Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!

Featured Replies

சீமான் அண்ணா என்ன கதைத்தவர் என்று காணொளியை கொண்டு வந்து இணையுங்கோ அஞ்சரன் அண்ணா.

நான் இன்னும் பார்க்கவில்லை. மற்றவர்கள் பலரும் அப்படி தான் என நினைக்கிறேன்.

 

எங்கள் போராட்டம் திசைமாறி போய் விட்டது : சீமான்

திண்டுக்கல்லில்  நடந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தை, அந்த கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமான், அவரது மனைவி கயல்விழி ஆகியோர் நடத்தி வைத்தனர். முன்னதாக சீமான், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

 

அப்போது அவர்,   ‘’தஞ்சையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்தும், பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்ததை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை (இன்று) மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று போராடி கொண்டிருந்த சூழ்நிலையில், நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்டதால் எங்கள் போராட்டம் திசைமாறி போய் விட்டது. தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, முன்கூட்டியே தகவல் சொல்லாமல் அவசர, அவசரமாக நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்டது.

 

இதில், இந்திய உளவுத்துறை அமைப்புகளுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவரை பெயர்த்து எடுத்திருப்பதன் மூலம் எங்கள் உணர்வுகளை சிதைக்கவும், அடக்கவும் முடியாது. இந்த சம்பவத்துக்கு பிறகு மாபெரும் எழுச்சி உருவாகி உள்ளது. இடிக்கப்பட்ட இடத்தை, தினமும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து செல்கின்றனர்.

 

இலங்கையில் 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக உள்ளனர். பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு பெண்கள் கொல்லப்பட்டனர். இசைப்பிரியா, பாலசந்திரன் கொலை சம்பவம் நடந்த போது தி.மு.க. ஆட்சி யில் இருந்தது.

 

அப்போது எல்லாம் பேசாமல் இருந்துவிட்டு, தற்போது ஈழப்பிரச்சினை பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசுகிறார். தேர்தல் தேவையை உணர்ந்து, தற்போது அனைத்து கட்சியினரும் ஈழப்பிரச்சினை பற்றி பேசுகின்றனர். ஈழப்பிரச்சினை இல்லாமல் அரசியல் இல்லை. இது ஒரு வரலாற்று மாற்றம் ஆகும்.

 

மன்மோகன்சிங் பிரதமரான பிறகு 4 தடவை காமன்வெல்த் மாநாடு நடைபெற்றிருக்கிறது. இதில் 2 மாநாட்டில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது இலங்கையில் நடைபெறும் காமல்வெல்த் மாநாட்டில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து கலந்து கொள்ளவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.

 

மத்திய அரசு மற்றும் ராஜபக்சே அரசு ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்துள்ளதாக விளம்பரப்படுத்துவது ஏமாற்று வேலை ஆகும். அப்படி உதவி செய்திருந்தால் சேனல்–4 டி.வி. குழுவினரை வவுனியா பகுதிக்குள் நுழையவிடாமல் ஏன் தடுத்தனர். சமீபத்தில் நடந்த தேர்தலில், தமிழர்கள் ராஜபக்சே கட்சிக்கு ஏன் ஓட்டு போடவில்லை.

 

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் ராஜபக்சேவின் இனப்படுகொலை, போர்க் குற்றம் ஆகியவை மூடி மறைப்பட்டு விடும். 2015–ம் ஆண்டு வரை காமன்வெல்த் தலைவராக ராஜபக்சே இருப்பார். இதனால் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாமல், வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்’’என்று  கூறினார்.

 

http://www.naamthamilar.ca/?p=270373.html

Edited by nunavilan

  • Replies 284
  • Views 29.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • துளசி
    துளசி

    ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

  • விசுகு
    விசுகு

    வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

நன்றி பேஸ்புக் ..ட்விட்டர் ...மேலதிக செய்திகளுக்கு இணைத்து இருங்கள் :D

 

காமன் வெல்த்தும் ..மாணவர் போராட்டமும் காணமல் போயிட்டு சின்ன சுவர் இடிப்பில் இதுதான் இந்திய அரசியல் யுத்தி .

 

பொதுநலவாய மாநாடு ஏற்கனவே ஆரம்ப விழா எல்லாம் நடத்தி ஆரம்பிக்கப்பட்டு விட்டது. எனவே இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த கூடாது என்ற கோரிக்கையை இனி வைத்து பிரயோசனம் இல்லை.

அதே போல் சல்மான் குர்ஷித்தும் ஏற்கனவே இலங்கைக்கு போயாச்சு. (twitter இல் அது தொடர்பான பதிவை பார்த்திருந்தேன். மதியம் உங்களுக்கு பதில் போடுவதற்காக தேடிய போது கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவுக்கு அதற்கு பின்னான twitter பதிவுகள் குவிந்து விட்டது. பின்னர் class க்கு நேரமாகி விட்டதால் அதற்கு சென்று விட்டேன். இப்பொழுது இந்த திரியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..http://www.yarl.com/forum3/index.php?showtopic=132116 )

எனவே இனி இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று போராட்டம் நடத்தியும் பிரயோசனம் இல்லை.

Edited by துளசி

எங்கள் போராட்டம் திசைமாறி போய் விட்டது : சீமான்

 

திண்டுக்கல்லில்  நடந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தை, அந்த கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமான், அவரது மனைவி கயல்விழி ஆகியோர் நடத்தி வைத்தனர். முன்னதாக சீமான், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

 

அப்போது அவர்,   ‘’தஞ்சையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்தும், பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்ததை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை (இன்று) மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று போராடி கொண்டிருந்த சூழ்நிலையில், நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்டதால் எங்கள் போராட்டம் திசைமாறி போய் விட்டது. தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, முன்கூட்டியே தகவல் சொல்லாமல் அவசர, அவசரமாக நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்டது.

 

இதில், இந்திய உளவுத்துறை அமைப்புகளுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவரை பெயர்த்து எடுத்திருப்பதன் மூலம் எங்கள் உணர்வுகளை சிதைக்கவும், அடக்கவும் முடியாது. இந்த சம்பவத்துக்கு பிறகு மாபெரும் எழுச்சி உருவாகி உள்ளது. இடிக்கப்பட்ட இடத்தை, தினமும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து செல்கின்றனர்.

 

இலங்கையில் 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக உள்ளனர். பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு பெண்கள் கொல்லப்பட்டனர். இசைப்பிரியா, பாலசந்திரன் கொலை சம்பவம் நடந்த போது தி.மு.க. ஆட்சி யில் இருந்தது.

 

அப்போது எல்லாம் பேசாமல் இருந்துவிட்டு, தற்போது ஈழப்பிரச்சினை பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசுகிறார். தேர்தல் தேவையை உணர்ந்து, தற்போது அனைத்து கட்சியினரும் ஈழப்பிரச்சினை பற்றி பேசுகின்றனர். ஈழப்பிரச்சினை இல்லாமல் அரசியல் இல்லை. இது ஒரு வரலாற்று மாற்றம் ஆகும்.

 

மன்மோகன்சிங் பிரதமரான பிறகு 4 தடவை காமன்வெல்த் மாநாடு நடைபெற்றிருக்கிறது. இதில் 2 மாநாட்டில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது இலங்கையில் நடைபெறும் காமல்வெல்த் மாநாட்டில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து கலந்து கொள்ளவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.

 

மத்திய அரசு மற்றும் ராஜபக்சே அரசு ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்துள்ளதாக விளம்பரப்படுத்துவது ஏமாற்று வேலை ஆகும். அப்படி உதவி செய்திருந்தால் சேனல்–4 டி.வி. குழுவினரை வவுனியா பகுதிக்குள் நுழையவிடாமல் ஏன் தடுத்தனர். சமீபத்தில் நடந்த தேர்தலில், தமிழர்கள் ராஜபக்சே கட்சிக்கு ஏன் ஓட்டு போடவில்லை.

 

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் ராஜபக்சேவின் இனப்படுகொலை, போர்க் குற்றம் ஆகியவை மூடி மறைப்பட்டு விடும். 2015–ம் ஆண்டு வரை காமன்வெல்த் தலைவராக ராஜபக்சே இருப்பார். இதனால் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாமல், வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்’’என்று  கூறினார்.

 

http://www.naamthamilar.ca/?p=270373.html

 

 

நன்றி உங்கள் பதிவுக்கு. பதிவிற்கான இணைப்பையும் இணைத்து விடுங்கள்.

இந்த பதிவில் சீமான் அண்ணா ஜெயலலிதாவுக்கு ஆதரவாக கதைக்கவில்லையே. பின்னர் எதற்காக இவ்வளவு துள்ளிக்குதிக்கிறீர்கள்?

 

Edited by nunavilan

போங்கப்பா போய் புத்தகங்களை எடுத்து வாசியுங்கோ அறிவாவது வளரட்டும் அல்லது பிள்ளைகளின் அறிவையாவது வளருங்கோ, சும்மா சீமான் அண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ எண்டு துதிபாடாமல்..

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அலையக்கா சீமான் என்ற பெயரைக் கேட்டாலே ஒரு மாதிரியா ஆகிடுறீங்க. ஏன் உங்களை நம்ப வைச்சு கையை விட்டவரா.. இல்லைத் தானே. அந்தாள்.. தனக்குத் தெரிந்த வகையில்.. தன் இன மக்கள் சார்ந்து எதையாவது செய்யனுன்னு விரும்புறார். செய்யட்டும் விடுங்களன்.

 

கொஞ்ச நாள் பிரபாகரனை தூற்றித் திரிந்தார்கள். வரி வாங்கினம்.. பாஸ் சட்டம்..கொண்டு வரினம்.. வீடுகாணி விற்க முடியாத சட்டம் கொண்டு வருகினம்.. சீதனம் வாங்க தடை கொண்டு வருகினம்..... வெளிநாட்டில இருந்து போறவையிட்ட காசு பறிக்கினம்.. பிள்ளை பிடிக்கிறாங்கள்... படிப்பை பாழாக்கிறாங்கள்.. என்று. யாழின் பழைய பதிவுகளை பார்த்தால் தெரியும்.. சமாதான காலத்தில் வன்னியில் வைச்சு காசு பறிக்கிறாங்கள் என்று சொன்னவைய. அவை எல்லாம் வெளிநாடு பார்த்ததே பிரபாகரன் பிஸ்டல் தூக்கினப் பிறகு தான் என்றதை மறந்திட்டு திட்டினவை...!

 

உங்களால ஒரு துரும்பைக் கூட சொந்த மக்களுக்காக செய்யமுடியல்ல (அதிலும் சில பேர்.. கொஞ்சக் காசை வெளில சொல்லுறதுக்கு கொடுத்ததை தவிர). அத்தகைய எம்மவர்கள் மத்தியில்.. அந்தாள் சீமானம்.. சொந்த முயற்சியில.. குறைஞ்சது  மறைக்கப்பட்ட உண்மைகள் மீது படிந்து கிடக்கும்.. தூசியையாவது தட்டி விடுகுதே என்று சந்தோசப்படுங்க. :icon_idea:

Edited by nedukkalapoovan

போங்கப்பா போய் புத்தகங்களை எடுத்து வாசியுங்கோ அறிவாவது வளரட்டும் அல்லது பிள்ளைகளின் அறிவையாவது வளருங்கோ, சும்மா சீமான் அண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ எண்டு துதிபாடாமல்..

 

நான் யாழ்களத்திற்கு வந்ததிலிருந்தே சீமான் அண்ணா என்று துதி பாடியவள் கிடையாது.

 

எனக்கு சீமான் அண்ணா மேல் மதிப்பு இருந்தும் யாழில் பெரிதாக எழுதியது கிடையாது. என்று சீமான் அண்ணாவுக்கு எதிராக அனாவசிய கட்டுரைகள் யாழில் உருவெடுத்ததோ அன்றிலிருந்து தான் நான் அவர்கள் கருத்துக்கு விமர்சனம் வைக்க சென்று அது இன்று வரை தொடர்கிறது.

 

சாத்திரி அண்ணா எழுதிய கட்டுரையில் தான் ஆரம்பித்தது. பின்னர் யாசீன் மாலிக் அழைப்பு பற்றிய திரி. அதன்பின் இப்பொழுது அஞ்சரன் அண்ணாவின் கருத்துக்கு எதிராக கருத்து வைக்கிறேன்.

எனவே திருந்த வேண்டியது சீமான் எதிர்ப்பாளர்கள்  தான். (அதற்குள் நீங்களும் அடங்கும்).

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. அலையக்காவின் சீமான் வெறுப்புக்குக் காரணம் ஈழத்துப் பெண் போராளியை மணமுடிக்காத விடயம் என நினைக்கிறேன்.. அது உண்மை என்றால் சீமான் அவ்வாறு சொன்னதாக நான் எங்கும் காணவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

போங்கப்பா போய் புத்தகங்களை எடுத்து வாசியுங்கோ அறிவாவது வளரட்டும் அல்லது பிள்ளைகளின் அறிவையாவது வளருங்கோ, சும்மா சீமான் அண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ எண்டு துதிபாடாமல்..

இது  யாழில் இருக்கும் சீமான் எதிர்ப்பு மன நோயாளியளுக்கு பொருந்தும்..
நமக்கு இல்லை....
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. அலையக்காவின் சீமான் வெறுப்புக்குக் காரணம் ஈழத்துப் பெண் போராளியை மணமுடிக்காத விடயம் என நினைக்கிறேன்.. அது உண்மை என்றால் சீமான் அவ்வாறு சொன்னதாக நான் எங்கும் காணவில்லை..

 

அலை அக்கா மாதிரி ஆக்களின் சில கருத்தைப் பார்த்த பிறகு ஈழத்துப் பெண்ணை எங்களுக்கே பார்க்கப் பிடிக்குதில்ல. உப்படியும் ஆக்களா என்று. சீமானுக்கு பிடிச்சிருந்து கசந்திருந்தால் கூட அதற்கும் நம்மவர் தான் பொறுப்பென்று உறுதியாகச் சொல்லலாம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரனின் சீமான் எதிர்ப்புக்கு காரணம் வேறு.. :rolleyes: 'நம்ம ஃபேஸ்புக்கில் பிரபலம் எண்டு நினைச்சம்.. இந்நாள் கையை உயர்த்தியே கைதட்டல் வாங்கிடுறாரே' என்கிற கவலை அவருக்கு.. :D

அலை அக்கா மாதிரி ஆக்களின் சில கருத்தைப் பார்த்த பிறகு ஈழத்துப் பெண்ணை எங்களுக்கே பார்க்கப் பிடிக்குதில்ல. உப்படியும் ஆக்களா என்று. சீமானுக்கு பிடிச்சிருந்து கசந்திருந்தால் கூட அதற்கும் நம்மவர் தான் பொறுப்பென்று உறுதியாகச் சொல்லலாம். :icon_idea:

ஐயையோ... :lol: :lol: :lol:

அஞ்சரனின் சீமான் எதிர்ப்புக்கு காரணம் வேறு.. :rolleyes: 'நம்ம ஃபேஸ்புக்கில் பிரபலம் எண்டு நினைச்சம்.. இந்நாள் கையை உயர்த்தியே கைதட்டல் வாங்கிடுறாரே' என்கிற கவலை அவருக்கு.. :D

ஐயையோ... :lol: :lol: :lol:

 

என் இசை முடில நல்லாதானே போயிட்டு இருக்கு :rolleyes:

 

 -------------------------------

 

"ஒருத்தரையும் இந்தப் பக்கம் காணோமே?  எல்லோரும் ஓக்கே தானே" என்று தன்பாட்டுக்கு இருந்த எல்லாரையும் கூப்பிட்டிட்டு அதை கூட அழிக்குமளவுக்கு அக்காக்கு என்னாச்சோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

"ஒருத்தரையும் இந்தப் பக்கம் காணோமே?  எல்லோரும் ஓக்கே தானே" என்று தன்பாட்டுக்கு இருந்த எல்லாரையும் கூப்பிட்டிட்டு அதை கூட அழிக்குமளவுக்கு அக்காக்கு என்னாச்சோ? :rolleyes:

lol-045.giflol-022.gif

  • கருத்துக்கள உறவுகள்

என் இசை முடில நல்லாதானே போயிட்டு இருக்கு :rolleyes:

நல்லாத்தான் போய்ட்டிருக்கு அஞ்சரன்.. கவலை வேண்டாம்.. :huh::D

நாம் தமிழர் கட்சி நாகை வடக்கு மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

எங்களின் வரலாற்று சின்னம்....ஒவ்வொரு தமிழர்களின் அடையாளம்.. அய்யா பெருமகனார் பழ.நெடுமாறன் எழுப்பிய " தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தை மத்திய மாநில அரசுகளின் கூட்டு சதியால் இடிக்கப்பட்டதை கண்டித்தும் அய்யா பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இடம்:சீர்காழி பேருந்து நிலையம் அருகில்
நேரம்:மாலை 4 மணி,
நாள்: 15/11/2013(இன்று)

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டால் ஈழத்தில் நடந் கொடுரம் யாருக்கும் தெரியாமல் செய்துவிடலாம் என்று இந்தியாவின் நண்பன் இலங்கை சொன்னதற்காக இந்திய அரசு தமிழக அரசுடன் சேர்ந்து கொண்டு இடித்துவிட்டது.

ஆனால் நேற்று நான் கண்ட காட்சி உங்கள் எண்ணத்தில் மண் அள்ளி போட்டுவிட்டது. குடும்பம் குடும்பமாக, இடித்துவிட்ட பொழுதும் மக்கள் வெள்ளம், குறிப்பாக நிறைய அதிமுக கரைவேட்டிகள் தெரிந்தது. அவர்கள் சொன்னது இதை போய் யாரவது இடிப்பாங்களா? இதை இடிப்பதற்கு யாருக்காவது மனது வருமா? என்று.

நீங்கள் இதை இடித்து காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியாவின் துரோகத்தை மறைத்திருக்கலாம்.ஆனால் ஒன்று உங்கள் அராஜகத்தை முடிவுக்கு கொண்டுவர 2009ல் தமிழக மக்கள் துவக்க புள்ளியை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

 

Kondal Samy

(facebook)

Edited by துளசி

தயவு செய்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமாக தலைப்பை வைத்திருங்கள் மற்றவற்றுக்கு இன்னொரு திரி திறந்தால். நல்லது.

 

இந்த தலைப்பின் பிரதானம் குறித்து இது பின் பண்ணப்பட்டிருக்கிறது.

நாம் தமிழர் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்..

 

இடம்: மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில்
நேரம்:இன்று மாலை 4 மணி,
நாள்: 15/11/2013

 

(facebook)

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த டெல்லியின் எடுபடி சென்னை அரசையும் (தமிழக அரசு) காமன்வெல்த்தில் கலந்து கொள்ளும் இந்திய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

இடம்:திருப்பூர் மாநகராட்சி அருகில்
நாள்:இன்று மதியம் 12 மணிக்கு

--புரட்சிகர இளைஞர் முன்னணி

 

(facbook)

Edited by துளசி

1465206_664085950297684_433905235_n.jpg

 

(facebook)

இது  ஒரு மாபெரும் இனத்துரோகம்! ( ஏங்க, ஜேயலலிதா நம்ம இனமாங்க?)

 

அடுத்த தேர்தலில்.அம்மாவை ஊட்டு அனுப்பிவிட்டு நம்ம கலைஞரை முதலமைச்சரக்கினாதான் உந்த பார்சி கூட்டத்துக்கு நாம யாருன்னு தெரியும்.. :icon_mrgreen:

captur10.png

1426290_10201077220561042_49769851_n.jpg

 

 

இது எப்டி இருக்கு .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்ப சொன்னது என்பதில் தங்கியிருக்கு.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.