Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்டில்காரனுக்கு “நேர்ந்து” விட்ட காளைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பாரம்பரியம் மிக்க, அல்லது வீர விளையாட்டு என்று பார்க்கப்படுகின்ற மாட்டுவண்டி சவாரிக்கு மாடுகளை தெரிவு செய்து கொள்வதிலும் யாழ்ப்பாணத்து சமுகத்தினர் கைதேந்தவர்கள்.

ஒரு காளைமாட்டுக் கன்று பிறந்து சிறிது காலத்தின் பின்னர் அதனை விலை கொடுத்து வாங்கி சவாரிக்காக தயார் செய்வார்கள் நம்மவர்கள். சாஸ்திர முறைப்படி அந்த கன்றினை வாங்கி தங்கள் வீட்டுக்கு கொண்டு வருவார்கள்.

யாழ்ப்பாணத்தில் சவாரிக்காக விடப்படுகின்ற காளைகளை இனம், நிறம், சுழி என்பவற்றை அடிப்படையாக வைத்து சவாரிக்காரர்கள் பாகுபடுத்துவார்கள்.
நாட்டான் இனக் காளை, கேப்பை, ஜேசி, சிந்திக்கலப்பை, வடக்கன் எனும் இனக்காளைகள் யாழ்ப்பாண தரவைகளில் இன்று வரைக்கும் ஓடுகின்ற மாடுகள் ஆகும்.
நாட்டான் இனக் காளைகள் – யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த காளைகளாக இவை இருக்கும். அளவான உயர அமைப்பையும் கொண்டிருப்பதோடு எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
கேப்பை இனக் காளைகள் வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மாடுகளாகும். குறிப்பாக அவுஸ்ரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து சவாரிக்காக கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டவை. இக் காளைகள் பருத்த உடல் அமைப்பையும், நீளமான உடல் வாகையும் கொண்டிருக்கும்.
சிந்தி கலப்பை இனக் காளைகள் தோற்றத்தில் அளவான உடல் பருமனை கொண்டிருப்பதோடு இக் காளையில் சிரசுப்பகுதில் கொண்டை போன்ற அமைப்பு அமைந்திருப்பது இதனுடைய தனிச்சிறப்பாக கொள்ளப்படுகின்றது.
வடக்கன் இனக் காளைகள் தென் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட இவை உயரமான தோற்ற அமைப்பை கொண்டவை. அத்தோடு இதன் உடற்பாகம் முழுவதும் வெள்ளையாக காணப்படுவதோடு நீண்ட உயரமான கொம்புகளையும் இவை கொண்டிருக்கும்.
ஜேசி இன காளைகள் ஏனைய காளைகளைப்போல் அளவான உடல் பருமனையும் நீண்ட உடல் அமைப்பையும் கொண்டிருக்கும்.
இந்த இனங்களுக்குள் இருக்கின்ற காளைகளை சவாரிக்காரர்கள் நிறத்தின் அடிப்படையிலும் பாகுபடுத்தி கொள்வார்கள். அவ்வகையில் மயிலை, கருவெள்ளை, சிறுமறையன், நாலுகால் சிலம்பன், அரச இலைச் சுட்டியன், பொட்டுச் சுட்டியன், வெள்ளையில் மறையன், மாவெள்ளை, கழுகனின் நெஞ்சடி மறையன். என்னும் பாகுபாட்டில் சவாரிக்காளைகளை பாகுபடுத்துவர்.
மயிலைக்காளை – கறுப்புக்கலந்த சாம்பல் நிறத்தினை உடையதாக இவை இருக்கும். இருந்தும் இக் காளைகளில் அதிகம் நாட்டம் கொள்ளமாட்டார்கள் யாழ்ப்பாண சவாரிக்காரர்கள்.
கருவெள்ளை – உடற்பாகம் முழுவதும் வெள்ளை நிறமாக இருப்பதோடு கறுப்பு நிற உரோமங்களை ஆங்காங்கே கொண்டிருக்கும்.
சிறுமறையன் – பொதுவான நிற தன்மையினை இது கொண்டிக்கும். அத்தோடு அந்நிறத்தினை ஒத்த மறைகள் காளையில் காணப்படும்.
நாலுகால் சிலம்பன் – கறுப்பு நிறங்களை கொண்ட இக் காளைகளின் கால்களில் சிலம்பின் வடிவத்தை ஒத்த வெள்ளை நிற அடையாளம் இருக்கும்.
வெள்ளையில் மறையன் – இக் காளைகள் மஞ்சள் நிறம் கலந்த வெள்ளை நிறத்தினை கொண்டிருக்கும்.
மாவெள்ளை – இக் காளைகள் பளுப்பு நிற வெள்ளையில் இருக்கும்.
கழுகனின் நெஞ்சடி மறையன் – இவ் இனக் காளைகள் கருமையான மண்ணிறத்தினை கொண்டிருக்கும். அத்தோடு நெஞ்சில் மறை இருப்பது இக்காளைகளுக்கு விசேட தன்மையாகும்.
அரச இலைச் சுட்டியன் – இக் காளைகளுக்கு அரச இலை போன்ற சுட்டி நெற்றியில் இருக்கும்.
பொட்டுச் சுட்டியன் – இக் காளைகளின் தலையில் பெருவிரல் அடையாளத்தைப்போல் சுட்டி காணப்படும்.
காளைகளுக்கான சுழிகள் பல வகையாக காணப்படுகின்றன. நடுச்சுழி, விலங்குச்சுழி, புறாண்சுழி, பறவைச்சுழி, இராஜசுழி, வழுவுசுழி, ராஜமந்திரிச் சுழி, முற்சுழி, பிற்சுழி, நெத்திச்சுழி என பல வகையான சுழிகள் கன்றுகளில் காணப்படுகின்றன.
நடுச்சுழி – இக் காளைகள் சவாரி செய்பவர்களால் அதிகமாக விரும்பப்படும். ஏனெனில் சீராகவும் நேர்த்தியாகவும் சவாரி செய்யக் கூடிய தன்மை இக்காளைகளுக்கு உள்ளது.
விலங்குச் சுழி – இக் காளைகளை பல வண்டில்கார்கள் விரும்புவது இல்லை. காரணம் சில வண்டில் காரர்களுக்கு இது போட்டியின் போது பொருத்தம் இல்லாததாக இருக்கின்றது. இக் காளையில் முதுகு பக்கத்தில் விலங்கு போன்ற இரண்டு வளைந்த சுழி காணப்படும். அவ் இரண்டு சுழியும் இணைந்ததாக இருக்கும்.
புறாண் சுழி – காளையினுடைய நெஞ்சின் அடிப்பகுதி மூட்டுக்குள் இரண்டு சுழிகள் அமையப்பெற்று இருக்கும். இச் சுழி இருக்கும் காளைகளை வண்டில் காரர்கள் அதிகம் விரும்புவார்கள்.
இராஜசுழி – காளையின் ஏரிப்பகுதியில் அதாவது கழுத்தின் அடிபகுதியில் வளரும் தசைபகுதியை இராஜசுழி என்பார்கள்.
வழுவு சுழி – காளையினுடைய முள்ளந்தண்டினை சற்று விலகி இச் சுழி அமைந்திருக்கும். ஜாதகபலன்களுக்கு சார்பாக இச் சுழிக் காளைகள் இருக்காமையால் வண்டில்காரர்கள் அதிகம் விரும்பமாட்டார்கள்.
ராஜமந்திரிச் சுழி – காளையினுடைய நெத்தி பகுதியில் மேலும் கீழுமாகவும் இரு பக்கமாகவும் இது அமையப்பெற்றிருக்கும்.
முற்சுழி – காளையின் முதுகு பகுதியில் சற்று முன்பக்கமாக இது அமைந்திருக்கும். இச் சுழி காளைகளை வண்டில் காரர்கள் அதிகம் விரும்புவார்கள்.
பிற்சுழி – காளையின் முதுகு பகுதியில் சற்று பின்பக்கமாக இது அமைந்திருக்கும். இச் சுழி காளைகளையும் வண்டில் காரர்கள் அதிகம் விரும்புவார்கள்.
நெத்திச் சுழி – இது ஒரு சாதாரண சுழி ஆகும். அதாவது பொதுவாக எல்லா காளைகளிலும் இச்சுழி அமையப்பெறும்.
இதனை விட சவாரி செய்கின்ற காளைமாட்டினுடைய உடல்வாகு நீண்ட அமைப்பில் இருக்கவேண்டும். அதாவது ஒரு நாயினுடைய உடல் அமைப்பினை ஒத்ததாக இருத்தல் வேண்டும். மேலும் காளை மாட்டினுடைய கால்களின் முன் இரண்டு கால்களும் உயரத்தில் குறைவாகவும் பின் இரண்டு கால்களும் முன் இரண்டு கால்களை விட சற்று உயரம் கூடியதாகவும் இருப்பது சிறப்புக்குரியது. அவ்வாறு இருக்குமானால் சவாரி காளைகளின் ஓட்ட வேகம் அதிகமாகவும் பாய்ச்சல் தூரம் அதிகமாகவும் இருக்கும்.
காளைமாடுகளின் நிறங்களில் சவாரிக்காரர்கள் அதிகம் அக்கறை எடுத்து கொள்கின்றார்கள். ஏன் என்றால் ஒரு சவாரிக்காரன் தனக்கு பொருத்தமான நிறத்தினை உடைய காளைமாட்டினை தெரிவு செய்து அதனை சவாரிக்கு தயார்படுத்துகையில், அக்காளையானது சவாரியின் போது எந்த தவறுகளை செய்ய மாட்டாது என்ற நம்பிக்கையுடன், மற்றவர்களினுடைய பார்வைக்கு காளைமாடுகள் கவர்ச்சியாக இருத்தல் வேண்டுமென்;பதையும் ஒவ்வொரு வண்டில் காரர்களும் கவனத்தில் கொள்கின்றனர்.
காளைகளின் நிறம், சுழிகள், உடல் அமைப்பு யாவும் ஒரு காளையின் குழந்தை பருவத்திலேயே (கன்று) கணிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. சவாரி காளைகளுக்கான உணவு முறைகளும், வளர்ப்பு முறைகளும் ஏனைய சாதாரண காளை மாடுகளுக்கான வளர்ப்புமுறைகளிலிருந்து தனித்துவம் பெற்று விளங்குகின்றன.

oodaham.com


DSC0279-1024x685.jpg

Edited by நந்தன்

தகவலுக்கும் ,இணைப்பிற்கும் நன்றி பாஸ் ............... :) 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் முற்றவெளியில், வருடா வருடம் நடைபெற்ற தினகரன் விளையாட்டு விழா மீண்டுமொரு முறை, நினைவில் வந்து போகின்றது!

 

மகாதேவா மாஸ்டரின் வாண வேடிக்கை, நேர்முக வர்ணனையை, யாரால் இலகுவில் மறந்துவிட முடியும்?

 

:icon_idea: 'அடுத்ததாக, மட்டுவில் மணியம் 'அவிட்டு' விடுகிறார் !!! :icon_idea:

 

இணைப்புக்கு நன்றிகள்!

ஆம்..............  காளைகள் வண்டில் காறர்களுக்கு மட்டுமல்ல   , எங்களுக்கும் நேர்ந்து விடப்பட்டவைதான் . அல்லாவிட்டால் வாயில்லா சீவனை நாலு கால்களையும் கட்டிப்போட்டு ஈனகுரலில் அது கத்தக் கத்த குறிசுட்டும் , மருத்துவ வசதிகள் இருந்தும் அதன் விதைகளை  அது கத்தக் கத்த நசித்து விடும் மனப்பான்மை யாருக்குதான் வரும் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம்..............  காளைகள் வண்டில் காறர்களுக்கு மட்டுமல்ல   , எங்களுக்கும் நேர்ந்து விடப்பட்டவைதான் . அல்லாவிட்டால் வாயில்லா சீவனை நாலு கால்களையும் கட்டிப்போட்டு ஈனகுரலில் அது கத்தக் கத்த குறிசுட்டும் , மருத்துவ வசதிகள் இருந்தும் அதன் விதைகளை  அது கத்தக் கத்த நசித்து விடும் மனப்பான்மை யாருக்குதான் வரும் .

 

அதெண்டால் உண்மைதான் கோமகன்...வாயில்லா சீவன்கள்.

காளையோ  பசுவோ சோனகர் கண்ணில் பட்டால் எல்லாம் அல்லா தான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் முற்றவெளியில், வருடா வருடம் நடைபெற்ற தினகரன் விளையாட்டு விழா மீண்டுமொரு முறை, நினைவில் வந்து போகின்றது!

 

மகாதேவா மாஸ்டரின் வாண வேடிக்கை, நேர்முக வர்ணனையை, யாரால் இலகுவில் மறந்துவிட முடியும்?

 

:icon_idea: 'அடுத்ததாக, மட்டுவில் மணியம் 'அவிட்டு' விடுகிறார் !!! :icon_idea:

 

இணைப்புக்கு நன்றிகள்!

 

சரவணை நாய்க்குட்டியான்  வாய்க்காலில்  சின்ன வயசில் அப்பாவின் தோழில்  இருந்து  பாத்தது  இப்போதும் ஞாபகம் இருக்குது (அப்பாதான் இப்ப இல்லை ) :(

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை சொன்னதுபோல் முற்றவெளியில் மாட்டுவண்டில் சவாரியும் வானவேடிக்கைகளும் வாழ்வில் மறக்கமுடியாதவை !

மற்றும்படி எந்த ஒரு கேளிக்கை களிலும் நல்லதும் கேட்டதும்  சேர்ந்தே இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கும் ,இணைப்பிற்கும் நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.