Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள், கண்களா...?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள், கண்களா...? :rolleyes:

 

 

24vmty8.jpg

 

 

 

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த மனைவிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை மனதார ஆசிர்வாதம் செய்தனர். மனைவியரை அமர வைத்து கணவர்கள் மரியாதை செய்தது பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. பெரும் திரளான தம்பதியர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள "மனவளக்கலை மன்றம்" வேதாத்திரி மகரிஷி அறிவுத் திருக்கோயிலில், மனைவி நல தின வேள்வி நடந்தது. இதில் ஏராளமான தம்பதியர் கலந்து கொண்டனர்.

 

"வாழ்வில் இன்ப துன்பங்கள், ஏற்றம் இறக்கங்கள், நன்மை தீமைகளை மனதார ஏற்று இல்லறத்தில் இணைந்த தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்" என தம்பதிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்கள், தங்கள் மனைவிகளை மனதார ஆசிர்வதித்தனர். மலர்கள் கொடுத்து மகிழ்ந்தனர். அதே போல மனைவிகளும் கணவன்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகள் கொடுத்தனர்.

 

இந்த நிகழ்ச்சிக்கு அறிவுத் திருக்கோயில் டிரஸ்டி காசி விஸ்வநாதராஜா தலைமை வகித்தார். பேராசிரியை ராஜம் முன்னிலை வகித்தார். நகராட்சி முன்னாள் தலைவர் மகாலட்சுமி சங்கரராஜா, பெண்ணின் பெருமை குறித்து கணேசன் பேசினார். அறிவுத் திருக்கோயில் மவுனகுரு தர்மலிங்கம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.

 

 

நன்றி: http://tamil.oneindia.in/news/2013/09/03/tamilnadu-husbands-honour-wives-rajapalayam-function-182635.html

 

 

பரவாயில்லையே, நாட்டில் நல்ல விடயங்களும் நடக்கின்றன. நாமும் வாழ்த்துவோம்,

 

vil-mariage.gif  "வாழ்க வளமுடன்!"

 

 

 "வாழ்க வளமுடன்!"

 

http://www.youtube.com/watch?v=7OEDKWr0bnc

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வயசானவங்களா இருக்காங்களே.. :unsure:  அதாவது மனைவியின் அருமை தெரியும்போது வயசாகிவிடும் போலுள்ளது.. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வயசானவங்களா இருக்காங்களே.. :unsure:  அதாவது மனைவியின் அருமை தெரியும்போது வயசாகிவிடும் போலுள்ளது.. :(:D

 

மனைவியின் தேவை  தெரியும்

வயசாகினால்  என்று வரணும் ராசா...... :(  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வயசானவங்களா இருக்காங்களே.. அதாவது மனைவியின் அருமை தெரியும்போது வயசாகிவிடும் போலுள்ளது..

 

திருமணமான புதிதில் கணவன் மனைவிக்கிடையே அன்னோன்யம், புரிந்துணர்வு வர பல தடைகள், சறுக்கல்கள் இருப்பது வழமை. இதில் அவர்கள் சார்ந்த வீட்டார்களின் பங்கு கணிசமாக இருக்கும். அவற்றை ஈடு கட்டவே குழந்தைகள் என்ற இரத்த பந்தம், அறுபடா இழை.

 

இவற்றையெல்லாம் தாண்டி, வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் ஒருவருகொருவர் உறுதுணையாயிருந்து வெற்றிகரமாய் கடக்கையிலேயே இருவரின் அருமையும் ஒருவருக்கொருவர் உணர முடிகிறது.  :icon_idea: 

 

இதற்கு சில வருடங்களாவது சகஜம் தானே? :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிவழங்கும் ஒவ்வோர் ஆத்துக்காரர் மனசையும் திறந்துபார்க்க ஆசை. :o  சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை. :D

  • கருத்துக்கள உறவுகள்

24vmty8.jpg

 

திருமணமான பெண்களை விட... திருமணமான ஆண்களுக்கு, ஏன்... விரைவில் தலை நரைக்கின்றது? :D  :icon_idea: 

 

 

 

 

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான பெண்களை விட... திருமணமான ஆண்களுக்கு, ஏன்... விரைவில் தலை நரைக்கின்றது? :D  :icon_idea: 

 

எப்படியெல்லாம் யோசிக்கிறங்களப்பா..!

முன்னேற கடின உழைப்பும்,  மன உளச்சலும் தான்...வேறொன்றுமில்லை..!! :)

  • கருத்துக்கள உறவுகள்

 

24vmty8.jpg

 

திருமணமான பெண்களை விட... திருமணமான ஆண்களுக்கு, ஏன்... விரைவில் தலை நரைக்கின்றது? :D  :icon_idea: 

 

 

மொட்டையையும் சேர்த்துக்கேளுங்கள்  சிறி.... :D  :D

எப்படியெல்லாம் யோசிக்கிறங்களப்பா..!

முன்னேற கடின உழைப்பும்,  மன உளச்சலும் தான்...வேறொன்றுமில்லை..!! :)

 

இவருடைய  பதில்  ஒரு பக்க  சார்பாகவே  தொடர்ந்து இருப்பதால் :lol:

நெடுக்கை  அழைக்கின்றோம் (ஏதோ நம்மால்  முடிந்தது  :D )

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறங்களப்பா..!

முன்னேற கடின உழைப்பும்,  மன உளச்சலும் தான்...வேறொன்றுமில்லை..!! :)

 

மொட்டையையும் சேர்த்துக்கேளுங்கள்  சிறி.... :D  :D

இவருடைய  பதில்  ஒரு பக்க  சார்பாகவே  தொடர்ந்து இருப்பதால் :lol:

நெடுக்கை  அழைக்கின்றோம் (ஏதோ நம்மால்  முடிந்தது  :D )

 

நீங்க சொல்லுறதைப் பார்த்தால்.... நெடுக்கு, சுண்டல், சுபேஸ் தம்பியளுக்கு....

தலையும் நரைக்காது, மயிரும் கொட்டுண்ணாது எண்ட மாதிரி இருக்கு. :D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொல்லுறதைப் பார்த்தால்.... நெடுக்கு, சுண்டல், சுபேஸ் தம்பியளுக்கு....

தலையும் நரைக்காது, மயிரும் கொட்டுண்ணாது எண்ட மாதிரி இருக்கு. :D  :lol:

 

இது வாழ்த்தா? இல்லை, சாபமா?

 

பாவம் பொடிப்ஸ்... சில நாள் தனிக்காட்டு ஒற்றை ராசாவாக, "காலம்" வரும்வரை இருந்துவிட்டு போகட்டுமே!  offreunerose.gif

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொல்லுறதைப் பார்த்தால்.... நெடுக்கு, சுண்டல், சுபேஸ் தம்பியளுக்கு....

தலையும் நரைக்காது, மயிரும் கொட்டுண்ணாது எண்ட மாதிரி இருக்கு. :D  :lol:

 

 

இயற்கைக்கு மாறான

எந்தவிதமான

சுய செய்கைகளும் 

விரைந்து முதுமையைத்தரவல்லது.

 

நான் சொல்லவில்லை

நிழலியானந்தா  சொன்னது...... :lol:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.