தேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படித்தான் இருக்க வேண்டும், சிறி. அவரை புடம் போட்டு, மெருகூட்டிய தமிழாசிரியருக்கும் நன்றி.

 

என்னையும் அதே... ஆசிரியர்கள் புடம் போட... முயற்சித்தவர்கள். கடைசியில்... அவர்கள் ஏமாந்தது, தான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்
என்னையும் அதே... ஆசிரியர்கள் புடம் போட... முயற்சித்தவர்கள். கடைசியில்... அவர்கள் ஏமாந்தது, தான் மிச்சம்.

 

ம்..நீங்கள் எங்கே பாடத்தை கவனித்திருக்கப் போகிறீர்கள்?

'கலர்' பார்த்தவாறே விடுப்பு பார்த்தால் அவர்களுக்கு ஏமாற்றம்தானே..? :D

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்கள் புங்கையூரன்...

 

நன்றிகள், யாழ்கவி! :D

  • கருத்துக்கள உறவுகள்
யாழின் சுறுசுறுப்பான படைப்பாளிகளில் புங்கையூரான் அண்ணாவும் ஒருவர். புனைபெயரை வைத்துக் கொண்டு முகம் தெரிவதில்லை. ஆனாலும் அனேகர் அண்ணா என்று விளித்திருப்பதால் இதுவரை புங்கையூரான் என்று விளித்ததைப் பொறுத்தருள்க. தொடர்ந்து நல்ல பல ஆக்கங்கதத் தர வாழ்த்துக்கள்....

 

சுந்தரர்:  அப்பனே, ஆணவச் செருக்கால், தங்களைப் 'பித்தன்' என அழைத்து விட்டேன்!

                பொருத்தருள வேண்டும்!

சிவன்:   சுந்தரா,என்னைப் பித்தா என விழித்தது எனக்கு, மிகவும் மகிழ்ச்சியே !

                என்னைப் 'பித்தா' என்றே விழித்துப் பாடுக!

சுந்தரர்: பித்தா பிறைச் சூடிப். பெருமானே அருளாளா! :D  :D  :D  :D  :D

 

வாழ்த்துக்கு நன்றிகள், மணிவாசகன்!

 

தங்கள் கருத்துக்களை, மிகவும் கூர்ந்து வாசிப்பதுண்டு!

என்னத்தை,மறைபொருளாக வைத்திருக்கிறீர்கள், என்று அறிவதற்காக!

 

'புங்கை' என்றே தொடர்ந்து விளியுங்கள் ! :D

  • கருத்துக்கள உறவுகள்
புங்கையூரனின் ஆக்கங்களை நானும் வாசித்துள்ளேன். நல்ல தமிழ்ப்புலமை, பரந்த ஆளுமை உள்ளன. எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

 

 

நீங்கள் இக்கருத்தை பதிந்தபோது வாசித்தேன், எனது கருத்தையும் இதுபற்றி தெரிவிக்கவிரும்பினேன். இவ்விடயத்தை ஓர் தனித்திரியிலேயே விவாதிக்கலாம். சுருக்கமாக இவ்விடயமாகக்கூறக்கூடியது:

 

கருத்துக்களத்தில் எழுதும் பாணி, வாதிடும் பாணி ஒவ்வொரு தனிநபர்களின் தனித்தன்மை. ஒருவரின் தைரியத்தை அவர் எழுதும் கருத்தை வைத்து எடைபோடுவது முட்டாள்தனமானது. வெளிப்படைத்தன்மை என்பது தனித்தன்மையின் சுய விருப்பு, வெறுப்பு, செளகரியத்தின் பாற்பட்டது. இவ்வாறே மரியாதை என்பதும் அடங்குகின்றது.

 

நன்றிகள், கலைஞன்!

 

உங்கள் அனுபவப் பகிர்வுகள், நான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைப், பல தடவைகள் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன!

 

உங்கள் அனுபவ வலிகளை, நான் அனுபவித்திருந்தால், நான் நடந்து வந்த பாதை வேறு விதமாக இருந்திருக்கும்,

 

நானும், நிச்சயமாக, இப்போதையிலும் பார்க்கக் கூடுதலாக, வாழ்க்கையில்   

பண் படுத்தப்பட்டிருப்பேன் என்பது மட்டும் உண்மை ! 

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய வாழ்த்துக்கள், புங்கை.

சிலரின் தமிழ் எழுத்து நடை, வாசிக்க கவர்ந்திழுக்கும்... அச்சக்தி உங்கள் எழுத்தில் உள்ளது, புங்கை. அதனால்தான் நீங்கள் 'தமிழ் வாத்தி'யோ என அறிமுகத்தில் கேட்டேன்! :)

வாழியவே!

 

 

கங்கை கொண்ட சோழன் முதல்,

சிங்கை கொண்ட ராஜராஜன் வரை,

சங்கத் தமிழ் வளர்த்த. மதுரை நகர்ச்,

சிங்கம் தந்த வாழ்த்துகளுக்கு, நன்றி! :D

 

நன்றிகள், வன்னியன்!

 

வாழ்த்துக்கள் புங்கையூரன் .யாழ் உயிர்ப்புடன் இருப்பது உங்கள் போன்றவர்களால்த்தான் தொடரட்டும் உங்கள் பணி.

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரனுக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். வாழ்த்து தெரிவிக்க பிந்திவிட்டதற்கு மன்னிக்கவும். இரண்டு நாட்களின்பின் இன்றுதான் யாழ்களத்தை எட்டிப்பார்த்தேன். உங்கள் ஆக்கங்கள் மிகவும் தரமாக இருக்கும். எப்பொழுதும் அடுத்தவர் மனதைப் புண்படுத்தாமல் கருத்தெழுதுவதில் வல்லவர். மென்மேலும் உங்கள் நல்ல ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பூங்கையூரான் மன்னிக்க வேண்டும் .....இன்றுதான் பார்த்தேன் ....வாழ்த்துக்கள் ...தொடர்ந்து பல படைப்புக்கள் யாழுக்கு தாருங்கள்....மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.... அது சரி எந்த பப்பில் பார்டி......:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.