Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயல் வீட்டுக் கயல்விழி...!!!

Featured Replies

tumblr_lomr4a882T1qcxieko1_500.jpg
 

விரிந்து கிடக்கும் பூக்களில்

தேன் குடிக்கும் வண்டினைப்போல்...
திறந்து வைத்த ஜன்னலோரத்தில் நான்!!!
அதிசயம் ஆனால் உண்மை...!
பக்கத்து வீட்டில்தான்
பால்நிலா வசிக்கிறது!!!

நிலவுக்கும் எனக்குமான
சில அடி தூரங்களும்
பலகோடி ஒளியாண்டு
இடைவெளியாய்த் தெரிகிறதே!!!
இத்தனை நாளாய்ப் பார்க்காமல்
எத்தனை அமாவாசைகளை கடந்திருப்பேன்!!!


ஏய் நிலவே...!!!
பறந்து போகும் என் எண்ணங்களுக்கு
சிறகுகளை இலவசமாய்...
நீதான் கொடுத்தாயோ???
மொத்தமாய் மறந்துபோகிறேன்
என்னை நானே..!!!

 

 

வீசுகின்ற பருவக் காற்றை
நீதான் அனுப்பி வைத்தாயோ???
மெதுவாய் என் பக்கம் வந்து
உன் பருவத்தின் வாசனையை
பக்குவமாய்ச் சொல்லுதடி!!!

 

 

அங்கே நீ எட்டிப் பார்த்துச் சிரிக்கையிலே
இங்கே கூடுவிட்டு நழுவுதடி என் இதயம்!
உன் கன்னக் குழியில் தவறி விழுந்து,
உன் நெஞ்சத்தின் உச்சிவரை...
துள்ளி எழும்புதடி என் ஆசைகள்!!!

என் அயல் வீட்டுக் கயல்விழியே...!
இராமுழுதும் கனாக்களோடு களைத்துவிட்டேன்...!
அதிகாலையிலும் என்னை அலைக்கழிக்காதே...!!

 

கொஞ்சம் வந்து நில்லடி
உன் ஜன்னலோரம்...!!!
கழுவாத முகத்தோடும் களையாக இருக்கும்
உன் வதனம் பார்க்கையிலே...
பால்நிலவைப் பார்த்து
நிலாச்சோறுண்ணும் குழந்தையாகிறேன்!!!

 

முக்கிய குறிப்பு:

பக்கத்து வீட்டில்  ஒரு அழகான பொண்ணு இருந்து.... அந்தப் பொண்ணை 'சைற்' அடித்து  'றூட்டு' விடும் பெரும்பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை.  :lol:  (எனக்கு ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன் கிடைத்தது -அது ஒரு கதை) :wub: :lol:
 

அந்தப் பெரும்பாக்கியம் கிடைத்த பாக்கியவான்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்...!!! :lol::wub::lol:
 

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கல் கவிதைதான். ஆனாலும் தம்பி பாத்து ...........

உன் ஜன்னலோரம்...!!!
கழுவாத முகத்தோடும் களையாக இருக்கும்
உன் வதனம் பார்க்கையிலே...
பால்நிலவைப் பார்த்து
நிலாச்சோறுண்ணும் குழந்தையாகிறேன்!!!
 
////  கற்பனைக்குத் திறமாய் இருக்கும் :lol: .ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை அப்பனே :lol::D:icon_idea: . கற்பனைக்குப் பாராட்டுக்கள் :) .

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில.. எங்க வீட்டுக்கு பக்கத்திலும் ஒருவா இருந்தவா. ஒவ்வொரு கிழமையும் புதனில்.. அவா தங்கச்சியை கூட்டிக் கொண்டு டான்ஸுக்குப் போவா...(டான்ஸ் உடுப்புப் போட்டுக் கொண்டு போவதால் டான்ஸ் என்று தெரியும்).. நான்... மாலை என்றால்..கேற்றடியில் பொம்மேரியன் கூட விளையாடிக் கொண்டிருக்கிறனான். நல்ல அழகான ரீன் ஏஜ்.. இருவருக்கும். அவா ஹன்சிகா போல.. அழகும் கூட. தற்செயலாக ஒரு நாள் திரும்பிப் பார்த்தா. நான் ஜஸ்ட்.. லுக்கிங் என்று விட்டிட்டன்.

 

ஆனால்.. மீண்டும்.. டான்ஸ் முடிஞ்சு போகும் போதும் திரும்பிப் பார்த்தா..! மீண்டும் ஜஸ்ட்... என்று விட்டிட்டன். ஆனால் அது கிழமை தோறும் வாடிக்கையானது. ஒரு நாள் கோவிலுக்குப் போக அவாவும் வந்தா. பக்கத்தில் நின்று வேற கும்பிட்டா. ஜஸ்ட்.. வழமை என்று இருக்க.. ஐயரிடம் மஞ்சள் பூ கேட்டு வாங்கினா. நான் எதுவும் கேட்காமலே மஞ்சள் பூவை திருநீற்றோடு கையில் தர கண்கள் கண்நோக்கி.. கிட்ட வந்து நீட்டினா.. அப்போது பார்த்த அந்தப் பெண்ணின் கண்கள் ஒளித்த விதம் அதன் அசைவுகள்.. இப்போதும் மனதில் உள்ளது. என்னிடம் ஐயர் தந்ததும் இருந்தது. அதனால் நோ தாங்க்ஸ் சொல்லிட்டன்.

 

அதுக்கு அப்புறம்.. அவா.. திரும்பிப் பார்க்கிறதில்ல. நானும் நேராப் பார்க்கிறதில்ல. சைட்டா பார்க்கிறது தான். அவாவும் பார்த்திருப்பா. அப்புறம்.. நான் பொம்மேரியன் கூட விளையாடிறதோடையே இருந்திட்டன்.

 

இப்ப யோசிச்சுப் பார்க்கிறனான். அன்று அந்த மஞ்சள் பூவை வேண்டி இருந்தால்... என்ன ஆகி இருக்குமென்று. ஆனால் அழகான ஒரு பிகரை மிஸ்பண்ணிட்டமோ என்ற ஒரு ஏக்கமும் உள்ள ஓரமா குந்திக்கிட்டுத்தான் இருக்குது. ரீன் ஏஜில் வரும் அந்தக் அழகுக் கவர்ச்சி என்பது கூட அழகான அனுபவம் தான். அந்த வயசில் தான் அழகை அழகாக ரசிக்கக் கூடிய திறன் இருக்கென்று நினைக்கிறன். (மஞ்சள் பூ கொடுக்கிறதில ஏதேனும் விசேசம் இருக்கோ.. மூத்தவங்க தெரிஞ்சா சொல்லுங்க. இல்ல ஜஸ்ட் லைக் தட்.. அப்படியா.)

 

நாங்க நோக்கின.. அந்த முதல் பிகரின்.. நெருங்கி நின்ற அந்தப் பிகரின்.. நினைவுகளைக் கொண்டு வந்த கவிதையின் கவிதைக்கு நன்றி. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் கவிதைக்கு நன்றி.

பார்த்து பார்த்து

முத்திவிடப்போகிறது (கயல்விழி :wub:  :D )

எல்லோருக்கும் இப்படி ஒரு பின்னணி இருக்கும் அருமையான கவி கவிதை வாழ்த்துக்கள் .

 

ஆனாலும் இடையில் கயல்விழி துடைப்பம் எடுத்து காட்டிய சம்பவத்தை விட்டு எழுதி இருக்குறியல் போல :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அயல் வீட்டு கயல் விழி கலைஞர் வீட்டு கனி மொழி என்ன வித்தியாசம் ?:D

  • கருத்துக்கள உறவுகள்

அயல் வீட்டு கயல் விழி கலைஞர் வீட்டு கனி மொழி என்ன வித்தியாசம் ? :D

கயல்விழியைக் கண்டதும்,  'மயக்கம்' வரும் !

 

கனிமொழியைக் கண்டதும், 'தயக்கம்" வரும் !

 

 

 

கவிதை, கவிதை ஆளை மயக்குது! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்.. மீண்டும்.. டான்ஸ் முடிஞ்சு போகும் போதும் திரும்பிப் பார்த்தா..! மீண்டும் ஜஸ்ட்... என்று விட்டிட்டன். ஆனால் அது கிழமை தோறும் வாடிக்கையானது. ஒரு நாள் கோவிலுக்குப் போக அவாவும் வந்தா. பக்கத்தில் நின்று வேற கும்பிட்டா. ஜஸ்ட்.. வழமை என்று இருக்க.. ஐயரிடம் மஞ்சள் பூ கேட்டு வாங்கினா. நான் எதுவும் கேட்காமலே மஞ்சள் பூவை திருநீற்றோடு கையில் தர கண்கள் கண்நோக்கி.. கிட்ட வந்து நீட்டினா.. அப்போது பார்த்த அந்தப் பெண்ணின் கண்கள் ஒளித்த விதம் அதன் அசைவுகள்.. இப்போதும் மனதில் உள்ளது. என்னிடம் ஐயர் தந்ததும் இருந்தது. அதனால் நோ தாங்க்ஸ் சொல்லிட்டன்.

 

 

நாங்க நோக்கின.. அந்த முதல் பிகரின்.. நெருங்கி நின்ற அந்தப் பிகரின்.. நினைவுகளைக் கொண்டு வந்த கவிதையின் கவிதைக்கு நன்றி. :lol::D

அவவும் பாவம் !

 

திஸ் இஸ் ஜஸ்ட் எ சையில்ட் எண்டு நினைச்சிருப்பா! :icon_idea:

  • தொடங்கியவர்

அருமை.

 

தங்களின் இரசனைக்கு மிக்க நன்றி....அம்மா! :)

  • தொடங்கியவர்

கலக்கல் கவிதைதான். ஆனாலும் தம்பி பாத்து ...........

 

ம்ம்ம்ம்..... வலு அவதானமாத்தான் இருக்கிறம் அக்கா! :o  :lol:  பயப்பிடாதையுங்கோ...!!! :D

பழைய ஒரு ஞாபகத்தில எழுதினதுதான் இது!  :wub::rolleyes:

  • தொடங்கியவர்

உன் ஜன்னலோரம்...!!!

கழுவாத முகத்தோடும் களையாக இருக்கும்

உன் வதனம் பார்க்கையிலே...

பால்நிலவைப் பார்த்து

நிலாச்சோறுண்ணும் குழந்தையாகிறேன்!!!  ////  கற்பனைக்குத் திறமாய் இருக்கும் :lol: .ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை அப்பனே :lol::D:icon_idea: . கற்பனைக்குப் பாராட்டுக்கள் :) .

 

ஒரு பெண்ணின் உண்மையான அழகினைப் பார்க்க வேண்டுமானால் அவள் காலையில் எழும்பியதும் பார்க்கவேண்டும். அதுதான் நிஜ அழகு. அதைத்தான் என் வரிகளில் சொல்லியிருக்கிறேன்.

 

http://www.youtube.com/watch?v=Rbm5t4KKdfA

  • தொடங்கியவர்

ஊரில.. எங்க வீட்டுக்கு பக்கத்திலும் ஒருவா இருந்தவா. ஒவ்வொரு கிழமையும் புதனில்.. அவா தங்கச்சியை கூட்டிக் கொண்டு டான்ஸுக்குப் போவா...(டான்ஸ் உடுப்புப் போட்டுக் கொண்டு போவதால் டான்ஸ் என்று தெரியும்).. நான்... மாலை என்றால்..கேற்றடியில் பொம்மேரியன் கூட விளையாடிக் கொண்டிருக்கிறனான். நல்ல அழகான ரீன் ஏஜ்.. இருவருக்கும். அவா ஹன்சிகா போல.. அழகும் கூட. தற்செயலாக ஒரு நாள் திரும்பிப் பார்த்தா. நான் ஜஸ்ட்.. லுக்கிங் என்று விட்டிட்டன்.

 

ஆனால்.. மீண்டும்.. டான்ஸ் முடிஞ்சு போகும் போதும் திரும்பிப் பார்த்தா..! மீண்டும் ஜஸ்ட்... என்று விட்டிட்டன். ஆனால் அது கிழமை தோறும் வாடிக்கையானது. ஒரு நாள் கோவிலுக்குப் போக அவாவும் வந்தா. பக்கத்தில் நின்று வேற கும்பிட்டா. ஜஸ்ட்.. வழமை என்று இருக்க.. ஐயரிடம் மஞ்சள் பூ கேட்டு வாங்கினா. நான் எதுவும் கேட்காமலே மஞ்சள் பூவை திருநீற்றோடு கையில் தர கண்கள் கண்நோக்கி.. கிட்ட வந்து நீட்டினா.. அப்போது பார்த்த அந்தப் பெண்ணின் கண்கள் ஒளித்த விதம் அதன் அசைவுகள்.. இப்போதும் மனதில் உள்ளது. என்னிடம் ஐயர் தந்ததும் இருந்தது. அதனால் நோ தாங்க்ஸ் சொல்லிட்டன்.

 

அதுக்கு அப்புறம்.. அவா.. திரும்பிப் பார்க்கிறதில்ல. நானும் நேராப் பார்க்கிறதில்ல. சைட்டா பார்க்கிறது தான். அவாவும் பார்த்திருப்பா. அப்புறம்.. நான் பொம்மேரியன் கூட விளையாடிறதோடையே இருந்திட்டன்.

 

இப்ப யோசிச்சுப் பார்க்கிறனான். அன்று அந்த மஞ்சள் பூவை வேண்டி இருந்தால்... என்ன ஆகி இருக்குமென்று. ஆனால் அழகான ஒரு பிகரை மிஸ்பண்ணிட்டமோ என்ற ஒரு ஏக்கமும் உள்ள ஓரமா குந்திக்கிட்டுத்தான் இருக்குது. ரீன் ஏஜில் வரும் அந்தக் அழகுக் கவர்ச்சி என்பது கூட அழகான அனுபவம் தான். அந்த வயசில் தான் அழகை அழகாக ரசிக்கக் கூடிய திறன் இருக்கென்று நினைக்கிறன். (மஞ்சள் பூ கொடுக்கிறதில ஏதேனும் விசேசம் இருக்கோ.. மூத்தவங்க தெரிஞ்சா சொல்லுங்க. இல்ல ஜஸ்ட் லைக் தட்.. அப்படியா.)

 

நாங்க நோக்கின.. அந்த முதல் பிகரின்.. நெருங்கி நின்ற அந்தப் பிகரின்.. நினைவுகளைக் கொண்டு வந்த கவிதையின் கவிதைக்கு நன்றி. :lol::D

 

என்ன நெடுக்ஸ்.... வலிய வந்ததை இப்பிடி மிஸ் பண்ணிட்டியளே!!! :(

நீங்கள் சொன்னதுபோல.... பதின்ம வயதுகளில் வரும் காதல் அல்லது இனக்கவர்ச்சி என்பது அழகை அழகாகவும் ஆழமாகவும் ரசிக்கவைக்கக்கூடியது. அதன் இனிமையே தனி. :wub:

 

 இத்தனை வருஷம் கழிச்சும் அதை இப்ப நினைச்சு.... கவிதையெழுத வைக்குதே!!! :wub::lol:

 

மிக்க நன்றி நெடுக்ஸ்.. தங்களின் அனுபவத்தினையும் எம்மோடு பகிர்ந்துகொண்டமைக்கு ... :)

 

  • தொடங்கியவர்

கவிதையின் கவிதைக்கு நன்றி.

பார்த்து பார்த்து

முத்திவிடப்போகிறது (கயல்விழி :wub:  :D )

 

 

15 வருஷத்துக்கு முன்னாடி பார்த்த கயல்விழி.... :wub:  இப்ப எங்க இருக்கிறா என்று தெரியேலயே!!! :unsure:

மிக்க நன்றி விசுகண்ணை! :)

 

  • தொடங்கியவர்

எல்லோருக்கும் இப்படி ஒரு பின்னணி இருக்கும் அருமையான கவி கவிதை வாழ்த்துக்கள் .

 

ஆனாலும் இடையில் கயல்விழி துடைப்பம் எடுத்து காட்டிய சம்பவத்தை விட்டு எழுதி இருக்குறியல் போல :D :D

 

தும்புத்தடி, விளக்குமாறு எல்லாத்தையும் எடுத்துக் காட்டுற அளவுக்கு  விழுங்கிறது மாதிரி நாங்கள் பார்க்கிறேலே... அஞ்சரன்! :wub:  அதனால தப்பினம்! :lol:

 

மிக்க நன்றி அஞ்சரன்! :)

  • தொடங்கியவர்

அயல் வீட்டு கயல் விழி கலைஞர் வீட்டு கனி மொழி என்ன வித்தியாசம் ? :D

 

சுண்டல்.... அதைத்தான் புங்கையூரன் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்....! :lol:

கயல்விழியைக் கண்டதும்,  'மயக்கம்' வரும் !

 

கனிமொழியைக் கண்டதும், 'தயக்கம்" வரும் !

 

 

 

கவிதை, கவிதை ஆளை மயக்குது! :D

 

மிக்க நன்றி புங்கை! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.