Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆந்திராவில் தமிழர் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கக் கோரி நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

சென்னை: ஆந்திராவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் சித்தூர், நகரி, விஜயபுரம் உள்ளிட்டவற்றை தமிழகத்துடன் இணைக்கக் கோரி தமிழர் எழுச்சி இயக்கத்தின் சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் சித்தூர், நகரி, விஜயபுரம் உள்ளிட்ட பல பகுதிகள், 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது தமிழகத்தின் சற்றொப்ப 32,000 சதுர மீட்டர் நிலப்பரப்பிலான பகுதிகள், ஆந்திரப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டன. தற்போது, ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்படுகின்ற சூழலில், சித்தூர், நகரி, விஜயபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் ஆந்திர மாநிலப் பகுதிகளிலுள்ள 169 கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள், தாய்த்தமிழகத்துடன் தம்மை இணைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 65 கிராமப் பஞ்சாயத்துகள் தமிழகத்துடன் தங்கள் பகுதிகளை இணைக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 11 ஞாயிறு காலை வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 11 மணியளவில், தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமையிலான த.தே.பொ.க. தோழர்களும், பல்வேறு அரசியல் கட்சி, இயக்கத் தலைவர்களும், பிரதிநிதிகளும் பெருந்திரளாகப் பங்கேற்கின்றனர். இந்நிகழ்வில், சென்னை வாழ் தமிழுணர்வாளர்களும், தமிழக மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

http://tamil.oneindia.in/news/2013/08/10/tamilnadu-tamil-movements-also-demand-merger-8-taluks-from-ap-180978.html

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் போராட்டம் நடாத்தினால் உலகுக்கு அது தீவிரவாதமாக தெரிகிறது.எது எப்படியோ போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

999416_694983167183203_1551620036_n.jpg

  • தொடங்கியவர்

1003860_694983363849850_1349468169_n.jpg


1148932_694983630516490_1982818738_n.jpg


1148846_694983213849865_1964503119_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திராவில் தமிழர் பகுதிகளை இணைத்து தனி மாநிலம் கேட்க வேண்டும். பின்னர் அதனை தமிழ்நாட்டோடு தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சி செய்யும் நிலை வரும் போது இணைப்பதே நன்று. தற்போது இணைத்தால்.. கருணாநிதியும் ஜெயலலிதாவும் சுருட்டிக்கொள்ளத் தான் கூடிய வாய்ப்பிருக்கும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ தாயகத்துடன் உறவு துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் இன்னும் மென்மேலும் ஓங்கி ஒலித்து தமிழ்நாட்டுடன் மீண்டும் இணைய வாழ்த்துக்கள்!

ஆந்திர மாநிலத்தில் வா(டு)ழும் தமிழர்களுக்கு உணர்வுகள் மெல்ல மீள்கின்றன...இதே உணர்வு கேரளா இடுக்கியிலுள்ளவர்களுக்கு எப்பொழுது வரும்?

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ தாயகத்துடன் உறவு துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் இன்னும் மென்மேலும் ஓங்கி ஒலித்து தமிழ்நாட்டுடன் மீண்டும் இணைய வாழ்த்துக்கள்!

ஆந்திர மாநிலத்தில் வா(டு)ழும் தமிழர்களுக்கு உணர்வுகள் மெல்ல மீள்கின்றன...இதே உணர்வு கேரளா இடுக்கியிலுள்ளவர்களுக்கு எப்பொழுது வரும்?

 

 

 

பொந்தியா  என்றநிலை 

சில சுயநல  தலைவர்களால் ஒரு சிலருக்கு  மட்டும்  ஒரு சில  மாநிலங்களுக்க மட்டும் தலை வணங்க ஆரம்பித்து

தற்பொழுது அது உடைவு கண்டுவருகிறது

இனி 

மொழி  வாரியான

இன ரீதியான நாடுகளே  உருவாகும்

அதுவே  எமக்கும் வேண்டும்

  • தொடங்கியவர்

1173896_532172416837337_2123438454_n.jpg
தோழர் சீமானின் "நாம் தமிழர்" கட்சியில் 

உள்ளவர்கள் மருத்துவர் ராமதாஸ் சொன்னதை சரியெனும்விதமாக வடிவமைத்துள்ள இந்த தமிழகத்தின் புற எல்லைகள் வரைபடம் முழுக்க முழுக்க தமிழர்களுடையது என்பதில் எந்த வித

மாற்றுக் கருத்தும் இல்லை....

#இதை எந்த கட்சிக்காரன் எந்த விதத்தில் 

சொன்னாலும் வரவேற்பது,தமிழனாகிய நமது கடமை... இனியும் தூக்கம் கூடாது......தமிழனமே;

#HO

 
thankx.facebook

 

  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவும் இந்த வரைபடத்தில் "தெரியும்படி" இருக்கவேண்டும்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.