Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு குற்றப்பத்திரிக்கை

Featured Replies

தன்னைக் கொன்றவனின் 

வாக்குமூலம் ஆராய்தலின் பின்

தற்கொலையென்று தள்ளி வைக்கப்படுகிறது.

 

அங்கு,

தன்னைக் கொன்றவனின்

வார்த்தைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்காது.

தன்னைக்கொல்ல துணிந்தவனின் வார்த்தைகள்

வாழ்க்கைக்குள் தன்னை கொன்றவனுக்கு

எப்படிப் புரிந்திருக்கும் ?

 

தன்னைக் கொல்லுதல்

மலர் உதிர்வதுபோலவும் இருக்கலாம்.

மை கரைவது போலவும் இருக்கலாம்.

ஒரு மரம் சரிவது போலவும் இருக்கலாம்.

 

தன்னைக்கொன்றவனின்

கடைசி நிமிடங்கள் பற்றி எவரும் பேசுவதில்லை,

அவன் சுமந்திருந்த

தனிமையை எவரும் உணர முயல்வதுமில்லை.

அவன் உருவாக்கிய

வெற்றிடம் குறித்தும் எவரும் கவலைப்படுவதில்லை,

ஆனாலும்,

தன்னைக்கொன்றவனைத்

தாண்டிவிட முடிவதில்லை எவராலும் வழமைபோல,

 

அவனுக்கு

அந்த நேரத்தில் தேவையாக இருந்திருப்பது

ஒரு உச்சபட்ச விடுதலை.

அது தன்னை

தன்னிலிருந்தும்

பிறரிலிருந்தும்

விடுவித்துவிடுமென்று  நம்பியிருக்கலாம்.

 

தன்னைக் கொல்லுதலூடாக

அவன் தன்னை விடுவித்தாலும்

நீங்கள் உங்கள்

குற்றங்களில் இருந்து விடுவிக்கப்படவில்லை.

 

நன்றி 

http://thazal.com/archives/599

Edited by நெற்கொழு தாசன்

தற்கொலை செய்து கொள்பவர்கள்  "முட்டாள்கள்", " பிரச்சினைகளை எதிர்கொள்ள திராணியற்ற பயந்தாங்கொள்ளிகள்" , "வாழ்க்கையை சவால்களுடன் வாழத்தெரியாதவர்கள்" என்ற எண்ணவோட்டத்தினூடாக மட்டும்தான் நோக்கப்படுகின்றார்கள்.

தற்கொலை என்பதனாலான பழி முழுதும் அவர்கள் மீது மட்டுமே சுமத்தப்படுகிறது.

 

ஆனால், தற்கொலை என்பதற்கான முழுப்பழியினையும் அவர்களின் மீது மட்டும் சுமத்துவது மாபெரும் தவறு. அதன்பின்னால்... அவன் வாழ்ந்த சமுதாயத்துக்கும் அவன் ரொம்பவும் நேசித்த  மனிதர்களுக்கும் பெரும்பங்கு இருக்கின்றது என்ற உண்மையை யாருமே உணர்வதில்லை.

ஒரு தற்கொலைக்குப் பின்னால், அதற்குக் காரணமான அவனது வலிகளுக்குப் பின்னால் அவன் வாழ்ந்த சமுதாய மனிதர்களின் சுயநலங்களும் பழியும் நிச்சயம் அடங்கியிருக்கும்.

மொத்தத்தில் தற்கொலையும் திட்டமிடப்படாத ஒரு கொலைதான்.

 

நெற்கொழு....! தற்கொலைகளுக்கு காரணமான சமுதாயத்தின்மேல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது உங்கள் கவிதை.

மிக அருமையாக ... உணர்வுபூர்வமாக.... தற்கொலையின் இன்னொரு பரிமாணத்தினை விளக்கி நிற்கின்றது.

நன்றிகள் பல :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைகள் எல்லாவற்றுக்குமே மற்றவர் காரணமாக இருக்க முடியாதே.

  • கருத்துக்கள உறவுகள்

தன்னைக் கொல்பவர்கள்  அதனைச் செய்யாது
செய்யத் தூண்டியவர்களுக்கெதிராகப் போராடலாம்
அதானால் இன்னும் பலரைக் காப்பாற்றலாம்

அல்லது சமுதாயத்தையே கொன்று விட்டுத் தனித்து
வாழ்ந்து மற்றவர்களுக்கு உதாரணமாகலாம்  :)

தற்கொலைகள் எல்லாவற்றுக்குமே மற்றவர் காரணமாக இருக்க முடியாதே.

 

எதை வைத்து இப்படிச் சொல்கின்றீர்கள் சுமே அக்கா....?!

தயவுசெய்து... கொஞ்சம் விளக்க முடியுமா? :)

 

வேறெந்தக் காரணமும் இல்லாமல்.... சும்மா.........தற்கொலைக்கு ஏன் முயல்கின்றார்கள்???? :unsure:

சத்தியமாக... புரியாமல்தான் கேட்கின்றேன். :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எதை வைத்து இப்படிச் சொல்கின்றீர்கள் சுமே அக்கா....?!

தயவுசெய்து... கொஞ்சம் விளக்க முடியுமா? :)

 

வேறெந்தக் காரணமும் இல்லாமல்.... சும்மா.........தற்கொலைக்கு ஏன் முயல்கின்றார்கள்???? :unsure:

சத்தியமாக... புரியாமல்தான் கேட்கின்றேன். :rolleyes::lol:

 

தற்கொலை செய்து கொள் என்று யாரும் யாருக்கும் சொல்வதில்லை. நான் நினைக்கிறேன் அனைத்துத் தற்கொலைகளும் இயலாமை காரணமாக, முடிவெடுக்க முடியாமை காரணமாக, ஒரு பிரச்னையை எதிர் நோக்கத் தெரியாத கோளைத்தனத்தினால், அந்த நேரத்து உச்சக்கட்ட உணர்ச்சி வசப்பாடால் அள்ளது மற்றவரை பழிவாங்குகிறோம் எனத் தமக்குள்ளேயே ஏற்படும் ஒரு வரட்டுக் கோபத்தின் விளைவாய் ஏற்படுவதுதான். வேறு காரணங்களும் பல இருந்தாலும் எல்லாவற்றையும் இலகுவாக எடுக்கும் என் மனநிலையில் வைத்துத்தான் நான் இதைப் பார்க்க முடியும் கவிதை. அதுவே நேர்கொளுதாசனுக்கு ஏற்பட்ட அனுபவம் அப்படி கவிதையாக வந்தது. உங்கள் நிலை வேறாக இருக்கலாம். எனக்குத் தெரிய இருவர் எங்கள் அயலில் தற்கொலை செய்தனர். ஒருவர் 13 வயது இளம்பெண். தந்தை திட்டியதற்காக தகப்பனைப் பழிவாங்க மருந்து குடித்து இறந்தார். இன்னொருவர் தன மகள் செய்த தவறு இன்னொருவருக்குத் தெரிந்துவிட்டதற்காகத் தற்கொலை செய்துகொண்டார்.  காதலுக்காக வேறு காரணங்களுக்காக செய்து கொள்ளும் தற்கொலைகளை எதில் சேர்ப்பது கவிதை????

 

தற்கொலை செய்து கொள் என்று யாரும் யாருக்கும் சொல்வதில்லை. நான் நினைக்கிறேன் அனைத்துத் தற்கொலைகளும் இயலாமை காரணமாக, முடிவெடுக்க முடியாமை காரணமாக, ஒரு பிரச்னையை எதிர் நோக்கத் தெரியாத கோளைத்தனத்தினால், அந்த நேரத்து உச்சக்கட்ட உணர்ச்சி வசப்பாடால் அள்ளது மற்றவரை பழிவாங்குகிறோம் எனத் தமக்குள்ளேயே ஏற்படும் ஒரு வரட்டுக் கோபத்தின் விளைவாய் ஏற்படுவதுதான். வேறு காரணங்களும் பல இருந்தாலும் எல்லாவற்றையும் இலகுவாக எடுக்கும் என் மனநிலையில் வைத்துத்தான் நான் இதைப் பார்க்க முடியும் கவிதை. அதுவே நேர்கொளுதாசனுக்கு ஏற்பட்ட அனுபவம் அப்படி கவிதையாக வந்தது. உங்கள் நிலை வேறாக இருக்கலாம். எனக்குத் தெரிய இருவர் எங்கள் அயலில் தற்கொலை செய்தனர். ஒருவர் 13 வயது இளம்பெண். தந்தை திட்டியதற்காக தகப்பனைப் பழிவாங்க மருந்து குடித்து இறந்தார். இன்னொருவர் தன மகள் செய்த தவறு இன்னொருவருக்குத் தெரிந்துவிட்டதற்காகத் தற்கொலை செய்துகொண்டார்.  காதலுக்காக வேறு காரணங்களுக்காக செய்து கொள்ளும் தற்கொலைகளை எதில் சேர்ப்பது கவிதை????

 

 

அக்கா.......இப்படியான சிந்தனை எழுவது இயல்புதான். ஆனால் அது தவறு. ஒவ்வொரு தற்கொலைகளுக்குப் பின்னாலும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சில பல புறக்காரணங்கள் நிச்சயமாக இருக்கும். முற்றுமுழுதான பழியையும் தற்கொலை செய்துகொள்பவர்கள் மீது போடக்கூடாது என்பதைத்தான் என் முதலாவது கருத்தில் சொல்லியிருந்தேன். தற்கொலைகளை இன்னொரு பரிமாணத்திலும் பார்க்கவேண்டியுள்ளது.

 

ஒரு நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தில் தற்கொலைகள் என்பது மிக மிகக் குறைவாகவே இருக்கும். அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

 

நான் தெரிவித்த முதலாவது கருத்தை மீண்டும் படியுங்கள்... புரியும்

 

 

Posted Yesterday, 08:14 PM

தற்கொலை செய்து கொள்பவர்கள்  "முட்டாள்கள்", " பிரச்சினைகளை எதிர்கொள்ள திராணியற்ற பயந்தாங்கொள்ளிகள்" , "வாழ்க்கையை சவால்களுடன் வாழத்தெரியாதவர்கள்" என்ற எண்ணவோட்டத்தினூடாக மட்டும்தான் நோக்கப்படுகின்றார்கள்.

தற்கொலை என்பதனாலான பழி முழுதும் அவர்கள் மீது மட்டுமே சுமத்தப்படுகிறது.

 

ஆனால், தற்கொலை என்பதற்கான முழுப்பழியினையும் அவர்களின் மீது மட்டும் சுமத்துவது மாபெரும் தவறு. அதன்பின்னால்... அவன் வாழ்ந்த சமுதாயத்துக்கும் அவன் ரொம்பவும் நேசித்த  மனிதர்களுக்கும் பெரும்பங்கு இருக்கின்றது என்ற உண்மையை யாருமே உணர்வதில்லை.

ஒரு தற்கொலைக்குப் பின்னால், அதற்குக் காரணமான அவனது வலிகளுக்குப் பின்னால் அவன் வாழ்ந்த சமுதாய மனிதர்களின் சுயநலங்களும் பழியும் நிச்சயம் அடங்கியிருக்கும்.

மொத்தத்தில் தற்கொலையும் திட்டமிடப்படாத ஒரு கொலைதான்.

 

நெற்கொழு....! தற்கொலைகளுக்கு காரணமான சமுதாயத்தின்மேல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது உங்கள் கவிதை.

மிக அருமையாக ... உணர்வுபூர்வமாக.... தற்கொலையின் இன்னொரு பரிமாணத்தினை விளக்கி நிற்கின்றது.

நன்றிகள் பல :)

 

 

Edited by கவிதை

தன்னைக்கொன்றவனின்

கடைசி நிமிடங்கள் பற்றி எவரும் பேசுவதில்லை,

அவன் சுமந்திருந்த

தனிமையை எவரும் உணர முயல்வதுமில்லை.

அவன் உருவாக்கிய

வெற்றிடம் குறித்தும் எவரும் கவலைப்படுவதில்லை,

ஆனாலும்,

தன்னைக்கொன்றவனைத்

தாண்டிவிட முடிவதில்லை எவராலும் வழமைபோல, ////  உண்மை....  ஒருவன் தனை அழிப்பதற்கு சுற்றுச் சூழலும் அதிக பங்கு வகிக்கின்றன .உங்கள் சமூகக் கோபம் நியாயமானது கொழுவா .

 

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை ஒரு வித்தியாசமான பார்வையில் நெற்கொழுதாசனின் கவிதை விரிகிறது. சிலநொடிப்பொழுதின் அவதியின் முடிவே தற்கொலை.கவிதைக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.