Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பில், முஸ்லிம் பிரிவை உருவாக்கவேண்டும்: சி.வே விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20130221-145901.jpg

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்ட வேண்டும் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரான சி.வே விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முஸ்லிம் கட்சிகளை தொடர்ந்து நம்பியிருக்காது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

முன்னாள் கல்முனை மேயரும் செனட்டருமான மசுர் மௌலானவின் அகவை என்பது நிறைவு விழா கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதில் தலைமையுரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

 

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அதற்கான கொள்கை திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும். இதன் மூலம் பெறவேண்டியவற்றை இலகுவாக பெறமுடியும்.

 

இந்த இரண்டு சிறுபான்மை இனங்களும் இணைந்து செயற்படுவதன் மூலமே இனப்பிரச்சினை தீர்வுக்கு ஒரே வழியாகும். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைவிட்டது.

 

நாட்டின் பிரஜை என்ற வகையில் இதற்காக கவலைப்பட்டேன். நாங்கள் மாணவர்களாக இருந்தபோது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வரவேற்கின்றோம்.

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எனும் பெயரின் மூலம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை இந்த கட்சியில் ஒன்றிணைக்க முடியும். தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒண்றினைந்து செயற்பட நான் ஆவணம் செய்கின்றேன்.

 

முஸ்லிம்களில் பல்துறை சார்ந்தவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் அஷ்ரப் எவ்வாறு அன்று எப்படி நுழைத்துக்கொண்டாரோ அப்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினுள் முஸ்லிம்களையும் உள்வாங்க வேண்டும்.

 

முஸ்லிம்களின் அபிலாஷைகளை தமிழ் தலைவர்கள் உள்வாங்க வேண்டும். அதற்கு ஏற்ப செயற்பட வேண்டும். ஒரே தமிழ், முஸ்லிம் தலைமையின் கீழ் ஒன்றுபட வேண்டும்.

 

தமிழ் பேசும் மக்களின் உரிமை போராட்டங்களை வலுவாக முன்னெடுக்க

வேண்டும். தமிழ் பேசும் மக்கள் போட்டி அரசியல் நடத்துவதற்கான காலம் இதுவல்ல.

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளும் இதை கவனத்திற்கொள்ள வேண்டும். சோரம் போகும் தமிழ் தலைமையினை உண்மையுள்ள முஸ்லிம்கள் ஒருபோதும் வரவேற்கமாட்டார்கள்.

 

ஆனால் நேர்மையான தமிழ் தலைமைத்துவத்தை உண்மையுள்ள முஸ்லிம்கள் எப்போதும் வரவேற்பார்கள்’ என்றார்.

 

http://tamil24news.com/news/?p=45735

பொது பல சேன அமைப்பு ஊடாகவும் வேறு விதமாகவும் முஸ்லீம் மக்கள் தனிமைப்படுத்தப்படும் தமது தலைவர்கள் தம்மை கைவிட்டு உள்ளதாகவும் உணர்கின்றார்கள்.

 

எனவே இந்த தருணத்தை கூட்டமைப்பு பயன்படுத்தல் வேண்டும்.

 

ICG என்ற அமைப்பை சேர்ந்த அலன் கீனன் என்ற செல்வாக்கு மிக்க கொள்கைவகுப்பாளரும் கூட்டமைப்பு வடக்கில் கிழக்கில் ஒரு பலம் மிக்க சக்தியாக வரவேண்டும் என கூறி இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கி வளவுங்கோ  கொளுத்தவுடன்  தானே பிரிஞ்சு  போயிடும் 

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்துவப் பிரிவையும் உருவாக்குதல் நல்லது. ^_^



அப்படியே இந்துக்கள் பிரிவு, சைவர்கள் பிரிவு..

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே..பிரிவாகிவிடும்...

20130221-145901.jpg

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்ட வேண்டும் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரான சி.வே விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஆனால் நேர்மையான தமிழ் தலைமைத்துவத்தை உண்மையுள்ள முஸ்லிம்கள் எப்போதும் வரவேற்பார்கள்’ என்றார்.

 

யானைக்கும் அடிசறுக்கும் என்பார்கள். முன்னாள் நீதியரசரின் மிகமிகத் தவறான ஆலோசனை இது.

கூட்டமைப்பில் முஸ்லிம் சந்தர்ப்பவாதிகளுக்கு தனிப்பிரிவை உருவாக்குவது என்பது கூட்டமைப்பை சிதைக்கும் ஒரு முயற்சியாகவே இருக்கும். தேர்தலில் வென்றவுடன் ஓடிச் சென்று சிங்கள அரச பயங்கரவாதிகளுடன்  இணைந்து அமைச்சுப் பதவி கேட்கும்  புத்தியுடையவர்களே இந்த முஸ்லிம்கள்.

மிகவும் நேர்மையான பலமான விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தையே முஸ்லிம்கள் எப்படி ஏமாற்றினார்கள் என்பது நீதியரசருக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.

வரலாறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் இருப்பதே தமிழ் புத்திஜீவிகளின் பெரும் குறைபாடாக உள்ளது.

ஒருவேளை கம்பன்கழக கும்பலுடன் நெருக்கமாக இருக்கும் இவரை, தமிழின விரோதிகள் தமிழின விரோதக் கம்பன்கழக கும்பலினுடாக மூளைச் சலவை செய்திருக்கலாம்.

 

அவர் சொல்வது சரி. ஆனால் அது சரியாக இன்றைய மாக்சிச கட்சிகளின் குலைப்பு சரியானது.  சரி என்பது வேறு அரசியலில் சரி என்பது வேறு.

 

இந்த நேரத்தில் முஸ்லீம்களை இணைக்க வெளிக்கிட முயன்றால் அது கூட்டமைபுக்குள்  கோத்தாவின் புனாய்வுகளுக்கு பதவி கொடுபதற்காக என்று மட்டும்தான் முடியும். தீர்வு ஒந்றுரு வரும் நேரம் கக்கீம் வளைந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

 

கதிர்காமரும் சந்திரிகாவும் வெளிநாடுகளின் மனங்களை மட்டும் மாற்றவில்லை. கணிசமான புலத்து மக்களின் எண்ண்ங்களையே  மாற்றியிருக்கிறார்கள். இதில் முஸ்லீம்கள் நிறையத்தான் தமிழருக்கு எதிரிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். நீதிபதி சொல்வது போல அப்படி ஒன்றும் நடக்க முடியாது. எனவே அங்கே போய் சில முஸ்லீம்களை சேர்ப்பதற்காக வடக்கு ஒரு அலகு கிழக்கு ஒரு அலகு என்ற புது தீர்வுக்கு ஆயத்தப்படுத்தாமல் சென்ற பாதையில் வடக்கு-கிழக்கு என்று போகவேண்டும். 

 

கிழக்கு மாகணத்தில் அமெரிக்காவுக்காக நோர்வே கக்கீமுடன் பேச்சுவார்தைகள் நடத்திய போது கக்கீம் நடந்து கோண்டவிதம் எல்லோரும் பார்த்தார்கள். கக்கீம் அரசுக்கெதிராக பிரசாரம் செய்த்து பதவிக்கு வந்து அரசுடன் இணைந்தார். இது அரசின் பலமாக வெளிநாடுகளால் கணிப்படுகிறது. எனவே முஸ்லீம்களின் வாக்கு வாங்கபோய் முஸ்லீம் வேட்பாளர்களை போட்டு தமிழர்களை அவர்களுக்கு வாக்களிக்க வைத்து அரசுக்கு சேர்த்துவிடாமல், தீர்வு வரையும் இப்படியே இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களின் நீண்ட, நெடிய, கரடுமுரடான பாதையில் முஸ்லிம்கள் தொடர்ந்து பயணிக்கவில்லை.இனியும் பயணிப்பார்கள் என நான் நினைக்கவில்லை.முஸ்லிம்களின் அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதிகளாகவே காணப்படுகிறார்கள்.முற்போக்கு சக்திகள் இனி உருவானால் உண்டு.
 
தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் சிண்டு முடிவதில் சிறிலங்கா அரசு பலத்த வெற்றி கண்டது.இதற்கு தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். இரு துருவங்கள் ஆகி விட்ட தமிழர், முஸ்லிம்கள் இணைந்து செயற்பட வேண்டுமெனில் மிகக்கடுமையாக உழைக்க வேண்டும்.
 
பதவிகளுக்காகவே தமது மக்களை காட்டிக்கொடுக்கும் அரசியல் தலைவர்களுடன் ஒற்றுமை என்பது முயற்கொம்பு.

கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் தரப்படும் என ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி புதிய முஸ்லீம் தலைவர்களை இணைத்து தம்மை பலப்படுத்தல் வேண்டும்.

கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் தரப்படும் என ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி புதிய முஸ்லீம் தலைவர்களை இணைத்து தம்மை பலப்படுத்தல் வேண்டும்.

 

இன்றைய மனநிலையில் முஸ்லீம் மக்கள தமிழரை நம்ப மாட்டார்கள். இந்திய வீடுகளை சிங்கள அரசு முஸ்லீம்களுக்கு வாங்கிக்கொடுப்பது போல ஒன்றை சம்பந்தரால் முஸ்லீம்களுக்கு செய்ய முடியாது.

ஒருபக்கம் தமிழர் தரப்பு குடியேற்றம், இராணுவ நிலப்பறிப்பு, அதிகார பகிர்ந்தளித்தல் இல்லை என அழிவிற்குள் சென்று கொண்டிருக்கின்றது.

 

மறுபக்கம் முஸ்லீம்கள் 'ஹலால்' மற்றும் பல நெருக்கடிகள் மூலமாக தமது மீது ஒரு இனவாத நடவடிக்கையை சிங்களம் முன்னெடுப்பதாக உணருகின்றார்கள்.


தமிழர்களும் முஸ்லீம்களும் இணைந்தால் மட்டுமே சிங்களத்தை இரண்டு தரப்பும் வெல்ல முடியும். இல்லையேல் இரண்டு இனமும் முழுமையாக ஒருநாள் அழிக்கப்படலாம்.

மறுபக்கம் முஸ்லீம்கள் 'ஹலால்' மற்றும் பல நெருக்கடிகள் மூலமாக தமது மீது ஒரு இனவாத நடவடிக்கையை சிங்களம் முன்னெடுப்பதாக உணருகின்றார்கள்.

 

ஹலால் பிரச்சினையின் அரசியலை நீங்கள் விளங்கவில்லை! இது சிங்கள அரச பயங்கரவாதிகளின் மாபெரும் இராஜதந்திரம்.

ஒருபக்கம் பொதுபல சேனா என்ற அமைப்பை பின்னால் நின்று அரசே ஆரம்பித்தது. அதனூடாக முஸ்லிம்களை சீண்டியபடி தான் நல்லபிள்ளை போல் நடிக்கிறது.

அரசில் ஓடிப்போய் ஒட்டிக்கொண்ட இஸ்லாமிய பச்சோந்தி அரசியல்வாதிகளை வைத்து போனதடவை சர்வதேச அரங்கில் - குறிப்பாக ஜெனீவாவில் தமிழின படுகொலை நடக்கவில்லை என்று சகல இஸ்லாமிய மதவாத நாடுகளை வளைத்துப் போட்டு நாடகமாடியது சிங்கள பயங்கரவாத அரசு.

அதன் பின்னர் திட்டமிட்டபடி போதுபல சேனா தனது வேலைகளை செய்துவருகிறது. இதனால் இம்முறை இஸ்லாமிய பச்சோந்தி அரசியல்வாதிகள் சில முஸ்லிம் மதவாத நாடுகளிடம் ஓடிச் செல்ல - அந்த நாடுகள் தாமாகவே சிங்கள அரச பயங்கரவாதிகளை அணுகும் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கள பயங்கரவாத அரசை அந்த நாடுகள் தேடிவர - தான் நல்லபிள்ளை என்று ஆதாரமாக அண்மையில் பெருமளவு முஸ்லிம்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதை காட்டி அவர்களின் வாயை அடைக்கும் அதே நேரத்தில் - அவர்களிடம் இந்த வருட ஜெனீவாவுக்கு ஆதரவளிக்கும் படியும் கேட்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதனாலேயே சிங்கள இனவாதிகள் பெருமளவு  முஸ்லிம்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதை எதிர்க்காமல் வாயை மூடியுள்ளனர்

ஏற்கனவே இந்த தந்திரத்தை சில முஸ்லிம் மதவாத நாடுகளிடம் சிங்கள பயங்கரவாத அரசு பிரயோகித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்தியக் காட்டுமிராண்டிகள் போலவே  தூரநோக்கற்ற இஸ்லாமியர்களை  ஏமாற்றுவது இலகு என்பது சிங்கள அரச பயங்கரவாதிகளின் நம்பிக்கை.

மறுபக்கத்தில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை வெறுக்கும் மேற்குலகம் இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கால் சிங்கள பயங்கரவாத அரசை உள்ளூர பாராட்டும் - அதனால் தமக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்காது என்பது சிங்கள அரச பயங்கரவாதிகளின் கணிப்பு.

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிருக்கும் முஸ்ல்லிம் காங்கிரஸ் கூட முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து பிரிந்துபோய் உருவானதுதான் என்பதை நீதியரசர் மறந்திருக்க மாட்டார். அப்படியிருக்க இன்னொருமுறை முஸ்லீம் பிரதிநிதித்துவம் என்று கேட்டால் என்ன செய்வது ? ஏற்கனவே சிங்களவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி பின்னர் அவர் மகிந்தவுடன் சென்று ஐக்கியமானதும் தெரிந்ததுதானே. எமக்கென்று தனித்துவமான கட்சியிருப்பதே நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.