Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவின் வாசனை உன்னால் தானடா உணர்வில் இன்னும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறவின் வாசனை உன்னால் தானடா உணர்வில் இன்னும்

 
waiting.jpg

 
மாலைநேரத்து வெயிலில்

காய்ந்து வழியும் இலுப்படி நிழல்

உனது அமைதியின் இருப்பிடம்

அங்கே தான் நீ

அதிக நேரத்தைச் செலவிடுவாய்

அங்கே தான் நாங்களிருவரும்

அறிமுகமாகினோம்.

சோளகம் உருவிப்போகும்

இலுப்பம் இலைகளின் உதிர்வில்

வசந்தத்தின் வரவைப் புதுப்பித்துக்

கதைகள் சொல்வாய்

உதிர்ந்து காயும்

இலுப்பம் இலைகளின் மறைவிலிருந்து

துளிர்க்கும் குருத்துகளின்

உயிர்ப்பைக் காட்டித்

தைரியம் தந்தாய்

தலைநிமிரச் செய்தாய்.

விடியலைக் காணவிடாத

சமூகச்சாவியை

உடைத்துவரும் வீரத்தையூட்டினாய்

விழியுடைந்துருகிக்

கன்னம் தொடும்

நீர் துடைக்கும்

தோழமை விரலாய்

வெற்றியைக் காட்டினாய்....!

அந்தக் குழந்தைக் காலத்தில்

என் முன்னோடி நீயாய்

நடமாடும் கடவுளாய்

அண்ணனில்லையென்ற குறையை

அன்பைக் கொட்டி

வெற்றிடம் நிரப்பிய

வேங்கையும் நீயானாய்.

சின்ன வயது நினைவுகளில்

உனது குழந்தையாய்

உனது கால்களைச்

சுற்றியலைந்த நாட்களெல்லாம்

இன்றும் தொடர்வது போல....!

என் குழந்தைகளில்

நீயும் ஒருவனாய்

நீளும் கரையெங்கும்

நடந்து வருகிறாய்....!

போர்ப்புலியின் வீரத்தை

போராடும் வீரியத்தை

நெஞ்சில் விதைத்த அருச்சுனனாய்

நினைவுகளில் அழியாத

கதை சொல்லியாய்

நீ சொன்ன வீரரின்

கதைகள் கேட்ட காலங்கள்

கனத்துக் கிடக்கிறது

கவிதைகளாக கதைகளாக உனது

போராட்ட கள அனுபவமாக....!

முதுகில் ஊஞ்சலிட்டுத்

தோழில் சுமந்த தோழன்

கைவிரல் பற்றிக் காலம் உரைத்துக்

காவலனாய் நீ கண்ணாயிருந்தாய்

அண்ணாவென்றொரு உயிரின் பெறுமதி

உன்னால் தானடா

உணர்வில் இன்னும்

உறவின் வாசனையை

நேசிக்க வைத்தாய்.

கனவுகளால் பூத்த இரவொன்றில் - நீ

களமுனையில் சாவடைந்து போனாய்

உயிரிதழ் வலிக்க

உனைத் தேடிய போது

அதிகாலையாய் வந்து சேர்ந்தாய்

அழியாத வரம்பெற்ற

ஆண்டவனாய் தானே

கடைசிப் பிரிவை பிறப்பித்த

மதியப் பொழுதில்

கைவிரல் பிடித்துச்

சத்தியம் செய்தாய்....!

பின் ஏனடா எனைப் பிரிந்து....?

வெறுமை தின்ற

இலுப்ப நிழல் வேரிலிருந்து

உனது தடங்களை

எதிர்பார்த்த காலங்கள்

திரும்பாத உன்னைப் போல

இறந்த காலமாக....!

உன் நினைவோடலையும்

உயிரின் குரல்

உனக்கு மட்டுமே கேட்கும்

எனக்கு மட்டுமேயான துயராய்....

இப்போதும் உனது

காலத்து நினைவுகளை

மீட்டுக் கொண்டேயிருக்கிறேன்.

 2003 மேமாதம். முள்ளியவளை துயிலுமில்லம் போய் வந்திருந்தேன். அந்தநாளின் இரவு தூக்கம் அறுந்து விழித்திருந்த விடியற்காலை எழுதப்பட்டது. )

 

  • கருத்துக்கள உறவுகள்

போர்ப்புலியின் வீரத்தை

போராடும் வீரியத்தை

நெஞ்சில் விதைத்த அருச்சுனனாய்

நினைவுகளில் அழியாத

கதை சொல்லியாய்

நீ சொன்ன வீரரின்

கதைகள் கேட்ட காலங்கள்

கனத்துக் கிடக்கிறது

கவிதைகளாக கதைகளாக உனது

போராட்ட கள அனுபவமாக....!

 

போர்ப்புலியின் வீரத்தை

போராடும் வீரியத்தை

நெஞ்சில் விதைத்த அருச்சுனனாய்..

 

சாந்தி, உங்களுக்குள் புதைத்திருக்கும், 'கவிதாயினி' தனது சிந்தனைகளை, வெளிப்படுத்தத் தேடியெடுக்கும், உவமானங்கள் மிகவும் ஆழமானவை!

 

சுபத்திரையின் வயிற்றில் சிசுவாக இருந்த ' அபிமன்யு' வை, உங்கள் கவிதை கண் முன் கொண்டுவந்து விட்டது!

 

மிகவும் அழகிய, அதே வேளை, இழப்புக்களை, ஏக்கங்களை அழகாக வெளிபடுத்துகின்றது, உங்கள் கவிதை!

 

'விலைவாசியோடு' எல்லாமே ஏறிக்கொண்டு போகுது!

 

'யாழ்களத்தின்' பச்சைப்புள்ளிகளைத் தவிர! பிறகு வந்து போடுகின்றேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவுகளால் பூத்த இரவொன்றில் - நீ
களமுனையில் சாவடைந்து போனாய்
உயிரிதழ் வலிக்க
உனைத் தேடிய போது
அதிகாலையாய் வந்து சேர்ந்தாய்
அழியாத வரம்பெற்ற
ஆண்டவனாய் தானே
கடைசிப் பிரிவை பிறப்பித்த
மதியப் பொழுதில்
கைவிரல் பிடித்துச்
சத்தியம் செய்தாய்....!
<<<<<<<<<<<<<<<<<<<<

 

 

’சாவிற்கே ‘சாவைக்காட்டிய நம் வீரர்களினால் தான் ‘தமிழ்’ இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. மீளாதா அந்தக்காலங்கள் என்று உங்களைப்போன்றே நானும் நினைத்துப்பார்க்காத நாளில்லை.  ‘களமாடிய வீர்ர்களின் இலட்சியக் கனவுகள்’ எப்போது நனவாகும்? என்ற கேள்வி எப்போதும் என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கும்.

 

 

தன்னலம் பாராமல் மண்ணின் மீட்புக்காக போராடிய எங்கள் வீரர்களின் ‘விடுதலைக்கனவு! ..........................விரைவில் நிறைவேற வேண்டும்’ என்ற வேண்டுதலைத்தவிர வேறொன்றும் சொல்லத்தோன்றவில்லை.

 

 

உங்கள் வரிகள் ஆழமாய் மனதை உழுது செல்கின்றன!.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர்ப்புலியின் வீரத்தை

போராடும் வீரியத்தை

நெஞ்சில் விதைத்த அருச்சுனனாய்..

 

சாந்தி, உங்களுக்குள் புதைத்திருக்கும், 'கவிதாயினி' தனது சிந்தனைகளை, வெளிப்படுத்தத் தேடியெடுக்கும், உவமானங்கள் மிகவும் ஆழமானவை!

 

சுபத்திரையின் வயிற்றில் சிசுவாக இருந்த ' அபிமன்யு' வை, உங்கள் கவிதை கண் முன் கொண்டுவந்து விட்டது!

 

மிகவும் அழகிய, அதே வேளை, இழப்புக்களை, ஏக்கங்களை அழகாக வெளிபடுத்துகின்றது, உங்கள் கவிதை!

 

'விலைவாசியோடு' எல்லாமே ஏறிக்கொண்டு போகுது!

 

'யாழ்களத்தின்' பச்சைப்புள்ளிகளைத் தவிர! பிறகு வந்து போடுகின்றேன்!

கருத்துக்கும் பச்சைப்புள்ளிக்கும் நன்றிகள் புங்கையூரான்.

காலத்துக்கும் மாறாத துயரத்தைத் தந்து போனவர்களின் நினைவுகள் காலங்களைக் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தந்த பலம் அவர்கள் தந்த ஆழுமை அதுவே இன்றுவரையும் எங்களை வாழ வைக்கும் வல்லமை. அவர்கள் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு எழுதிவிட்டுச் செல்வோம்.

’சாவிற்கே ‘சாவைக்காட்டிய நம் வீரர்களினால் தான் ‘தமிழ்’ இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. மீளாதா அந்தக்காலங்கள் என்று உங்களைப்போன்றே நானும் நினைத்துப்பார்க்காத நாளில்லை.  ‘களமாடிய வீர்ர்களின் இலட்சியக் கனவுகள்’ எப்போது நனவாகும்? என்ற கேள்வி எப்போதும் என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கும்.

 

 

தன்னலம் பாராமல் மண்ணின் மீட்புக்காக போராடிய எங்கள் வீரர்களின் ‘விடுதலைக்கனவு! ..........................விரைவில் நிறைவேற வேண்டும்’ என்ற வேண்டுதலைத்தவிர வேறொன்றும் சொல்லத்தோன்றவில்லை.

 

 

உங்கள் வரிகள் ஆழமாய் மனதை உழுது செல்கின்றன!.

 

இன்னும் உயிர்ப்புடன் வாழும் தமிழை நேசித்த தமிழரை நேசித்தவர்கள் கனவுகள் நனவாக நாங்கள் வாழும் வரையும் அவர்களுக்காக இயன்றதைச் செய்வோம் போராடுவோம்.

நன்றிகள் தமிழ்த்தங்கை.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வரிகளும் ஆழமாய் உங்கள் வலியைச் சொல்கின்றன.

இழந்தவைக்கான விலைகள் வேறெதுவும் இல்லை.... விடுதலையைத் தவிர!!!

 

உண்மையான உணர்வுகளுடன் ஒரு கவிதையை எழுதும்போது அதில் ஒரு உயிர்ப்பு இருக்கும்.

அதைத் தங்களின் இந்தக் கவிதையிலும் உணர்ந்தேன். நன்றி அக்கா!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வரிகளும் ஆழமாய் உங்கள் வலியைச் சொல்கின்றன.

 

நன்றிகள் அக்கா.

இழந்தவைக்கான விலைகள் வேறெதுவும் இல்லை.... விடுதலையைத் தவிர!!!

 

இழப்பிற்கான வெகுமதியை வெற்றியை அடைய ஒவ்வொருவரும் எங்கள் கடமைகளைச் செய்வோம். நன்றிகள் கவிதை.

 

  • கருத்துக்கள உறவுகள்

இவரை  மறந்தால்

நாம் தமிழரில்லை

ஏன் மனிதரேயில்லை

 

நன்றி  சாந்தியக்கா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.