Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு - கிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பச்சைக்கொடி

Featured Replies

நானும் ஒவ்வொரு முறையும் மல்லையூரான் பெயர் தெரிவதை பார்த்து, என்னுடைய கேள்விக்கு பதில் எழுதியிருப்பார் என்று ஆவலுடன் ஓடி வந்து ஏமாந்து கொண்டிருக்கிறேன்.

சரி, போகட்டும். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.

முடிவாக, இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபைக்கும் மற்றைய மாகாணசபைகளுக்கும் ஒரே அதிகாரங்களையே இலங்கை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. தற்போதைய நிலையில் எந்த மாகாணத்திற்கும் விசேட அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இதுதான் உண்மை நிலை.

இனி நாம் தொடர்ந்து பேசலாம். அதிகாரமற்ற இரண்டு மாகாணசபைகள் இணைந்தால், இணைந்த அந்த ஒரு மாகாணசபைக்கும் நான்கு அமைச்சர்கள்தான் இருப்பார்கள். கூட்டமைப்புக்குள் நடந்த குத்துவெட்டு முஸ்லீம்களுடனும் நடக்கும். வடக்கு, கிழக்கு என்றும் நடக்கும்.

இரண்டு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு ஒரு மாகாணசபை ஆகின்ற பொழுது குறைக்கப்பட வாய்ப்பும் இருக்கிறது.

கடைசியில் கசப்போடு பிரிய வேண்டிவரும். பின் மீண்டும் இணைய முடியாது. ஆகவே இணைவதற்கு முன் பல ஏற்பாடுகள் அவசியம். மாகாணசபைகளுக்கு அதிக அதிகாரங்கள், விரும்பிய அளவு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரங்கள், உள் அலகுகளை உருவாக்கும் அதிகாரம், இப்படி நிறைய வேண்டும். இவைகளே நிரந்தர இணைவுக்கான வழி.

நடைமுறையே வெற்றுப்பேச்சுக்களும்,எழுத்துக்களுமாகவே இருக்கிறது.

ஓடி வந்தவர்களுக்கு மிக பொருத்தமான வசனம் ,போராட போனவர்களுக்கு அல்ல .

அதில் சொல்லப்பட்டவை எல்லாம் பிழையானவை. பானையில் இல்லாதபடியால் அகப்பையில் வரவில்லை.

 

மாகாணங்களின் இணைப்பை ஏன் விக்கினேஸ்வரன் கேட்கிரார் என்பது சட்ட அறிஞ்ஞான அவரின் விளக்கத்தில் இருந்து வரவேண்டும்.  அல்லது சத்தியேந்திரா போன்ற அரசியல் அமைப்பு நிபுணர்களின் விளகங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். சபேசன் தான் கணடதாக கூறி நீதி தீர்க்கவும் அதை நம்பி அவர் பின்னல் போகவும் அவர் ஒன்றும் அரிச்சந்திர  நீதிபதி அல்ல. 

 

கொண்டுவந்த பொய்யை முன்னால் கொண்டுபோக முடியாமல் போய்விட்ட பின்னர் சேறடிக்க பார்க்கிறார் சபேசன். எனது மேற்கோள் பலதடவை யாழில் பலரால்  பதியப்பட்டது. அது திரும்பவும் பலதடவைகள் பலரால் மேற்கோள் காட்டி பதியப்படப் போகிறது. தான் சொன்னவற்றையே விளங்கப்படுத்தும்படி கேட்ட போது ஏமாற்றிய சபேஸ்சனை விட தேவையானவர்களுக்கு தனி மடலில் அனுப்பி வைக்க முடியும்.(புதிய பெயரில் வருபவர்களுக்கு அல்ல. யாழில் இது வரை அரசுக்காக கொடி பிடிக்கதவர்களுக்கு, உண்மையை அறிய விரும்பிவர்களுக்கு மட்டும்) 

 

4+4 =4  அல்லது 17 பில்லியன் + 17 பில்லியன் = 17 பில்லியன் ஆக மாறலாம் என்பதை மகிந்தா கண்டு வைத்திருந்தால் மாகாணங்களை இணைக்க பின்னின்றிருக்க மாட்டார். அரசுக்காக சேவை செய்யும் மாற்றுக்கருத்துகள் எதிர் விளக்கங்கள் வைத்து ஏமாற்ற மட்டும்தான் முயல்வார்கள். அவர்களை யாரும் யாழில் நம்புவதில்லை. யாழில் பலர் பதிந்த சத்தியேந்திராவின் விளங்கங்களை விடுத்து தாங்கள் வாய்மொழி உத்தரவாதங்களை கேட்டதாக சொல்லும் புனைகதைகளையாரும் நம்பும்படி எதிர்பார்த்து வந்து 'மாகாணங்களை பலப்படுத்தும்" புதிய தடைக்கல் போட பார்க்கிறார்கள்.  

 

 

Edited by மல்லையூரான்

வடக்கு கிழக்கு இணைந்திருந்த காலத்தில், வரதராஜப் பெருமாளின் அரசாங்கத்தில் நான்கு பேரே அமைச்சர்களாக இருந்தார்கள் என்பதையும், ஒரு மாகாணமாக கருதப்பட்டு, மற்றைய மாகாணங்களைப் போல் ஒரு குறிப்பிட்ட நிதியே ஒதுக்கப்பட்டது என்பதையும் ஒரு தகவலாக சொல்லி வைக்கிறேன்.

நான்கு அமைச்சர்களை 30 பேருக்கு கொடுப்பதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பட்டபாட்டை பார்த்தோம். இணைந்தால் 30 பேர் 45 பேர் ஆகும். மாவட்டங்கள் என்ற பெயரில் நடந்த பிரிவினை வடக்கு, கிழக்கு என்று நடக்கும். முஸ்லீம்கள், தமிழர்கள் என்று நடக்கும்.

நிச்சயம் மீண்டும் பிளவு வரும். பழைய வரலாறு திரும்பும். அதன் பின்பு மீள இணைவது முடியாத காரியம் ஆகிவிடும். ஆகவே இவற்றை எல்லாம் சிந்தித்து தமிழர் தரப்பு சரியான நகர்வுகளை செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண அதிகாரம் குறித்த கருத்தாடல்களால் ஏதும் பயன் உண்டா?

 

வடக்கும், கிழக்கும் இணைந்ததுதான் தமிழர் தாயகம் என்கிற அடிப்படையை வைத்து தூண்டில் போட்டிருக்கிறார்கள். இதைவைத்து மகிந்தவிடம் ஏதாவது பேரம் படியலாம். ஆனால் இந்த இணைப்பை முஸ்லிம் தலைமைகள் ஒருபோதும் விரும்பமாட்டா.

வடக்கு கிழக்கு இணைந்திருந்த காலத்தில், வரதராஜப் பெருமாளின் அரசாங்கத்தில் நான்கு பேரே அமைச்சர்களாக இருந்தார்கள் என்பதையும், ஒரு மாகாணமாக கருதப்பட்டு, மற்றைய மாகாணங்களைப் போல் ஒரு குறிப்பிட்ட நிதியே ஒதுக்கப்பட்டது என்பதையும் ஒரு தகவலாக சொல்லி வைக்கிறேன்.

நான்கு அமைச்சர்களை 30 பேருக்கு கொடுப்பதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பட்டபாட்டை பார்த்தோம். இணைந்தால் 30 பேர் 45 பேர் ஆகும். மாவட்டங்கள் என்ற பெயரில் நடந்த பிரிவினை வடக்கு, கிழக்கு என்று நடக்கும். முஸ்லீம்கள், தமிழர்கள் என்று நடக்கும்.

நிச்சயம் மீண்டும் பிளவு வரும். பழைய வரலாறு திரும்பும். அதன் பின்பு மீள இணைவது முடியாத காரியம் ஆகிவிடும். ஆகவே இவற்றை எல்லாம் சிந்தித்து தமிழர் தரப்பு சரியான நகர்வுகளை செய்ய வேண்டும்.

மாகாணகளுக்கிடையில் பணம் பங்கிடப்படும் சூத்த்திரத்தை அறியாமல் இணைத்தால் பணம் குறையும் என்று வாதாடுவது உண்மை இல்லாத போலித்தனம்.  அதில் சற்றும் உண்மை இல்லை. இணைப்பது அரசுக்கு விருப்பமில்லையாயின் இணைந்த பின்னர் அரசு கொடுப்பனவுகளை வெட்டும். இது இணைவதால் வந்த தீமை அல்ல. இணைந்தபின்னர் கிடைக்கும் வெளிநாட்டு உதவி தமிழருக்கு அரசின் உதவியை விட பிரதானமானது. எனவே அரசின் நிபந்தனையுடன் கூடிய உதவிகளை விட நிபந்தனைகள் குறைந்த வெளிநாட்டு பணத்துக்குத்தான் மாகாணம் போகும். இதே காரணத்தைத்தான் அரசும் சீனா கடன்ங்களுக்கு சொல்கிறது.

 

இன்றைய அதிகாரமில்லா, சத்தியேந்திராவால் ஆளுனரின் ஆலோசகர் என்று வர்ணிக்கப்பட்ட தனி மாகாணகளின் முதல் அமைச்சரால் மந்திரி சபையை மாற்றி அமைக்க முடியாது. ஆனால் இணைப்பால் வரும் அதிகாரமுள்ள முதல் அமைச்சரால் எந்தளவுக்கு மந்திரி சபையை மாற்றி அமைக்க முடியும் என்பது சட்ட நுணுக்கத்துக்காணது. அதை பற்றி சத்தியேந்திரா விவரித்து எழுதாதபடியால் நான் எதுவும் எழுதவில்லை. ஆனால் 2/3 பெரும் பானமையுள்ள மாகாண சபை சில கோரிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பும்.

 

அதை விட அரசியல் அமைக்கு வெளியே இணைந்த மாகாணத்தை கூட்டமைப்பும், மு.காவும் பங்கிட்டு ஆளுவதாகத்தான் ஆரம்ப (போரின் பின்னாலான) உடன் படிக்கைகள். இதில் பதவிகளை பங்கிடுவது பற்றியும் உடன்பாடு இருந்தது. 

 

ஆனால் மாகாண சபையின் தேவை தமிழர் தங்களை ஆழுவதற்கே. எனவே பணமீதான அரசின் தயையை கைவிட்டு அதிகாரத்துக்கு போவதுதான் வரவேற்க்கப்பட வேண்டியது.  பதவிகளுக்காக மந்திரிசபை என்பதுதான் கக்கீமின் இன்றைய நிலை. அவர் அரசுடன் அதிகாரமில்லாத பதவிகளை பெற்றுவருகிறார். ஆச்சரியத்தக்க முறையில் இது இலங்கை முஸ்லீம் தலைமைகள் எல்லாரினது சிந்தனையாக காணப்படுகிறது. அதிகாரமுள்ள முதல் அமைசாரால் மந்திரிகளை கூட்ட முடியவில்லையாயினும் கணக்குப் பார்க்காமல் அதிகாரத்துக்கு போய் மாகாணங்களை இணைக்க வேண்டியது அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி.  

 

வரதராஜப் பெருமாளின் சபைக்கும் பிள்ளியானின் சபைக்கும் நடை முறையில் வித்தியாசம் இருக்கவில்லை. ஆனால் அமைப்பு றையில் இருந்தது.மேலும் வரதராஜபெருமாளின் சபை உணமையான இயகத்தை அனுபவிக்காத சபை. (இந்த நிலை விக்கினேஸ்வரின் சபையில் இருக்க சந்தர்பம் இல்லை- இருந்தால் அது தனி நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் வழி வகுக்கும். )அதில் அதிகாரங்களை பரிசோதித்து பார்க்க முடியவில்லை.  அதானல் அவர் தனி நாடு பிரகடணப்படுத்தினார். அதாவது அந்த அமைப்பில்  முதலமைச்சர் தனக்கு சில அதிகாரங்கள் இருப்பதாக நினைத்துக்கொள்ள்முடியும். ஆனால் கிழக்கில் இன்று ஒருவருக்கும் எதுவும் செய்ய முடிவதில்லை. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை/சபேசன்,

நான் அறிந்தவரையில். இலங்கையின் 9 மாகாண சபைகளும் சம அந்த்ஹஸ்து உடயனவே.

வடக்கு-கிழக்கு இணைந்த நிலை இருந்த்ஹபோது அந்த இணைந்த அலகு, ஏனைய 7 மாகாண சபைகளுடக்கும் சம அந்த்ஹஸ்துடனே இருந்தது.

உதாரனாத்துக்கு கஸ்மீருக்கு இந்திய அரசியலமிப்பு 370 வது சரத்து special status வழங்கி அதை ஏனைய மாநிலம்கிளிலிருந்த்ஹும் உயர்த்துகிறது. ஆனால் இணைந்த வடகிழக்குக்கு இலங்கை அரசியலமிப்பில் அப்படி ஒரு தனி அந்த்ஹஸ்து இல்லை.

சத்யேந்த்ஹிரா ஒரு தேர்ந்த அரசியலமைப்பு நிபுணர். இப்படி ஒரு விசேட அந்த்ஹஸ்து இணைந்த வடகிழக்குக்கு இருப்பதாக அவர் சொல்லியிருப்பார் எண்டு நான் நினக்கவில்லை.

ஆதாரத்தை தந்தால் கருத்தை மாற்றிக்கொள்ள தயாராய் உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓடி வந்தவர்களுக்கு மிக பொருத்தமான வசனம் ,போராட போனவர்களுக்கு அல்ல .

 

போராடப்போன புலிகளை தவிர்ந்த ஏனையவர்களுக்கு மிகச்சரியாக பொருந்துகிறது.  :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

போராடப்போன புலிகளை தவிர்ந்த ஏனையவர்களுக்கு மிகச்சரியாக பொருந்துகிறது.  :)  :)

 

அர்ஜூனை தாக்குவதாக நினைத்து கன தமிழர்களை தாக்குகிறீர்கள்.

முஸ்லிம்களுக்கும் சிங்கள பௌத்தர்களுக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்த முயற்சி - ரிசாத் பதியூதீன் 

[Wednesday, 2013-10-23 18:56:56]
rizad-pathuyuthen-seithy-150.jpg

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்கள பௌத்தர்களுக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்த மக்களுக்கு சேவையாற்றுகிறோம் என்று கூறிக்கொள்ளும் சிலர் முஸ்லிம் மக்களை குறிவைக்க முயற்சித்து வருகின்றனர். போர் நடைபெற்ற காலத்தில் முஸ்லிம் மக்கள் நாட்டுடன் ஒன்றாக கைகோர்த்திருந்தனர். முஸ்லிம் மக்களை நாட்டுக்கு எதிரானவர்களாக பார்க்கக் கூடாது. முஸ்லிம் மக்கள் நாட்டை பிரிக்க முயற்சிப்பவர்களுக்கோ அல்லது நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கோ எப்பொழுதும் ஆதரவு வழங்கியதில்லை. முஸ்லிம் தலைவர்கள் ஜெனிவாவுக்கு சென்று மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு, முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்று கொடுத்தனர். அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த எடுத்த சகல நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம் மக்கள் தமது ஆதரவை வழங்கியே வந்துள்ளனர் என்றார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.