Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலில் குதித்தே தீருவோம் : வித்தியாதரன் -தர்சானந் தீவிர முயற்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
vithyatharan-seithy-150.jpg

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் சுயேட்சையாகக் களமிறங்கும் முயற்சியில் முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் அவருக்கு துணையாக உதயன் பத்திரிகை நிர்வாகம் களத்தில் இறங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன், மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் தர்சானந் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பாளர் பட்டியலில் இருந்து நிராகரிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக தெரியவருகின்றது.

  

இந்த முயற்சியின் தொடராக, உதயன் ஆசிரியர் பீடத்தினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் தமிழ்த் தேசியத்தினை வலியுறுத்துகின்ற மற்றொரு கட்சியுடன் தொடர்பினை மேற்கொண்டு தேர்தலில் குதிப்பதற்கு முன்வருமாறு கோரிக்கைவிடுத்ததாகவும் வேட்பாளர்களை பங்கீடு செய்வதற்கு இணங்குமாறும் கோரிக்கைவிடுத்ததாகவும் குறித்த கட்சி அதனை நிராகரித்ததாகவும் தெரியவருகின்றது. ந.வித்தியாதரனை கூட்டமைப்பின் ஊடாக முதன்மைவேட்பாளராக முன்நிறுத்துவதற்கு இந்தியத் தூதரக அதிகாரிகள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தியிருந்தனர். இருப்பினும் இறுதியில் கூட்டமைப்பில் சாதாரண வேட்பாளராக போட்டியிடுவதற்கு கூட வித்தியாதரனுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேரம் பேசலில் ஈடுபட்ட வித்தியாதரன் அந்த முயற்சியும் கைகூடாத நிலையில் சுயேட்சையாக களம் இறங்குவதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுவருவதாக தெரியவருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக தேர்தலில் போட்டியிட முற்பட்டு நிராகரிக்கப்பட்டவர்கள் வித்தியாதரன் தலைமையிலான குறித்த கூட்டணியில் தேர்தலில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=88815&category=TamilNews&language=tamil

உதயன் பக்கத்தை உடைக்க முயலும் அரசு மிகவும் கடுமையான அழுத்தம் உதயன் மீது போடுகிறது.  சரவணபவன் பதவியை இராஜினாமாப்பண்ண வேண்டும். தமிழரை காட்டிக்கொடுக்க முயலக்கூடாது.

Edited by மல்லையூரான்

வித்தியாதரனுக்கு உதயன் பத்திரிக்கை முக்கியஸ்தர்கள் பலர் ஆதரவு என்பது தவறு.

வித்தியாதரன் கடந்த பலவருடங்களாக தமிழனப் படுகொலைகளை முன்னின்று செய்த அயல்நாட்டு அதிகாரிகளின் செல்லப் பிள்ளையாக உள்ளார்.

கெடு குடி சொல் கேளாது .எல்லோருக்கும் குடாநாட்டுகுள்ள தான் வீரம் ,தமிழன் தனக்குத் தானே குழி பறிப்பான் என்று சிங்களத்தின் நினைப்பை செயலில் காட்டப்போகின்றார்கள் .சிலருக்கு சொன்னால் புரிந்துகொள்வார்கள் .இவர்கள் அனுபவத்தினூடாக பாடம் படிக்கவேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்கள் .எல்லாம் நல்லதுக்குத்தான் .
 
 
கிழக்கு சகோதரர்களுக்கு அருமை இப்போதாவது புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.என்று எழுதியவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் .

ஆதாரமே இல்லாத ஒரு செய்தி...  அதை போட யாழ்...    நல்லா வருவீங்க... ! 

 

செய்தி திரட்டி பகுதியிலை இருக்க வேண்டிய செய்தி இது... 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரி.. சித்தார்த்தன் மற்றும் கூட்டணி.. புளொட் கொலைக் கும்பல்களோடு..ஒப்பிடும் போது வித்தியாதரன் எவ்வளவோ உசத்தி.

 

நேற்று வரை முள்ளிவாய்க்கால் வரை இனத்தை அழித்தவர்கள்.. இன்று ஒற்றுமை என்ற பெயரில் அழிக்கப்பட்டவர்களின் நிழலில் நின்று தங்களின் எதிர்கால அரசியலை செய்ய முற்படுகின்ற போது அதனை தடுக்க ஒரு சக்தி வந்து தான் ஆகனும்..!

 

இல்லாவிட்டால்.. எம்மை எம் மக்களை நிலத்தை அழித்த.. கோடரிக்காம்புகளும்.. துரோகிகளும் மக்கள் பிரதிநிதிகளாக எம் கண்முன்னால் வலம் வரும் கொடூரம் இன்னும் இன்னும் தொடரும் நிலையே இருக்கும்..! :icon_idea::(

 

இன்றைய நிலையில் வித்தியாதரன் சுயாட்சையாக நிற்க முடியாது. காரணம் சுயேட்சைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் காலம் முடிவடைந்து விட்டது. இது தேர்தலைக் குழப்பும் செயலாகத் தெரியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சம்பந்தன் குழு தலைகால் புரியாமல் ஆட நினைத்தால்.. விளைவுகள் மோசமாக இருக்கும் என்ற ஓர் எச்சரிக்கைக்காக இருக்கலாம்..!  இது உண்மையில் வரவேற்கத்தக்கது. ஏனெனில் கூட்டமைப்பின் சமீபத்திய எதேச்சதிகார நிலைப்பாடுகள் தமிழ் மக்களின் விருப்புகளை பிரதிபலிப்பதாக இல்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

ஆதாரமே இல்லாத ஒரு செய்தி...  அதை போட யாழ்...    நல்லா வருவீங்க... ! 

 

செய்தி திரட்டி பகுதியிலை இருக்க வேண்டிய செய்தி இது...

 

அதை எதிர்க்கவில்லை.  

 

வித்தியாதரன் கேட்டாலும் வெல்லப்போவதில்லை மட்டுமல்ல, வாக்குக்களை கூட பிரிக்க முடியாது. ஆனால் உதயன் உணர்ந்து திரும்பி வந்து கூட்டமைப்புடன் நிற்க வேண்டும் என்பது நமது ஆசை. இது தேர்தல் நேரம். உதயன் விளையாட்டுக்காட்டினால் மன்னிக்க முடியாது.

ஏனெனில் கூட்டமைப்பின் சமீபத்திய எதேச்சதிகார நிலைப்பாடுகள் தமிழ் மக்களின் விருப்புகளை பிரதிபலிப்பதாக இல்லை..!

 

கூட்டமைப்பு மக்களின் நாடி பிடித்து நடப்பது. அதற்கு மக்களின் ஆதாரவு மாறாது.

அதை எதிர்க்கவில்லை.  

 

வித்தியாதரன் கேட்டாலும் வெல்லப்போவதில்லை மட்டுமல்ல, வாக்குக்களை கூட பிரிக்க முடியாது. ஆனால் உதயன் உணர்ந்து திரும்பி வந்து கூட்டமைப்புடன் நிற்க வேண்டும் என்பது நமது ஆசை. இது தேர்தல் நேரம். உதயன் விளையாட்டுக்காட்டினால் மன்னிக்க முடியாது.

கூட்டமைப்பு மக்களின் நாடி பிடித்து நடப்பது. அதற்கு மக்களின் ஆதாரவு மாறாது.

உணர்ச்சிவசப்படுவது தேவை அற்றது...!

உதயன் விளையாட்டு காட்டுவதாக ஏதும் ஆதாரம் இருக்கா...??? யாரும் உடுக்கு அடிச்சு உசுப்பேத்தி விட ஆடுவதுக்கு இது என்ன சன்னதமா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

 

கூட்டமைப்பு மக்களின் நாடி பிடித்து நடப்பது. அதற்கு மக்களின் ஆதாரவு மாறாது.

 

 

இக்கருத்தை நீங்கள் என்ன அடிப்படையில் முன் வைக்கிறீர்கள் என்று புரியவில்லை.

 

விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் கூட்டமைப்புப் பெற்ற வெற்றிகளை விட பின்னர் பெறப்பட்ட வெற்றிகள் அவ்வளவு உறுதியாக இல்லை. பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் குறைந்து கொண்டே போகிறது. கிழக்கில் மாகாண சபை பறிபோயுள்ளது. வடக்கில் மக்களைக் குழப்பும் வகையான அறிக்கைகள்.. பேட்டிகள் கொடுக்கப்படுகின்றன. நேற்று வரை மக்களை அழித்தவர்களை இன்று மக்கள் முன் வேட்பாளர்களாக நிறுத்துகின்றனர். இவர்கள் செய்வதும் டக்கிளஸ் செய்வதும் ஒரே அரசியல் தானே. அவரவாது சிங்கள அரசில் இருந்து கொண்டு.. சமுர்த்தி அதுஇதென்று எதையாவது கிள்ளிப் போடுறார். இவர்கள்..???! இவை எல்லாம்.. மக்களின் நாடி பிடித்து நடக்கிற காரியமாகத் தெரியவில்லை. இதனை நாங்களும் மக்களாகவே சொல்கிறோம்.

 

2004/5 இல் கூட்டமைப்பின் மீதிருந்த நம்பிக்கை இன்றில்லை. இதுதான் மக்களின் நாடி பிடித்து நடந்து கொள்ளும் பாங்கா. மக்களும் தேர்தலுக்குத் தேர்தல் வாக்களிக்காமல் இருப்பதையே அதிகம் விரும்புகின்றனர். இது கூட கூட்டமைப்பு வெற்றியாக அமைகிறதே தவிர.. கூட்டமைப்பு மக்கள் நாடி பிடித்து நடக்கிறது என்பது  சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே உள்ளது. அதற்கான நல்ல ஆதாரங்களும் இல்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

உணர்ச்சிவசப்படுவது தேவை அற்றது...!

உதயன் விளையாட்டு காட்டுவதாக ஏதும் ஆதாரம் இருக்கா...??? யாரும் உடுக்கு அடிச்சு உசுப்பேத்தி விட ஆடுவதுக்கு இது என்ன சன்னதமா...??

நேரடி நிருபணங்கள் வைக்க நாளாகும். பிரட்டெரிக்கா போன பின்னர் அந்த பத்திரிகை நடந்த விதத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். 

. பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் குறைந்து கொண்டே போகிறது. கிழக்கில் மாகாண சபை பறிபோயுள்ளது.

 

இதை 65 எம்பீக்கள் விலகி போன ஐ.தே.கட்சியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்,  அப்போது அது அரசாங்கத்தின் தோல்வி. கூட்டமைப்பின் வெற்றி.

நேரடி நிருபணங்கள் வைக்க நாளாகும். பிரட்டெரிக்கா போன பின்னர் அந்த பத்திரிகை நடந்த விதத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். 

 

கூட்டமைப்போ வேறு யாருமோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்  கிடையாது..   அதற்கான தகுதியை யாரும் இன்னும் நிரூபிக்கவில்லை..  

 

ஆனாலும் உதயன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களோடு முன் வைக்கப்பட வேண்டும்...    வெறும் காள்புணர்ச்சியால் சொல்லப்பட கூடாது...  

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போன்றநிலைதான் இன்றைய தமிழ் அரசியல்வாதிகளின் நிலை அதற்க்கு வித்தியாதரன் மட்டும் விதிவிலக்கா ........ ?

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுக் கொண்டவர்களை கொள்கைப் பிடிப்புள்ளவர்களை ஒவ்வொருவராக கழட்டி விட்டு அதற்கு எதிரானவர்களைக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கி வருவது கண்கூடு.சம்பந்தரின் சர்வாதிகாரத்தை அடக்க வேறொரு அணி ஒன்று தேவையானதுதான்.ஆனால் கடந்த தேர்தலில் நடந்தைதைப் போல் சரியான தயாரிப்பு இல்லாமல் அணி அமைத்து தோல்வியைச் சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் அந்த அணியை மக்களிடம் போய்ச் சேரத்தக்கதாக தங்கள் பிரச்சாரங்களை முன்னெடுத்து அதன் பின் தேர்தலைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். இன்றைய நிலையில் 3 அணி வாக்குகளைப் பிரித்து தமிழர்களைப் பலவீனமாக்கும்.அது கஜேந்திரகுமாருக்கு தெரிந்திருக்கிறது.தமிழருக்குத் தங்களை விட வேறு தேர்வு இல்லை என்பது சம்பந்தருக்கும் தெரிந்திருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.