Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை கொடுக்க வேண்டாம்: ஜனாதிபதிக்கு சங்கரி கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

anantha_sankari(6).jpg
'இலங்கை - இந்தியா ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நல்லெண்ணமும் ஒற்றுமையும் நிலவுவதற்காக தமக்கிடையில் உள்ள குரோதங்களை இல்லாமல் செய்ய தீவிரமாக செயற்பட வேண்டும். அமெரிக்க தீர்மானங்கள் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள்  சபையின் மனித உரிமை ஆணையத்தில் எடுக்கப்படும் போது இந்தியாவுக்கு ஒரு சங்கடமான நிலைமை ஏற்படாத வகையில் முதல் படியாக அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

'எனது அபிப்பிராயப்படி பொறுப்புள்ள சிலரின் பொறுப்பற்ற கூற்றுக்களால் மஹிந்த சிந்தனை தனது மதிப்பை இழந்து வருகிறதென மீண்டுமொருமுறை தங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன். இந்த துக்ககரமான நிலைமைக்கு பொறுப்பானவர்கள் உங்களுக்கு சங்கடமான நிலையை வேண்டுமென்றே தோற்றுவிப்பதோடு தெரிந்தோ தெரியாமலோ உங்களுடைய மதிப்பை குறைக்கின்றனர். 

இந்த போக்கை உடன் தடுத்து நிறுத்தவும். வரைமுறையற்ற சிலரின் கூற்றுக்கள் அடிக்கடி வெளிவருவதால் நாட்டின் நன்மைகருதி இதனை உடன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  எமது மக்கள் ஞாபகசக்தி குறைந்தவர்கள். ஆனால் அரசாங்கத்தையோ தங்களின் ஆலோசகர்களையோ அப்படிச் சொல்ல முடியாது. பல தகவல்கள் உங்களின் வழிநடத்தலுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பதிவு செய்யப்படுகின்றன. அத்துடன் தங்களை வழிநடத்த ஊடகங்களும் உண்டு.

ஒரு சில நாடுகளைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு சகல நாடுகளும் முழு ஆதரவு வழங்கின. அவை தத்தம் நாடுகளில் விடுதலைப் புலிகளை தடைசெய்தும் இலக்கை அடைய பலவித உதவிகளும் புரிந்துள்ளன என்பதை தங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன். அத்தகைய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் இன்றும் தடைவிதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இப்போது சில நாடுகள் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானங்களை ஆதரித்தும், ஆதரிக்கவும் உள்ளமையால் அந்த நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவை என குற்றஞ்சாட்டுவது நீதி  நியாயமற்ற செயலாகும். 

இலங்கையில் தூதரகங்களை வைத்துள்ள சகல நாடுகளுக்கும் தகவல்கள் சேகரிப்பதற்குரிய சகல ஏற்பாடுகளும் உண்டு. அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்களை அவர்கள் தமக்குள் பரிமாறிக்கொள்வர். இந்த விடயத்தில் ஒரு நாடும் இன்னொரு நாட்டை தனிப்பட்ட விசேட காரணங்கள் ஏதும் இருந்தால் அன்றி கட்டுப்படுத்த முடியாது. அரச சார்பற்ற நிறுவனங்கள் எதையும் பெயர் குறிப்பிடாது அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு கூலிப்படைகளை அனுப்பி உள்ளனர் என பல்வேறு அறிக்கைகள் பொறுப்பற்ற முறையில் வெளிவருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மிகப் பாரதூரமான இக்குற்றச்சாட்டு, அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றை இயங்க விடாமல் செய்துள்ளது. இன்றும்கூட வடக்கு பிரதேசத்தில் இத்தகைய அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்க விடாது தடுக்கப்பட்டுள்ளமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வறுமையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தமக்கு உணவுப் பண்டங்கள் பிள்ளைகளுக்கு பால்மா போன்றவை பெறும் வாய்ப்பை இச்செயலால் இழந்துள்ளனர். 

யுத்தத்துக்கு முன்பும், யுத்தத்துக்கு பின்பும் இந்தியா முக்கிய பங்கு வகித்தும் வகிக்கவும் உள்ளது. தமிழ்நாட்டு பொலிஸார் எச்சரிக்கையாக இருந்தமையால் பல்லாயிரக்கணக்கான தொன் எடையுள்ள குண்டுகள் தயாரிப்புக்கு பாவிக்கப்படுகின்ற இரும்பு சன்னங்கள், வெடி மருந்துகள் வடக்கே பல பகுதிகளுக்கும், வடக்கிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய விளைவுகள் எமது கற்பனைக்கு அப்பாற்பட்டதாகும். 

இலங்கை இராணுவமே யுத்தத்தை வென்றதில் எதுவித சந்தேகமும் இல்லை. ஆனால் பொது மக்களுடைய ஒத்துழைப்பு இருந்தமையினாலேயே முன்னேற முடிந்தது. தமிழ் நாட்டு பொலிஸாரின் உதவியின்றேல் இந்த யுத்தத்தை வென்றிருக்க முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மாகாந்தி அவர்கள் இந்தியாவும், இலங்கையும் தமக்குள் சண்டையிட முடியாது எனக் கூறியுள்ளார். 

இலங்கையில் எல்லாம் நன்றாக இருப்பதாக நான் கூற வரவில்லை. இலங்கை தமிழர்களுக்கு பல ஆதங்கங்கள் உண்டு. உயர் மட்டத் தலையீடு தேவைப்படும் அளவுக்கு இவற்றில் சில கட்டுமீறி போகும் பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. நாம் விரும்பிண்;யா விரும்பாமலோ இவ்விரு அயல் நாடுகளுக்கிடையில் இருந்த உறவு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடருமானால் மிக விரைவில் கடும் பாதிப்பு ஏற்படக்கூடுமாகையால் இரு நாடுகளும் இந்த போக்கை உடன் நிறுத்தி அவற்றின் நன்மையை மனதிற்கொண்டு தமக்குள் ஏற்பட்டுள்ள தப்பான அபிப்பிராயங்களை போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

மேற்கூறப்பட்ட கருத்து தங்களால் மிக ஆழமாக பரிசீலிக்கப்பட வேண்டியதாகும். இலங்கை - இந்தியா ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நல்லெண்ணமும் ஒற்றுமையும் நிலவுவதற்காக தமக்கிடையில் உள்ள குரோதங்களை இல்லாமல் செய்ய தீவிரமாக செயற்பட வேண்டும். அமெரிக்க தீர்மானங்கள் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள்  சபையின் மனித உரிமை ஆணையத்தில் எடுக்கப்படும் போது இந்தியாவுக்கு ஒரு சங்கடமான நிலைமை ஏற்படாத வகையில் முதல் படியாக அதற்குரிய நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கை 22 மைல் நீளம் கொண்ட பாக்குத் தொடுவாயினாலேயே பிரிக்கின்றது. ஆகவே நம்மிரு நாடுகளும் மோதிக்கொள்ள முடியாதுதென்று மீண்டும் வற்புறுத்தி கூறுகின்றேன். 

ஜனாதிபதி அவர்களே! இந்தச் சந்தர்ப்பத்தில் வரவிருக்கும் அமெரிக்கத் தீர்மானமத்திற்கமைய நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இராணுவத்தினருக்குரிய சட்டரீதியான பாதுகாப்பையும் வழங்குவது தங்களுக்குரிய பாரிய கடமையாகும்' என்று ஆனந்த சங்கரி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

சங்கரியார் கடிதத்தை வாசிக்கும் நிலையிலா மகிந்தர் இருப்பார்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கடிதத்தில் நிறைய காமெடியல்...வாசித்து நானும் சிரித்தன்..... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் கடிதம் எழுதி எழுதி தமிழருக்கு இருந்த காப்பரனையே இல்லாது ஒழித்தவர் ஆச்சே ..... அந்த பாவத்திற்கு பிரதி உபகாரமாக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் எழுதுகிறவர்கள் எல்லாம் ஒரேமாதிரித்தான் இருக்கினம்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரியார் கடிதத்தை வாசிக்கும் நிலையிலா மகிந்தர் இருப்பார்  :icon_idea:

 

நானும்  மேலிருந்து  கீழாக

கீழிருந்து  மேலாக

இடையில் என்று மாறி  மாறி  வாசித்தேன்

ஒன்றுமே புரியல

 இதை  எவர் வாசிக்கப்போகின்றார்கள் என்று நினைத்தே எழுதியுள்ளார்

அந்த கடிதத்தில் நிறைய காமெடியல்...வாசித்து நானும் சிரித்தன்..... :D

 

:D  :D  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இராணுவத்தினருக்குரிய சட்டரீதியான பாதுகாப்பையும் வழங்குவது தங்களுக்குரிய பாரிய கடமையாகும்' என்று ஆனந்த சங்கரி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 



பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இராணுவத்தினருக்குரிய சட்டரீதியான பாதுகாப்பையும் வழங்குவது தங்களுக்குரிய பாரிய கடமையாகும்' என்று ஆனந்த சங்கரி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆஹா ஆஹா என்ன கரிசனம் இலங்கை ரானுவத்தின் பேரில்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் மகிந்தரும் ஒரே சிந்தனையில் தான் இருக்கினம். முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டது புலிகள் என்ற நிறுவலையே... ஐயா மீண்டும் ஒரு தடவை நாசுக்காக வெளிப்படுத்தி.. இந்திய மத்திய அரச எஜமானர்களுக்கு நல்லாவே வாலாட்டி இருக்கிறார். ஒருவேளை வரதராஜப் பெருமாளின் இடத்தை தான் பிடிக்கலாம் என்றிருக்கிறாரோ என்னவோ..??!

 

சொந்த மக்களின் இழப்புப் பற்றி அக்கறைப்படாத ஜென்மம்.. இந்தியாவின் நலனிற்காக மகிந்தருக்கு ஆலோசனை வழங்குகிறார்..! :rolleyes:

நாங்கள் யாழில் தேசியம் கொட்டுவது போலத்தான் . ஒரு சுய இன்பம் .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் யாழில் தேசியம் கொட்டுவது போலத்தான் . ஒரு சுய இன்பம் .

நீங்கள் எங்கையா தேசியம் யாழில் கொட்டினீங்கள்...எப்ப பாத்தாலும் புலிக் காச்சல் பிடிச்ச நீங்கள் தேசியத்தை பற்றி கதைக்கிறதை நினைக்க வியப்பாய் இருக்கு... :wub:

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் யாழில் தேசியம் கொட்டுவது போலத்தான் . ஒரு சுய இன்பம் .

 

இவரின் இந்தக் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

நாங்கள் யாழுக்கு வாரதே எங்கள் நாட்டை நினைத்து தான்... இதுக்கை வந்து தான் சுய இன்பம் காண வேனும் என்றால் அது உங்களின் அறியாத் தன்மையை தான் காட்டுகிறது...எங்களுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு...அப்படி இருந்தும் எங்கள் மக்கள் மண்ணுக்காக‌ மடிந்து போன மாவீரரை நினைத்து தான் யாழுக்கு வாறோம்......எங்களின் பொழுது போக்குக்கு இந்த விஞ்ஞான உலகில் செய்யிறதுக்கு எவளவோ இருக்கு..அதை எல்லாம் ஒதுக்கி வைச்சு விட்டுத் தான் நல்ல மனதோடு யாழுக்கு வந்து கருத்து எழுதி செய்ய வேண்டிய கடமைகளை மற்ற உறவுகளுடன் சேந்து செய்துகிட்டு வாறோம்....அடுத்த முறை எழுத முதல் யோசிச்சுப் போட்டு எழுதுங்கள் என்ன எழுதுறேன் என்று... :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரின் இந்தக் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

நாங்கள் யாழுக்கு வாரதே எங்கள் நாட்டை நினைத்து தான்... இதுக்கை வந்து தான் சுய இன்பம் காண வேனும் என்றால் அது உங்களின் அறியாத் தன்மையை தான் காட்டுகிறது...எங்களுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு...அப்படி இருந்தும் எங்கள் மக்கள் மண்ணுக்காக‌ மடிந்து போன மாவீரரை நினைத்து தான் யாழுக்கு வாறோம்......எங்களின் பொழுது போக்குக்கு இந்த விஞ்ஞான உலகில் செய்யிறதுக்கு எவளவோ இருக்கு..அதை எல்லாம் ஒதுக்கி வைச்சு விட்டுத் தான் நல்ல மனதோடு யாழுக்கு வந்து கருத்து எழுதி செய்ய வேண்டிய கடமைகளை மற்ற உறவுகளுடன் சேந்து செய்துகிட்டு வாறோம்....அடுத்த முறை எழுத முதல் யோசிச்சுப் போட்டு எழுதுங்கள் என்ன எழுதுறேன் என்று... :unsure:

 

வணக்கம் பையா :wub:  :wub:  :wub:

சங்கரியின் சுயரூபம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது! தமிழினப் படுகொலைகளை செய்த மிக மிலேச்சமான, மனிதாபிமானமே அற்ற அரச பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள் மீது அவருக்குள்ள கரிசனையை மீண்டும் வெளிபடுத்தியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.