Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாக்க TNA உடன் கூட இணையத் தயார் – பிள்ளையான்

Featured Replies

pilaiyan_CI.jpg

 

13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்காக தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் கூட இணைந்து கொள்ளத் தயார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேசத்தில் நடைபெற்ற கலாச்சார வைபவமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படக் கூடாது என்பதனை தாம் அண்மையில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தெற்கு கட்சிகளுடன் இணைந்து கொள்ளத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் 26 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த 13ம் திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக வடக்கு கிழக்கிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்கு பிரதி அமைச்சர் கருணாவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் முன்வரத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவர்கள் போன்றவர்களை நாம் தைரியமற்றவர்களாகவே கருத வேண்டியுள்ளது என பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு நாள் அமைதியாக அமர்ந்திருந்தேன்!

 

திடீரென எனது கண்கள் இருண்டன! முன்-பின் பார்த்தறியாத, பிரகாசமான 'ஒளிப் பொட்டு ஒன்று' என் முன் தோன்றியது!

 

இருண்ட கண்களால், எவ்வாறு ஒளியைப்பார்க்கின்றேன் என்று நினைக்கக் கூட நேரம் இருக்கவில்லை!

 

அந்த ஒளி. நீலநிறமா அல்லது நீலம் கலந்த வெண்மையா, என்று கூட என்னால் சொல்ல இயலவில்லை! :D  :D  :D

 

பிள்ளையானின் ஞானோதயம்! (பனை மரத்தின் கீழ் அமர்ந்திருந்தபோது!) :icon_idea:

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் இந்த பனைமரஞானோதயம் கிடைக்க எல்லாம் வள்ள இயற்கையை வேண்டுவோம்....

கருணா, கக்கீம் போன்ற கோமாளிகளுக்கு இருப்பது பிள்ளையான், தேவானந்தா போன்று தமக்கு தன்னும் நன்மை தேடிக்கொள்ளத் தெரியாத அரசியல் அறிவு. தேவானந்தா, தான் கண்ட கனவான முதல் அமைச்சர் பதவி நழுவும் போது அவர் கவலைப்படுகிறார். பிள்ளையான் காணத கனவில் வந்த இன்பம் கலைந்து போகும் போது கவலைப்படுகிறான். மற்ற இரண்டும், நன்மரங்களாக நெட்டுயர்ந்து நிற்கின்றன.

Edited by மல்லையூரான்

பதவியில் இருக்கும் போது மாகாண சபைக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யாமல் விட்டுவிட்டு இப்ப குரல் எழுப்பி என்ன பிரயோசனம் .
வடக்கு ,கிழக்கு இணைப்பை எதிர்ப்பவனுடன் எப்படி TNA இணையும் ,இதனால்தான் முன்பு இவர் போட்ட கடிதத்திற்கு TNA பதில் போடவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

பனை மரத்தின் கீழ் இருந்ததால்  வந்த ஒளி அல்ல இது 

கிழக்கில் வளர்ந்து  வரும் புத்தர் சிலையின் கீழ் அமர்ந்திருந்ததால் வந்த ஒளி.

மாகாண சபையில் ஒரு  பதவி காணும் ஒளி எல்லாம் இருட்டாகிவிடும்    

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு எங்கிருந்து இந்தத் தைரியம் வந்தது.. :unsure:  வடக்கில் இருந்து கீ குடுக்கினம்போலை.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் பதவி பகற்கனவானது. மகிந்தவின் ஆலோசகர் என சிங்களவர் காமெடியனாக்கினார்கள். இப்போ தான் சுடலை ஞானம் பிறந்திருக்கிறது. சித்தார்தனுக்கும் அண்மையில் சுடலை ஞானம் பிறந்தது தெரிந்ததே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.