Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ICU என்றால் மக்கள் பயப்பிடத்தான் வேண்டுமா..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Intensivstation_%2801%29_2007-03-03.jpg

 

ICU - intensive care unit என்று மருத்துவ உலகில் அழைக்கப்படும் விசேடித்த பாதுகாப்புக்கள் கொண்ட மற்றும் உயிர் பிடிப்பு மற்றும் உடல் கண்காணிப்பு சாதனங்கள் கொண்ட அறையினுள் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டால் அவர் தொடர்பில் வெளியில் உள்ளவர்கள் பலவகையான அச்சத்தை வெளியிடக் காண்கிறோம்.

 

உண்மையில் அது அவசியம் தானா..??!

 

அப்படிப்படையில் அந்த அச்சம் அவசியமன்று. நோயாளி தீவிர சிகிச்சைக்கும் கண்காணிப்புக்குள்ளும் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளுக்குள்ளும் வருகிறார் என்றால் நோயாளின் நிலைமை மிக மோசம் என்று மட்டும் அர்த்தமில்லை. அவருக்கு அத்தகைய ஒரு சூழல் அவசியம் என்றாலும் அது வழங்கப்படலாம்.

 

ICU_Critical_Care_1.jpg

 

குறிப்பாக.. தீவிர விபத்தால் இரத்த இழப்பு.. சத்திரசிகிச்சை.. இதயப் பாதிப்பு.. மூளை செயலிழத்தல்.. சுயாதீனமாக சுவாசிக்க முடியாத நிலை.. தீவிர தொற்றுக்கள்.. மற்றும் இமியுனிற்றி பிரச்சனைகள் உள்ள நோயாளிகள் மற்றும் குழந்தைகளை ICU அவர்களின் தேவைக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவார்கள். இதனால் நோயாளி தொடர்ந்து வைத்தியர்களின்,தாதியரின் மற்றும் பிற வைத்திய சேவை நிபுணர்களின் நேரடிக் கண்காணிப்பில் தொடர்ந்து வைக்கப்படுவதோடு அவரின் உடல்நிலை குறித்து அடிக்கடி அவதானிப்புக்கள் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கேற்ப கருவிகள் அங்கு உள்ளன.

 

அந்த வகையில்.. ICU என்றால்.. ஏதோ ஆள் முடியுற கட்டத்தில் கொண்டு போற இடம்.. என்று கொள்ளக் கூடாது. பதட்டம் அடையக் கூடாது. மாறாக.. நோயாளியும் பிறரும் தெம்போடு.. தம்மை நோக்கி கூடுதல் கவனிப்பு கொண்டு வரப்படுகிறது என்றே நோக்குதல் வேண்டும். வைத்தியர்களுக்கும் தாதிகளுக்கும் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்..!

 

ICU இல் இருந்து வெளியேறுபவர்களுக்கு கூடிய கவனிப்பு வேண்டின் அவர்கள் HDU (high dependency unit) க்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன் தேவை முடிந்ததும்.. நோமல் வாட்டுக்கு (இவற்றில் தரங்கள் உண்டு) அனுமதிக்கப்படுவார்கள். அதன் தேவை முடிந்ததும் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்..!

 

 

மேலும் குறிப்புக்களுக்கு.. http://www.nhs.uk/conditions/intensive-care/pages/introduction.aspx

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 அந்த வகையில்.. ICU என்றால்.. ஏதோ ஆள் முடியுற கட்டத்தில் கொண்டு போற இடம்.. என்று கொள்ளக் கூடாது. பதட்டம் அடையக் கூடாது. மாறாக.. நோயாளியும் பிறரும் தெம்போடு.. தம்மை நோக்கி கூடுதல் கவனிப்பு கொண்டு வரப்படுகிறது என்றே நோக்குதல் வேண்டும். வைத்தியர்களுக்கும் தாதிகளுக்கும் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்..!

 

 

பகிர்வுக்கு நன்றி ......

  • கருத்துக்கள உறவுகள்

 நோயின் தீவிரம் அதிகம் உள்ளவர்களை தான் ஐசியு க்கு அனுப்புவார்கள். அங்கு அதிக கவனம் செலுத்தப்பட உபகரணங்களோடு தாதிகளும் வைத்தியர்களும் தயார் நிலையில் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  ராசா பதிவுக்கு....

 

இந்த கிழடுகளோட சண்டை பிடிக்கும் நேரத்தில் கொஞ்சத்தை ஒதுக்கி  இவற்றை  எழுதுங்கோ....

என்னைப்போல் சில கிழடுகள் கொஞ்சம் நீண்டநாள்  வாழ உதவும்.. :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 நோயின் தீவிரம் அதிகம் உள்ளவர்களை தான் ஐசியு க்கு அனுப்புவார்கள். அங்கு அதிக கவனம் செலுத்தப்பட உபகரணங்களோடு தாதிகளும் வைத்தியர்களும் தயார் நிலையில் இருப்பார்கள்.

 

நோயின் தீவிரம் மட்டுமே ICU இல் சேர்க்கக் காரணம் அல்ல என்பதற்காகத்தான் இந்த ஆக்கமே. கூடிய risk உள்ள தொடர் கண்காணிப்பு அவசியமான நோயாளிகளையும் குறிப்பாக குழந்தைகளையும் ICU இல் வைத்துப் பராமரிப்பது வழமை. அது அவர்களின் நோய்த் தீவிரம் சார்ந்து அல்லாமல்.. அவர்கள் தொடர் கவனிப்பில் இருக்கனும் என்பதற்காகவும் செய்யப்படலாம். நோய் தீவிரமாக இருந்து ICU க்குப் போனாலும் அது முடிவு நோக்கிய இடமல்ல. மாறாக கூடிய கவனம் எடுக்கும் இடம் என்பதை மக்கள் நோயாளிகள் புரிஞ்சு கொள்ளனும். அதுவே பாதி நோய் தீர உளவியல் மருந்தாக அமையலாம்..! :):icon_idea:

நன்றி  ராசா பதிவுக்கு....

 

இந்த கிழடுகளோட சண்டை பிடிக்கும் நேரத்தில் கொஞ்சத்தை ஒதுக்கி  இவற்றை  எழுதுங்கோ....

என்னைப்போல் சில கிழடுகள் கொஞ்சம் நீண்டநாள்  வாழ உதவும்.. :icon_idea:

 

அவசியமான விடங்களை பதிவிட்டுத்தான் வருகிறோம் அண்ணா. எல்லா விடயங்களையும் பதிவிட எங்களுக்கும் நேரம் வேணும். இப்படியான விடயங்களைப் பதிவிடும் போது.. எமது அறிவை reference சார்ந்து ஒப்பு நோக்கி எழுதனும். இன்றேல்.. தவறான வழிகாட்டுதலை நோக்கி அது சென்று விடலாம். அது சமூகத்தால் தவறாக விளங்கப்பட்டால் ஆபத்து சமூகத்திற்கு தான்..!

 

இது அரசியல் அல்லத் தானே. அரசியல்வாதி நேரம் ஒன்று பேசலாம். ஆனால்.. இது.. உயிரோடு உடலோடு தொடர்புடைய விடயங்கள் அல்லவா. :):lol:

நானும் 2 தரம் போவிட்டு வந்தனான். இன்னும் 2 தரம் போனால் நானே எழுதிப்போடுவன், கவலைப்படாதேங்கோ!  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் 2 தரம் போவிட்டு வந்தனான். இன்னும் 2 தரம் போனால் நானே எழுதிப்போடுவன், கவலைப்படாதேங்கோ!  :(

 

உங்களுக்கு எப்பவோ சொன்னது கவனமா இருங்கோ. புகையை விடுங்கோ என்று. நீங்கள் கேட்கிறதா இல்லை. சொல்லிக் களைச்சு கைவிட்டாச்சு. (இப்பவாவது அதுகளை கைவிட்டிட்டியளோ இல்ல..??!) இருந்தாலும் சொந்த அண்ணா போன்ற உணர்வு உங்கள் மீது. ஏனோ தெரியல்ல.. நீங்கள் இப்படி எழுதினதைப் பார்த்து கண் கலங்கிட்டம். பகிடி இல்ல.. ரேக் கெயர் பண்ணுங்கோ. ரென்சன் ஆகாதேங்கோ. ரென்சன் ஆகிற விடயங்களில் தலைப்போடாதேங்கோ. அதால உங்களுக்கு என்ன நன்மை ஒன்றுமில்லை. சோ.. எப்பவும் சந்தோசமா ரிலாக்ஸா உங்களை வைச்சுக் கொண்டாலே... பாதி நோய் தீர்ந்திடும்.  :(:o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எப்பவோ சொன்னது கவனமா இருங்கோ. புகையை விடுங்கோ என்று. நீங்கள் கேட்கிறதா இல்லை. சொல்லிக் களைச்சு கைவிட்டாச்சு. (இப்பவாவது அதுகளை கைவிட்டிட்டியளோ இல்ல..??!) இருந்தாலும் சொந்த அண்ணா போன்ற உணர்வு உங்கள் மீது. ஏனோ தெரியல்ல.. நீங்கள் இப்படி எழுதினதைப் பார்த்து கண் கலங்கிட்டம். பகிடி இல்ல.. ரேக் கெயர் பண்ணுங்கோ. ரென்சன் ஆகாதேங்கோ. ரென்சன் ஆகிற விடயங்களில் தலைப்போடாதேங்கோ. அதால உங்களுக்கு என்ன நன்மை ஒன்றுமில்லை. சோ.. எப்பவும் சந்தோசமா ரிலாக்ஸா உங்களை வைச்சுக் கொண்டாலே... பாதி நோய் தீர்ந்திடும்.  :(:o

 

கேட்டுதோ  சோழியான்.....

கொஞ்சம் கேளுங்களேன்

தயவு செய்து............ :(  :o

உங்களுக்கு எப்பவோ சொன்னது கவனமா இருங்கோ. புகையை விடுங்கோ என்று. நீங்கள் கேட்கிறதா இல்லை. சொல்லிக் களைச்சு கைவிட்டாச்சு. (இப்பவாவது அதுகளை கைவிட்டிட்டியளோ இல்ல..??!) இருந்தாலும் சொந்த அண்ணா போன்ற உணர்வு உங்கள் மீது. ஏனோ தெரியல்ல.. நீங்கள் இப்படி எழுதினதைப் பார்த்து கண் கலங்கிட்டம். பகிடி இல்ல.. ரேக் கெயர் பண்ணுங்கோ. ரென்சன் ஆகாதேங்கோ. ரென்சன் ஆகிற விடயங்களில் தலைப்போடாதேங்கோ. அதால உங்களுக்கு என்ன நன்மை ஒன்றுமில்லை. சோ.. எப்பவும் சந்தோசமா ரிலாக்ஸா உங்களை வைச்சுக் கொண்டாலே... பாதி நோய் தீர்ந்திடும்.  :(:o

 

நன்றி நெடுக்ஸ்.. அதைவிட்டு ஒரு வருசம் முடிந்தது.. :) சென்ற வருடம் 10ஆம் மாதம் முதல்முறையாக சென்றபோதே விட்டுட்டேன்.. அப்பவே உங்களிடம் சில விளக்கங்கள் கேட்க யோசித்ததுண்டு. பிறகு ஏன் குழப்புவான் தப்பேலாது என தவிர்த்ததுண்டு.  :)

கேட்டுதோ  சோழியான்.....

கொஞ்சம் கேளுங்களேன்

தயவு செய்து............ :(  :o

 

நன்றி. காலம் கடந்த பின் சில கட்டுப்பாடுகளுடன் காலம் கழிகிறது. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்.. அதைவிட்டு ஒரு வருசம் முடிந்தது.. :) சென்ற வருடம் 10ஆம் மாதம் முதல்முறையாக சென்றபோதே விட்டுட்டேன்.. அப்பவே உங்களிடம் சில விளக்கங்கள் கேட்க யோசித்ததுண்டு. பிறகு ஏன் குழப்புவான் தப்பேலாது என தவிர்த்ததுண்டு.  :)

 

நல்ல செய்தி அண்ணா.கேட்க சந்தோசமா இருக்குது. சின்னச் சின்ன பின்விளைவுகள் வந்திருக்கலாம்..வரலாம். அதை உடனுக்குடன் வைத்தியரின் உதவியுடன் சரிக்கட்டிட்டீங்கன்னா.. அப்புறம் பெரிய சுகம் உங்களைத் தேடி தானே வரும்..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் 2 தரம் போவிட்டு வந்தனான். இன்னும் 2 தரம் போனால் நானே எழுதிப்போடுவன், கவலைப்படாதேங்கோ!  :(

நானும் நாலைஞ்சுதரம் போனனான்.....பெரிய ராஜ மரியாதையெல்லாம் நடக்கும்!!!! என்ன ஒண்டு வெளியிலை வரேக்கை அஞ்சாறு குளிசளை டெய்லி எடுக்கச்சொல்லி ஒரு துண்டை கையிலை தருவாங்கள்......ஏனெண்டால் போனாப்பிறகுதான் இல்லாதபொல்லாத வருத்தங்களையும் கண்டு பிடிப்பாங்கள்..

நானும் நாலைஞ்சுதரம் போனனான்.....பெரிய ராஜ மரியாதையெல்லாம் நடக்கும்!!!! என்ன ஒண்டு வெளியிலை வரேக்கை அஞ்சாறு குளிசளை டெய்லி எடுக்கச்சொல்லி ஒரு துண்டை கையிலை தருவாங்கள்......ஏனெண்டால் போனாப்பிறகுதான் இல்லாதபொல்லாத வருத்தங்களையும் கண்டு பிடிப்பாங்கள்..

 

என்னுடைய நண்பன் ஒருவர் குவைத்திலிருந்து வரும் நோயாளிகளுக்கு பொருத்தமான மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தி கொடுக்கும் சுயதொழில் செய்கிறார். ஓரளவு சிறு வருத்தங்களைக் குணமாக்க மருத்துவமனைகள் அறவிடும் கட்டணங்களைப் பார்க்கும்போது தலைசுற்றும். அந்தவகையில் சொற்ப மருத்துவக் காப்புறுதிப்பணத்துடன் அவர்கள் தரும் சிகிச்சை வசதிகளுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும். :)

 

(இந்த சிகிச்சைக்கு ஆன செலவை காசாக தந்திருந்தால், ஊரில போய் ஒரு வங்கீல போட்டூட்டு காலாட்டிக்கொண்டு இருந்திருக்கலாம் என்றும் யோசிப்பதுண்டு.  :lol:  :o )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.