Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மதுரையில் பயங்கரம்... மு.க.அழகிரியின் வலதுகரம் பொட்டு சுரேஷ் வெட்டிக் கொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

31-pottu-suresh3-300.jpg

 

மதுரையில் பயங்கரம்... மு.க.அழகிரியின் வலதுகரம் பொட்டு சுரேஷ் வெட்டிக் கொலை!

மதுரை: மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமாக செயல்பட்ட பொட்டு சுரேஷ் மதுரையில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அழகிரியின் தீவிர விசுவாசியும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர் பொட்டு சுரேஷ். இவர் இன்று இரவு மதுரையில் அழகிரி இருக்கும் வீட்டு பக்கத்தில் சத்யசாய் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் வெட்டிக் கொன்றது யார் என்பது தொடர்பாக மதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

யார் இந்த பொட்டு சுரேஷ்?

திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் என்றாலும் பொட்டு சுரேஷ், அழகிரியின் அதி தீவிர விசுவாசியாக இருந்தவர். தொடக்க காலங்களில் சாலையோரங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்து பின்னர் மறைந்த சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனுடன் நெருக்கமாக இருந்தார். கடந்த சில ஆண்டுகாலமாக மு.க. அழகிரியின் அதிதீவிர விசுவாசியாக இருந்து வந்தார்.

அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நில அபகரிப்பு வழக்கில் பொட்டு சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. ஆனால் தம் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து ரத்து செய்ய வைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் தாம் அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன் என்று கூட கூறினார். ஆனால் கடந்த ஒரு மாதகாலமாக மீண்டும் அழகிரியுடன் ஐக்கியமாகி இருந்தார் பொட்டு சுரேஷ்.

 

கொலையாளிகள் யார்?

திமுக ஆட்சிக் காலத்தில் பொட்டு சுரேஷ் தென் தமிழகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பொட்டு சுரேஷை கொல்ல கூலிப்படை ஏவியது யார் என்பது மர்மமாக இருந்து வருகிறது.

இது தொழில் போட்டியால் நடந்ததா? அல்லது பொட்டு சுரேஷை பிடிக்காத திமுகவினரின் சதியா? என்பது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

தற்ஸ் தமிழ்.

நல்ல செய்தி. தொடரவேண்டும்.

மதுரையில் அழகிரியன் பலம் குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் (யாரால்? 1)ஸ்டாலின் 2) அதிமுக ) :icon_idea:

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி ஆதரவாளர்கள் 9 பேர் சரண்

 

அழகிரியின் விசுவாசியாக இருந்து வந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் 9 பேர் இன்று கோர்ட்டில் சரண் அடைந்தனர். கடந்த வியாழக்கிழமை மதுரையில், தி.மு.க., தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மத்திய அமைச்சர் அழகிரியின் தீவிர விசுவாசியுமானபொட்டு சுரேஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இதனையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோர்ட்டில் 7 பேர் சரண் அடைந்தனர். பெயர் விவரம் வருமாறு: சபாரத்தினம், ராஜூ, சந்தானம், கார்த்திக், சேகர், லிங்கம், செந்தில் ஆகியோர் ஆவர். இது போல மேலூர் கோர்ட்டில் 2 பேரும் சரண் அடைந்ததாக கோர்ட் வட்டாரம் தெரிவிக்கிறது.

 

 

அட்டாக் பாண்டி ஆதவரவாளர்கள்:
இன்று கோர்ட்டில் ஆஜரானவர்கள் பிரபல ரவுடி அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் என தெரிய வந்துள்ளது. கீரைத்துறையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மத்திய அமைச்சர் அழகிரிக்கு ஆதரவாளராக இருந்து வந்த இவர் மீது சமீபத்தில்பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவில் வெட்டி கொல்லப்பட்டார்.

 

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நத்தம் கோர்ட்டில் 7 பேரும் மேலூர் கோர்ட்டில் 2 பேரும் சரண் அடைந்துள்ளனர். மத்திய அமைச்சர் அழகிரிக்கு இவர் நெருக்கமாக இருந்ததால் அட்டாக் பாண்டி போன்றவர்கள் அழகிரியை நெருங்குவதில் சிரமம் இருந்ததாம். இதனால் அதிருப்தியுற்ற அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 

 

9 பேரிடம் விசாரணை:
கோர்ட்டில் ஆஜரான 9 பேரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தவகல்கள் கிடைக்கும் என போலீசார் கூறுகின்றனர்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-093600057.html

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கை உடைப்பதற்காக சும்மாவும் சரணடைவார்கள்..! தமிழ்நாட்டில் இது சகஜம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் எதிர்பாருங்கள்...பொட்டு சுரேஷின் திக் திக் கடைசி நிமிடங்கள்...-தமிழ்நாட்டுபத்திரிகைகளுக்கு அடுத்த தலையங்கம் தயார்... :D

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்க வாசல்  செல்லும் பாக்கியம் ஒருத்தருக்குதான் கிடைச்சிருக்கு... ஐயாம் வெரி சேட்.. இவரின்ட வழி  இன்னும் நிறைய பேருக்கு கிடைக்கணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தினை தமிழ்ப்படம் பாத்திருப்பம்????

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. தொடரவேண்டும்

கொலைஞர் கருணாநிதியை விசாரித்தால் உண்மை தெரியலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7-19-2011-21-weapons-recovered-in-attack

 

பொட்டு சுரேஷ் வெட்டிக் கொல்ல, ரூ25 லட்சம் கொடுத்த அட்டாக் பாண்டி!

மதுரை: மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமாக இருந்த பொட்டு சுரேஷை வெட்டிக் கொலை செய்ய கூலிப்படைக்கு மற்றொரு திமுக பிரமுகரான அட்டாக் பாண்டி ரூ25 லட்சம் கொடுத்திருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

பொட்டு சுரேஷ் கடந்த வியாழன்று மதுரையில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு மற்றொரு திமுக பிரமுகரான அட்டாக் பாண்டி காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். பொட்டு சுரேஷ் மீண்டும் அரசியலில் தலைகாட்டியதை சகிக்காமல் அவர் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நீதிமன்றத்தில் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 7 பேர் நேற்று சரணடைந்தனர். 7 பேரையும் வரும் 4-ந் தேதி வரை சிறையிலடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அவர்கள் அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பொட்டு சுரேஷ் கொலைக்கான வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அட்டாக் பாண்டி தொடர்ந்தும் தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அட்டாக் பாண்டியை போட்டுத் தள்ள கூலிப்படையிடம் பொட்டு சுரேஷ் ரூ20 லட்சம் பேரம் பேசியிருக்கிறார். ஆனால் இதை தெரிந்து கொண்ட அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷை கொலை செய்ய ரூ25 லட்சம் பேரம் பேசி அதே கூலிப்படை மூலம் போட்டுத் தள்ளியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.