Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி - விஜயகாந்த் சந்திப்பு: திருச்சியில் திருப்பம் வருமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், திருச்சியில் நடக்கும் அக்கட்சி எம்.பி., மகள் திருமணத்திற்கான அழைப்பிதழ், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம் நேரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கருணாநிதி - விஜயகாந்த் சந்திப்பு நடக்குமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தே.மு.தி.க.,வை துவங்குவதற்கு முன், 2004ம் ஆண்டு, பிப்., மாதம், 4ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் சந்தித்து பேசினார். கட்சி ஆரம்பித்த பிறகு, 2006ம் ஆண்டு, சட்டசபை, தேர்தலில் தனித்து போட்டியிட்ட விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானார்.அந்த தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராக, விஜயகாந்த் தீவிர பிரசாரம் செய்தாலும், அக்கட்சியே ஆட்சியை கைப்பற்றியது. அதே ஆண்டு, டிச., 14ம் தேதி, அப்போதைய முதல்வராக இருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை விஜயகாந்த் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு, தொகுதி பிரச்னை தொடர்பாக நடந்ததாக விஜயகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோயம்பேட்டில் உள்ள தனது திருமண மண்டபத்தை இடிக்காமல், மாற்று வழியில் மேம்பால திட்டத்தை செயல்படுத்துவதற்காக, கருணாநிதியை அவர் சந்தித்ததாக தி.மு.க., தரப்பில் தகவல் வெளியானது.

இதனால், தி.மு.க., தலைமை மீது, விஜயகாந்த் அதிருப்தி அடைந்தார். இதன் தொடர்ச்சியாக, திருமண மண்டபம் இடிப்பு, விஜயகாந்த் வீட்டில் வருமான வரி சோதானை ஆகிய சம்பவங்கள் அரங்கேறின.தி.மு.க., ஆட்சிக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக, விஜயகாந்த் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினார். அந்த சந்திப்பிற்கு பின், கருணாநிதியை விஜயகாந்த் சந்திக்கவில்லை.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து, உள்ளாட்சி தேர்தலில் கழற்றி விடப்பட்ட தே.மு.தி.க., வினர், தற்போது, சூடுபட்ட பூனையாக உள்ளனர்.விஜயகாந்த் மீது, அரசு சார்பில், அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. இந்த காயத்திற்கு மருந்து போட, வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க தே.மு.தி.க., திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.இரு நாட்களுக்கு முன் நடந்த, தே.மு.தி.க., பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், அ.தி.மு.க.,வையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தார்.

ஆனால், தி.மு.க.,வை விமர்சிக்காமல், அடக்கி வாசித்தார்.கடந்த ஆட்சியில் கசப்புணர்வுடன் செயல்பட்ட மத்திய அமைச்சர் அழகிரி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர், விஜயகாந்துடன், விமான நிலையங்களில் ஏதேச்சையாக சந்தித்து பேசியுள்ளனர். கருணாநிதி - விஜயகாந்த் சந்திப்பு நடக்கவில்லை. இந்நிலையில், அடுத்த மாதம், 7ம் தேதி, திருச்சி தேசிய கல்லூரி மைதானத்தில், தி.மு.க., - எம்.பி., சிவா மகள் திருமணம் நடக்கவுள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை ஏற்கும் இவ்விழாவில், அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் பங்கேற்கின்றனர். இந்த திருமணத்திற்கான அழைப்பிதழை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம், எம்.பி., சிவா, நேரில் வழங்கியுள்ளார். நேரம் இருந்தால், நிச்சயம் திருமணத்திற்கு வருவதாக அவரிடம் விஜயகாந்த் உறுதியளித்துள்ளார்.

அதேநாளில், அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராக வேண்டும் என திண்டுக்கல் கோர்ட் விஜயகாந்திற்கு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் செல்லும் விஜயகாந்த், திருச்சி சென்று, திருமணத்தில் பங்கேற்று, கருணாநிதியை சந்தித்து திருப்புமுனையை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தி.மு.க., - எம்.பி., இல்ல திருமணத்தில் பங்கேற்பது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன், விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். திருமண மேடையில் கருணாநிதி இருக்கும்போது பங்கேற்காமல், அவர் புறப்பட்டு சென்றபின், சென்று வாழ்த்து தெரிவிக்கலாம் என்ற யோசனை அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், இரு கட்சியினரிடையே இணக்கத்திற்கான பிள்ளையார் சுழி போடப்படும் என்கிறது தே.மு.தி.க., வட்டாரம்.

Dinamalar

இரண்டு தெலுங்கர்களின் சந்திப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை கேணையர்கள் என்று நினைக்கினம்.. நேற்றுத்தான் காரசாரமா அடிபட்ட ஞாபகம்..

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த சட்ட சபைத்தேர்தலுக்கு, சேர்ந்து போட்டியிட... இப்பவே ஆயத்தமாகிறார்கள்.
விஜயகாந் கருணாநிதியிடம் 120 இடங்கள் பேரம் பேசினால் தான்... கடைசியில் 30 இடமாவது கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த சட்ட சபைத்தேர்தலுக்கு, சேர்ந்து போட்டியிட... இப்பவே ஆயத்தமாகிறார்கள்.

விஜயகாந் கருணாநிதியிடம் 120 இடங்கள் பேரம் பேசினால் தான்... கடைசியில் 30 இடமாவது கிடைக்கும்.

 

கிடைக்கிற மாதிரி  இருக்கும்

ஆனால் கிடைக்காது

 

அத்துடன் மற்றய கட்சிகளுடன் கூட்டுச்சேரும் காலமும கடந்திருக்கும்.

அடுத்த சட்ட சபைத்தேர்தலுக்கு, சேர்ந்து போட்டியிட... இப்பவே ஆயத்தமாகிறார்கள்.

விஜயகாந் கருணாநிதியிடம் 120 இடங்கள் பேரம் பேசினால் தான்... கடைசியில் 30 இடமாவது கிடைக்கும்.

 

சட்டசபைத் தேர்தலுக்கு அல்ல; அடுத்த வருசம் வரும் லோக்சபா (பாராளுமன்ற) தேர்தலுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கிடைக்கிற மாதிரி  இருக்கும்

ஆனால் கிடைக்காது

 

அத்துடன் மற்றய கட்சிகளுடன் கூட்டுச்சேரும் காலமும கடந்திருக்கும்.

விஜயகாந்துக்கு அ.தி.மு.க.வில் சேர சந்தர்ப்பம் இல்லை. காங்கிரஸ் இவரைச்சேர்க்க... ஆசைப்படுகின்றது. இவர் காங்கிரசுடன் சேர்ந்தால்... அது இவரது கட்சியின் தற்கொலையாகவே... இருக்கும். ஆகவே... இவருக்கு... கடைசியில் உள்ல தெரிவு. தி.மு.க. மட்டுமே..... இப்போதே, தி.மு.க.வுடன் உறவு வைத்தால்... மற்றக் கட்சிகளும், இவரைச் சேர்த்துக் கொள்ள பின் நிற்கும் என்பதால்... கருணாநிதி அவசரம் காட்டுகின்றார். நீங்கள் சொன்னது போல்... கடைசியில்.. கொஞ்ச இடங்களைக் கொடுத்து, ஆளை அமுக்கி விடலாம். :D

சட்டசபைத் தேர்தலுக்கு அல்ல; அடுத்த வருசம் வரும் லோக்சபா (பாராளுமன்ற) தேர்தலுக்கு.

பாராளுமன்றத் தேர்தலுக்கு என்றால், விஜயகாந்துக்கு.... நாலு இடம் கிடைப்பதற்கே... முக்கி, முனக வேண்டும். :D  :lol:

வைக்கோ தான்.... என்ன நிலை எடுக்கப் போகின்றார் என்று தெரியவில்லை.

சட்டசபைத் தேர்தலுக்கு அல்ல; அடுத்த வருசம் வரும் லோக்சபா (பாராளுமன்ற) தேர்தலுக்கு.

சரி ஏதோ ஒன்று .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.