Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா.ஜ.க.வில், சுப்ரமணியசுவாமி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12-advani-swamy-300-jpg.jpg

பாஜகவில் சுப்ரமணியசுவாமி: கட்சித் தலைவர்கள் வரவேற்பு.

 

டெல்லி: சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் ஞாயிற்றுக்கிழமை இணைந்தது.

 

டெல்லியில் ராஜ்நாத் சிங் வீட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுடன் சுப்ரமணியசுவாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கட்சியில் சுப்பிரமணியசுவாமி இணைவதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோர் முன்னிலையில், இந்த அறிவிப்பை சுப்ரமணியசுவாமி வெளியிட்டார்.

 

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்ரமணியன் சுவாமி, பாரதிய ஜனதா கட்சியும், ஜனதா கட்சியும் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அவரது கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன். சுப்பிரமணியசுவாமியும், அவரது கட்சியும் பாரதிய ஜனதாவில் இணைந்திருப்பது பலனளிக்கும் என்று நம்புகிறேன். அவரை வரவேற்கிறேன் என்றார்.

 

2014ம் ஆண்டு லோக்சபா பொதுத் தேர்தலை பாஜக தலைமையில் சந்திப்போம் என்று சுப்ரமணியசுவாமி தெரிவித்தார்.

 
நன்றி தற்ஸ்தமிழ்.

999108_695440383804148_1596982407_n.jpg

மோடியை தோக்கடிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாத்தையும் அத்வானி செய்வதாக தெரிகிறது.

BJP பிராமண ஜோக்கர்களின் கட்சியாக மாறிக் கொண்டுள்ளது.

இன்று பாரதீய ஜனதா கட்சியுடன், தனது ஜனதா கட்சியை சுப்ரமணிய சுவாமி இணைத்துள்ளார்.

//பா.ஜ.கவில் சேர்ந்த சுப்பிரமணிய சாமி(னி)க்கு மட்டுமே தெரியும்..... 
தனி ஒருவனுக்காக கட்சி நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்று....//

1004845_637000559658227_1966551763_n.jpg


சுப்ரமணியம் சுவாமி பி ஜே பி யில் இணைந்தார். - செய்தி.

//ஊஊஊஊஊஊஊஊஊஊஊ.... //

999114_636983232993293_1387415797_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது வில்லங்கமான ஒரு நிகழ்வு.. வாக்குவங்கியே இல்லாத இந்த ஆளை ஏன் கட்சிக்குள் உள்வாங்குகிறார்கள்?? தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்குமானால் இந்த ஆள் கட்டாயம் ஒரு அமைச்சராக வருவார்.. அநேகமாக ஒரு ராஜயசபா உறுப்பினராகி கொல்லைப்புறம் வழியாகத்தான் அது நடக்கும்..

மூன்றாம் அணி ஒன்று பலம் பெறுவதே நல்லது..!

ஆனந்த சங்கரிய நம்ம ஆக்கள் சேர்த்த மாதிரி தான் இதுவும் :lol: . சாமிக்கு மகிந்த காசு கொடுத்து  சேர்த்து இருப்பான்   :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது வில்லங்கமான ஒரு நிகழ்வு.. வாக்குவங்கியே இல்லாத இந்த ஆளை ஏன் கட்சிக்குள் உள்வாங்குகிறார்கள்?? தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்குமானால் இந்த ஆள் கட்டாயம் ஒரு அமைச்சராக வருவார்.. அநேகமாக ஒரு ராஜயசபா உறுப்பினராகி கொல்லைப்புறம் வழியாகத்தான் அது நடக்கும்..

மூன்றாம் அணி ஒன்று பலம் பெறுவதே நல்லது..!

 

 

சும்மா  போன  ஓணானைப்பிடித்து மடியில்   விட்டிருக்கிறது பாரதிய   ஜனதா கட்சி

உள்ள  வாக்கும  இவரால்  இல்லாமல் போகப்போகிறது

சுவாமி  எப்பொழுதும் எதிர்மறையாக  சிந்திப்பவர்

இந்தமுறை சோனியாவிடம் பேரம் பேசி  வென்றிருக்கிறார் போலும்

இனி பாரதிய   ஜனதா கட்சி ஆட்சியை நினைத்துப்பார்க்கவே  முடியாதபடி  செய்திடுவார்  இந்தாள்..

தமிழன விரோதி சுப்ரமண்யசாமி பாரதிய ஜனதாவில் இணைந்தார். தன் ஜனதா கட்சியையும் இணைக்கப் போவதாக அறிவிப்பு!!

அப்படி ஒரு கட்சி இருக்குதான்னு கேட்டுராதீங்க.

கட்சியில் மொத்தமே நாலு பேருதான்.

யார் இந்த சூ.சாமி?

தமிழர்களை அடக்க பிராமணப் படை அமைப்பேன் என்று சொன்னவர் இந்த சூ.சாமி.

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என சொன்னவர் இந்த சூ.சாமி.

தமிழக மாணவர்களை தீவிரவாதிகள் என்று சொன்னவர் இந்த சூ.சாமி.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை வலுவிழக்க செய்ததில் பங்கு வகித்தவர் இந்த சூ.சாமி.

தமிழர்களையும் புலிகளையும் எலிகள், பொறுக்கிகள் என்று நகையாடியவன் இந்த சூ.சாமி.

ராஜீவ் கொலை சம்பவத்தின் சூத்திரதாரி இந்த சூ.சாமி.

இந்தியாவின் அரசியல் புரோக்கர் இந்த சூ.சாமி.

மொத்தத்தில் காங்கிரசை விட பத்து மடங்கு மிகப்பெரிய எதிரி சூ.சாமி

சுப்ரமணியசாமி புறக்கணிப்போம்.

1170922_355056317960761_1852889858_n.jpg
thankx. facebook

 

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் இராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட சில சதிகாரர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.. ஆனால் பாஜக ஆட்சிக்கு வரும்பட்சத்தில் அவர்களது பிடி சற்றுத் தளர்ந்துவிடும்.. சாமியை அங்கு வைத்திருப்பதன்மூலம் பிடியை தக்கவைத்துக்கொள்ளலாம்..

மேலோட்டமாகப் பார்க்கும்போது சோனியாவை எதிர்ப்பதுபோல் தோன்றினாலும் சாமி அன்னையைக் காப்பாற்றும் வேலையைத்தான் செய்து வருகிறார்.. அதாவது, மிரட்டுதல்.. ஆதாயம் அடைதல்.. பின்பு காப்பாற்றுதல் என்கிற வரிசையில்..

உண்மை இந்த துரோகி சூழ்ச்சியோடு தான் சேர்ந்து இருப்பான்...நாளைக்கு பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால்...ஈழ தமிழர்களுக்கு உதவி செய்யாமல் தடுக்க....இவனை போன்றவர்களை முதலில் கொல்ல வேண்டும்...இவன் ஒரு ஓட்டுக்கு ...அந்த கட்சி தமிழ்நாட்டில் இன்னும் பின்னடைவு ....தான்...

554952_564776266917925_1344659608_n.jpg
இலங்கை அரசுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடோடிப் போய் உதவுபவர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கூட அழையா விருந்தாளியாய் சென்று சிங்கள அரசுக்காக பாடுபடுபவர், இனப்படுகொலைக்கு ஆதரவு தந்தவர் நம்ம சூனா சாமி. தமிழ் ஈழத்தையும் தமிழர்களையும் நஞ்சென வெறுப்பவர்.

இத்தனை காலம் இல்லாமல் தற்போது திடீரென்று அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது எதோ கமெண்ட் அடித்து சிரிக்க வேண்டிய வி­சயமல்ல நண்பர்களே.. இதன் பின்னுள்ள தமிழர் எதிர்ப்பு அரசியலை நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

பல துறைகளிலும் ஊழல் ஊழல் என்று ஆட்சியை இழக்கப் போகும் காங்கிரஸ் கட்சி சிங்கள அரசுக்கு எடுபிடியாகவே இதுவரை இருந்து வந்துள்ளது. அது ஒருபோதும் அவர்களுக்கு எதிராக ஒரு சிறிய ஆணியைக் கூட பிடுங்காது என்பது அவர்களுக்கு தெரியும். அதே நேரத்தில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலி ஒரு வேளை பாரதிய ஜனதா ஆட்சி அமைத்து விட்டால் அதன் அரசியல் வியூகங்கள் தப்பித் தவறிக்கூட தங்களுக்கு எதிராக திரும்பி விடக்கூடாது என்றுதான் ஏற்கனவே சுஷ்மா சுவராஜூக்கு சிங்கள அரசு சோப்பு போட்டு நமக்கு எதிராக நஞ்சு கக்க வைத்தது. தற்போது தனது நம்பகமான எடுபிடியான சூனா சாமியை அக்கட்சியில் சேர்த்ததன் மூலம் அடுத்த ஆட்சியிலும் தனக்கு அடிப்பொடியாக இந்திய அரசை ஆட்டிப் படைக்க முடியும் என்று சிங்கள வெறி அரசு முடிவெடுத்துள்ளது என நான் நினைக்கிறேன்.

எனவே தமிழ் உணர்வாளர்கள், இயக்கங்கள், கட்சிகள் அனைத்தும் ஒரு குரலில் ஈழத்தமிழர் சிக்கலில் பாரதிய ஜனதா கட்சி தன் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைக்க வேண்டும். வலியுறுத்த வேண்டும். அக்கட்சியுடன் கூட்டணி வைக்க நினைக்கும் தமிழ் நாட்டு கட்சிகளிடமும் இந்த நிலைப்பாட்டை முன் நிபந்தனையாக வைக்க வலியுறுத்த வேண்டும்.

வழக்கம் போல தலைக்கு மேல் போன பிறகு பெயருக்கு போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தி பயனில்லை.

விழிக்குமா தமிழகம்?

 

 

இம்முறை தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறப்போவதில்லை. 
 
இதனால் 2014 தேர்தலுக்குப் பின் அடுத்த தேர்தல் வரும் வரை இந்திய அரசியலில் பெரும் குத்து வெட்டுகளுக்குப் பஞ்சம் இராது. 
 
 
இந்த குத்து வெட்டுகளை வைத்தே சு.சா. சவாரி விடுவான்.

சூனாவால் எதாவது புடுங்க முடியுமாயின் ஜனதா கட்சியை வைத்தே செய்திருப்பார்.  அவர் அமெரிக்கா போய் அங்கு  எதுவும் வெட்டிப்பிரட்ட இல்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

3 ஆம் கட்சிகள் அல்லது கட்சிகளின் கூட்டு ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

பாரதீய ஜனதாவில் அத்வானி அவர்களுக்குப் பின்னர் ஆழுமையுள்ள தலைமை இல்லை
சுப்ரமணிய சுவாமி அவர்களுக்கு அதன் தலைமை மீது ஒரு நப்பாசை.

வரும் தேர்தலில் இவரின் தரகு மூலம் ஒரு பெரிய கூட்டமைப்பு உருவாகுவதற்கான சாத்தியம் உண்டு
மூன்றாவது அணி சரியான வழியில் செயற்படாவிட்டால் மீண்டும் சோனியாவும் பா ஜ வும் தான் இந்திய அரசியலைத் தீர்மானிப்பார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.