Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏங்கிய காலங்கள் போதும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏங்கிய காலங்கள் போதும்

கன்னம் சிவந்ததோர் காலம் - எழில்
கவிகள் படித்ததோர் காலம்.
சின்ன வரையரைக்குள்ளே - உன்
சிந்தை இழந்ததோர் காலம்.
வண்ணமயில் என்றும் கூறி..
வஞ்சிக் கொடியென்றும் கூறி...
எண்ணம் எங்கும் மென்மை தூவி... -உந்தன்
வன்மை அடக்குவர் தோழி!

அங்கங்கள் அழகுதானடி -அதை
அங்கங்கே போற்றுவர் தேடி..
உங்கருத்தைக் கேட்க யாரடி? - அடி
உன்னதப்பெண்ணே! நீ கூறடி!!
நுண்ணிடை என்றொரு கூட்டம் - உன்னைப்
பண்ணிடை கற்பனை பாடும்.
மண்ணிடம் காட்டு உன் தாகம் - அதுவுன்
பெண்ணுடல் நீத்தாலும் வாழும்.

கங்கை உனக்கென்ன தங்கையா?
மங்கை உdக்கின்னும் மருட்சியா?
உன்கையை வான் வரை உயர்த்தி -அதில்
உலகை ஈர்க்கலாம் முயற்சி!
மையல் காட்டும் கண்ணில் மயங்காத்
தையலர் மேன்மையை உணர் நீ!
உய்யல் வழியண்டு உனக்கு - அதில்
பையப் பாவையுன்னை நகர்த்து!

தங்கத் தமிழீழப் பெண்மை - மற
மங்கையர் கூட்டமே உண்மை.
தங்கச்சி உனது தன்மை -எங்கள்
வேங்கை நாட்டிற்கே வன்மை.
ஏங்கிய காலங்கள் போதும் இனி - மதி
தூங்கிய காலமும் போதும்.
பாங்கியே வெளியே வாடி -பெரும்
பணிகள் செய்யலாம் கோடி.

Edited by வல்வை சகாறா

தங்கத் தமிழீழப் பெண்மை - மற

மங்கையர் கூட்டமே உண்மை.

தங்கச்சி உனது தன்மை -எங்கள்

வேங்கை நாட்டிற்கே வன்மை.

ஏங்கிய காலங்கள் போதும் இனி - மதி

தூங்கிய காலமும் போதும்.

பாங்கியே வெளியே வாடி -பெரும்

பணிகள் செய்யலாம் கோடி.

எல்லோரும் ஒன்று சேர்ந்து பணிகள் செய்யலாம் என்பதை அழகாக கூறியிருக்கின்றீர்கள். அதை நிஐத்திலும் கண்டு இருக்கின்றோம்.

அழகான கவி வரிகளுக்கு பாராட்டுக்கள்.

வணக்கம் சகாரா,

மற்றுமொரு அழகான தரமான கருத்தான கவிதையைத் தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

பெண்மை இயற்கையாய் மென்மையானது தான். ஆனால் அந்த மென்மைக்குள் வன்மை எப்போதுமே அடங்கியிருக்கிறது.

புலியை முறத்தால் அடித்துத் துரத்திய கதையும் கண்ணகியின் சீற்றமும் ஏற்கனவே பேசப்பட்டிருக்கின்றன.

(எங்கள் இதிகாசஙகள் காப்பியங்கள் தொடர்பான சந்தோகம் எனக்கிருந்த போதிலும் கூட)

இன்றைக்குக் காலத்தின் தேவையால் ஈழத்திலெ அந்த வன்மை வெளிப்பட்டுக்கொண்டிருக்கிற

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அருமையான கவிதை வாழ்த்துகள்......

தங்கத் தமிழீழப் பெண்மை - மற

மங்கையர் கூட்டமே உண்மை.

தங்கச்சி உனது தன்மை -எங்கள்

வேங்கை நாட்டிற்கே வன்மை.

ஏங்கிய காலங்கள் போதும் இனி - மதி

தூங்கிய காலமும் போதும்.

பாங்கியே வெளியே வாடி -பெரும்

பணிகள் செய்யலாம் கோடி.

அருமையான அழமான கருக்கொண்ட கவிதை பாராட்டுக்கள்.

தங்கத் தமிழீழப் பெண்மை - மற

மங்கையர் கூட்டமே உண்மை.

தங்கச்சி உனது தன்மை -எங்கள்

வேங்கை நாட்டிற்கே வன்மை.

ஏங்கிய காலங்கள் போதும் இனி - மதி

தூங்கிய காலமும் போதும்.

பாங்கியே வெளியே வாடி -பெரும்

பணிகள் செய்யலாம் கோடி.

கவிதை அருமை தொடர்ந்து தாருங்கள் :lol:

சிறந்த கவிதையைத் தந்த வல்லைசாகிறாவிற்கு என்னுடைய பாராட்டுக்கள்

கவிதை அருமை வல்வைசகாரா. :lol:

  • 7 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்
அழகான கவிதை வரிகள். ஆனாலும் இன்றைய காலத்திற்குப் பொருத்தமில்லை. :(
 
பெண்மையின் வன்மை அடக்குபவர் உண்மையில் யார்?? :o
 
ஆண் வெறும் அம்புதான். அதனை எய்வது... பெண் என்ற வில் என்பதான உண்மையையும் தங்கள் அற்புதமான கவிதைவரிகளில் காண்பதற்கு ஆவல். :rolleyes:  :rolleyes:
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அழகான கவிதை வரிகள். ஆனாலும் இன்றைய காலத்திற்குப் பொருத்தமில்லை. :(
 
பெண்மையின் வன்மை அடக்குபவர் உண்மையில் யார்?? :o
 
ஆண் வெறும் அம்புதான். அதனை எய்வது... பெண் என்ற வில் என்பதான உண்மையையும் தங்கள் அற்புதமான கவிதைவரிகளில் காண்பதற்கு ஆவல். :rolleyes:  :rolleyes:

 

 

காலத்திற்கு பொருத்தப்பாடு குறைவாக இருந்தாலும் இக்கவிதை எழுதப்பட்ட காலம் ஏற்படையதாக இருந்தது... இப்போது எழுதுவதானால் நிச்சயம் வித்தியாசமாகவே அமையும்.

 

"வண்ணமயில் என்றும் கூறி..

வஞ்சிக் கொடியென்றும் கூறி...

எண்ணம் எங்கும் மென்மை தூவி... -உந்தன்

வன்மை அடக்குவர் தோழி!"

 

இந்த இடம் எப்போதுமே பெண்ணுக்கு பெண்ணால் இயம்பப்படுவது அல்ல இதற்கு உரித்துடையவர்கள் ஆண்கள்தான் ஆண்கள்தான் அடப்போங்க பாஞ்ச் ஆண்களைத்தவிர இந்த பஞ்சை பெண்கள் சொல்லவே மாட்டார்கள் அப்படிச்சொன்னால் அவர்கள் பெண்களில் ஆண்கள் கி கி

 

இக்கவிதை காவியத்தூது என்ற கவிதைத் தொகுப்பிற்காக என்னுடைய பழைய எழுத்துக்களை தேடிச் சேமிக்கும்போது கைகளில் தவழ்ந்த எலி தவறான இடத்தில் கிளிக் பண்ணிவிட்டது அதுதான் பழைய மிகப்பழைய பதிவு மேலே வந்து பாஞ்சுக்கு சஞ்சலத்தைக் கொடுத்துவிட்டது.. :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 மணியண்ண சொல்லி இருப்பதும் ஒரு விதத்தில்  உண்மை  தான்....இடையில் முறிக்கபட்ட,பறிக்கபட்ட ஏங்கங்கள் முற்றுப் பெறாத போது.சொற்களாத் தன்னும் வன்மை பிறக்கத் தான் செய்கிறது.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
வல்வை சகாறா அவர்களுக்கு வணக்கம்! 
 
ஆண்களைப் பற்றிய பெண்களின் கண்ணோட்டத்திலும், பெண்களைப் பற்றிய ஆண்களின் கண்ணோட்டத்திலும் மாற்றங்கள்தேவை. அதுவும் பிரபாகரன் காலத்திற்குப் பிறகு தமிழினத்திற்கு இது அவசியம் தேவை. ஆணுடைய ஆதிக்கம் மட்டுமல்ல பெண்ணுடைய ஆதிக்கத்தையும் உள்வாங்கியே உலகில் மனித சமுதாயம் வளர்ந்து வகிறது. இன்றைய சமுதாயத்தில், ஒரு பாலினத்தைப் பற்றி மற்றொரு பாலினம் கொண்டிருக்கும் புரிதல்களில் மாற்றங்கள் ஏற்படல் வேண்டும் என்பதே மிகவும் முக்கியமான தேவையாக உள்ளது. :rolleyes:
 
பழையதைப் பதிவு செய்தபோது புதியனவும் அங்கு இணையவில்லையே... என்ற ஆதங்கம் பாஞ்சுக்கு சஞ்சலத்தைக் கொடுத்துவிட்டது உண்மைதான். :o  
 
மீண்டும் உங்கள் கவிதை எழுதும் திறன்கண்டு மகிழ்வோடு வாழ்த்துகிறேன். எனக்கு அந்தத் திறனில்லை, ஆனால் ரசிக்கத் தெரியும். ரசிக்கும்போது ஏற்படும் நெருடல்களைச் சுட்டுவதில் தவறில்லையே! இருந்தால் மன்னிக்கவும்.  :(
 
  • கருத்துக்கள உறவுகள்

சாம்பல் பூத்திருந்த நெருப்பொன்று

தென்றல் உரச சுடர்விடுகிற தின்று  !

 

நல்ல கவிதைகள் தானே மீன்டும் மீன்டும் முளைவிடும் !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.