Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர்: ஆர்.எஸ்.எஸ்.

Featured Replies

சென்னை: இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழ விரும்புகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாடு - கேரள மாநிலங்களின் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர்., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான அகில பாரத பிரதிநிதிகள் சபாவின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 15, 16, 17 தேதிகளில் நடைபெற்றது. அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல், சமூக உரிமைகள் வழங்க வேண்டும் என்றும், மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும். இதற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர். இலங்கையில் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் "சேவா இன்டர்நேஷனல் லங்கா' என்ற அமைப்பின் மூலம் அமைதியான முறையில் ஆர்.எஸ்.எஸ். சேவைகளை செய்து வருகிறது.

 

கடந்த ஆண்டு 25 கிராமங்களைத் தத்து எடுத்து மக்களுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்தோம்.இந்த ஆண்டு மேலும் 25 கிராமங்களைத் தத்து எடுக்க உள்ளோம். ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதாக அறிவித்தது. ஆனால், தற்போது வரை 2 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. அதுபோல இடிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டுவதற்காக இந்திய அரசு பணம் கொடுத்தது. ஆனால், கோயில்கள் கட்டப்படவில்லை. மறுவாழ்வுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசால் மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும். அதனைத்தான் இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார் அவர்.
 

http://tamil.oneindia.in/news/2013/03/19/tamilnadu-sri-lankan-tamils-want-united-with-171783.html

  • தொடங்கியவர்

பாஜக வின் சிங்கள பாசம். ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்க முடியாதாம் !

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை போர் குற்றவாளி என்றும் அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் ரவிசங்கர் பிரசாத் இதனைத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பும் சமஉரிமையும் வழங்பப்பட வேண்டும்.

அத்துடன் தொடர்ந்தும் வன்முறைகள் இடம்பெற இடமளிக்க கூடாது என்பதுடன், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா சரியான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

எனினும் மகிந்த ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக கட்சிகளின் கோரிக்கையை பி.ஜே.பி ஏற்றுக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.newsalai.com/details/They-did-not-support-a-resolution-that-would-declare-war-criminal-Rajapakse.html

இந்த செய்தி காங்கிரஸ் தி.மு.க வின் திசை திருப்பும் நடவடிக்கையாஹா இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லோரும் ஈழத்தமிழருக்கு சம உரிமை (அதென்னென்ன சம உரிமைகள் என்று கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்) என்ற பதத்திற்குள் பதுங்கி இருந்து ஹிந்திய தேசியத்தை தமிழர்களைப் பலியிட்டு பாதுகாத்து வருபவர்கள். ஹிந்திய தேசியம் இல்லையேல் இவர்களின் அரசியல் பிழைப்புக் கேள்விக்குறியாகி விடும்.

 

இவர்களின் இந்த நிலைப்பாடு எனி..ஹிந்தியாவில் ஒரு தமிழ்நாடு என்ற நிலையை ஹிந்தியாவுக்கு அருகில் தமிழ்நாடு என்ற நிலைக்கு கொண்டு வர அதிக காலம் எடுக்காது..!

 

தமிழ்நாடு பிரிந்தால்.. அதற்கான சூழல் எழுந்தால்.. தமிழீழம் தானே பிறக்கும். அத்தோடு ஹிந்திய தேசியம் சுக்கு நூறாகும். சீனாக்காரனோ.. பாகிஸ்தான் காரனோ எதுவும் செய்ய வேண்டியதில்லை..!

 

பாஜக்.. காங்கிரஸ் சிந்திக்கட்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லோரும் ஈழத்தமிழருக்கு சம உரிமை (அதென்னென்ன சம உரிமைகள் என்று கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்) என்ற பதத்திற்குள் பதுங்கி இருந்து ஹிந்திய தேசியத்தை தமிழர்களைப் பலியிட்டு பாதுகாத்து வருபவர்கள். ஹிந்திய தேசியம் இல்லையேல் இவர்களின் அரசியல் பிழைப்புக் கேள்விக்குறியாகி விடும்.

 

இவர்களின் இந்த நிலைப்பாடு எனி..ஹிந்தியாவில் ஒரு தமிழ்நாடு என்ற நிலையை ஹிந்தியாவுக்கு அருகில் தமிழ்நாடு என்ற நிலைக்கு கொண்டு வர அதிக காலம் எடுக்காது..!

 

தமிழ்நாடு பிரிந்தால்.. அதற்கான சூழல் எழுந்தால்.. தமிழீழம் தானே பிறக்கும். அத்தோடு ஹிந்திய தேசியம் சுக்கு நூறாகும். சீனாக்காரனோ.. பாகிஸ்தான் காரனோ எதுவும் செய்ய வேண்டியதில்லை..!

 

பாஜக்.. காங்கிரஸ் சிந்திக்கட்டும்..! :icon_idea:

 

இது தான் உண்மை...
இனி எல்லாமே தமிழ் நாட்டு மாணவர் கையில் தான்...

மாணவர் தான் சூடு சுரணை உள்ளவர்கள்...அவர்கள் கள்ள நரி கருணாநிதி இல்லை...

  • தொடங்கியவர்

இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழ விரும்புகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாடு - கேரள மாநிலங்களின் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர்., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான அகில பாரத பிரதிநிதிகள் சபாவின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 15, 16, 17 தேதிகளில் நடைபெற்றது. அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல், சமூக உரிமைகள் வழங்க வேண்டும் என்றும், மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும். இதற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர். இலங்கையில் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் "சேவா இன்டர்நேஷனல் லங்கா' என்ற அமைப்பின் மூலம் அமைதியான முறையில் ஆர்.எஸ்.எஸ். சேவைகளை செய்து வருகிறது.

 

கடந்த ஆண்டு 25 கிராமங்களைத் தத்து எடுத்து மக்களுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்தோம்.இந்த ஆண்டு மேலும் 25 கிராமங்களைத் தத்து எடுக்க உள்ளோம். ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதாக அறிவித்தது. ஆனால், தற்போது வரை 2 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. அதுபோல இடிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டுவதற்காக இந்திய அரசு பணம் கொடுத்தது. ஆனால், கோயில்கள் கட்டப்படவில்லை. மறுவாழ்வுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசால் மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும். அதனைத்தான் இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார் அவர்.

 

http://tamil.oneindi...ith-171783.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழ விரும்புகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாடு - கேரள மாநிலங்களின் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர்., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான அகில பாரத பிரதிநிதிகள் சபாவின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 15, 16, 17 தேதிகளில் நடைபெற்றது. அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல், சமூக உரிமைகள் வழங்க வேண்டும் என்றும், மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும். இதற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர். இலங்கையில் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் "சேவா இன்டர்நேஷனல் லங்கா' என்ற அமைப்பின் மூலம் அமைதியான முறையில் ஆர்.எஸ்.எஸ். சேவைகளை செய்து வருகிறது.

 

கடந்த ஆண்டு 25 கிராமங்களைத் தத்து எடுத்து மக்களுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்தோம்.இந்த ஆண்டு மேலும் 25 கிராமங்களைத் தத்து எடுக்க உள்ளோம். ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதாக அறிவித்தது. ஆனால், தற்போது வரை 2 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. அதுபோல இடிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டுவதற்காக இந்திய அரசு பணம் கொடுத்தது. ஆனால், கோயில்கள் கட்டப்படவில்லை. மறுவாழ்வுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசால் மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும். அதனைத்தான் இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார் அவர்.

 

http://tamil.oneindi...ith-171783.html

 

டக்கிலஸ் கருணாவை சந்திச்சு போட்டு விட்ட அறிக்கை போல இது :D .... ஒம் ஒம் தமிழன் சிங்களன் கூட வாழ ஆசை பட்டுத்தான் 30 வருடத்துக்கு மேல‌ போராடினார்கள் :unsure: ...இம்மட்டு அழிவுகளையும் சந்தித்தார்கள்.... :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் மலபாரை (இன்றைய கேரளாவை) டெல்லியோடு இணைத்துவிட்டு அதன் கீழ் அதனை ஹிந்தியர்கள் ஆட்சி செய்ய மலையாளத்தார் விரும்பினம் என்று நாங்களும் ஒரு பதில் அறிக்கை கொடுத்திட வேண்டியதுதான். :lol:

 

ஏதோ ஈழத்தமிழங்க இவரட்ட தனிய தனிய சந்திச்சு விருப்பத்தைச் சொன்னது கணக்கா அறிக்கை விடுறாங்கப்பா. தமிழங்களோ.. எங்கட விருப்பத்தைச் சொல்ல.. ஐநா சபையை மத்தியஸ்தம் வைச்சு தேர்தல் நடத்து என்றாங்கள்..! :icon_idea:

ஆமாடே , உன்கிட்ட தான் அவங்க சிங்களன  லவ் பண்றத சொன்னாங்களா
பக்கி
 இந்த கேரளாக்காரனுங்க  தொல்ல தாங்கலப்பா

  • கருத்துக்கள உறவுகள்

ஆரிய மாயையில் புலம்புகின்றது ஆர்.எஸ்.எஸ் !

 

இப்படியான முக்கிய பிரச்சனைகளில் கருத்துக் கூறுவதை விட்டு, சீதை, இராமருக்குப் பேன் பார்த்தாளா, போன்ற ஆய்வுகளில் ஈடுபடலாம்! :D

இவங்களுக்கு  சுதந்திரம், என்றா என்ன என்று தெரியாது. சும்மா காந்தி படுத்திருக்க வெள்ளைக்காரன் விட்டு போனதுதான், 

 

இந்தியா ஒரு கூழ் முட்டை. .சீழ் தான் வடிகிறது அரசியல் வாதிகளின் வாயிலிருந்து.

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதாக அறிவித்தது. ஆனால், தற்போது வரை 2 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. அதுபோல இடிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டுவதற்காக இந்திய அரசு பணம் கொடுத்தது. ஆனால், கோயில்கள் கட்டப்படவில்லை. மறுவாழ்வுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசால் மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும். அதனைத்தான் இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார் அவர்.

அவர் தான் என்னதான் பேசுகிறார் என்பதை விளங்காமல் பேசுகிறார். கிந்தியாவால் மட்டும்தான் முடியும் என்றால் என்ன ஈழத்தமிழர் எல்லோருக்கும் இந்திய பாகிஸ்தானியர் சட்டம் போல கிந்தியாவுக்கு குடி பெயர வேண்டும் என்கிறாரா?

 

இலங்கை தமிழர் தமக்குதாம் வீடுகட்ட, கோவில் கட்ட கிந்திய வக்கீல் இல்லாமல் செய்தால் அது காங்கிரசுக்கு மகிமை சேர்க்காது என்கிறாரா? எதுக்காக கிந்திய காங்கிரஸ் சிங்கள அரசியலில் தலையிட வேண்டும்?

Edited by மல்லையூரான்

 ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதாக அறிவித்தது. ஆனால், தற்போது வரை 2 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. அதுபோல இடிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டுவதற்காக இந்திய அரசு பணம் கொடுத்தது. ஆனால், கோயில்கள் கட்டப்படவில்லை. மறுவாழ்வுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசால் மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும். அதனைத்தான் இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார் அவர்.

 

 

 

அவர் தான் என்னதான் பேசுகிறார் என்பதை விளங்காமல் பேசுகிறார். கிந்தியாவால் மட்டும்தான் முடியும் என்றால் என்ன ஈழத்தமிழர் எல்லோருக்கும் இந்திய பாகிஸ்தானியர் சட்டம் போல கிந்தியாவுக்கு குடி பெயர வேண்டும் என்கிறாரா?

 

இலங்கை தமிழர் தமக்குதாம் வீடுகட்ட, கோவில் கட்ட கிந்திய வக்கீல் இல்லாமல் செய்தால் அது காங்கிரசுக்கு மகிமை சேர்க்காது என்கிறாரா? எதுக்காக கிந்திய காங்கிரஸ் சிங்கள அரசியலில் தலையிட வேண்டும்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு மதவாத அமைப்பு.

 

முற்றிலும் பார்ப்பன அரசியலை வாரிக் கொண்ட அமைப்பு எக்காலத்திலும் கருத்தியல் ரீதியாக தமிழர் தனித் தேசத்தினை ஆதரிக்க போவதில்லை. ஆதரித்ததும் இல்லை.

 

பொது பல சேனா, ஹெல உருமய போன்றன எல்லாம் பாடம் படிக்க கூடிய தாயமைப்புத் தான் ஆர்.எஸ்.எஸ். அந்த ஆர்.எஸ்.எஸ் இற்கு முன்னுரிமை கொடுக்கும் பா.ஜ.க. வும் எக்காலத்திலும் தமிழ் தனி தேசத்துக்கு ஆதரவு கொடுக்கப் போவதில்லை.

 

இப்படியான அமைப்புகளுக்கு தமிழக மாணவர்களின் எழுச்சி சந்தோசத்துக்கு பதிலாக கலக்கத்தினைத் தான் கொடுக்கும்.

 

பார்ப்பனியத்துக்கு மாறாக திராவிடத்தினை முன் மொழிந்த திராவிடக் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலில் வெறுப்புற்ற தமிழ மாணவர்களின் எழுச்சி பேரெழுச்சியாக முனைப்பு பெற முன் அதனை தகர்க்கவே இவை பாடுபடும்.

 

பல அமைப்புகளின், கட்சிகளின் முகங்கள் கிழிபடும் காலம் இது, 

 

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழ விரும்புகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாடு - கேரள மாநிலங்களின் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நோட் பண்ணுங்கப்பா..நோட்பண்ணுங்கப்பா..

தமிழக மாணவர் போராட்டத்தால் கதிகலங்கிப் போயுள்ள தமிழின விரோதிகளான, ஹிந்தி வெறியர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும்  RSS மற்றும் BJP குழுவினர்  போலியான அறிக்கைகளை விட்டு தமிழகத்தில் கொதித்துப் போயுள்ள மூளைச்சலவை செய்யப்பட்ட அவர்களது ஆதரவாளர்களை தக்க வைக்க முயலுகின்றனர்.

அத்துடன் மாணவர் போராட்டங்களையும் குழப்பும் முயற்சியில் RSS மற்றும் BJP கும்பலின் கைக்கூலிகள் ஏவப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஈழத் தமிழின அழிப்பில் RSS அமைப்பானது சிங்கள அரச பயங்கரவாதிகளுடன், பௌத்த மதவாதிகளுடன் சேர்ந்து  HSS (ஹிந்து சுயம்சேவக் சங்கம்) என்னும் போர்வையில் ஈழமண்ணில் இயங்கியதை, தொடர்ந்து இயங்கி வருவதை  தாயக மக்கள் எவரும் மறந்துவிட மாட்டார்கள்.

ஈழத் தமிழர் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள் என்று சொல்ல RSS க்கு என்ன அருகதை, தகுதி உள்ளது?

அது உண்மை என்றால், ஈழத் தமிழர் மத்தியில் ஒரு நடுநிலையான நாடுகளின் உதவியுடன் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடாத்தும் படி கோரிக்கை விடலாமே? என்ன தயக்கம்?

ஈழத் தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர்: ஆர்.எஸ்.எஸ்

 

இதைச்சொல்ல நீங்கள் யார். மக்கள் முடிவு செய்யட்டும்.

ஆர்.எஸ்.எஸ் க்கு எப்போதுமே தங்களின் முடிவே பெருன்பான்மை முடிவென்ற தலைக்கனமுண்டு. முதலில் மோடி எப்படி உங்களை மீறி பிரதமர் பதவிக்காக முன்னேறுகிறார் என்று ஆராயுங்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.