Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீ இல்லாத நான்

Featured Replies

0298xz.jpg

உனக்குப் பிடித்த பாடல்களாலும்

உன்னை படித்த நாட்களாலும்

உன்னை வடித்த வரிகளாலும்

திமிருற்ற எந்தன் ஏட்டை

அழித்து விட்டு எனக்கு நானே

சொல்லிக்கொண்டேன நம் காதல்

கலைந்து விட்டதென்று

காலையில் தினமும் கண்சிமிட்டும் பகலவனால்

உன் துளிர்ப்புன்னகைச் சேமிப்பெடுத்து

இன்னமும் ரசிக்கிறேன் சிலிர்க்கிறேன்

இருந்தும் உன்னை விட்டு விலகி விட்டேன்

சில்லென்று மெய் நனைக்கும்

ஒவ்வொரு நீர்த்துளியும்

உன் ஸ்பரிசயமாய் படர்ந்தன

ஆனாலும் உன்னை மறந்து விட்டேன்

உட்கொள்ளுமோர் பருக்கையிலும்

நிராசையாகிப்போன நம் ஆசைகள்

நளினத்தோடு எள்ளி நகையாடின

என்றாலும் நாம் பிரிந்து விட்டோம்

பார்வையில் பாசையில் தூண்டலில்

துலங்கலில் நிறத்தில் மணத்தில்

சுவையில் தூக்கத்தில் கனவில்

நினைவில் எங்குமாக எல்லாமாக

நீக்கமற நீ நிறைந்திருக்கலாம்!

அதனாலென்ன

எனக்கு நீ இல்லாத நான் கிடைத்துவிட்டேனென

உரக்கச் சொல்லிக்கொள்வேன் - உண்மையாகாதா?

:roll:

கவிதை நன்று வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

நன்றி இலக்கியன்!

காதலருக்கு பிடித்த வரிகளாலும் நாட்களாலும் பாடல்களாலும் திமிர் பிடித்த ஏட்டை அழித்துவிட்டு, காதல் கலைந்துவிட்டது என சொல்லிக் கொண்டாராம்! சொல்லிக் கொள்ளட்டும். என்ன பிரச்சினையோ.. யாருக்கு தெரியும்?! :P

புன்னகையை சேமிப்பில போட்டு இன்னமும் ரசிக்கிறாராம், சிலிர்க்கிறாராம். என்றாலும் விலகிவிட்டாராம்! நம்பலாமா.. சரி.. நம்பிக் கொண்டு அங்கால பாப்பம்.

நீர்த்துளி கூட அவரது ஸ்பரிசமாய் படர்ந்ததாம். என்றாலும் மறந்துவிட்டாராம். சரி..!!

நிராசையாகிப்போன ஆசைகள் எள்ளி நகையாடின. என்றாலும் பிரிந்துவிட்டோம்னு இந்த இடத்தில் பிரிவுக்கு இருவரையும் காரணமாக்குகிறார். ஆக, தொடக்கத்திலே தானே பிரிந்தேன், தானே விலகினேன் என கூறியவர் இற்போது தாங்கள் பிரிந்துவிட்டோம் என்று எதைக் கூற வருகிறார்.. இருவருமே காதலை பொழுதுபோக்காக எடுத்ததையா அல்லது காதலின் மகத்துவம் இருவருக்குமே புரியவில்லை என்பதையா அல்லது தவறாக இரு பாலினத்தே எழும் ஈர்ப்பை காதல் என்று அர்த்தப்படுத்திக் கொண்ட செயலையா?

இதை கவிஞர்தான் தெளிவாக்க வேணும். :P

பிரிந்துவிட்டோம் என்று சொல்லியே மானசீகமாக இணைந்துள்ளீர்கள்...

நினைவினில் நிறைந்தவனை நிஜமாக மாற்றிக் கொள்ள மனதினில் ஏன் தடை எனும் ஆரம்பம் புரியவில்லை..?

என் மனதினைத் தொட்ட கவி வாழ்த்துக்கள் :lol:

x1pnprgmi5o50lf2ll45nyr8p997yw.jpg

சிநேகிதி என்ன பழைய ஞாபகம் வருதா. ஹீ ஹீ சோழி அண்ணாடை சந்தேகத்தை வந்து தீருங்க. அப்பதான் எனது சந்தேகமும் கிளியர் ஆகும் ;). கவிதை நன்று. பாராட்டுக்கள்.

உனக்குப் பிடித்த பாடல்களாலும்

உன்னை படித்த நாட்களாலும்

உன்னை வடித்த வரிகளாலும்

திமிருற்ற எந்தன் ஏட்டை

அழித்து விட்டு எனக்கு நானே

சொல்லிக்கொண்டேன நம் காதல்

கலைந்து விட்டதென்று

பாடசாலைக்கு போய் படிப்பை படித்து விட்டு வா என்று சொல்லி அம்மா விட பிள்ளை போய் என்ன படித்திவிட்டு வந்திருக்கு என்று பாருங்கோ.

அழகான கருத்துடைய கவிதை சினேகிதி. பாராட்டுக்கள்.

சிநேகிதி என்ன பழைய ஞாபகம் வருதா. ஹீ ஹீ சோழி அண்ணாடை சந்தேகத்தை வந்து தீருங்க. அப்பதான் எனது சந்தேகமும் கிளியர் ஆகும் ;). கவிதை நன்று. பாராட்டுக்கள்.

அது எல்லாம் கிந்தி படம் பார்த்தால் பிறந்த கவிதை ரசிகை. படம் பார்த்து கனவு கண்டு இரவு 2 மணிக்கு எழும்பி கவிதை எழுதினால் இப்படித்தான் வருமாம். :lol: :wink:

  • தொடங்கியவர்

சோழியண்ணா ஆசைகள் மட்டும் இரண்டு பேருக்கும் பொதுவானது அதால பிரிந்தோம் என்று சொன்னேன்.

  • தொடங்கியவர்

நன்றி கௌரி பாலன்:-) நிஜம் நினைவாயிற்று அதான் ஏட்டிலுள்ளதை அழித்தால் எண்ணமும் அழியும் என்று இந்தப்பெண் நினைக்கிறார் ஆனால் காணும் காட்சியெல்லாம் தெரியும் ஒவ்வொரு பொருளிலும் காதலன் நினைவு சூழ்ந்திருப்பதால் தன் நடிப்பு உண்மையாகாத என்று தவிக்கிறார் என்று சொல்லலாம்.

  • தொடங்கியவர்

என்ன ரசி அக்கா லொள்ளா?? ஒட்டாவாக்கு வந்து கொல்லுவன் உங்களை.

  • தொடங்கியவர்

அக்காமாற்ற லொள்ஸ் தாங்க முடியலப்பா....றமாக்கா நான் அச்சாப்பிள்ளை நல்லாத்தான் படிக்கிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்வையில் பாசையில் தூண்டலில்

துலங்கலில் நிறத்தில் மணத்தில்

சுவையில் தூக்கத்தில் கனவில்

நினைவில் எங்குமாக எல்லாமாக

நீக்கமற நீ நிறைந்திருக்கலாம்!

அதனாலென்ன

எனக்கு நீ இல்லாத நான் கிடைத்துவிட்டேனென

உரக்கச் சொல்லிக்கொள்வேன் - உண்மையாகாதா?

உணர்வுள்ள உண்மையுள்ள கவிதை. கவிதை சொன்ன கருத்து பலருக்கு நகைப்பையும், சிலருக்கு வியப்பையும், எனக்கோ கவலையையும் தந்திருக்கின்றது.

பாடசாலைக்கு போய் படிப்பை படித்து விட்டு வா என்று சொல்லி அம்மா விட பிள்ளை போய் என்ன படித்திவிட்டு வந்திருக்கு என்று பாருங்கோ.

ரமாக்கா,

பள்ளியிலே படிக்கும் பாடம் எதற்க்கு உதவும் ?? ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். பின் எப்படி வாழ்க்கைக்கு அது உதவும்.

வாழ்க்கை பாடத்தை ஒரே ஒரு வழியில் மொழியில் கற்று தரக்கூடிய வல்லமை காதலுக்கு இருக்கிறது.

  • தொடங்கியவர்

அச்சச்சோ..தம்பிக்கு கவலை வந்திடுச்சோ...ச்சரி ச்சரி கவலைப்படாதயுங்கோ :-) றமாக்கா நிதர்சன் ஏதோ வழி மொழி என்று எதுகை மோனையில் சொல்றது விளங்குதோ?

உணர்வுள்ள உண்மையுள்ள கவிதை. கவிதை சொன்ன கருத்து பலருக்கு நகைப்பையும், சிலருக்கு வியப்பையும், எனக்கோ கவலையையும் தந்திருக்கின்றது.

ரமாக்கா,

பள்ளியிலே படிக்கும் பாடம் எதற்க்கு உதவும் ?? ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். பின் எப்படி வாழ்க்கைக்கு அது உதவும்.

வாழ்க்கை பாடத்தை ஒரே ஒரு வழியில் மொழியில் கற்று தரக்கூடிய வல்லமை காதலுக்கு இருக்கிறது.

ஓஓஒ அப்படியா? அப்ப ஏன் வீணாக பாடசாலைக்கு போய் ஏட்டு பாடத்தை படிக்கின்றீர்?. :lol: பேசமால் காதல் பாடத்தை படித்து வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க வழியை பார்க்க வேண்டியது தானே. காதல் என்ற பள்ளிக்கூடத்தில் வாழ்க்கை பாடம் படித்தவர்களின் வாழ்க்கை எப்படி அவஸ்தையாக போகின்றது என்பது தெரியாதோ? :lol::lol: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் என்ற பள்ளிக்கூடத்தில் வாழ்க்கை பாடம் படித்தவர்களின் வாழ்க்கை எப்படி அவஸ்தையாக போகின்றது என்பது தெரியாதோ?

காதல் என்ற பாடத்தை கற்று தேறமுடியாது. அதை உயர்வு பூர்வமாக உணர்ந்து தேற வேண்டும். அறிவுபூர்வமாக சிநத்தித்தோ, அல்லது வலுக்கட்டாயமாக காதல் செய்வதாலே இதில தேற முடியாது. காதல் என்ற பாடத்தில் கல்வி கற்றவர்கள் தோற்றிருக்கிறார்கள். ஆனால் வென்றவர்கள் பலர் இருக்கிறார்கள். தோற்றவர்களை தோற்க வைத்தது அவர்கள் அல்ல எங்கள் சமூக கட்டமைப்பும், சில மூட முட்டாள்தனத்தை இன்னமும் தங்கள் மனங்களில் வைத்திருக்கும் பெற்றவரும் தானே ஒழிய காதலர்கள் அல்ல. அவஸ்த்தையாக வாழ்க்கை போனாலும், ஒருவருக்கு ஏதாவது நடக்குமானால் அவர்களின் காதலை நீங்கள் உணர்வீர்கள். இதன் பெயர் அவஸ்தையல்ல காதலின் இன்னோர் வடிவம்.

காதலை அறிவுபூர்வமாக பார்க்காமல், உணர்வு ரீதியில் உணர முயற்ச்சி செய்யுங்கள்.

வழிகள் தோறும் வலிகள் நிறைந்தது இந்த காதல்

சோலைகள் எங்கும் சோகம் மிக்கதும் இந்த காதல்

ஆற வழியின்றி அழ வைப்பதும் இந்த காதல்

இணைவின் இறுதியில் இனிமையும் இந்த காதலில் தான்

பிரிவின் விளிம்பில் வேதனையும் இந்த காதலில் தான்

வணக்கம் சிநேகிதி,

கவிதை நல்லா இருக்கு

அன்புடன்

மணிவாசகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்றாக இருக்கிறது. ஆனா ஒரு சொல்லு மட்டும் புரியல. அது என்ன எண்டு சொன்னா இன்னும் உதவியா இருக்கும். அதுதானுங்க 'ஸ்பரிசயமாய்' எண்டா என்ன. அதயும் ஒருக்கா சொல்லித்தாங்கோ :roll:

  • தொடங்கியவர்

நன்றி மணிவாசன் :-) லொள் பிரேம் வடமொழிச்சொல் என்றதாலதானே இந்த நக்கல்?

  • தொடங்கியவர்

நதர்சன் இப்பிடியெல்லாம் உணர்ச்சிவசப்படக்கூடாது :-)

வழிகள் தோறும் வலிகள் நிறைந்தது இந்த காதல்

சோலைகள் எங்கும் சோகம் மிக்கதும் இந்த காதல்

ஆற வழியின்றி அழ வைப்பதும் இந்த காதல்

இணைவின் இறுதியில் இனிமையும் இந்த காதலில் தான்

பிரிவின் விளிம்பில் வேதனையும் இந்த காதலில் தான்

அர்த்தம் பொதிந்த வரிகள்.

சோழியண்ணா ஆசைகள் மட்டும் இரண்டு பேருக்கும் பொதுவானது அதால பிரிந்தோம் என்று சொன்னேன்.

ஆசைகள் பொதுவானவை என்பதற்காக உறவும் பிரிவும் பொதுவானவையாக அமையவேண்டும் என்ற நியதி இல்லையே!

பாவம் பசங்க.. காதலை ஓக்கே எண்டுறதும் பொண்ணுக.. 'பாய்'னு இடைல பாயுறதும் அவங்க.. அப்பாவிப் பசங்க நிலைய கொஞ்சமாவது நினைச்சுப் பாத்தேளா? :P

  • தொடங்கியவர்

ஆமா சோழியண்ணா நீங்கள் சொல்றது சரி! பசங்க பாவம்தான் ஆனால் இந்தப் பொண்ணுங்க இருக்காங்க பாருங்க அவங்க பாவமோ பாவம். :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.