Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நவிபிள்ளையின் அறிக்கை பக்கச்சார்பானது:ஐ.தே.க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hrin09.jpg
-யொஹான் பெரேரா

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளை தனது அறிக்கையில் இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி படுமோசமாக சித்திரிப்பதனால் அது பக்கச்சார்பான அறிக்கையாகும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

நவனீதம்பிள்ளை நிலைமையை மிகைப்படுத்தி கூறியுள்ளதனால் இந்த அறிக்கை நீதியானது அல்ல என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தின் இறுதி நாட்கள் பற்றி முறையான விசாரணைகள் இடம்பெறாதது இலங்கையின் பிழை எனவும் அரசாங்கம் சர்வதேச சமுதாயத்துக்கு வழங்கியிருந்த உறுதியை நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறினார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் 285 இல் 133 மட்டுமே மனித உரிமைகள் வேலைத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வேலைத்திட்டத்தை ஏற்க சர்வதேச சமுதாயம் மறுத்துவிட்டது என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட அமர்வின் போது இலங்கை மிகவும் கஷ்டமான நிலைமையை எதிர்கொள்ளும். மனித உரிமை பேரவையில் தனது எதிர் நடவடிக்கைகள் யாவற்றையும் அரசாங்கம் கைவிட்டது போல தெரிகின்றது என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் உரிய நேரத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், மனித உரிமைகளை பேனவும் தவறியதால் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உட்பட பலர் உயர் இராணுவ அதிகாரிகள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன்  யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்தவற்றுக்கு இவர்களே பொருப்பாக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் சிங்களவன்தான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தானே எப்படி வேறுபாடும் ?

  • கருத்துக்கள உறவுகள்

வல்லிபுரக் கோவில்..மாயவன் அருள் புரிந்து விட்டான்....அவ்ரை அழைத்துச் சென்று...ஆலவட்டம் குடை...சாமரம் வீசியோருக்கு இது சமர்ப்பணம்...

  • கருத்துக்கள உறவுகள்

இதை தான் சிங்களவரிடம் இருந்து தமிழர் கற்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை தான் சிங்களவரிடம் இருந்து தமிழர் கற்க வேண்டும்.

 

மிகவும் கஷ்டம், 
இருந்தாலும் கற்றுக்கொள்ள வேண்டும். 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

60 வது ஆண்டுகளாக எந்த சிங்கள கட்சிகளும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு முன்வைக்கவில்லை என்ற போதே தெரிந்திருக்க வேண்டும், என்னும் புரியாது சிங்களவனை படித்து கொண்டு இருக்கின்றோம் நாங்கள் எப்போது சிங்களவனை புரிந்து கொள்வோம்.  :(

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் வெறும் அரசியல்வாதிகள்.. மக்களின் வாக்குவங்கியில் கவனமாக இருப்பவர்கள்.. அதனால் அந்த மக்களின் கருத்தைப் பிரதிபலிப்பார்கள்.

ஆட்சிமாற்றம் தமிழருக்கும் தேவை சிங்களவருக்கும் தேவை மேற்குலகத்திற்கும் தேவை இந்தியாவிற்கும்  தேவை.

 

தேவைக்கான காரணங்கள் வித்தியாசம்.

 

இந்த வித்தியாசங்களின் நடுவே தமிழர் தரப்பு இராணுவ அகற்றல், மக்கள் காணிகளை பறித்தல், குடியேற்றம் உட்பட ....

போர்க்குற்ற விசாரணை, குறைந்தது 13 ஆவதற்கு உட்பட்ட காவல்துறையுடன் கூடிய அரசியல் தீர்வை பெறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனோட பேசி தீர்வுகளை பெறலாம் என்று கனவு கண்டால் அது நிச்சயம் நடக்காது இந்த விடயம் சம்பந்தர், சர்வதேசம், புலம் உட்பட யாவருக்கும் தெரிந்த விடயம். பேசி பயனில்லை என்றுதான் போராட்டம் தொடங்கப்பட்டது. அதே நிலைதான் மீண்டும் வரும் காலச்சக்கரம் அதுக்காகதான் சுழல்கின்றது பழைய நிகழ்வுகள் கண்முன்னே விரிகின்றது என்றால் அதுதான் நிஜம்!

ஆட்சிமாற்றம் தமிழருக்கும் தேவை சிங்களவருக்கும் தேவை மேற்குலகத்திற்கும் தேவை இந்தியாவிற்கும்  தேவை.

 

தேவைக்கான காரணங்கள் வித்தியாசம்.

 

இந்த வித்தியாசங்களின் நடுவே தமிழர் தரப்பு இராணுவ அகற்றல், மக்கள் காணிகளை பறித்தல், குடியேற்றம் உட்பட ....

போர்க்குற்ற விசாரணை, குறைந்தது 13 ஆவதற்கு உட்பட்ட காவல்துறையுடன் கூடிய அரசியல் தீர்வை பெறவேண்டும்.

 

என்னைப் பொறுத்த வரையில் என்றைக்கு பிரேமதாச-புலிகள் பேச்சு 1990இல் முடிவடைந்ததோ, அன்றோடு ஒரு நாட்டுக்கு உட்பட்ட தீர்வு என்பதும் முடிந்து விட்டது, இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால் பிரேமதாசவிடம் இலங்கையை முன்னெற்ற வேண்டும் என்ற சிந்தனை இருந்தது, அதனால் இப்பிரச்சனையை பேசி தீர்க்கலாம் என்ற சிந்தனை இருந்தது, ஆனால் அவரால் கூட ஒரு அளவுக்கு மேல் சிங்களவர் என்ற எல்லையை மீறி வர முடியவில்லை, அவரால் முடியாது என்றால் ஆட்சிக்கு வரும் எவராலும் முடியாது, விக்கிரமபாகு கருணாரட்ன போன்ற சிலறைத் தவிர. தமிழனுக்கு இருக்கும் ஒரே தீர்வு தனி ஈழம் அல்லது சுவடு இல்லாமல் அழனிது போதல். EITHER SINK OR SWIM

திருந்தவே மாட்டங்கள் இந்த சிங்களவங்கள்..

தமிழர் பிரச்சனை சிங்களத்திற்கு ஒரு பொருளாதார பிரச்சனையாக இருந்தால், இருக்க வைத்தால், அது எமது பிரச்சனையை தானாக தீர்க்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.