Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் உங்களில் ஒருவனா?

Featured Replies

என் இனிய யாழ் குமுக உறவுகளே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம் .

யாழின் களங்களின் பார்வையாளனாகவே நீண்ட காலமாக இருந்த எனக்கு, உங்களில் ஒருவனாக குடும்பத்தில் இணைய வேண்டும் என்ற கனவு நீண்ட காலமாகவே இருந்தது.
இன்று அதற்காக என்னை நான் தயார் நிலைப்படுத்தி விட்டேன். எனவே உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் உங்கள் அனைவரையும் வேண்டி நிற்கிறேன். 
 
என்னை நான் சரியான முறையில் யாழில் பதிவு செய்து விட்டேனா எனும் வினா மட்டும் இன்னும் என்னுள் தொக்கி நிற்கிறது. சோதரர்கள் யாராவது பதில் தருவீர்களா ?
நன்றி.
  • Replies 55
  • Views 3.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் கடுந்தெறல் அரசு,
வருக வருகவென வரவேற்கின்றேன்.  :)
 
  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் கடுந்தெறல். நீங்கள் எங்களில ஒருவனாவிட்டியள். அனால் கடுந்தெறல் எண்டால் என்ன எண்டு விளங்கப்படுத்திப் போட்டு அங்கால போங்கோ. :D

  • தொடங்கியவர்

மிக்க மகிழ்ச்சி. என்னை முதன் முதலாக வரவேற்றமைக்கு. அரசரே!, தமிழ் இனத்தின் அடி நாதமாகிய கொள்ளுப்பாட்டன் சுமேரியரே!, நான் உண்மையில் அரச குடும்பத்தில் பிறந்தவனில்லை. இருந்ததும் தாங்கள் என்னை கௌரவமாக வரவேற்று உள்ளீர்கள்.இது வரை என்னை யாரும் இப்படி 

வரவேற்றதுவே இல்லை. நன்றி.


கடுந்தெறல் - 'மிகக்கடுமையாகப் போர் புரிய கூடிய,' என்று பொருள் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. மன்னா.. :D

 

இதற்குமுன் யாழ்களத்தில் மன்னர்கள் ஆட்சி நடைபெற்ற வரலாறு உண்டு..  :rolleyes:  மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்.. வாருங்கள்..! :lol:

  • தொடங்கியவர்

வணக்கம் கலைஞரே, தங்களின் அரசவை என்னை வரவேற்பதால் பெருமை கொள்கிறேன். ஆனாலும் நான் களத்தில் போராளியாகவே நிலைக்க விரும்புகிறேன் . என்னை ஆசீர் வதியுங்கள்.


 
 
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அரசு ........இனிய நல்  வரவு . தங்களிடம் தமிழ்ப் புலமை தென்படுகிறது தமிழால் இணை வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வணக்கம் வாங்க :D

  • தொடங்கியவர்

வணக்கம் சோதரி. அமர்க்களமான வரவேற்ப்புகளால்  யாழில் என்னை கிறுங்க வைக்கிறீர்கள். மிக்க நன்றி . உங்களின் அரவணைப்பும் வாழ்த்துக்களும்  என் தமிழை இனி செழுமைப்படுத்தி  மெருகூட்டுவதோடு  ஆளுமை உடையதாக மாற்றம் கொள்ள வைக்கும் என நம்புகிறேன். 

  • தொடங்கியவர்
வணக்கம் திரு. Sundhal அவர்களே, களத்தில் நான் மிகவும் சிறியவன். உங்கள் அளவுக்கு திறமையும், தமிழும் என்னிடம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. வரவேற்பதுடன் மட்டுமன்றி என்னை வளர்ப்பதற்கும் 
தாங்கள் முன்வருவீர்கள் என திடமாக நம்புகிறேன்.  வரவேற்பிற்கு நன்றி. 
 
 

வாருங்கள் வணக்கம்.

உங்கள் வரவால் நாமும் சிறப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கடுந்தெறல் வாங்கோ.

அழகான தமிழோடு அரிச்சுவடியில் வந்திருக்கிறீர்கள்.

 

மாமன்னரின் ஆசையில் வந்தவுடனேயே மண்ணள்ளிப்போட்ட உங்கள் கம்பீரம் :wub: பிடித்திருக்கிறது. தொடரட்டும் உங்கள் எழுத்துகள் கருத்துகள் அறிய ஆவலாக இருக்கிறோம். யாழ் கருத்துக்களம் ஈரமான களிமண்ணுக்கு ஒப்பானது. நீங்கள் எழுத ஆரம்பித்தவுடன் காய்ந்துவிடும். இந்த இடத்தில் நீங்கள் எதை வனைகிறீர்களோ அதுதான் உங்களுடைய முகவரி. உங்கள் பதிவுகளால் தடம் பதிப்பதும், தாறுமாறாக்குவதும் உங்கள் கையில்தான் உண்டு. தொடர்க. :rolleyes:

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
வணக்கம் சோதரன் Ahootha  அவர்களே, அன்புச் சோதரி வல்வை சகாறா அவர்களே, 
 களத்தில் உங்கள் இருவரினதும் ஆளுமையை நான் நன்கறிவேன்.உங்கள் அனைவரினதும் கருதுப்புயலால் தான் யாழுக்கு இழுத்து வரப்பட்டிருக்கிறேன். ஆதலால் ஆசானாக இருந்தது  என்னை வளர்ப்பதற்கும் 
 முன்வருவீர்கள் என திடமாக நம்புகிறேன்.  வரவேற்பிற்கு நன்றி. 

மன்னாதி மன்னன், மன்னர்குல சிங்கன் , மன்னர்க்கெல்லாம் மன்னன். மண்ணாங்கட்டிகளை மண்டியிடச்செய்யும் வீரமகாதேவன் வாறார் வாறார் வருகிறார் ............வாருங்கள் மன்னா வந்து அமருங்கள் உங்கள் சிம்மாசனத்தில் ........ :D

 

 

 

வாருங்கள் நண்பரே உங்கள் வரவால்  யாழ்களம் மேலும் .இனிமையும்,சிறப்பும் பெறட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

வருக வருக நண்பரே...

வணக்கம்! வாங்கோ  கடுந்தெறல். உங்கள் பண்பினாலும்,தமிழாலாலும் யாழ் மேலும் உயரட்டும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

வந்து குந்து நைனா 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் திரு. Sundhal அவர்களே, களத்தில் நான் மிகவும் சிறியவன். உங்கள் அளவுக்கு திறமையும், தமிழும் என்னிடம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. வரவேற்பதுடன் மட்டுமன்றி என்னை வளர்ப்பதற்கும்

தாங்கள் முன்வருவீர்கள் என திடமாக நம்புகிறேன். வரவேற்பிற்கு நன்றி.

எங்கிட்டா இல்லாத தமிழா வாங்க அள்ளி தாறன் என்னோட தமிழா கேட்டு தினமும் அந்தாட்டிக்காவில் உள்ள பணியே உருகுது என்றால் பாத்துக்கோங்கலேன்

  • தொடங்கியவர்
  • யாழ் களத்தில் நானும் எனது தமிழும் தத்தித்தவழும் நிலையில் இருந்தது எழுந்தது நடக்கும் காலம் வரும் போது விழுந்து எழ நேரிடும். எழும்போது எனக்கு ஓர் விரல் கொடுத்து  உதவிடுவீர்  என் கள  உறவுகளே.  முல்லைக்கு தேர் கொடுத்தார் என் முப்பாட்டன் வள்ளல் பாரி. இது தமிழரின் பண்பாடு. இதில் ஆச்சரியமடைய ஏதுமில்லை. அனால் விழ்ந்து கிடக்கிறது இன்று என் தேசம். ஓர் வேளை பாலுக்கு ஏங்குகின்றன  எம் பிஞ்சுகள். ஆதலால் எம் தலைமுறை வாழ, எம் அழகுத் தமிழ் வாழ நாமும் ஓர் கை கொடுப்போம் எம் தேசத்துக்கு.  ஓடித்திரிந்த எம் இனத்தின் கால்கள் இன்று  அடித்து ஓடிக்கப்பட்டுள்ளன.அமைதியாக  நீதி கேட்டு எழும் குரல்கள் அடக்கு முறையால் மௌனிக்கப்படுகிறது. எனவே புலம் பெயர் தேசத்தில் வாழும் நாம் எம்மாலான முயற்சிகளை கடுமையாக்க, வேகமாக உழைக்க வேண்டி உள்ளது. இன்றுள்ள அரிய சந்தற்பமான Genève மாநாட்டையும் (March 1,2,3) அதன் பின் 4ம்.நாள்  நடைபெறும் எழுச்சிப் பேரணியையும் ,பேரெழுச்ச்சியாகவும்,  மாபெரும் மக்கள் பேரணியாகவும் உருப்பெற வைக்கவேண்டிய தேவை எம்முன்னே உள்ளது. வாரி வழங்கிய சுவிஸ் நாட்டின் தமிழ்க்குடி இன்று தம் கண்களை இறுக மூடிக்கொள்வது வேதனையாக உள்ளது. இந்த நிலையில் எம் மக்களை விழிப்படைய வைக்க வேண்டியதும்,  அவர்களின் தமிழர்களுக்கே உரித்தான போர்க் குணத்தை  ஓர் கொதி நிலைக்கு முன்னெடுப்ப்பதும் நம் ஒவ்வொருவரினதும் தார்மிக கடமையாகும். இவ்வாறான ஆர்ப்பாட்ட பேரணிகளில் பங்கெடுக்கும்  மக்களின் எண்ணிக்கையே அதன் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிப்பவையாக இருக்கும். இந்த வேலைத்திட்டத்தை இன்றே முன் எடுப்போம் . அதை நன்றே முன்னெடுப்போம். ஆதிக்க சக்திகளின் தமிழரின் மீதான இனவழிப்புக்கு எதிராக உலக ஜனநாயகவாதிகளின் முன் மீண்டுமோர் முறை நீதி கோரி உரக்க குரல் கொடுப்போம். 
  • யாழ் களத்தில் நானும் எனது தமிழும் தத்தித்தவழும் நிலையில் இருந்தது எழுந்தது நடக்கும் காலம் வரும் போது விழுந்து எழ நேரிடும். எழும்போது எனக்கு ஓர் விரல் கொடுத்து  உதவிடுவீர்  என் கள  உறவுகளே.  முல்லைக்கு தேர் கொடுத்தார் என் முப்பாட்டன் வள்ளல் பாரி. இது தமிழரின் பண்பாடு. இதில் ஆச்சரியமடைய ஏதுமில்லை. அனால் விழ்ந்து கிடக்கிறது இன்று என் தேசம். ஓர் வேளை பாலுக்கு ஏங்குகின்றன  எம் பிஞ்சுகள். ஆதலால் எம் தலைமுறை வாழ, எம் அழகுத் தமிழ் வாழ நாமும் ஓர் கை கொடுப்போம் எம் தேசத்துக்கு.  ஓடித்திரிந்த எம் இனத்தின் கால்கள் இன்று  அடித்து ஓடிக்கப்பட்டுள்ளன.அமைதியாக  நீதி கேட்டு எழும் குரல்கள் அடக்கு முறையால் மௌனிக்கப்படுகிறது. எனவே புலம் பெயர் தேசத்தில் வாழும் நாம் எம்மாலான முயற்சிகளை கடுமையாக்க, வேகமாக உழைக்க வேண்டி உள்ளது. இன்றுள்ள அரிய சந்தற்பமான Genève மாநாட்டையும் (March 1,2,3) அதன் பின் 4ம்.நாள்  நடைபெறும் எழுச்சிப் பேரணியையும் ,பேரெழுச்ச்சியாகவும்,  மாபெரும் மக்கள் பேரணியாகவும் உருப்பெற வைக்கவேண்டிய தேவை எம்முன்னே உள்ளது. வாரி வழங்கிய சுவிஸ் நாட்டின் தமிழ்க்குடி இன்று தம் கண்களை இறுக மூடிக்கொள்வது வேதனையாக உள்ளது. இந்த நிலையில் எம் மக்களை விழிப்படைய வைக்க வேண்டியதும்,  அவர்களின் தமிழர்களுக்கே உரித்தான போர்க் குணத்தை  ஓர் கொதி நிலைக்கு முன்னெடுப்ப்பதும் நம் ஒவ்வொருவரினதும் தார்மிக கடமையாகும். இவ்வாறான ஆர்ப்பாட்ட பேரணிகளில் பங்கெடுக்கும்  மக்களின் எண்ணிக்கையே அதன் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிப்பவையாக இருக்கும். இந்த வேலைத்திட்டத்தை இன்றே முன் எடுப்போம் . அதை நன்றே முன்னெடுப்போம். ஆதிக்க சக்திகளின் தமிழரின் மீதான இனவழிப்புக்கு எதிராக உலக ஜனநாயகவாதிகளின் முன் மீண்டுமோர் முறை நீதி கோரி உரக்க குரல் கொடுப்போம். 

 

 தலை வணங்குகிறேன் .............ஆனால் எதிர்காலத்தில் எம்மை ஏமாற்ற மாட்டீர்கள் என நினைக்கிறேன்........இந்த வார்த்தைகள் உங்களை சலனப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. ஏனனில்  அப்படி நொந்து புன்பட்டுப்போய் உள்ளோம்.

உங்கள் பணி சிறக்கட்டும் .அதுவரை உங்களுடன் சேர்ந்து வருகிறோம்.

  • தொடங்கியவர்
மன்னாதி மன்னன், மன்னர்குல சிங்கன் , மன்னர்க்கெல்லாம் மன்னன். மண்ணாங்கட்டிகளை மண்டியிடச்செய்யும் வீரமகாதேவன் வாறார் வாறார் வருகிறார் ............வாருங்கள் மன்னா வந்து அமருங்கள் உங்கள் சிம்மாசனத்தில் ........ :D

 

 

 

வாருங்கள் நண்பரே உங்கள் வரவால்  யாழ்களம் மேலும் .இனிமையும்,சிறப்பும் பெறட்டும் .

 

வணக்கம் நல்லிதயம் தமிழ் சூரியனுக்கு,

நண்பா, நீங்க என்னை கூவி அழைப்பது ஏதோ என்னைப் பரவசப்படுத்துகிறது என்பது உண்மைதான்.
சுன்னாகம் சந்தைக்குள் நிற்பது போன்றதொரு தோற்றப்பாட்டையும் உண்டாக்கிற்று என்பதையும் நான் இங்கே என் பதிவாக்கக் கடமைப்பட்டுள்ளேன். 
எதுவாயினும் நன்றி.

வணக்கம் நல்லிதயம் தமிழ் சூரியனுக்கு,

நண்பா, நீங்க என்னை கூவி அழைப்பது ஏதோ என்னைப் பரவசப்படுத்துகிறது என்பது உண்மைதான்.
சுன்னாகம் சந்தைக்குள் நிற்பது போன்றதொரு தோற்றப்பாட்டையும் உண்டாக்கிற்று என்பதையும் நான் இங்கே என் பதிவாக்கக் கடமைப்பட்டுள்ளேன். 
எதுவாயினும் நன்றி.

 

 அட அவ்வளவு கேவலமாய் வாழ்த்திட்டேனோ .... :( ....எல்லாம் ஒரு  பன்பலுக்கே ...... :rolleyes: மனதைப்புன்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க .......உங்கள் பணி  சிறக்க வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
 தலை வணங்குகிறேன் .............ஆனால் எதிர்காலத்தில் எம்மை ஏமாற்ற மாட்டீர்கள் என நினைக்கிறேன்........இந்த வார்த்தைகள் உங்களை சலனப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. ஏனனில்  அப்படி நொந்து புன்பட்டுப்போய் உள்ளோம்.

உங்கள் பணி சிறக்கட்டும் .அதுவரை உங்களுடன் சேர்ந்து வருகிறோம்.

 

 

புரிகிறது உங்கள் ஏக்கம். 
செய்வேன்  அல்லேல் செத்துமடிவேன். இது மட்டும் தான் என் குருதி வெப்பத்தின் நிலைக்கு காரணம் .
  • தொடங்கியவர்
 தலை வணங்குகிறேன் .............ஆனால் எதிர்காலத்தில் எம்மை ஏமாற்ற மாட்டீர்கள் என நினைக்கிறேன்........இந்த வார்த்தைகள் உங்களை சலனப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. ஏனனில்  அப்படி நொந்து புன்பட்டுப்போய் உள்ளோம்.

உங்கள் பணி சிறக்கட்டும் .அதுவரை உங்களுடன் சேர்ந்து வருகிறோம்.

 

 

புரிகிறது உங்கள் ஏக்கம். 
செய்வேன்  அல்லேல் செத்துமடிவேன். இது மட்டும் தான் என் குருதி வெப்பத்தின் நிலைக்கு காரணம் .
  • தொடங்கியவர்

மன்னாதி மன்னன், மன்னர்குல சிங்கன் , மன்னர்க்கெல்லாம் மன்னன். மண்ணாங்கட்டிகளை மண்டியிடச்செய்யும் வீரமகாதேவன் வாறார் வாறார் வருகிறார் ............வாருங்கள் மன்னா வந்து அமருங்கள் உங்கள் சிம்மாசனத்தில் ........ :D

 

 

 

வாருங்கள் நண்பரே உங்கள் வரவால்  யாழ்களம் மேலும் .இனிமையும்,சிறப்பும் பெறட்டும் .

 

நானும் ஜாலிக்காகத்தான் எழுதினேன். don't worry.

வருக வருக நண்பரே...

 

வணக்கம் நண்பரே, உங்கள் அழைப்புக்கு தலை வணங்குகிறேன். நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.