Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேடுகின்றேன் இன்னும் .......!

Featured Replies

mother_and_child.jpg
மோசமான நாட்கள்
உக்கிரமடைந்த போர்
வேட்டையில் கலைக்கப்படும்
மிருகத்தைப்போல ஓடுகின்றோம் 
 
தொடர் குண்டுத்தாக்குதல்கள்
இரத்த ஓடைகள், பிணக்குவியல்கள்
மனிதப்பேரவலம்! உலகம் சொல்லிற்று
காப்பாற்றுவார் யாருமில்லை!
 
கோழியின்  இறகுக்குள் பதுங்கும் 
குஞ்சுகள் போல 
பிள்ளைகள் 
உயிரைக்காக்கும் இறுதி முயற்சியில்
பதுங்குகுழிகள்!
அவையே சவக்குழியாகும் அவலம்!
 
இறுதியில்
ஆக்கிரமிப்பாளனிடமே போக வேண்டிய துர்ப்பாக்கியநிலை!
நீரேரி வழியாக வெளியேற நிர்ப்பந்தம்! நெஞ்சளவு தண்ணீர்
நடக்கமுடியாத அம்மா! எப்படி கொண்டு செல்வது
நடக்கக்கூட  ஜீவனில்லை!
 
பெற்றெடுத்து தோளில் சுமந்தவள்
கூலிவேலை செய்து
என்னை வளர்த்தெடுத்தவள்!
மொட்டுவிடும் பருவத்தில்  பேரப்பிள்ளைகள்!
திரிசங்கு நிலையில் நான்,
யாருக்கும் வரக்கூடாத 
துயரத்தின் உச்சம்!
என்ன செய்ய ஆண்டவா!
 
பேரப்பிள்ளைகளைக் கொண்டு போ
வாழவேண்டியதுகள்! என்றாள்
கலக்கமின்றி!
பார்வையில் அவளது தெளிவு 
பேரப்பிள்ளைகளை காப்பாற்றும் ஆதங்கம்
என் கன்னத்தில் இருந்த
கண்ணீரை துடைத்து 
கையை பிடித்து! நான் வருவன்! நீ போ என்றாள்!
விடைபெறும் இறுதித்தருணம் 
அவள் கண்களில் தீர்க்கமான பார்வை!
அன்னையாக மட்டுமல்ல 
தியாகத்தின் மறுவடிவமாகவும் 
என் தாய்.....!
நடைப்பிணமாக வந்தேன்! 
தேடுகின்றேன் 
அம்மாவை
இன்னும்.................! 
 

Edited by வாணன்

  • கருத்துக்கள உறவுகள்

மனம் கனக்கிறது வாணன். உங்கள் சொந்த அனுபவமானால் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை வாணன்,தொடருங்கள் முழுவீச்சாய்.

  • தொடங்கியவர்

மனம் கனக்கிறது வாணன். உங்கள் சொந்த அனுபவமானால் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

 

 எனது மாமியின்  சொந்த அனுபவம். அவர் கண்ணீருடன்  பகிர்ந்து கொண்ட உணர்வை கவிவரிக்குள் கொண்டு வந்தேன். ஆனாலும் அந்த வலிகளை முழுமையாக கொண்டு வரவில்லை என்ற ஆதங்கம் இருக்கின்றது.

 

நன்றி சுமேரியர் தங்களின் ஆறுதல் வார்த்தைகளிற்கு

Edited by வாணன்

  • கருத்துக்கள உறவுகள்

மனதைக் கலங்கச் செய்தது கவிதை.. எங்காவது ஒரு இடத்தில் அவர் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என மனம் வேண்டுகிறது..

எழுத்தின் ஆழம் உங்கள் வலி பேசுது :(

:( வார்த்தைகள் இல்லை. :(

  • கருத்துக்கள உறவுகள்

துயரங்களின் 'உச்சம்' !!!

 

எங்கே தவறு நடந்தது, என்பது எவருக்கும் புரியவில்லை!

 

ஆசைகளின், சுயநலங்களின் , நம்பிக்கைத் துரோகங்களின், தனிமனித அகங்காரங்களின் விளைவு!

 

தற்போதைக்கு அழுவதைத் தவிர வேறு வழியில்லை,!

 

உரத்து அழுவதற்குக் கூட அனுமதியில்லாத நிலை தான், எமது தற்போதைய நிலை! :o

:( மனம் கனக்கிறது  :(

  • தொடங்கியவர்

வலிகளிற்கு ஆறுதல் சொன்ன உங்கள் எல்லோருக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்கு முன்பு  ஒருமுறை கொழும்பு கொலன்னாவையில் ஒரு நண்பர் வீட்டிற்கு ஒரு அலுவலாய் போயிருந்தேன். போகும்போதே அந்தப் பள்ளமான பிரதேசத்தில் முழங்காலளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது . வீதியில் ஆட்டோவை விட்டிறங்கி இரண்டு கி.மீ. இருக்கும் அங்கெ நடந்து போனேன் .இப்போ வீடுகளுக்குள் தண்ணீர் வரத் தொடங்கீட்டுது. அக்கம்,பக்கம் எல்லோரும் வீடுகளை விட்டு வெளியில் ஓடிக்கொண்டிருக்கினம். நான் நண்பரிடமிருந்து விடை பெற்று வரும் போது பின்னேரம் நீர் வயிற்றுக்கு மேல ஓடுது .அப்போது ஒரு தாயும் குழந்தையும் சிரமப்பட்டு வருகினம்.நான் கிட்ட வந்ததும் பிள்ளையைத் தூக்கி  தோளில் போட்டுக் கொண்டேன் .அவவும் குள்ளம் .அவ மற்றத் தோளில் தொங்கிக் கொண்டு வர எனக்கும் சிரமம்.நீர் இப்ப எனக்கு நாடிக்கும், வாய்க்கும் வருகுது. கால் பெருவிரலில் கெந்தி கெந்தி வர நான் நினைத்திட்டேன் இன்றைக்கு இவங்கள் சரி. ( எனக்கு கொஞ்சம் நீந்தத் தெரியும்). பிள்ளையாரைக் கும்பிட்டுக்கொண்டு பார்கிறேன் வாகான மரம் கிடைக்குமா என . எல்லாம் தென்னைகள் . பாதையை விட்டிறங்கினால் பள்ளம்தான். அப்ப சில பொடியல் வாழை குத்தியலை கட்டுமரமாய்க் கட்டி அதில் விளையாடிக் கொண்டு வந்தாங்கள். அவங்களிட்ட சிங்களத்தில உதவி கேட்டு அந்தப் பிள்ளையையும், அவவையும் அதில் ஏற்றி நானும் அதைப் பிடித்துக் கொண்டு வீதிக்கு வந்தோம். அப்ப அந்தத் தாய் என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டு  கதறியது இப்பவும் நெஞ்சைப் பிசையுது.

 

உங்கள் கவிதையைப் பார்த்ததும் நினைவுகள் !  நன்றி வாணன் !!

 

 

  • தொடங்கியவர்

பல வருடங்களுக்கு முன்பு  ஒருமுறை கொழும்பு கொலன்னாவையில் ஒரு நண்பர் வீட்டிற்கு ஒரு அலுவலாய் போயிருந்தேன். போகும்போதே அந்தப் பள்ளமான பிரதேசத்தில் முழங்காலளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது . வீதியில் ஆட்டோவை விட்டிறங்கி இரண்டு கி.மீ. இருக்கும் அங்கெ நடந்து போனேன் .இப்போ வீடுகளுக்குள் தண்ணீர் வரத் தொடங்கீட்டுது. அக்கம்,பக்கம் எல்லோரும் வீடுகளை விட்டு வெளியில் ஓடிக்கொண்டிருக்கினம். நான் நண்பரிடமிருந்து விடை பெற்று வரும் போது பின்னேரம் நீர் வயிற்றுக்கு மேல ஓடுது .அப்போது ஒரு தாயும் குழந்தையும் சிரமப்பட்டு வருகினம்.நான் கிட்ட வந்ததும் பிள்ளையைத் தூக்கி  தோளில் போட்டுக் கொண்டேன் .அவவும் குள்ளம் .அவ மற்றத் தோளில் தொங்கிக் கொண்டு வர எனக்கும் சிரமம்.நீர் இப்ப எனக்கு நாடிக்கும், வாய்க்கும் வருகுது. கால் பெருவிரலில் கெந்தி கெந்தி வர நான் நினைத்திட்டேன் இன்றைக்கு இவங்கள் சரி. ( எனக்கு கொஞ்சம் நீந்தத் தெரியும்). பிள்ளையாரைக் கும்பிட்டுக்கொண்டு பார்கிறேன் வாகான மரம் கிடைக்குமா என . எல்லாம் தென்னைகள் . பாதையை விட்டிறங்கினால் பள்ளம்தான். அப்ப சில பொடியல் வாழை குத்தியலை கட்டுமரமாய்க் கட்டி அதில் விளையாடிக் கொண்டு வந்தாங்கள். அவங்களிட்ட சிங்களத்தில உதவி கேட்டு அந்தப் பிள்ளையையும், அவவையும் அதில் ஏற்றி நானும் அதைப் பிடித்துக் கொண்டு வீதிக்கு வந்தோம். அப்ப அந்தத் தாய் என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டு  கதறியது இப்பவும் நெஞ்சைப் பிசையுது.

 

உங்கள் கவிதையைப் பார்த்ததும் நினைவுகள் !  நன்றி வாணன் !!

 

நல்லதொரு அனுபவப்பகிர்வு,  உங்களின் மனிதாபிமானத்தை நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.