Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்! அவர் தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்! - வைகோ

Featured Replies

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்! அவர் தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்! - வைகோ

 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை இந்திய ஊடகமான சத்தியம் தொலைக்காட்சி ``சூடாக ஒரு ரோல்க்`` என்ற நிகழ்ச்சிக்காக அவரின் இல்லத்திற்கு சென்று ஒரு நேர்காணலைக் கண்டுள்ளது.

வைகோ அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் உடனுக்குடன் பதிலளித்த வைகோ,

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? அல்லது நம்பிக்கையை கொடுப்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகளா என கேட்கையில்,

என் நெஞ்சால் நேசிக்கின்ற என் தலைவர் உயிரோடுதான் இருக்கின்றார். அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். அவர் இருக்கின்றார். அவர்தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார் என்று உறுதியாக பதிலளித்தார்.

மேலும் கேட்கப்பட்ட பல சூடான கேள்விகளும் வைகோ அவர்கள் அளித்த சுவையான பதில்களையும் முழுமையாக கேட்க...

 

http://www.tamilkathir.com/news/12941/58//d,full_art.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி

யாழ் அன்பு , நுணாவிலான்

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் சீவிக்கிறார் : மீண்டும் வை.கோ

vaiko.jpg

 

இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்கள் பாசிச ராஜபக்ச அரசால் புற்று நோய் போல அரிக்கப்பட்டு அபகரிக்கப்படுகின்றது. ‘அமைதியை’ப் போதித்த புத்தர் ஆக்கிரமிப்புச் சிலையாக அழிக்கப்படும் மக்களின் முற்றத்தில் நிறுவப்படுகின்றது. அவலத்தின் மத்தியில் வாழப்பழகிக்கொண்ட மக்கள் கூட்டம் உருவாக்கப்படுகிறது. எங்கும் இருள் சூழ்ந்த நம்பிக்கையிழந்த தமிழ்ப் பேசும் மக்கள் இழந்தவற்றிலிருந்து கற்றுக்கொண்டு ராஜபக்ச பாசிசத்தை முறியடிக்க குறைந்தபட்ச வழிகளைக்கூட அடைத்து அருவருப்பாக அழகுபார்க்கிறது ஒரு கூட்டம். பயப்படாதிர்கள் பிரபாகரன் வருவார் என்று ஈழப் பிரச்சனையை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் வியாபாரிகள் இன்னும் வாழ்கிறார்கள். வை.கோ ஈழப்த் தமிழர்களின் போராட்டத்தைச் சீர்குலைத்து மக்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்கும் பிழைப்புவாதிகளின் பிரதானமானவர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சத்தியம் தொலைக்காட்சி என்ற ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் ,

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? அல்லது நம்பிக்கையை கொடுப்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகளா என கேட்கையில்,

என் நெஞ்சால் நேசிக்கின்ற என் தலைவர் உயிரோடுதான் இருக்கின்றார். அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். அவர் இருக்கின்றார். அவர்தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார் என்று பதிலளித்தார்.

புலம் பெயர் மக்களை மந்தைகளாக எண்ணும் வை.கோ போன்றவர்கள் ஆரம்பித்த ‘பிரபாகரன் வாழ்கிறார், ஈழப் போர் நடத்த மீண்டுவருவார்’ என்று கூறிய பொய், வன்னிப்படுகொலைகளின் பின்னர் தமிழ் நாட்டு மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்தியது. நாடுகளின் உளவுப்படைகள் கழுகுகள் போன்று இலங்கையைச் சுற்றி வட்டமிடும் நிலையில் வை.கோ வின் பொய் புலம் பெயர் குறும் தேசிய இனவாதிகளுக்கும், ஐந்தாம் படைகளுக்கும் தீனி போடுகின்றது.

மறுபுறத்தில் அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களை நோக்கி, சிங்கள மக்களுடன் தமிழர்கள் ஒற்றுமையாக வாழமையே தேசிய இனப்பிரச்சனைக்குக் அடிப்படைக் காரணம் என்று கூக்குரல் போடுகின்றனர் தன்னார்வ நிறுவனங்களின் முகவர்கள். இத் தன்னார்வ நிறுவனங்களின் முகவர்களுக்கும், அரச எடுபிடிகளுக்கும் தீனி போடுகின்ற வைகோ போன்ற பிழைப்புவாதிகள் சுய நிர்ணய உரிமை என்பதே இனவாதம் என்று கருத்து வலுவடைவதற்குத் துணை போகின்றனர்.
 
http://inioru.com/?p=35932
 
 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியாண விடயங்களில் வைகோ வாயை அசைப்பதை நிறுத்தி தமிழ் நாட்டு பக்கம்  கவனம் செலுத்துவது நாங்கள் அரசியல் அனாதைகள் என்ற பெயர் கிடைக்காமல் உதவி புரிவதாக இருக்கும் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னமோ ஏதோ தெரியல்ல.. பிரபாகரன் என்ற நாமத்தில்.. ஒட்டுக்குழுக்கள் எதிரியை விட அதிதீவிரமா உள்ளனர். பிரபாகரனை உச்சரிச்சால் காணும்.. இன்னொரு.. அன்னொரு.. தேசம்.. தேனீ உடனடியா ரீங்காரம் இடத்தொடங்கிடும். அந்தளவுக்கு உசாரா இருக்கினம்.. பிரபாகரனின் பெயரில்..! அது போதும்..!! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

யார் இருக்கின்றார் என்பதெல்லாம் முக்கியம் இல்லை

"இருக்கின்றார்" எனத் தலையங்கம் இட்டாலே போதும்

சிலபேர் உசார் :D

 

இத் தன்னார்வ நிறுவனங்களின் முகவர்களுக்கும், அரச எடுபிடிகளுக்கும் தீனி போடுகின்ற வைகோ போன்ற பிழைப்புவாதிகள் சுய நிர்ணய உரிமை என்பதே இனவாதம் என்று கருத்து வலுவடைவதற்குத் துணை போகின்றனர்.

தன்னார்வ நிறுவனங்களை இதற்குள் இணைத்து அப்பா நெல்லுமூட்டை சாக்குக்குள் இல்லை என்கிறார். இப்படி செயல்கள் தானே இருக்கிறார் என்று நினைக்க வைக்கிறது. இந்த தன்னார்வ நிறுவனங்களை திட்டித்தீர்க்காவிட்டால் இவர்கள் மகிந்தாவின், கோத்தாவின் கோளாயாக்கள் என்று சொல்வது கஸ்டமாக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.