Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா பிரதமர் இனப்படுகொலை நாட்டுக்கு போக மாட்டேன் என்று பேட்டி கொடுத்த காணொளி .

Featured Replies

 

 

 

 

  • தொடங்கியவர்

ஒட்டாவா: மனித உரிமை மீறல் நடந்துள்ள இலங்கை நாட்டில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனடா பிரதமர் அறிவித்துள்ளார்.

 

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு அங்கு அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றன. உலக நாடுகள் பலவும் இந்த மாநாட்டில் பங்கேற்பதா வேண்டாமா என யோசித்து வருகின்றன. இந்தியா கண்டிப்பாகக் கலந்து கொள்ளக் கூடாது என பல கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

 

இந்த நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள், அதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறையும், சிறையில் அடைப்பதும் இன்றும் தொடர்கிறது. சிறுபான்மையினரான தமிழர்கள் மீது வன்முறை, காணாமல் போனதாகவும், நீதிக்கு அப்பாற்பட்டு கொலை செய்வதாகவும் வரும் புகார்கள் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்,' என அதிரடியாக அறிவித்துள்ளார்.

 

 

Read more at: http://tamil.oneindia.in/news/international/canada-boycotts-commonwealth-meet-sri-lanka-184936.html

  • தொடங்கியவர்

1379602_675682695783317_1754197816_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கனேடியத்தமிழரும்

உலகத்தமிழரும் அவருக்கு  எமது நன்றிகளையும் அதரவையும் தெரிவிக்கணும்

இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமர்வு நடாத்தப்படுவதற்கு கனடா கடும் ஆட்சேபம்

Canada%20prime_CI.jpg

 

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடாத்தப்படுவதற்கு கனடா அரசாங்கம் கடும் ஆட்சேபத்தை வெளியிட்டு வருகின்றது. அமர்வுகளில் கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பரே அல்லது வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்டோ பங்கேற்க மாட்டார்கள் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலளார் தீபக் ஓபராய் தலைமையிலான கீழ் மட்டக்குழுவொன்றே அமர்வுகளில் கனடாவை பிரதிநிதித்துவம் செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு வழங்கி வரும் நிதி உதவியை குறைப்பதற்கு கனடா திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமர்வுகள் நடத்தப்படுவதற்கான எதிரொலியாகவே இந்த நிதி உதவி குறைப்பு கருதப்படுகின்றது. எதிர்வரும் காலங்களில் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு வழங்கும் நிதி உதவிகளை கணிசமாக குறைப்பது குறித்து கனடா ஆராய்ந்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு நிதி உதவிகளை அதிகளவில் வழங்கும் நாடுகளின் வரிசையில் கனடா இரண்டாம் இடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆண்டு தோறும் கனடா 20 மில்லியன் கனேடிய டொலர்களை பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்காக வழங்கி வருகின்றது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என கனடா அறிவித்துள்ளது. கனடாவில் வரிச் செலுத்தும் மக்களின் பணமே இவ்வாறு உதவியாக வழங்கப்படுவதாகவும் அதனை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த விரும்புவதாகவும் கனடா அறிவித்துள்ளது.

இதேவேளை, அமர்வுகளில் பங்கேற்பது குறித்து தீர்மானிப்பது தனிப்பட்ட நாடுகளின் சுதந்திரம் என கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ரா வாகீஸ்வரா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாடும் அமர்வுகளில் பங்கேற்பது குறித்து தீர்மானிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னைய அமர்வுகளிலும் 100 வீதம் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்கேற்றதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றம் நியூசிலாந்து போன்ற நாடுகள் அமர்வுகளில் பங்கேற்பதாக உறுதி செய்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகளே கடந்துள்ளதாகவும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என இ ங்கை மீது குற்றம் சுமத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எமது கோணத்தில் நாம் மிகவும் ஜனநாயக அடிப்படையில் செயற்பட்டு வருகின்றோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்-நன்றி பிபிசீ

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97415/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,

எதோ ஐ. நாவில் கமலேஸ் சருமா ஆப்பிறுக்குவார், நம்பியார் அப்பம் தின்பார் என்று ஒருவர் முழங்கினார்.

இப்படி கனடா ஆப்பிறுக்கிவிட்டதே!

ஈழதமிழருக்கும் இப்ப பெரிய பெரிய இடத்தில் நண்பர்கள். :)

 

அந்த மக்களுக்கு நீதியும்

நிம்மதியான வாழ்வும் கிடைக்கணும்

தூரம் அதிகமில்லை

தொடர்ந்து பயணிப்போம்

தகவலுக்கு நன்றி  தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

இதனை மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய காங்கிரஸ்காரர்களுக்கும்.. பா ஜ க முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பி வையுங்கள். அப்ப தான் அவர்களுக்கு விளங்கும்.. உலகத்தை எனியும் தாங்கள் ஏமாற்ற முடியாதுன்னு. உலக மக்கள் இந்திய மக்கள் போல அல்ல என்ற உண்மையையும் அவர்கள் உணர்ந்து கொள்ள நேரம் வரும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதனை மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய காங்கிரஸ்காரர்களுக்கும்.. பா ஜ க முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பி வையுங்கள். அப்ப தான் அவர்களுக்கு விளங்கும்.. உலகத்தை எனியும் தாங்கள் ஏமாற்ற முடியாதுன்னு. உலக மக்கள் இந்திய மக்கள் போல அல்ல என்ற உண்மையையும் அவர்கள் உணர்ந்து கொள்ள நேரம் வரும். :icon_idea:

 

 

உண்மைதான்

தமிழர் பிரச்சினை உங்கட கொல்லைக்க இல்லையுங்கோ

சர்வதேச லெவலில் நிற்குது என்றதாகவது  தெரியட்டும்.......... :(

கார்பரின் கொன்சவேட்டிவ் கட்சி பதவிக்கு வந்து முதல் செய்த வேலை புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லி தடை செய்தது ,தொடர்ந்து உலக தமிழர் இயக்கத்தையும் தடை செய்தது ,பின்னர் இலங்கையில் அரசு -புலிகள் யுத்தத்தின் போது எவ்வளோ தமிழ் மக்கள் கனடாவில் பல நகரங்களில் ,ஒட்டாவில் ,வீதிகளில் இறங்கும் போது கூட பாராமுகமாக இருந்தது .

 

போர் முடிந்து புலிகள் அழிந்தபின்னர் இப்போ இலங்கை அரசை தமிழர்களுக்கு ஒரு தீர்வை கொடுக்கும் படியும் ,இலங்கையில் மனித உரிமை மீறல்களையும் சுட்டி காட்டுகின்றது .

இந்த இரண்டு  விடயங்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் கனேடிய அரசிற்கு .

  • கருத்துக்கள உறவுகள்

கார்பரின் கொன்சவேட்டிவ் கட்சி பதவிக்கு வந்து முதல் செய்த வேலை புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லி தடை செய்தது ,தொடர்ந்து உலக தமிழர் இயக்கத்தையும் தடை செய்தது ,பின்னர் இலங்கையில் அரசு -புலிகள் யுத்தத்தின் போது எவ்வளோ தமிழ் மக்கள் கனடாவில் பல நகரங்களில் ,ஒட்டாவில் ,வீதிகளில் இறங்கும் போது கூட பாராமுகமாக இருந்தது .

 

போர் முடிந்து புலிகள் அழிந்தபின்னர் இப்போ இலங்கை அரசை தமிழர்களுக்கு ஒரு தீர்வை கொடுக்கும் படியும் ,இலங்கையில் மனித உரிமை மீறல்களையும் சுட்டி காட்டுகின்றது .

இந்த இரண்டு  விடயங்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் கனேடிய அரசிற்கு .

 

எங்களுக்கு நன்மையாக தெரிவதற்கு நாங்கள்  நன்றி  சொல்கின்றோம்

நீங்கள் எதற்கு நன்மை சொல்லணுமோ அதைச்சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிப்பதிலும் கனடாவில் அவர்களின் செயல்ப்பாடை ஒழிப்பதிலும் முன் நின்றவர் இந்த கனடா பிரதமர் தான் சரியான இனத்துவேசம் பிடிச்ச இனவாதி இவர் மூன்றாம் உலக நாட்டிற்கு நான் எதுக்கு போகணும் எண்ட திமிர் தான் இவரின் புறக்கணிப்பிற்கு காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

வரிக்காசை மிச்சம் பண்ணுகிறார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

உவர் எப்படியாவது இருந்திட்டுப் போகட்டும். இப்ப இவர் வாயால வாறதை நமக்கு சாதகமாப் பாவிக்கிறது தான் புத்திசாலித்தனம்..!

 

மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது. அதுவா போடேக்க.. பொறுக்காமலும் இருக்கப்படாது. :):icon_idea:

harper_shirt.jpg.size.xxlarge.promo.jpg

CASUAL CLOTHES, TOUCH TALK.

இதுதான் இன்றைய டொரான்டோ  ஸ்டார் முன்பக்க செய்தி .

வாயல சொல்லி பிரயோசனம் இல்லாவிட்டால் செயலில் காட்டவேண்டும் என்பதுதான் கார்பரின் நிலையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிப்பதற்கான‌ காரணத்தை விளக்கியுள்ளது கனடா

இன்றைய தினம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை கனடா புறக்கணிக்க எடுத்த தீர்மானத்திற்கான காரணத்தை விளக்கியுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு இலங்கை மதிப்பளிக்கவில்லை எனவும் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பேண இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள ஸ்டீவன் ஹார்பர் இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேம்படும் என நம்பியபோது துரதிஸ்டவசமாக அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை எனவும் மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார். அதனால் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

http://www.puradsifm.com/news/eelam-news/canada/

  • கருத்துக்கள உறவுகள்

. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு இலங்கை மதிப்பளிக்கவில்லை எனவும் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பேண இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள ஸ்டீவன் ஹார்பர் இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேம்படும் என நம்பியபோது துரதிஸ்டவசமாக அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை எனவும் மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார். அதனால் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

 

நல்ல  செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

கார்பரின் கொன்சவேட்டிவ் கட்சி பதவிக்கு வந்து முதல் செய்த வேலை புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லி தடை செய்தது ,தொடர்ந்து உலக தமிழர் இயக்கத்தையும் தடை செய்தது ,பின்னர் இலங்கையில் அரசு -புலிகள் யுத்தத்தின் போது எவ்வளோ தமிழ் மக்கள் கனடாவில் பல நகரங்களில் ,ஒட்டாவில் ,வீதிகளில் இறங்கும் போது கூட பாராமுகமாக இருந்தது .

 

போர் முடிந்து புலிகள் அழிந்தபின்னர் இப்போ இலங்கை அரசை தமிழர்களுக்கு ஒரு தீர்வை கொடுக்கும் படியும் ,இலங்கையில் மனித உரிமை மீறல்களையும் சுட்டி காட்டுகின்றது .

இந்த இரண்டு  விடயங்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் கனேடிய அரசிற்கு .

 

மக்களை அழிக்கப்போகிறார்கள் என வீதிகளில்  இறங்கி தமிழ் மக்கள் போராடியும் பார்வையாளராக இருந்தது கனடா.பல ஆயிரம் மக்கள்  அழிவை நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். இப்போ தமி ழர்களின் வாக்குகளை பெற நாடகமாடுகிறது.ஏதோ எம்பக்கம் காற்று வீசும் போது தூற்றிக்கொள்ள வேண்டியது தான்.
 
எம்மவர்கள் தமது அகதி அந்தஸ்த்தை பெற புலிகளாலும் பிரச்சனை என எழுதிக்கொடுத்ததும் மிக முக்கிய காராணம் புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கியதற்கு.
 
இப்போ கூட்டமைப்பின் நாடகங்களை பார்க்கும் போது புலிகளின் தியாகங்கள் விலைமதிப்பற்றது என்பதை அனைவரும் புரிந்திருப்பார்கள்.  கூட்டமைப்பின் நாடகங்கள் வரும் நாட்களில் அரங்கேறும் என்பதை இப்போதே கூறி வைக்கிறேன்.அவர்கள் தானாக ஆடவில்லை.ஆட்டி வைக்கப்படுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.