Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனதை உற்சாகப்படுத்தும் உணவுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மனதை உற்சாகப்படுத்தும் உணவுகள்.
 

                              மனம் நல்ல நிலையில் இருப்பதற்கு உணவும் முக்கியமானது.அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை தேர்ந்தெடுத்து உண்ணும்போது உடல் நலம் சிறப்பாக இருக்கும்.உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.ஜலதோஷம் பிடித்தால் கூட சிடுசிடுப்பும் எரிச்சலும் வந்து விடுகிறது.உடலில் ஏற்படும் நோய்கள் மனதையும் மனதில் ஏற்படும் நலக்குறைவு உடலையும் பாதிக்கும்.இந்திய மருத்துவத்தில் குறிப்பிட்ட உணவு உணர்ச்சிகளில் மாறுபாட்டை உண்டாக்கும் என்று சொல்வதுண்டு.
happy.jpeg
 
                               பெரும்பாலான வீடுகளில் நடக்கும் ஒரு நிகழ்வை கவனித்திருக்க முடியும்.நண்பர் ஒருவருக்கு அப்பாவுடன் சண்டை.காரசாரமான விவாதம் நடைபெற்று நண்பர் வெறுத்துப்போயிருந்தார்.அன்று மாலை அவருடைய அம்மா கடைக்குப்போய் திரும்பிக்கொண்டிருந்தார்.” அவனுக்குப் பிடிக்கும் என்று பலகாரம் செய்யப்போகிறேன்.ஆமாம்.அம்மாவுக்கு தெரியாதா என்ன? குழந்தைகள் எதற்கு கவலையை மறப்பார்கள்? எப்படி வழிக்கு கொண்டு வருவதுஎன்பதெல்லாம் அவர்களுக்கு தெரியும்.ஒவ்வொருவருக்கும் சில உணவுகளில் விருப்பம் அதிகம்.விருப்பமான உணவுகள் மனதை சந்தோஷப்படுத்தி விடுகிறது.மனம் இறுக்கமாக இருக்கும்போது பிடித்த உணவை உண்பது இறுக்கத்தை குறைக்க உதவும்.
 
                               மேலே கண்ட அம்மா வைத்தியமும் இப்போது பெரும் சிக்கலை உண்டாக்கி வருகிறது.சிறுவயது முதலே இனிப்பு,குப்பை உணவு என்று பழக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.அதிக எடை,ஆரோக்கிய குறைபாடு என்று திசை மாறிக்கொண்டிருக்கிறது.ஆரோக்கியம் தரும் பலகாரத்தை வீட்டில் செய்து தருவது இன்று சாத்தியமாக இல்லை.பொட்டலம் கட்டப்பட்ட அல்லது கடையை நம்பியே இருக்கிறார்கள்.அழும்போதெல்லாம் இப்படிப்பட்ட உணவுகளையே தின்னக் கொடுக்கிறார்கள்.இத்தகைய பழக்கங்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.
serotonin.jpeg
 
                                                                       பெரும்பாலான வீடுகளில் இந்தப்பழக்கம் இருக்கிறது.சமைப்பதற்கு முன்னால் என்ன செய்யட்டும் என்று கேட்பார்கள்.ஆனால் அனைத்து உறுப்பினர்களையும் திருப்திப்படுத்துவது சாத்தியம் இல்லை.நமக்கு சில நேரங்களில் குறிப்பிட்ட உணவின் மீது ஆசை உண்டாகிறது.உணவின் மீதான ஆர்வத்துக்கும் உடல் நலனுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக ஒரு கிராமத்துப்பெரியவர் சொன்னார்.உடலில் உள்ள நோய்க்கு தகுந்தவாறு உணவின் மீதான ஆசையும் இருக்கும் என்றார்.உதாரணமாக ஒருவர் உடலில் சி வைட்டமின் பற்றாக்குறையாக இருக்கும்போது சி உயிர்ச்சத்து மிகுந்த உணவுகளின் மீது ஆர்வம் உண்டாகும்.இது சிந்திக்கவேண்டிய விஷயமாகத்தோன்றுகிறது.
                                                                         மகிழ்ச்சி, நல்ல மனநிலை,தூக்கம் போன்றவற்றிற்கு செரோடானின் என்ற வேதிப்பொருள் முக்கிய காரணமாக உள்ளது.செரோடானின் அளவை உயர்த்தும் உணவுகளை உண்பது முக்கியமானது.வைட்டமின் பி சத்துள்ள உணவுகள்(பச்சை காய்கறிகள்,இறைச்சி,முட்டை,முளை கட்டிய தானியங்கள்,கைக்குத்தல் அரிசி,கோழி இறைச்சியின் மார்புப்பகுதி போன்றவை),வாழைப்பழம்,தக்காளி,அன்னாசி,கடல் உணவுகள் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது மகிழ்ச்சியான மனநிலையை தக்கவைக்கும்.
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு,  பூர்மால். :)

 

உங்களது பெயர்... பூர்மாலா, பெருமாளா?
அதையும்... எங்களுக்கு, தெளிவு படுத்தி விடுங்களேன். :D

 

  • கருத்துக்கள உறவுகள்

உது உண்மை தான் சில நேரத்தில சில உணவு சாப்பிடோனும் போல இருக்கும் :D  சாப்பிட்டால் சந்தோசமாய் இருக்கும் :)  :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு,  பூர்மால். :)

 

உங்களது பெயர்... பூர்மாலா, பெருமாளா?

அதையும்... எங்களுக்கு, தெளிவு படுத்தி விடுங்களேன். :D

பூர்மால்..ஒரு வயசான மனிசனை எழுத்துக்கூட்டி படிக்கிற அளவுக்கு அலையவிடாமல்..டக்கெண்டு பதிலை சொல்லும்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூர்மால்..ஒரு வயசான மனிசனை எழுத்துக்கூட்டி படிக்கிற அளவுக்கு அலையவிடாமல்..டக்கெண்டு பதிலை சொல்லும்.. :D

நண்பரின் பெயர் பெருமாள் ஆள் yarlல் கணக்கு தொடங்கும் பொழுது  பூர்மால் என்று அடிச்சு திறந்து போட்டுது  நம்ப கணணியில் மே18க்குபின் இந்த பெயரில் yarl க்குவருகை அதற்க்கு முன்பு yarl தெரியாது சரிதானே இப்ப தமிழ் சிறி 

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரின் பெயர் பெருமாள் ஆள் yarlல் கணக்கு தொடங்கும் பொழுது  பூர்மால் என்று அடிச்சு திறந்து போட்டுது  நம்ப கணணியில் மே18க்குபின் இந்த பெயரில் yarl க்குவருகை அதற்க்கு முன்பு yarl தெரியாது சரிதானே இப்ப தமிழ் சிறி 

:rolleyes:

 

பலருக்கும்.... உங்கள் பெயரை, உச்சரிக்க கஷ்டமாகவும், தடுமாற்றமாகவும் இருப்பதால்.... உங்களுக்கு விரும்பிய பெயரை.. தமிழில் வைப்பது நல்லது. :wub:

 

அத்துடன்... உங்களை களத்தில், அறிந்த பலர் இருப்பதால்....,

பெருமாள் என்றே... வையுங்கள். இது... தேவையில்லாத குழப்பத்தை, தவிர்க்கும்.

இது, எனது.. தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே. முடிவு, எடுக்க வேண்டியது, நீங்கள் தான்.

வலது மூலையிலுள்ள... ரிப்போட், பொத்தான் மூலம்... நிர்வாகத்துக்கு, உங்கள் ஆசையை... சொல்லுங்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறி,சுபேஸ் இன்றே மாற்றி விடுகின்றேன் பெருமாள் என்று.

 

உண்மைதான்,

 

நண்டு, கணவாய், கணவாய்க் கருவாடு, மீன், மீன் கருவாடு, இறால், இறால் கூனி கருவாடு,மீன் சினை, நெத்தலிக் கருவாடு,   கோழி,  ஆடு, மாடு, காட்டுப் பன்றி, மான், மரை, மரை வத்தல், மான் வத்தல், ஆமை, காடை, வான் கோழி, ஒட்டகம் என்று எல்லா இறைச்சிகளும் சாப்பிட்ட பின் எனக்கு நல்ல உற்சாகமாக இருக்கும். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

முதலை ,டைனோசர்  எண்டு இன்னும் கொஞ்சம்தான் இருக்கு நிழலி  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வு பூமாள். ஆனால் வீட்டில வரவர சமைக்கிறதே குறைஞ்சு போச்சு என்ன செய்யிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்,

 

நண்டு, கணவாய், கணவாய்க் கருவாடு, மீன், மீன் கருவாடு, இறால், இறால் கூனி கருவாடு,மீன் சினை, நெத்தலிக் கருவாடு,   கோழி,  ஆடு, மாடு, காட்டுப் பன்றி, மான், மரை, மரை வத்தல், மான் வத்தல், ஆமை, காடை, வான் கோழி, ஒட்டகம் என்று எல்லா இறைச்சிகளும் சாப்பிட்ட பின் எனக்கு நல்ல உற்சாகமாக இருக்கும். :icon_mrgreen:

 

ஆட்டு இரத்த வறை, ஆட்டு மூளை பொரியல், ஆட்டு வால் வறை. ஆட்டுக்கால் சொதி.....

இதையெல்லாம்.... விட்டுட்டுடீங்களே... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வு பூமாள். ஆனால் வீட்டில வரவர சமைக்கிறதே குறைஞ்சு போச்சு என்ன செய்யிறது.

 

என்னது.. பூமாளா?  :blink:  வரவர தெனாலி, சுண்டெலி எண்டு சொன்னதுமாதிரி போகுது.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான்,

 

நண்டு, கணவாய், கணவாய்க் கருவாடு, மீன், மீன் கருவாடு, இறால், இறால் கூனி கருவாடு,மீன் சினை, நெத்தலிக் கருவாடு,   கோழி,  ஆடு, மாடு, காட்டுப் பன்றி, மான், மரை, மரை வத்தல், மான் வத்தல், ஆமை, காடை, வான் கோழி, ஒட்டகம் என்று எல்லா இறைச்சிகளும் சாப்பிட்ட பின் எனக்கு நல்ல உற்சாகமாக இருக்கும். :icon_mrgreen:

 

சந்தையிலை நிண்டு கூவி விக்கிறமாதிரி கிடக்கு :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.