Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்ற வெறுப்பு என்பது எம் மீது இருக்கின்றது தான். அதை 87களில் இந்தியாவே ஆரம்பி வைத்தது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகாலத் தமிழர் என்ற தொடர்பினை வெறும் இந்தியக் குடியரசு என்று நூற்றாண்டு தாண்டாத ஒரு அடையாளம் தடுத்து விடும் என்றால் எப்படி ஏற்பது? தமிழகம் வளர்ச்சி உற்றால் அது எங்களுக்கும் பெருமை தானே!

கொசுறு- சோழர்வழி எனத் தமிழகத்தை விட அதிகமாக எம்மை நம்பிக் கொள்பவர்கள் நாங்கள்.

  • Replies 224
  • Views 43.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    Update:   சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்க உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110kV) நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் அழுத்த மின்சார நிலையம் (2

  • இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினா

  • குமாரசாமி
    குமாரசாமி

    இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும்   மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப விபரமாக இணைப்புகளைக் கொடுக்கின்றீர்கள் வன்னியன். நல்லாயிருக்கு...! :)

இந்தியாவில் தான் பொது நிலங்களை திருட்டுத்தனமாக ஆக்கிரமித்து வீடு கட்டிவிட்டு...பின் அதை காப்பாற்ற நீதிமன்றங்களுக்கும் செல்லுவார்கள்....நீதிமன்றங்களும் பாவம் என்று விட்டுவிடும்......

 

தமிழர்களுக்கு தமிழ்நாட்டை விட்டால் வேறு ஏது...நான் அங்கு திரிந்தவரையில் (1986-1988)..சாதாரண மக்கள் அன்புடனும்..வாஞ்சையுடனும் பழகுவார்கள்..ஆகவே தான் ஒரு தமிழ்நாட்டில் ஒரு ஈர்ப்பு....

 

தெருக்களும் சுத்தமாகி....கோயில்களிலும் கொள்ளை அடிப்பது ஒழிக்கப்பட்டால் தமிழ்நாடு ஒரு சொர்க்கம் தான் (கையில் காசு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்)....

இப்போது அங்கு போய்வரும் எனது நண்பர்கள் அங்கு உள்ள வசதிகளை புகழுகிறார்கள்..இசை தங்கியிருந்த hotel மாதிரி...

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரிசனனையோடு கருத்து தெரிவித்து ஊக்கமூட்டிய டங்கு, தூயவன், சுவி மற்றும் நாந்தான் ஆகியோருக்கு நன்றி. :)

 

இதே போல் ஈழத்திலும் ஏதேனும் திட்டங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தால் பதியவும்.

  • கருத்துக்கள உறவுகள்

கரிசனனையோடு கருத்து தெரிவித்து ஊக்கமூட்டிய டங்கு, தூயவன், சுவி மற்றும் நாந்தான் ஆகியோருக்கு நன்றி. :)

 

இதே போல் ஈழத்திலும் ஏதேனும் திட்டங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தால் பதியவும்.

 

பகிடி, விடுறீங்களா... வன்னியன்.

வடக்கில் வசந்தம், கிழக்கில் ஒளீ.... என்று,

கனக்கத் திட்டத்தை... ஒடுகாலிகள், அமுல் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் வசந்தம், கிழக்கில் ஒளீ.... என்று,

கனக்கத் திட்டத்தை... ஒடுகாலிகள், அமுல் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

 

புதிதாக கட்டப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட சங்குப்பிட்டி பாலம், படுவன்கரை பாலம், கல்லடி பாலம் பற்றி எழுதலாம் தானே சிறி?

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக கட்டப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட சங்குப்பிட்டி பாலம், படுவன்கரை பாலம், கல்லடி பாலம் பற்றி எழுதலாம் தானே சிறி?

 

அவைகள் எல்லாம்.... சிங்களவன், தனது குடியேற்றத்தை, தமிழன் பகுதியில்... விரைந்து செயற்படுத்துவதற்க்காக செய்யப் படுபவை.

தினமும்... உயிரை, கையில் பிடித்துக் கொண்டிருக்கும்... தமிழனுக்காக, சிங்களவன் செய்கின்றான் என்று, நீங்கள் நம்ப வேண்டாம்.

எமது நிலத்துக்கும், எமது மக்களுக்கும்... பாதுகாப்பு என்று, ஒன்று இருந்ததென்றால்...

அது... புலிகளிடம் மட்டுமே, இருந்தது.

 

தும்பளையான் யாழ் பகுதியில் பயணம் செய்து விட்டு நிறைய படங்கள் இங்கே பதித்திருக்கின்றார்...ஆனால் அந்த கட்டுமானங்கள் எல்லாம் பெரும்பாலும் முன்பு இடிக்கப்பட்டிருந்த கட்டடங்கள் திருப்பி கட்டியும்...2 தள கட்டடங்களுமே ஆகும்...ஒன்றும் "landmark" கட்டுமானங்கள் என்று சொல்லுமளவுக்கு இல்லை....யாழில் உயரமான கட்டடங்கள் கோயில் கோபுரங்களே... :)

மற்றும் கிழே

மட்டக்களப்பின் அழகான படங்கள்

Edited by naanthaan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய தமிழ்சிறி மற்றும் நாந்தான் ஆகியோருக்கு நன்றி!

 

Update:

 

சென்னை பறக்கும் ரயில் திட்டப் பணியில், வேளச்சேரி - பரங்கிமலை இறுதி இணைப்பிலிருந்த தடங்கல் நீங்க வழி பிறந்துள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நிலுவையிலிருந்த நில ஆர்ஜித வழக்கில் நேற்று(11-04-2014) அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா? அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் தில்லி உச்சநீதி மன்றத்தில் இடைக்கால தடை வாங்கும் வரை காத்திருக்குமா? என்பது இனி வரும் காலங்களில் தெரியும்.

 

2r3i4wx.jpg

 

நன்றி: தினமலர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைய காத்திருக்கும் 'சென்னை பறக்கும் ரயில் பாலம்'

( @ ஆதம்பாக்கம்)

 

 

Photo0923.jpg

 

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி..

பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி..

நேத்து வர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி..

மெட்ரோ ரயிலுடன் சேர்ந்திருந்தால் நிம்மதி ஆகுமடி..!

 

அரசுகளையும் எல்லாத்துக்கும் குற்றம் சொல்லி பிரயோசினம் இல்லை...இந்தியா போன்ற நாட்டில் மக்களும் தான் பிரச்னை...

சீனா என்றால்...இந்த பிரச்னை வந்திருக்காது...இரவோடு இரவாக அந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருப்பார்கள்......

இன்னும் ஒரு 5 வருடத்தில் தமிழ்நாட்டுக்கு ஒரு சுற்றுலா வரத்தான் இருக்கு ....

  • கருத்துக்கள உறவுகள்

2016 தேர்தல் நேரம் நான் தமிழகத்தில் இருப்பேன் என நினைக்கின்றேன். ஒரு பிரச்சாரமும் செய்யப் போவதில்லை. ஆனால் சில உதவிகள் செய்வேன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசுகளையும் எல்லாத்துக்கும் குற்றம் சொல்லி பிரயோசினம் இல்லை...இந்தியா போன்ற நாட்டில் மக்களும் தான் பிரச்னை...சீனா என்றால்...இந்த பிரச்னை வந்திருக்காது...இரவோடு இரவாக அந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருப்பார்கள்......

இன்னும் ஒரு 5 வருடத்தில் தமிழ்நாட்டுக்கு ஒரு சுற்றுலா வரத்தான் இருக்கு ....

 

இன்னும் 5 வருடமா? சுற்றுலாவா..செட்டிலாகவா? :)

அதற்குள் அரசியல்வாதிகள் என்னென்ன கூத்துகளை நிகழ்த்தப் போகிறார்களோ? :o

 

2016 தேர்தல் நேரம் நான் தமிழகத்தில் இருப்பேன் என நினைக்கின்றேன். ஒரு பிரச்சாரமும் செய்யப் போவதில்லை. ஆனால் சில உதவிகள் செய்வேன்....

 

இருவருக்கும் வாழ்த்துக்களும் தமிழ் நாட்டின் இனிய வரவேற்பும்... :)

கூடவே முறுக்கித் திரியும் சில ஈழத்தமிழர்களுக்கும் சொல்லி வையுங்கள்.. :lol:

 

இன்னும் 5 வருடமா? சுற்றுலாவா..செட்டிலாகவா? :)

அதற்குள் அரசியல்வாதிகள் என்னென்ன கூத்துகளை நிகழ்த்தப் போகிறார்களோ? :o

 

 

இருவருக்கும் வாழ்த்துக்களும் தமிழ் நாட்டின் இனிய வரவேற்பும்... :)

கூடவே முறுக்கித் திரியும் சில ஈழத்தமிழர்களுக்கும் சொல்லி வையுங்கள்.. :lol:

இந்தியாவந்து பல்பு வங்கி வரும் ஈழ தமிழர்களே அதிகம் (இது இப்போது கொஞ்சம் குறைவு என்று நினைக்கின்றேன்...இரண்டு தரப்பும் மரியாதையாக் நடக்கிறார்கள்... :) )

 

 

 

5 வருடத்தில்..(அல்லது அதற்க்கு முன்) ஒரு சுற்றுலா தான்..Goa to கன்னியாகுமாரி.... ;)

ஒரு 15-20 வருடத்தில் தேவை என்றால்...கன்னியாகுமரி பக்கம் செட்டில் :) :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வந்து பல்பு வங்கி வரும் ஈழ தமிழர்களே அதிகம் (இது இப்போது கொஞ்சம் குறைவு என்று நினைக்கின்றேன்...இரண்டு தரப்பும் மரியாதையாக் நடக்கிறார்கள்... :) )

 

5 வருடத்தில்..(அல்லது அதற்க்கு முன்) ஒரு சுற்றுலா தான்..Goa to கன்னியாகுமாரி.... ;)

ஒரு 15-20 வருடத்தில் தேவை என்றால்...கன்னியாகுமரி பக்கம் செட்டில் :) :)

 

சிலர் இலங்கை சிங்களவனுக்கு கொடுப்பது மாதிரி இங்கே 'பல்பு' கொடுக்க முனைந்தால் சிக்கல்தானே? :)

ரோமாபுரி சென்றால் ரோமன் மாதிரிதான் நடக்கோணும் கண்டியளோ? :lol:

 

கன்னியாகுமரியென்றால் திற்பரப்பு, மார்த்தாண்டம் பக்கம் குடியேறுங்கள்.

 

மிக அருமையான இயற்கை சூழல்..

 

என்ன, கொஞ்ச நாளில் நீங்களும் பாதி 'மல்லு'வாகிவிடுவீர்கள்..! :D

 

 

 300px-Thirparappu_falls.jpgthirparappu-water-falls-3.jpg6561100577356422.jpg

 

maxresdefault.jpg

 

கடைசியாக இணைத்த படத்திலுள்ள இடத்தை பல திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.. ('ஆண்பாவம்' படத்தில் பாண்டியனும், சீதாவும் அடிக்கடி சந்திக்கும் படித்துறை..? - "யப்பா...சூப்பரு..! "ன்னு கூப்பிடுவாரே பாண்டியன்! )

 

 

திரி தலைப்பிலிருந்து விலகுவதால் இத்தால் நிறுத்துகிறேன்.

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

maxresdefault.jpg

 

கடைசியாக இணைத்த படத்திலுள்ள இடத்தை பல திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.. ('ஆண்பாவம்' படத்தில் பாண்டியனும், சீதாவும் அடிக்கடி சந்திக்கும் படித்துறை..? - "யப்பா...சூப்பரு..! "ன்னு கூப்பிடுவாரே பாண்டியன்! )

 

திரி தலைப்பிலிருந்து விலகுவதால் இத்தால் நிறுத்துகிறேன்.

 

சீதா  என்று

இராமரின் துணைவியாரைத்ததானே   சொல்கிறீர்கள்..........?? :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீதா  என்று  இராமரின் துணைவியாரைத்ததானே   சொல்கிறீர்கள்..........?? :lol:  :D

 

இல்லை, கர்ணனாகப்பட்டவரின் மனைவியாக இருந்தவர்... :)

 

ஆண்பாவம் சீதா மாதிரி ஒன்றோடு...இப்படிப்பட்ட இடத்தில் இருந்திருந்தால்...இது தான் சொர்க்கமாக இருந்திருக்கும்....

 

எனக்கு துரோகம் செய்த கடவுளை பழி வாங்க நான் மதம் மாற போகிறேன்... :)

 

ராசா..படங்களை போட்டு வயதெரிச்சலை கிளப்பாதீர்கள்....சாகும் மட்டும் வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது என் நிலை... :)

 

நிலையை மாற்ற முயலுவோம்...

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில மாதங்களாக கத்திப்பாரா சந்திப்பு மேம்பாலத்தில் மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணி ஒரு வழியாக முடிவுற்று, ஆலந்தூர் நிலையம் வரை ஒரு வழித் தடத்தில் பணிகள்  பூர்த்தியடைந்தது. கோயம்பேடு - ஆலந்தூர் வரை சோதனை ஓட்டமும் தற்பொழுது துவங்கியுள்ளது.

 

 

BpxTRH1IMAA_Loz.jpg

 

கத்திப்பாரா மேம்பாலத்தில் மெட்ரோ ரயில்...

 

 

Bnhku_GCEAAIEb5.jpg

 

வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

9qjw2p.jpg

 

மிக முக்கிய இரண்டு அடுக்கு மாடி செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி.

இங்கு முதல் தளத்தில் சென்னை பறக்கும் ரயில் வழித்தடமும், இரண்டாம் தளத்தில் சென்னை மெட்ரோ ரயில் வழித்தடமும், தரை தளத்தில் சென்னையின் மற்ற அனைத்து தென் தமிழ் நாடு நோக்கிய ரயில்களுக்கான நிலையமும் அமைகின்றன.

இப்படி எல்லாம் கன்க்ரீடில் அமைக்கிறார்கள்..ஆனால் இவற்றை பராமரிக்க போவது யார்?

 

கத்திபாரா ராம்ப்களில் ஒரு lane marking களும் இல்லை...பின் எப்படி வாகனங்கள் ஒழுங்காக செல்லும்.....

எப்போ இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் ?

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் கன்க்ரீடில் அமைக்கிறார்கள்..ஆனால் இவற்றை பராமரிக்க போவது யார்?

 

கத்திபாரா ராம்ப்களில் ஒரு lane marking களும் இல்லை...பின் எப்படி வாகனங்கள் ஒழுங்காக செல்லும்.....

எப்போ இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் ?

 

சில நாட்கள் இந்த திரி பக்கம் வரவில்லை.. :(

இவற்றையெல்லாம் பரமரிக்கப் போவது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்தான்.

 

கத்திப்பார சாலையில் புதிதாக தார் மேவப்பட்டு, சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளதால் சென்னை போக்குவரத்துக் காவல் துறை சாலையில் ஒழுங்குபடுத்தும் கோடுகளை வரையவில்லை. தற்பொழுது நிறைவேறியிருக்கலாம்.

இவ்வருட இறுதியில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையுள்ள முடிவடைந்த தடத்தில் மட்டும்  மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்க உள்ளது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை கோயம்பேட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு அறையில்(Operation Control Centre) கருவிகள் பல பொருத்தப்பட்டு அவற்றை சோதிக்கும் பரிசோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

 

Metro-Rail.jpg

 

கோயம்பேட்டில் தற்கலிகமாக அமையப்பட்டுள்ள சென்னை மெட்ரொ ரயில் நிலைய தலைமை அலுவலகமும்,

இயக்க கட்டுப்பாட்டு கட்டிடமும். (OCC)

 

 

10299022_852194454793747_119359905356696

 

 

10526033_852194434793749_149821749624638

 

இயக்க கட்டுப்பாட்டு அறையில்(OCC) பரிசோதனைகள்

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Update:

 

The first Chennai Metro Rail service from Koyambedu to Alandur will be open to the public only by December, said M. Venkaiah Naidu, Union minister for urban development, on Friday.

 

04_09_2014_003_046_008.jpg

 

 

"கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம்" முதல் உயர்த்தப்பட்ட ரெயில் நிலையமாக மக்கள் பாவனைக்கு தயாராகி வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்திலுள்ள ரெயில் நிறுத்த கட்டிடங்களின் அனைத்து உள்ளக பணிகளையும், ரெயில் இயக்கதிற்கு தேவையான முக்கிய தொலைத்தொடர்பு உபகரணங்களையும் நிறுவத் தொடங்கியுள்ளது.

ரெயில்களின் தானியங்கி செயல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை ஒருங்கிணைத்து இயக்க கோயம்பேடு கட்டுப்பாட்டு மையத்தில், தேவையான உபகரணங்களும் நிறுவப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனன். கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ஏழு ரெயில் நிலையங்கள் இருக்கின்றன.

சில ரெயில் நிலையங்களில் கட்டிட வேலை முடிந்தவுடனேயே உபகரணங்கள் நிறுவல் வேலைகள் தொடங்கியுள்ளது.ரெயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் ஒரு சில பயணிகள் வசதிகள் நிறுவ வேண்டியுள்ளது. அரும்பாக்கம், அசோக் நகர், கோயம்பேடு நிலையங்களின் அனைத்து வேலைகளும் முடிந்து விரைவில் தயாராக உள்ளது. கட்டுமான பணி நிறைவடைந்து நிலைய உள்ளக வேலைகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

சுரங்க வழியில், ஷெனாய் நகர் முதல் கோயம்பேடு வரையேயான வழித்தடத்தில் பாதைகள் அமைக்கும் பணியில் வேகமாக முன்னேற்றம் கணப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் அடுத்த ஆண்டு ரெயில்களை இயக்க வாய்ப்பு உள்ளது என மெட்ரோ ரெயில் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

 

Source - Times Of India.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில், அண்ணா சாலை வழியாக சுரங்க வழியில் புகுமுன்பாக கிண்டி மின்சார ரயில் நிலையம் மேலே, குறுக்கு வாட்டாக மெட்ரொ ரயில் வழித்தடம் அமைவதால், இரும்புத் தகடுகளால் பொருத்தப்படும் மேல் பாலம், கீழே ஓடும் மின்சார ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏதுமில்லாமல் மெல்ல மெல்ல உருவெடுத்து, தூண்களின் மேலே ஊர்ந்து பொருந்துவதை படத்தில் காணலாம்.. :o

 

Wc9ul51.jpg?1

 

D8X53aC.jpg?1

 

yflVksT.jpg?1

 

gHY57Pv.jpg?1

 

- Engineers make the world..

 

.

Edited by ராசவன்னியன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.