Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

பணம்

மனிதனின் உடலை வருத்தி

மனதை திடப்படுத்தி

சேகரிக்கத் தூண்டுவது பணம்....

தம் அன்றைய தேவைகளிற்காக

எதிர்காலக் கனவுகளின்

தேடல்களிற்காக

சிறுகச் சிறுக சேர்த்துவைக்க

தூண்டுவது பணம்...

மனிதர்களின்

நல்வழியையும் தீயவழியையும்

சந்தோஷத்தையும் துக்கத்தையும்

உருவாக்குவது பணம்....

மொத்தத்தில்

பணம் தான் வாழ்க்கை என்று

வாழ்பவர்களின் நிலை

கடலினுள் இறங்கி உப்புத்

தண்ணீரை பருகுவது போன்றது....

அடிப்படை வாழ்க்கைக்கு

பணம் அளவுடன் தேவை என்று

வாழ்பவர்களின் நிலை

தெளிந்த நீரோடையில்

மீன்கள் வசிப்பது போன்றது....

ம்ம்ம் பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் பணமே எல்லாமும் ஆகிவிடாது. பணத்தை பற்றிய உங்கள் கவிதை அருமை. பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான மிகவும் தேவையான கரு இது.பாராட்டுக்கள்.

:P நானும் இது போன்ற கருவில் ஒரு கருத்து இந்தக் களத்தில்

பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணம் பணம் பணம்............... பணமில்லை என்றால் வாழ்க்கையும் இல்லை என்ற நிலை.

பணம் இன்றைய காலகட்டத்தில் தேவையானதொன்றாக மாறிவிட்டது. அதனால் பணத்தின் மீது குற்றம் சொல்லிப் பயனில்லை. அதை கையாளும் மனிதர்களைத்தான் குற்றம் சொல்லவேண்டும். சிக்கல் என்னவென்றால் பணத்தின் அளவு கூடும்போது குணத்தின் அளவு குறைகின்றது.

நல்ல கருவைக் கொண்ட கவிதை நன்றாக உள்ளது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

பணம் அவசியமானதே. ஆனால் அவசியத்திற்கும் மீறி ஆசைப்பட்டு அலைகின்றோமே..

அழகான கவிதை. பாராட்டுக்கள்.

பணம் இருந்தாலும் கஸ்ரம் இல்லாட்டியும் கஸ்ரம்தான் கவி நன்று :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பணம்

அடிப்படை வாழ்க்கைக்கு

பணம் அளவுடன் தேவை என்று

வாழ்பவர்களின் நிலை

தெளிந்த நீரோடையில்

மீன்கள் வசிப்பது போன்றது....

கவிதை கலக்கல் :wink: :wink:

தொடரட்டும் உங்கள் கலக்கல்

  • தொடங்கியவர்

ம்ம்ம் பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் பணமே எல்லாமும் ஆகிவிடாது. பணத்தை பற்றிய உங்கள் கவிதை அருமை. பாராட்டுக்கள்.

நன்றிகள் ரசிகை

  • தொடங்கியவர்

அருமையான மிகவும் தேவையான கரு இது.பாராட்டுக்கள்.

:P நானும் இது போன்ற கருவில் ஒரு கருத்து இந்தக் களத்தில்

பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

நன்றிகள் சஜீவன்

திறம்பட இக் கருவில் இக் களத்தில் வாதாட என் வாழ்த்துக்கள் சஜீவன்

  • தொடங்கியவர்

பணம் பணம் பணம்............... பணமில்லை என்றால் வாழ்க்கையும் இல்லை என்ற நிலை.

அலவான பணத்தை பற்றி தானே ராதை சொன்னேன்....

பணம் வாழ்க்கைக்கு அவசியம் தான்

ஆனால் பணம் தான் வாழ்க்கை என்று வாழ்பவர்கள் பலர் இல்லையா இங்கும் தான் ...எங்கும் உள்ளார்கள்

உங்கள் கருத்திற்கு நன்றி

  • தொடங்கியவர்

பணம் இன்றைய காலகட்டத்தில் தேவையானதொன்றாக மாறிவிட்டது. அதனால் பணத்தின் மீது குற்றம் சொல்லிப் பயனில்லை. அதை கையாளும் மனிதர்களைத்தான் குற்றம் சொல்லவேண்டும். சிக்கல் என்னவென்றால் பணத்தின் அளவு கூடும்போது குணத்தின் அளவு குறைகின்றது.

நல்ல கருவைக் கொண்ட கவிதை நன்றாக உள்ளது. :lol:

நன்றிகள் சுஜீந்தன் வாழ்த்திற்கும், உங்கள் கருத்திற்கும் :D

  • தொடங்கியவர்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

பணம் மட்டும் அல்ல கோபிதா

எல்லாமே அளவிற்கு மிஞ்சினால் நஞ்சு தான் :lol:

  • தொடங்கியவர்

பணம் அவசியமானதே. ஆனால் அவசியத்திற்கும் மீறி ஆசைப்பட்டு அலைகின்றோமே..

அழகான கவிதை. பாராட்டுக்கள்.

ம்ம்ம் உண்மை தான் ரமா

நன்றிகள் ரமா :lol:

  • தொடங்கியவர்

பணம் இருந்தாலும் கஸ்ரம் இல்லாட்டியும் கஸ்ரம்தான் கவி நன்று

இருப்பதைக் கொண்டு வாழ்பவர்கள் வாழ்க்கையில் கஷ்ரத்தை அனுபவித்ததில்லை...

பணம் இருப்பவன் தானே காணாது காணாது என்று அலைகிறான் தன்னையே மறந்து இல்லையா...ஒரு சாதாரன குடும்பத்தில் இருப்பவர்கள் தம் அன்றாட செலவிற்கு மட்டும் பணம் இருந்தால் போதுமென வாழ்பவர்கள்..ஆனால் பணம் உள்ளவன் தான் மீண்டும் மீண்டு பணத்திற்கு பின்னால் அலைகின்றான்

நன்றிகள் Gowry பாலன் :lol:

  • தொடங்கியவர்

கவிதை கலக்கல் :wink: :wink:

தொடரட்டும் உங்கள் கலக்கல்

நன்றிகள் புத்தன் :lol:

பணம் பணம் பணம் . அது இல்லை எனின் அவன் செத்த பிணம் .கவி நன்று

  • தொடங்கியவர்

பணம் பணம் பணம் . அது இல்லை எனின் அவன் செத்த பிணம் .கவி நன்று

நன்றிகள்

நல்ல கரு, வாழ்த்துக்கள்

பணம் இருந்தால் (அவர் எவ்வளவு கயவராக இருந்தாலும்)கடவுள் சந்நிதானத்தில் கூட முதன்மையிடம் கொடுக்கும் சமூகத்தின் பார்வை மாறுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணம் என்னம்மா பணம் பணம்!

குணம் தானம்மா நிரந்தரம்!!

  • தொடங்கியவர்

நல்ல கரு, வாழ்த்துக்கள்

பணம் இருந்தால் (அவர் எவ்வளவு கயவராக இருந்தாலும்)கடவுள் சந்நிதானத்தில் கூட முதன்மையிடம் கொடுக்கும் சமூகத்தின் பார்வை மாறுமா?

நன்றி

  • தொடங்கியவர்

பணம் என்னம்மா பணம் பணம்!

குணம் தானம்மா நிரந்தரம்!!

ஆமாம் குணம் தான் நிரந்தரம்....அது புரியுது...ஆனால்

நம்ம குணம் நிரந்தரமா இருப்பதற்கு பணம் அவசியம் தானேம்மா.... :wink: வாழ்க்கைத் தேவைக்கு நல்ல குணம் இருந்தால் அது நம் வயிற்றை நிரப்புமா ம்ம்ம்....ஓரளவு பணமாவது இருக்கதானே வேண்டும் இல்லையாம்மா

உங்கள் கருத்திற்கு நன்றிகள் :lol:

பணம் என்னம்மா பணம் பணம்!

குணம் தானம்மா நிரந்தரம்!!

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே :D:)

நல்ல கரு, வாழ்த்துக்கள்

பணம் இருந்தால் (அவர் எவ்வளவு கயவராக இருந்தாலும்)கடவுள் சந்நிதானத்தில் கூட முதன்மையிடம் கொடுக்கும் சமூகத்தின் பார்வை மாறுமா?

உண்மைதான் இப்படியான நிலை இன்றும் எம்மவரிடம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.