Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலி தலைவர்கள் யார்? யார்?.. அவர்கள் எங்கே?

Featured Replies

10-ltte-300.jpg

 

யாழ்ப்பாணம்: 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் பலரது கதி என்ன? என்று தெரியாமல் இருந்து வருகிறது. இலங்கை அரசும் அவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை எனக் கூறி வருகிறது.

 

ஆனால் பொதுமக்கள் மற்றும் போராளிகள் முன்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளும் தலைவர்களும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்திருக்கின்றனர். இதனால் இவர்கள் சரணடைந்ததை நேரில் பார்த்த பல நூறு சாட்சிகள் இருக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட இந்த சாட்சிகள் வீடு திரும்பிய நிலையில் இந்த உண்மைகளை தற்போது வெளியிட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் போராளிகள் முன்னிலையில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் யார்? யார் என்ற பட்டியல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகன்,

உதவியாளர் போராளி ஐங்கரன்

தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர். வெ.இளங்குமரன் (பேபி சுப்பிரமணியன்),மனைவி வெற்றிச்செல்வி மற்றும் மகள் அறிவுமதி

சமர்ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி

தமிழீழ கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை

தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் கி.பாப்பா தமிழீழ விளையாட்டுத்துறை துணைப் பொறுப்பாளர் ராஜா(செம்பியன்) அவரது மூன்று பிள்ளைகள்.

விடுதலைப்புலிகளின் இராணுவ செய்தித் தொடர்பாளர் இளந்திரையன்

தமிழீழ வைப்பகப் பொறுப்பாளர் வீரத்தேவன்

தமிழீழ அரசியல் துறையைச்சேர்ந்த கானகன்

தமிழீழ அரசியல் துறைதுணைப் பொறுப்பாளர் சோ.தங்கன்

தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர்களில் ஒருவரான அருணா

தமிழர் புனர்வாழ்வுக்கழக துணை நிறைவேற்றுப் பணிப்பாளர் சொ.நரேன்

தமிழீழ போக்குவரத்துக்கழக பொறுப்பாளர் குட்டி

தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர் பிரியன் மற்றும் குடும்பம்

தமிழீழ நிர்வாக சேவை முன்னாள் பொறுப்பாளர் வீ.பூவண்ணன்

தமிழீழ நிர்வாசேவை பொறுப்பாளர்களில் ஒருவர் தங்கையா

தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான மலரவன்

தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான பகீரதன்

தமிழீழ மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் ரேகா

மணலாறு கட்டளைப் பணியகத் தளபதிகளில் ஒருவரான செல்வராசா

மணலாறு கட்டளைப் பணியக தளபதிகளில் ஒருவரான பாஸ்கரன்

தளபதி லோறன்ஸ்

தளபதி குமரன்

மட்டுமாவட்ட தளபதிகளில் ஒருவரான பிரபா

வழங்கப்பகுதி பொறுப்பாளர் ரூபன்

நகைவாணிபங்களின் பொறுப்பாளர் பாபு

திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன்

யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி

அரசியல்துறை நிர்வாகப் பொறுப்பாளர் விஜிதரன்

தளபதிகளில் ஒருவரான வீமன்

வனவள பாதுகாப்புப்பிரிவு பொறுப்பாளர் சக்தி குடும்பம்

சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர் இ.ரவி

முள்ளியவளைக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சஞ்சை நீதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா ராதா

வான்காப்புப் படையணி பொறுப்பாளர்களில் ஒருவர் குமாரவேல்

மணலாறு மாவட்ட கட்டளைத்தளபதி சித்திராங்கன்

மாலதி படையணித் தளபதிகளில் ஒருவரான சுகி

கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான அருணன்

மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மனோஜ்

நிதித்துறையைச் சேர்ந்த லோறன்ஸ்

 

உள்ளிட்ட மேலும் பலரும் சரணடைந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இவர்களது நிலைமை என்ன எனத் தெரியவில்லை.

 

http://tamil.oneindia.in/news/2013/04/10/srilanka-surrendered-ltte-leaders-list-released-173190.html

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் சரணடைஞ்சவையோ?

 

ஒருத்தரும் குப்பி பாவிக்கேல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சரணடைஞ்சவையோ?

 

ஒருத்தரும் குப்பி பாவிக்கேல்லையோ?

 

குப்பியடிச்சுத் தப்பி வந்திருக்கின்றீர்கள் போலிருக்கு <_< 

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சரணடைஞ்சவையோ?

 

ஒருத்தரும் குப்பி பாவிக்கேல்லையோ?

 

எல்லாம் நீங்கள் இருக்கிறீங்கள் என்ற நம்பிக்கையில தானாம்..! நீங்களே இப்படிக் கேட்டால்..???! நீங்கள் தானோ சொன்னீங்கள்.. உந்தா வந்திட்டான்.. போட்டிட்டு சரணடைய வேண்டியதான் பாக்கி என்று. சரணடைஞ்சதன் விளைவு... இப்ப நீங்களே குப்பி பாவிக்கல்லையோ என்றும் கேட்கிறீங்கள். உங்களுக்கு உந்த அல்சிமர் இன்னும் தீரவில்லைப் போல..! :)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆள் திடீரெண்டு வந்திருக்கு?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆள் திடீரெண்டு வந்திருக்கு?? :rolleyes:

 

மீண்டும் திறந்து விட்டிருக்குப் போல. இவ்வளவு நாளும் கேற்றில நிற்பாட்டி இருந்தது... என்று நினைக்கிறன். திறந்து விட்டால்.. திறந்த வீட்டுக்க.. என்னவோ பூந்த கதைதான்..! :):lol:

இவர்கள் சரணடைவதற்கு முன் ஒரு மாதத்தில் நடைபெற்ற சண்டையில் செத்த/காயப்பட்ட போராளிகளையும் மக்களையும் என்ன என்று சொல்லுவது ..எல்லாம் இந்தியா செய்த சதி

 

இவர்கள் சரணடைவதற்கு முன் ஒரு மாதத்தில் நடைபெற்ற சண்டையில் செத்த/காயப்பட்ட போராளிகளையும் மக்களையும் என்ன என்று சொல்லுவது ..எல்லாம் இந்தியா செய்த சதி

 

எலும்பு துண்டை பொறுக்கும் போது மகிந்தவிடம் கேட்டுப்பாருங்கள்

வந்தி: ரொம்ப கஸ்டமா இருக்கோ :icon_mrgreen:  குடும்பமா கப்பல்ல அனுப்புறோம் என்ற உடனே முன்னே பின்னே செத்தவனை பற்றி யோசிக்காமல் கையை தூக்கிறது , பிறகு மற்றவனை எலும்பு பொறுக்கிறது என்று ஒரு நக்கல்,

:lol: :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பாவைத் தேடவேண்டிய தேவையில்லை. அவர் இலங்கை ராணுவத்தின் புலநாய்வுத் துறையுடன் வேலை செய்கிறார். வவுனியாவில் சரனடைந்த போராளிகளையும், மக்களையும் பிரித்தறிவதில் பாப்பாவும் உதவியிருக்கிறார். இவரை பின்னர் கட்டுநாயக்கா விமான நிலைய புலநாய்வுப்பகுதியில் பலர் கண்டிருக்கிறார்கள். இறுதிநாளில் சரணடைந்த போராளிகளை விசாரித்தவர்களில் இவரும் ஒருவர் என்று கேள்வி.

Edited by ragunathan

இவ்வளவு காலத்தின் பின்பும் இப்படியொரு கேள்வியா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆள் திடீரெண்டு வந்திருக்கு?? :rolleyes:

 

யாழ்களத்தில் அரட்டை அதிகமாகிப் போய்விட்டதால் நிர்வாகம், வாக்குவாதங்களை கூட்டி சூடேற்ற முயற்சிக்கின்றார்கள் போலுள்ளது. சில புது உறுப்பினர்கள் வருகையும் அப்படித் தான் தோன்ற வைக்கின்றது....

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்களத்தில் அரட்டை அதிகமாகிப் போய்விட்டதால் நிர்வாகம், வாக்குவாதங்களை கூட்டி சூடேற்ற முயற்சிக்கின்றார்கள் போலுள்ளது. சில புது உறுப்பினர்கள் வருகையும் அப்படித் தான் தோன்ற வைக்கின்றது....

வாக்குவாதங்களைக் காணவில்லையே. வெறும் சத்தங்கள்தானே வைக்கின்றார்கள்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்களத்தில் அரட்டை அதிகமாகிப் போய்விட்டதால் நிர்வாகம், வாக்குவாதங்களை கூட்டி சூடேற்ற முயற்சிக்கின்றார்கள் போலுள்ளது. சில புது உறுப்பினர்கள் வருகையும் அப்படித் தான் தோன்ற வைக்கின்றது....

 

 

எனக்கும் உள்ள விட்டது ஆச்சரியம்தான், இப்பிடி உள்நோக்கம் இருக்கும் எண்டு யார் யோசிச்சது?

 

நீங்கள் எழுதின பிறகுதான் பாத்தன், இண்டைக்கும் ரெண்டு புதுசா முளைச்சிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்பு வரும்போது பெட்டிப்பாம்பாக அடங்குவதும், பிற்பாடு சந்தடிசாக்கில் மூஞ்சையைக் காட்டும் பழக்கத்தை இன்னமும; விடவில்லையா? உம்முடைய கருத்துக்கள் அனுமதிப்பது பற்றித் தான் நிர்வாகத்தைச் சொன்னேன்... தடை செய்ததாக சொல்லவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

10-ltte-300.jpg

 

மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மனோஜ்

நிதித்துறையைச் சேர்ந்த லோறன்ஸ்

 

உள்ளிட்ட மேலும் பலரும் சரணடைந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இவர்களது நிலைமை என்ன எனத் தெரியவில்லை.

 

http://tamil.oneindia.in/news/2013/04/10/srilanka-surrendered-ltte-leaders-list-released-173190.html

 

மனோஜ் 2009ல் சரணடைந்தார்.பின்னர் விளக்கமறியல் சிறைச்சாலை அதன் பின்னர் மகசீன் சிறைச்சாலையில் இருந்து புனர்வாழ்வு முகாமில் தற்போது புனர்வாழ்வு பெற்றுக் கொண்டிருக்கிறார்.

 

 

குப்பியடிச்சுத் தப்பி வந்திருக்கின்றீர்கள் போலிருக்கு <_< 

 

 

காலாவதியான குப்பிபோல. ^_^

 

 

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூட்டினாங்க திறந்தாங்க யாருக்கப்பா தெரியும் உதுகளிண்ட சூட்சுமங்கள்.

 

இந்த திரிய பத்தவைக்க உங்களில பருக்கு ஆசை இருக்கிது தெரியிது....

 

கருத்து சுதந்திரம் கொலோச்சுது! அது தான் பிரச்சனை! :D

 

கிட்டத்தட்ட 9 கோடியையே விட்டு வைக்காத மட்டிருத்தினர்கள் ..... :wub:

 

விட்டு வைப்பாங்க ன்னு நினைகேல. :)

  • கருத்துக்கள உறவுகள்

காலாவதியான குப்பிபோல.  ^_^ //இப்படி அடிச்சா மேல்வீட்டுக்கும்  அதே நிலைதான்  :lol:

யாழ்களத்தில் அரட்டை அதிகமாகிப் போய்விட்டதால் நிர்வாகம், வாக்குவாதங்களை கூட்டி சூடேற்ற முயற்சிக்கின்றார்கள் போலுள்ளது. சில புது உறுப்பினர்கள் வருகையும் அப்படித் தான் தோன்ற வைக்கின்றது....

நீங்கள் கூற வருவது என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குதிர வந்திட்டுது இனி ரேஸ் தான். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.