Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய விடுதலைப் போராட்டத்தினை வலுப்படுத்த தேர்தலில் பங்கெடுங்கள்: பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரகுமார் பாவம். இவர் பாட்டுக்கு தேர்தலுக்கு அழைப்பு விடுத்துவிட்டார்.

 

காஸ்ட்ரோ கும்பல் இனி குழப்புவதற்கும் போட்டிக்கு ஆட்களை நிறுத்துகின்ற வேலையினை தொடங்கவுள்ளார்கள்.

 

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிரானவனாக நான் இல்லாவிட்டாலும் அவர்கள் தமது செயற்பாட்டினை மேலும் அதிகரிக்க வேண்டும். அவர்கள் அறிக்கைகளை வெளியிடுவதிலேயே அதிக நேரத்தினை செலவழிக்கின்றனர்.

 

இந்திய அரசின் உதவியினை நாடு கடந்த தமிழீழ அரசு பெறுவதற்கான எந்தவொரு முயற்சியினையும் இதுவரை மேற்கொண்டதாக தெரியவில்லை. இந்தியாவினை பகைத்துக்கொண்டு எதுவுமே தமிழர் தாயகப் பகுதியில் செய்ய முடியாது. இந்த உண்மையினை பலரும் ஏற்றேயாக வேண்டும்.

 

இங்கே நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக உரையாடுபவர்கள்- சங்கதி, பதிவு, தமிழ்நெட் போன்ற தளங்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டினையோ அல்லது உருத்திரகுமாரின் அறிக்கைகளையோ செய்திகளையோ ஏன் வெளியிடுவதில்லை என்பதனை அறியத்தர முடியுமா?

Edited by nirmalan

நான் திரு.உருத்திர குமாரன் அவர்களிடம் பணிவாக கேட்பது இது தான் இந்தத் தேர்தலை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் புறக்கணித்தால் தயவு செய்து இந்த அமைப்பை கலைத்துவிடுங்கள் என்பதேயாகும்.

டக்களஸ் பாணியில் ஐந்து பத்து வாக்குகளால் தெரிவான மக்கள் பிரதநிதி போட்டியின்றி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்று தயவு செய்து பம்மாத்து அரசியல் நடத்த வேண்டாம்.

சிவா அண்ணை... !

நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன்... நாடுகடந்த அரசின் செயற்பாடுகள் போதவில்லை... போதவில்லை என்பதுக்கு முன்னால் செய்யும் ஆக்களின் எண்ணிக்கையை விட செயற்படாமல் படம் காட்டும் வேலை அதிகம்... அதுவும் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு வந்து படம் காட்டுறது எண்டால் சொல்லி வேலை இல்லை...

செயற்படுகிறவர்களில் உறுப்பினர்கள் இளைஞர்களாகவும் அதை வைத்து படம் காட்டும் ஆக்கள் வயதானவர்களாகவும் இருக்கிறார்கள்... வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு வேறை வேலை இல்லை எண்டு வீட்டில் சும்மா இருக்காமல் அரசியலுக்கு வந்து செயற்படும் ஆக்களை பற்றி சொல்ல ஒண்டும் இல்லை... ஆனால் செயற்பாடுகளுக்கு தடையாக இருக்கிறார்கள் எண்டது உண்மைதான்...

நாடுகடந்த அரசு துடிப்பான இளைஞர்களை பொறுப்பான பதவிகளுக்கு தெரிவு செய்ய வேண்டும்... இல்லை எண்டா மக்கள் புறக்கணிப்பார்கள்...

மக்கள் புறக்கணித்தால் தன்னும் மாற்றம் வருகிறதா எண்டு பொறுத்து தான் பார்க்க வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைன்னு பெத்தா அது முதல்லை கால கைய ஆட்டனும் பின்னை தவழனும் அதுக்குபிறகுதான் நடக்கணும் ஓடணும் ஆடணும். எல்லாம் படிப்படியா தான் வரணும் அண்ணாச்சி. கொசு கிசுன்னு என்னென்னவோ சொல்லி அசத்திட்டிஙக சார். சுத்த காமடி பீசு.

  • கருத்துக்கள உறவுகள்

ந.க.த.அ. கல்லெறிய வேண்டும் என்பதற்காக நான் இதை எழுதவில்லை. அவர்கள் ஒரு சிலவற்றை கவனத்தில் எடுத்து அதனை பரிசீலிக்க வேண்டும் என்பதற்காகவே எழுதுகின்றேன்.

 

நகதஅ ஆரம்பித்த அதே காலப்பகுதியில் தான் மக்களவை (Eelam Council) இளைஞர்களால் தொடங்கப்பட்டது. 

ஓரே ஆண்டில் மூன்று விடயங்களிற்கு வாக்களிக்க நேர்ந்தது. வட்டுக்கோட்டை தீர்மானம், மக்களவை, நகதஅ.

 

இந்த மூன்றிலும் எனது பங்கு பாரபட்சமின்றி இருந்தது. இதில் எதிலும் நான் போட்டியிடவில்லை. அதற்கு வேறு பல காரணங்கள் இருந்தன.

 

நான் வசித்த இடத்தில் மக்களவைக்கு போட்டியிட ஆட்கள் இல்லாததால் எனது நண்பன் ஒருவனை கட்டாயப்படுத்தி நிற்க வைத்தேன். அவனும் வெற்றிபெற்றான். அவனுடன் சம்பிரதாயத்திற்காக சிலர் போட்டியிட்டிருந்தனர். 

 

அடுத்ததாக நகதஅ தேர்தல். இதற்கு என்னை போட்டியிடும் படி சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. அழைத்தவர்கள் இதுவரை எந்த போராட்டத்திலும் பங்குபற்றியவர்கள் இல்லை. அல்லது நான் அவர்களை கண்டதில்லை எனலாம். எதுவாயினும் என்னால் போட்டியிட முடியாத காரணத்தினை அவர்களிற்கு விளங்கபடுத்தினேன். 

 

எனது மாநிலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் பொறுப்பாளராக இருந்தவர் 2009 மே மாதத்திற்கு பின்னர் அந்த அமைப்பிலிருந்து விலகிவிட்டார். பின்னர் யாரை நிறுத்துவது? பணியாளர்கள் என்ற பலரும் முன்வரவில்லை. இறுதியாக எனது மாநிலத்தில் நேர்மையான பணியாளராக உள்ள ஒரு அப்பாவியை நிற்க வைத்தோம். அவர் அரை மனதுடனயே அதில் போட்டியிட்டார். அவரின் நேர்மைக்கும் தேசபற்றுக்கும் மக்கள் அவரிற்கே வாக்களித்தனர். அவரும் வெற்றிபெற்றார்.

 

இந்த தேர்தலை நடத்துவதற்கு கூட யாரும் முன்வராத நிலையில் மக்களவை நண்பர்களுடன் நடத்தி முடித்தோம். 

 

அதன் பின்னர் அந்த நகதஅ வேட்பாளரிற்கு கணணி எப்படி பாவிப்பது ஸ்கைப் எப்படி பாவிப்பது மின்னஞ்சல் எப்படி பார்ப்பது போன்ற சில அடிப்படை விடயங்களை நான் கற்றுக்கொடுத்தேன். 

ஓர் அளவு அவரும் தேர்ச்சி பெற்றுவிட்டார். 

 

பின்னர் அவர் பல கூட்டங்களிற்கு சென்று வந்தார். ஒரு தடவை பாரிசில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றதாக சொன்னார். அனுதாபம் தான் வந்தது. அவரிற்கு இருக்கும் கடன் பிரச்சனையில் இவ்வளவு தூர பயணத்திற்கான செலவுகளை எப்படி கவனித்தாரோ தெரியாது. 

 

அதன் பின்னர் அவரின் செயற்பாடுகள் குறைந்து விட்டது. நகதஅ உள் பிரச்சனைகள் காரணமாக அவர் மனமுடைந்து தன்னால் ஆனதை தனித்தே செய்தார். 

 

உண்மையில் உயர்மட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. யாரும் அறியத்தரவும் இல்லை என்பதே உண்மை. பத்தோடு பதினொன்றாக அவரும் இருந்துவிட்டு போனார். அவ்வளவு தான். 

 

அதன் பின்னர் அவரை மீண்டும் ஒரு முறை சந்திக்கும் பொழுது தமிழீழ அடையாள அட்டை வாங்கும்படி கேட்டிருந்தார். உண்மையில் கவலையாக தான் இருந்தது. முன்னொரு காலத்தில் நிகழ்வுகளில் இளையவர்களை அதிஷ்ரலாபச்சீட்டு விற்க பயன்படுத்துவார்கள். அதே போல் இன்று இவரின் நிலமையும் ஆகிவிட்டதே. இப்படியான வேலைகளிற்கு மட்டும் அவர்களை பாவிக்கிறார்களே என்ற ஆதங்கம் இருந்தது. 

 

தற்பொழுது மீண்டும் தேர்தல் திகதி அறிவித்த பின்னர் அவரை சில மாதங்களிற்கு முன்னர் சந்தித்தேன். இந்த முறை என்ன மாதிரி என்று கேட்டேன். அவரும் சிரித்துக்கொண்டே இனி தன்னால் முடியாது என்றார். கேபி நகதஅ தான் தொடங்கியது என்று அறிவித்த பின்னர் தான் அதில் இருக்கவிரும்பவில்லை என்றார். கேபி யின் இந்த கருத்துக்கு நகதஅ பதில் அறிக்கை வெளியிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் அறியத்தந்திருக்க வேண்டும். ஒரு அமைப்பை வேறொருவர் சொந்தம் கொண்டாடுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அப்படி மௌனமாக இருந்தால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வது போல் ஆகும். 

 

இப்பொழுது சுவிசில் உள்ள அந்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. யார் முன்னின்று செய்வார்கள் என தெரியவில்லை. உண்மையில் மக்கள் நகதஅ இடமிருந்து விலகிவிட்டனர். அதற்கு அவர்கள் மக்கள் முன் வராதது தான் காரணம். ஓட்டு கேட்பதற்கு மட்டும் மக்களிடம் வருவதை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? இது எனது தொகுதியை வைத்து மட்டுமே நான் எழுதுகின்றேன்.

 

நகதஅ எதிர்காலங்களில் ஒரு நாட்டிற்கு ஒரு பிரதிநிதி எனற அடிப்படையில் தேர்ந்தெடுப்பது பற்றியும் ஆராய்தல் வேண்டும். தகுதியானவர்களையும் திறமையானவர்களையும் இதன் மூலம் தேர்ந்தெடுக்க முடியும். போட்டியே இல்லாமல் ஒருவரை தேர்தெடுப்பதில் என்ன உள்ளது? இது கூடுதலாக எனது தொகுதியில் இந்த முறை நடைபெறலாம். அல்லது வளக்கம் போல் சம்பிரதாயத்திற்காக ஒருவர் எதிர்த்துப்போட்டியிடலாம. 

 

இன்னொன்றையும் நகதஅ கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஒரு போட்டியாளர் வேறொரு அமைப்பின் தேர்தலில் போட்டியிட்டு தெரிவாகியிருந்தால் தயவுசெய்து அவரை தவிர்த்துவிடவும. சென்ற முறை இது நடைபெற்றது. மக்களை மற்றும் நகதஅ இரண்டிலும் ஒரே நபர்கள் பலர் இருந்தனர். இதில் பலரும் இரண்டு அமைப்பிலும் என்ன நடக்கிறது என்று விடுப்பு பார்க்கவே வந்தனர். அல்லது ஒரு அமைப்பிற்காக உளவு பார்கும் வேலையை செய்தனர். இது இரண்டு அமைப்பிற்குமே நல்லதல்ல. 

இரு அமைப்பிலும் ஒருவரால் வேலை செய்ய முடியாது. அதற்கான நேரம் வெளிநாட்டு சூழலில் இல்லை எனவே நான் நினைக்கின்றேன்.

 

பின் நின்று நீங்கள் வேறு நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளையும் வேலைகளையும் முன்னெடுக்கிறீர்களா இல்லையா என தெரியவில்லை. எடுப்பீர்கள் என நம்புகின்றேன். 

அத்துடன் மட்டும் நிறுத்திவிடாதீர்கள். 

சுவிஸ் நாட்டை பொறுத்த வரையில் தமிழ் மக்களுடனான உங்களின் கருத்துப்பரிமாற்றம் வெறும் அறிக்கைகள் மூலமாகவே நடைபெறுகின்றது. இது மக்களைவிட்டு நீங்கள் விலகிசெல்வதை காட்டுகின்றது. தயவு செய்து தமிழ் மக்களிற்குள் இறங்கி வேலை செய்யவும். தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை நாடி வருவதை தவிர்க்கவும். 

 

வயதினை அடிப்படையாக கொண்டோ அல்லது ஒருவரின் புகழை அடிப்படையாக கொண்டோ அமைச்சர்களை தீர்மானிக்காதீர்கள். அவர்களின் ஈடுபாடை வைத்து தீர்மானிக்கவும். 

 

நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு அடையாளமாக இருந்தாலே போதும். அவர்கள் ஒன்றும் மக்களுக்கு செய்யாமல் இருந்தால் கூடப் பறுவாயில்லை. தமிழீழக் கனவை.. நியாயத்தை அழிக்கனுன்னு எதிரி மட்டுமல்ல.. எம்மவர்களிலும் ஒரு பகுதியினர் இந்திய நலன் சார்ந்து கங்கணம் கட்டிக்கொண்டுள்ள நிலையில்... சர்வதேச அளவில்.. நாடு கடந்த தமிழீழ அரசு மட்டுமே தமிழீழம் என்ற அந்த மக்கள் இலக்கின் அடையாளமாக விளங்குகிறது. மேலும் ஓரளவு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட அமைப்பாகவும்.. சர்வதேச எல்லைகளுக்குள் இயங்கக் கூடிய அமைப்பாகவும் உள்ளது.

 

அதனிடம் அளவுக்கு மிஞ்சிய அதிகாரங்களையும்... எதிர்பார்ப்புக்களையும் வளர்க்காமல்.. அது ஒரு நாடு கடந்த அரசுக்குரிய வழிகாட்டல் பண்போடு வளரவும்.. உருப்பெறவும்.. வெற்றி பெறவும் தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

 

சரி.. தவறுகளைச் சுட்டிக்காட்டலாம். அது ஜனநாயகப் பண்பு. அதைவிடுத்து.. இப்படியான ஒரு அமைப்பை கலை.. கவிழ் என்று சொல்வது எதுவுமே இன்றைய சூழ்நிலையில் முற்றிலும் புத்திசாலித்தனமற்ற ஒரு நகர்வு..!

 

மக்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல்.. நாடு கடந்த தமிழீழ அரசினை ஜனநாயக மயப்படுத்தி.. பலப்படுத்துவதன் மூலம்.. அதன் எதிர்கால நடவடிக்கைக்களுக்கும்.. அடையப்படும் இலக்குகளுக்கு உறுதியான பங்களிப்பை வழங்க முடியும்..! நிச்சயம் புலம்பெயர் மக்கள் இதனைச் செய்வார்கள் என்று நம்பலாம்.

 

கடந்த முறை தேர்தலில்.. சில... லோக்கல் கவுன்சிலர்கள் பெற்ற வாக்குகளை விட கூடிய வாக்குகளை நாடுகடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதிகள் பெற்றிருந்தனர். இது மக்கள் இந்த அமைப்பின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு அடையாளமாகும். அதனை சில சீரழிப்புவாதிகள் தங்களின் சுய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்பதற்காக சீரழிக்க நினைக்கிறார்கள். அவர்களின் விமர்சனங்களை நாசகார நோக்கங்களை மக்கள் இலக்கற்ற தூர நோக்கற்ற கருத்துக்களை பெரிதும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றில்லை..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் 

நாடுகடந்த அரசை 

அதன் தொடக்கத்திலிருந்து ஆதரித்து வருபவன்

அதன் மூலம் உலகம் எம்மிடம் தடுத்துவிட்ட விடயங்களை அடைய முடியும் என நம்புபவன்

அந்தவகையில் தான் அவர்கள் மீதான என கரிசனையும்

விமர்சனமும் இருக்கும்.

 

அந்தவகையில் சிவா சின்னப்பொடியண்ணா  மற்றும்  தயாவின்  கருத்துக்களுடன்  உடன்படுகின்றேன்.

அதேநேரம் அவர்களது நடவடிக்கைகளுக்கு பல தரப்பாலும்  

போடப்பட்ட முட்டுக்கட்டைகளும்  நம்பிக்கையீனங்களும் ஏராளம்.

அதை நாமே செய்தோம் என்பதனையும்  நாம் மறந்துவிடக்கூடாது.

 

பல தரப்புடனும் தொடர்பிலுள்ளதாலும்

சில பேச்சுவார்த்தைகளில் நடுநிலை வகித்து வருவதாலும்

இந்தமுறை தேர்தல்................??? :(  :(  :(

 

மீண்டும் இம்முறை எமது தமிழீழ தேசப் பிரநிதிகளை சர்வதேச அரங்கில் அடையாளப்படுத்தும் நோக்கில்..தேர்வு செய்யும் இந்தத் தேர்தலில் மக்கள் பெருமளவில் வாக்களிக்க வேண்டும். :icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு அடையாளமாக இருந்தாலே போதும். அவர்கள் ஒன்றும் மக்களுக்கு செய்யாமல் இருந்தால் கூடப் பறுவாயில்லை. தமிழீழக் கனவை.. நியாயத்தை அழிக்கனுன்னு எதிரி மட்டுமல்ல.. எம்மவர்களிலும் ஒரு பகுதியினர் இந்திய நலன் சார்ந்து கங்கணம் கட்டிக்கொண்டுள்ள நிலையில்... சர்வதேச அளவில்.. நாடு கடந்த தமிழீழ அரசு மட்டுமே தமிழீழம் என்ற அந்த மக்கள் இலக்கின் அடையாளமாக விளங்குகிறது. மேலும் ஓரளவு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட அமைப்பாகவும்.. சர்வதேச எல்லைகளுக்குள் இயங்கக் கூடிய அமைப்பாகவும் உள்ளது.

 

அதனிடம் அளவுக்கு மிஞ்சிய அதிகாரங்களையும்... எதிர்பார்ப்புக்களையும் வளர்க்காமல்.. அது ஒரு நாடு கடந்த அரசுக்குரிய வழிகாட்டல் பண்போடு வளரவும்.. உருப்பெறவும்.. வெற்றி பெறவும் தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

 

சரி.. தவறுகளைச் சுட்டிக்காட்டலாம். அது ஜனநாயகப் பண்பு. அதைவிடுத்து.. இப்படியான ஒரு அமைப்பை கலை.. கவிழ் என்று சொல்வது எதுவுமே இன்றைய சூழ்நிலையில் முற்றிலும் புத்திசாலித்தனமற்ற ஒரு நகர்வு..!

 

மக்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல்.. நாடு கடந்த தமிழீழ அரசினை ஜனநாயக மயப்படுத்தி.. பலப்படுத்துவதன் மூலம்.. அதன் எதிர்கால நடவடிக்கைக்களுக்கும்.. அடையப்படும் இலக்குகளுக்கு உறுதியான பங்களிப்பை வழங்க முடியும்..! நிச்சயம் புலம்பெயர் மக்கள் இதனைச் செய்வார்கள் என்று நம்பலாம்.

 

கடந்த முறை தேர்தலில்.. சில... லோக்கல் கவுன்சிலர்கள் பெற்ற வாக்குகளை விட கூடிய வாக்குகளை நாடுகடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதிகள் பெற்றிருந்தனர். இது மக்கள் இந்த அமைப்பின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு அடையாளமாகும். அதனை சில சீரழிப்புவாதிகள் தங்களின் சுய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்பதற்காக சீரழிக்க நினைக்கிறார்கள். அவர்களின் விமர்சனங்களை நாசகார நோக்கங்களை மக்கள் இலக்கற்ற தூர நோக்கற்ற கருத்துக்களை பெரிதும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றில்லை..! :icon_idea::)

 

 

வணக்கம் நெடுக்கு..

தொடர்ந்து எழுதுங்கள்

எனக்கு நேரம் இல்லாத  போதெல்லாம் உங்களது எழுத்துக்கள் நம்பிக்கை தருவதாக

எழுதவேண்டியவற்றை எழுதுவதாக இருக்கின்றன.

 

நாடு கடந்த அரசின் ஆட்பற்றாக்குறை  என்பது மிகவும் பாராதூரமானது.

 

நான் எப்பொழுதுமே செயலுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பவன்

அந்தவகையில்

போன வெள்ளிக்கிழமை

அச்சடிக்க பணப்பற்றாக்குறை  காரணமாக 

என்னிடம்  2 000 நோட்டீசுகள்  அடித்து  உதவமுடியுமா எனனநாடுகடந்த அரசால்  கேட்கப்பட்டது. 

எப்பொழுது வேண்டும் என்று கேட்டதற்கு சனி  தந்தால் நல்லது.

லா சப்பலில் சனியன்று  கொடுக்கத்தொடங்கப்போகின்றோம் என்றார்கள்.

வெள்ளி இரவே முடித்துவிட்டு

தொலைபேசியில் சொல்லிவிட்டேன்

இன்னும் வந்து எடுக்கவில்லை.

லா சப்பலில் கொண்டு வந்து தரவா எனவும்கேட்டேன். இல்லை நேரமிருக்கும்போது பக்கத்தில் தானே வந்து எடுக்கின்றோம் என்றனர்.

அந்தளவுக்கு நேரமோ ஆட்களோ இல்லை......... :(

அவர்கள் இன்னும் வெளியிடாததால்

இங்கு பிரசுரிக்க விரும்பவில்லை

வைரமாளிகை இப்பவும் சவுண்டு கொடுக்கின்றார் போல .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்கு..

தொடர்ந்து எழுதுங்கள்

எனக்கு நேரம் இல்லாத  போதெல்லாம் உங்களது எழுத்துக்கள் நம்பிக்கை தருவதாக

எழுதவேண்டியவற்றை எழுதுவதாக இருக்கின்றன.

 

நாடு கடந்த அரசின் ஆட்பற்றாக்குறை  என்பது மிகவும் பாராதூரமானது.

 

நான் எப்பொழுதுமே செயலுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பவன்

அந்தவகையில்

போன வெள்ளிக்கிழமை

அச்சடிக்க பணப்பற்றாக்குறை  காரணமாக 

என்னிடம்  2 000 நோட்டீசுகள்  அடித்து  உதவமுடியுமா எனனநாடுகடந்த அரசால்  கேட்கப்பட்டது. 

எப்பொழுது வேண்டும் என்று கேட்டதற்கு சனி  தந்தால் நல்லது.

லா சப்பலில் சனியன்று  கொடுக்கத்தொடங்கப்போகின்றோம் என்றார்கள்.

வெள்ளி இரவே முடித்துவிட்டு

தொலைபேசியில் சொல்லிவிட்டேன்

இன்னும் வந்து எடுக்கவில்லை.

லா சப்பலில் கொண்டு வந்து தரவா எனவும்கேட்டேன். இல்லை நேரமிருக்கும்போது பக்கத்தில் தானே வந்து எடுக்கின்றோம் என்றனர்.

அந்தளவுக்கு நேரமோ ஆட்களோ இல்லை......... :(

அவர்கள் இன்னும் வெளியிடாததால்

இங்கு பிரசுரிக்க விரும்பவில்லை

 

 

யாழ் உடனுக்குடன் கவனிக்கப்படுகிறது

பலரும் வாசிக்கின்றார்கள்  என்பதற்கு நான் எழுதிய இச்செய்தியே சாட்சியாகிறது.

இந்த செய்தி  வாசிக்கப்பட்டு

அமெரிக்காவிலிருந்து

இங்குள்ளவர்களுக்கு   தகவல் வந்து

தற்பொழுது தொடர்பு கொண்டார் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உடனுக்குடன் கவனிக்கப்படுகிறது

பலரும் வாசிக்கின்றார்கள்  என்பதற்கு நான் எழுதிய இச்செய்தியே சாட்சியாகிறது.

இந்த செய்தி  வாசிக்கப்பட்டு

அமெரிக்காவிலிருந்து

இங்குள்ளவர்களுக்கு   தகவல் வந்து

தற்பொழுது தொடர்பு கொண்டார் :icon_idea:

 

நன்றி விடயத்தை சுட்டிக்காட்டிய உங்களுக்கும்.. அதனை உடனடியாக கவனத்தில் எடுத்த நாடு கடந்த தமிழீழ அரசு சார் சொந்தங்களுக்கும்..! :icon_idea:

 

யாழ் மூலம்.. இப்படி எவ்வளவோ ஆரோக்கியமான முறையில் விடயங்களை தீர்த்துக் கொள்ள வழி இருக்க.. சில பேர்.. யாழில்.. தவறான அரசியல் சித்தாந்தங்களை.. சமூகச் சித்தாந்தங்களை விதைக்கவும்.. அதனை ஒட்டுக்குழு.. காட்டிக்கொடுப்பு.. சரணாகதி.. அரசியலை நடத்தவும்.. நியாயப்படுத்தவும்.. பாவிப்பது கவலைக்குரியது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.