Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு முறை பாலியல் உறவு கொண்டாலும் அது திருமணமே – உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Lovers08.jpg

June 18, 2013 9:06 pm பதிந்தவர் admin

சென்னை:  திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம், பெண் கர்ப்பம் தரித்தாள் கணவன் – மனைவி என்று கருதப்பட வேண்டும்  சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கோவை பகுதியைச் சேர்ந்த நஜீமா (35)- இஸ்மாயில் (பெயர்கள் மாற்றம்) தம்பதிக்கு கடந்த 1994ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்க இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

1999ஆம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு இஸ்மாயில் பிரிந்துவிட்டார். இதனால் கணவர் இஸ்மாயில் இடம் இருந்து மாதம் ரூ.5 ஆயிரம் கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் நஜீமா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, புகைப்படங்கள், இஸ்மாயிலுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தைகளின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை நஜீமா தரப்பு ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.

இரு தரப்பு வாதங்களையும், ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதி, இரண்டு குழந்தைகளும் இஸ்மாயிலுக்குதான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

ஆனாலும், இஸ்மாயிலை திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் நஜீமாவுக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நஜீமா மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவில், தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுதாயத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை குடும்பநல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை.
இந்த இரண்டு குழந்தைகளையும், இஸ்மாயிலுக்கு முறை தவறிப் பிறந்தவை என்று குடும்பநல நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். குழந்தை பிறப்பின்போது, கணவன், மனைவியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவதுண்டு. அந்த ஆவணத்தில் கணவன், மனைவிக்காக குறிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையெழுத்திட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூறமுடியாது.

திருமணத்தை நடத்துவது, சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் ஒன்று. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல. இந்த வழக்கில் இஸ்மாயில் மற்றும் நஜீமாவை, வித்தியாசமாக சுயஅடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவைதான்.

ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி, (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவன் கணவன் என்றும் கருதப்பட வேண்டும் என்பது இந்த நீதிமன்றத்தின் கருத்து.

ஒருவேளை அவள் கர்ப்பம் தரிக்காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி உறவுக்கு உட்பட்டவர்கள்தான். எனவே அப்படிப்பட்ட பாலியல் தொடர்புடைய இரண்டு பேருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், சட்டப்பூர்வமாக மனைவியிடம் இருந்து நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்ற பிறகுதான், மற்றொருத்தியை கணவன் திருமணம் செய்ய முடியும்.
ஒருத்தியுடன் உடல் ரீதியான தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்பதால், அவளிடம் இருந்து சட்டப்பூர்வமான விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணத்தை கணவன் செய்ய முடியாது. சட்டப்பூர்வமான வயதை அடைந்த இரண்டு பேரும் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலே, பின் விளைவுகளைக் கொண்ட ஒரு அர்ப்பணிப்புக்கு உள்ளாகி விடுகின்றனர்.

அப்படி சட்டப்பூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர் (ஏற்கனவே திருமணம் ஆகாதவர்கள்), பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால், அவர்களின் செயல்பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்றும் கருதலாம். சட்டப்பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்கின்றனர்.

தாலி கட்டுவது, மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத்தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.

 

எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்டப்பூர்வமான ஆதாரம் என்னவென்றால், அது அந்த ஜோடிகளுக்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். இந்த வழக்கில் அப்படிப்பட்ட உறவு நடந்தேறியுள்ளது. எனவே தங்களுக்கு இடையே பாலியல் உறவு இருந்ததற்கான ஆதாரங்களை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, திருமணம் நடந்ததை அவர்கள் நிரூபிக்கலாம். அப்படி திருமணம் நடந்ததை நிரூபிக்கும் பட்சத்தில், தன்னை இஸ்மாயிலின் மனைவி என்று அரசு ஆவணங்களில் நஜீமா பதிவு செய்து கொள்ளலாம். சடங்குகளுடன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக்கொள்ளலாம்.

திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால்தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும். நஜீமா விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான்.
ஆகவே, கணவன் இஸ்மாயில் தனது மனைவி நஜீமாவுக்கு மாதம் ரூ.500 பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும். 2000ஆம் ஆண்டு செப்டம்பரில் அதற்கான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால், அந்த ஆண்டில் இருந்து கணக்கிட்டு 3 மாதங்களுக்குள் பாக்கித் தொகையை வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

http://www.ampalam.com/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, ரொம்பவும் பின் தங்கின தேசம் போல கிடக்கு! :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, ரொம்பவும் பின் தங்கின தேசம் போல கிடக்கு! :o

 

 அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து செய்யும் திருமணத்தை.... இப்படி, கொச்சை படுத்தி விட்டார்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படின்னா விபச்சாரிகள் தினமும்.. எத்தினை திருமணம் செய்கிறார்கள். அத்தனை பேரிடமும்.. இந்த வழக்கின் தீர்ப்பைக் காட்டி ஜீவனாம்சம் பெற முடியுமா..????! இந்தத் தீர்ப்பை இந்திய விபச்சாரிகள் தங்களுக்கு சாதகமாகப் பாவித்துக் கொள்வது நல்லது..! இந்தியா ஒரு விபச்சார நாடு என்று நீதிபதி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள் நீதிபதி.. உண்மையை ஒத்துக் கொண்டதற்கு..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி கர்ணன் வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்

மீனை சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் ,அவ்வளவு உருசியாய் இருக்கும்.

சில சமயம் இசகு,பிசகாய் தொண்டைக்குள் முள்ளுச் சிக்கி அவஸ்தைப் படுவதும் உண்டு !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.