Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓகஸ்ட் மாத நடுப் பகுதியில் வடக்கு மாகாணத் தேர்தல்

Featured Replies

செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த வடமாகாணசபைத் தேர்தலை, அரசு எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

வடமாகாண சபைத் தேர்தலையும், மேல் மாகாண சபைத் தேர்தலையும் ஒன்றாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சர்வதேச நாடுகள், வடமாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றன. கடந்த வருடம் வரவுசெலவு திட்டச் சமர்பிப்பின்போது, வடமாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம்
நடைபெறும் என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவும், இந்த மாத இறுதியில் இடம் பெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரை முன்னிட்டும், வடமாகாண சபைத் தேர்தலை ஒரு மாதம் முன்னதாக ஓகஸ்ட் மாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்குமான தேர்தலை அரசு மே மாதம் நடுப்பகுதியில் நடத்தவிருக்கிறது. குற்றப்பிரேரணை மற்றும் அமைச்சரவை மாற்றத்துக்கு பின்னர் அரசு தொடர்பில் மக்கள் கொண்டிருக்கின்ற நிலைப்பாட்டைக் கண்டறியும் வகையிலேயே இந்த இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன.

இரு மாகாண சபைகளுக்குமான பதவிக்காலம் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடையவிருக்கின்ற நிலையிலேலே 7 மாதங்களுக்கு முன்னர் இரு மாகாண சபைகளையும் கலைத்துத் தேர்தல் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு ஊவா மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் அதற்குத் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கே அரசு தீர்மானித்துள்ளது.

அந்தத் திட்டத்தின் அடிப்படையி அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=254871809703314322#

உங்கள்  நாள்க்காட்டியில்  இருக்கும்   ஒகஸ்ட்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யார் மாகாண சபை கேட்டா.. இதெல்லாம்.. மார்ச் ஐநா கூட்டத்தொடரில் எடுத்து விட நடக்கும் முன்னேற்பாடுகளே தவிர.. தமிழர்களுக்கு எந்த வகையான விடிவையும் இவை கொண்டு வரப்போறதில்லை. இந்திய - சிங்களக் கூட்டுச் சதி இன்னும் இன்னும் எம்மை அடிமைத்தளத்துள் இறுக்குகின்றன. இதில் இருந்து வெளிவரும் உருப்படியான வழிமுறையை தமிழர்கள் விரைந்து துணிய வேண்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு மாகாணம் உட்பட 4 மாகாணங்களுக்கு இந்த வருடம் தேர்தல்

 

11 பெப்ரவரி 2013
 
நான்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை இவ்வருடத்தில் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  
 
எதிர்வரும் மே மாதத்தில் மத்தியஇ வட மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தவும்  ஆகஸ்ட் மாதத்தில் மேல் மாகாண சபைக்கான தேர்தலை நடத்தவும் அரசு தீர்மானித்துள்ளது. இந்த 3 மாகாண சபைகளுக்கான தேர்தல்களை முடித்துக் கொண்டு எதிர்வரும்  செப்டெம்பர் மாதத்தில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
மேல் மாகாண சபையின் பதவிக் காலம் 2014 மே மாதத்திலேயே முடிவடையவிருக்கின்ற போதிலும் அதனை ஒன்பது மாதங்களுக்கு முன்னதாக நடத்த அரசு திட்டமிட்டிருக்கின்றது. எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் மத்தியஇ வட மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்படலாமெனவும் மே மாதம் இரண்டாம் வாரமளவில் தேர்தல் இடம்பெறலாமெனவும் தெரியவருகின்றது. 
 
மத்தியஇ வட மேல் மாகாண சபைகளின் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் தேர்தல் திணைக்களம்இ இத் தேர்தலுக்காக 6 கோடி ரூபா தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 
எரிபொருள் இ போக்குவரத்துஇ உணவு மற்றும் மேலதிக   கொடுப்பனவுகளுக்கான செலவினம் கடந்த தேர்தல்களை விடவும் 15 சதவீதத்தால் அதிகரித்திருப்பதன் காரணமாகவே இந்தளவு பெரும் தொகை தேவைப்படுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார். 
 
அரசாங்கம் அடுத்த வருடத்தில் (2014) பாராளுமன்றத் தேர்தலையோஇ ஜனாதிபதி தேர்தலையோ நடத்தும் நோக்கத்திலேயே இந்த 4 மாகாணங்களுக்குமான தேர்தல்களை இவ்வருடத்தில் நடத்தி நாடி பிடித்துப் பார்க்க முயற்சித்திருப்பதாக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 
 
எந்தத் தேர்தலுக்கும் முகம் கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாகத் தெரிவித்த அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்கஇ மத்தியஇ வட மேல் மாகாண சபைகளுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்ய விரைவில் விண்ணப்பம் கோரவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
 
இந்த இரண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய மாகாணத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோன் அமரதுங்கஇ கபீர் ஹாஷிம் ஆகியோருடன் கட்சியின்  தேசிய அமைப்பாளர் தயாகமகேயையும் உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. 
 
வட மேல் மாகாண சபைக்கு ஜோசப் மைக்கல் பெரேராஇ ரவி கருணாநாயக்கஇ மங்கள சமரவீர ஆகிய  பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது எனவும் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 
  • கருத்துக்கள உறவுகள்
 
டக்ளஸ் கச்சையை கட்டி விட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. :lol:  :lol:  :lol:

ஒருவர் கச்சையை அவிட்டால் இன்னொருவர் கட்டதானே வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் கச்சையை அவிட்டால் இன்னொருவர் கட்டதானே வேண்டும் .

 

இப்போ மாறிசாறியோ கட்டினம். தெரியாமல் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ மாறிசாறியோ கட்டினம். தெரியாமல் போச்சு.

 

ஒருவர் அவிட்டுவிட்டால்

நான் கட்டவே மாட்டேன்  என்று சொன்னதாக ஞாபகம்.

அவர் கட்டாமல் விடு  4  வருசமாச்சு.

இவர் ..........???

  • தொடங்கியவர்

டக்ளசை வேட்பாளராக மகிந்த நிறுத்தாவிட்டால் அவர் மேர்வினுடன் இணையலாம்  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.