Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தளபதி பதுமன் விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான பதுமன் என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் வரதநாதன் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம்  ஆஜர்படுத்தியபோதே,  அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியாக இருந்த பதுமன் 2009 ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்திருந்தார்.

 

இந்நிலையில் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி நீதிமன்றம் இவரை விடுதலை செய்துள்ளது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=7130

புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தளபதி பதுமன் விடுதலை
18 செப்டம்பர் 2013
lg-share-en.gif
 

 

pathuman-300_CI.jpg

 

பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டு பதுமன் இன்று விடுதலையாகியுள்ளார். 

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.அமல் ரணராஜா இந்த விடுதலை உத்தரவை பிறப்பித்துள்ளார். 

பதுமன் 2002ம் ஆண்டு புலிகள் இயக்க திருகோமலை தலைவராக செயற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

கருணாவுடன் இணைந்து புலிகளுக்கு எதிராக செயற்பட்டதாகக் கூறி புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பதுமனை வவுனியாவிற்கு அழைத்து சிறை வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பதுமன் பொது மக்களுடன் சேர்ந்து அரச படைகளிடம் சரணடைந்துள்ளார். 

1979 இல 48 என்ற சட்டத்தின் கீழ் பதுமன் மீது பயங்கரவாத தடுப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. புலிகள் இயக்கத்தில் இருந்து இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி படைவீரர்களை கொன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.  இந்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பதுமன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த வழக்கில் பயங்காரவாத தடுப்புப் பிரிவினர் சார்பில் அரச சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96686/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
 
 
எனக்கு தனிப்பட்ட முறையில் பெரு மகிழ்ச்சி.பதுமனுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.
 
பதுமனையும் கெலி தத்தாவையும் கைது செய்து வைதிருந்தபோது நான் இதற்க்காகவே வன்னிக்கு ஒருசில தடவைகள் சென்றேன். இருவரும் கொல்லபடக்கூடாது என்கிறது எனது நிலைபாடாக இருந்தது. 
 
கருணாவின் பிரிவின்போது அடிமட்ட போராளிகளைச் சுட பிரபாகரனுக்கு மக்கள் ஆணை இல்லை என்ற வாசகங்கள் அடங்கிய என்னுடைய அறிக்கை உடனடியாகவே தற்ப்போது குளோபல் நியுஸ் நடத்தும் குருபரனால் சுரியன் எப் எம்மில் பலதடவை ஒலிபரப்பப்பட்டது. வீரகேசரியிலும் பிரசுரமானது. உடனேயே நான் வன்னி சென்றேன்.
 
அறிக்கையும் சமர்ப்பித்தேன். 
 
இறுதியில் கெலிதாத்தா உடனே சரண் அடைந்திருக்க வேன்டும் என்றார்கள். கெல்லி தத்தாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியவில்லை. 
இறுதி யுத்தத்தில் பதுமனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இப்பொழுது வந்த அவரது விடுதலைச் சேதி மகிழ்ச்சி தருகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி. ஏனைய போராளிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.


bathuman2.jpg 

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்பட்டு மகிழ்ச்சியை கொட்டாதேங்கோ. வெளில என்ன நோக்கங்களோடு விடப்படுகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கனும். சிறு குற்றங்கள் செய்தவர்கள்.. பன்னெடுங்காலமாக கொடூரச் சிறைகளில் உள்ள இந்த வேளையில்.. இவர்களின் விடுதலை என்பது சூட்சுமங்களைக் கொண்டிருக்கலாம்.

 

ஒரு முன்னாள் போராளி விடுதலை ஆனார் என்பது வரவேற்கப்பட வேண்டிய விடயம் தான். ஆனாலும்.. விடுதலையான பின் இவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தான் தொடர்ந்து மக்கள் விரோதமாக இருக்குமோ என்ற அச்சமும் இன்று கூடவே எழுகிறது. அதற்காக இவர்களின் விடுதலைக்கு தடையாக இருக்கனும் என்றில்லை. ஆனாலும்.. மக்கள் விழிப்போடு இருப்பது நல்லம்..! :icon_idea:


இவரின் விடுதலை என்பது தேசிய தலைமை மீது சகட்டு மேனிக்கு.. குற்றம் சாட்டி.. "பதுமனைப் போட்டிட்டாங்கள்.. ஆளின்ர கதையைக் காணேல்ல".. என்று இங்கு யாழிலும் புலம்பித் திரிந்தவர்களுக்கு சாட்டையடி ஆகியுள்ளது. :o:icon_idea:

கருணாவின் பிரிவின் பின்னர் பதுமன் விடுதலை புலிகள் அமைப்பில் இருத்து விலக்கபட்டு இருத்தார் ..........

நல்லது நடந்தா சரி .

பதுமனும் கருணாவின் ஆளோ :lol: இல்லை என்றால் ஆக்கிவிடுவோம்.... இல்லை என்றால் ராஜபக்ஷேவும் இருக்கிறான் :rolleyes:

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

பதுமனின் விடுதலை என்பது மகிழ்ச்சியான விடயம்தான்.ஆனால் சிறு சிறு குற்றங்களுக்காக பல வருடங்களாக பலர் விசாரணையின்றி தடுப்புக்காவலில் இருக்க புலிகளின் ஒரு கேணல்தர கட்டளைத்தளபதியை குற்றங்களுக்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்று சொல்லி தீடீரென விடுதலை செய்திருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.(இதுவரை அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத நிலையில்)

சில வேளை இவரும் பாரதி, காந்தி மாதிரி "மன்னிப்பு கடிதம்" எழுதி கொடுத்துவிட்டு வந்திருக்கலாம்..

என்னை பொருத்த மட்டில் அதுவே இத்தருணத்தில் சரியான முடிவு....

 

சிலபேருக்கு எரியும்.... (அவர்கள் வெளிநாடிலிருந்து போராடுவார்கள்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.