Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ. பி. டி. பி உள்ளகப் படுகொலை! கட்சியை கலைப்பது குறித்து டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Daglas-devanantha150.jpg

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை கலைப்பது குறித்து இக்கட்சியின் தலைமை மிக தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது என தெரிகின்றது. கட்சிக்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் வெளியாட்களால் அவதூறுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலும், உறுப்பினர்கள் சிலரின் நடவடிக்கைகள் கட்சிக்கு மேலும் அவப் பெயரை ஏற்படுத்தி உள்ள நிலையிலும் இத்தீர்மானம் குறித்து யோசிக்கப்படுகின்றது என அறியப்படுகிறது. அரச அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா இது குறித்து கட்சி முக்கியஸ்தர்கள், விசுவாசிகள் ஆகியோருடன் மந்திராலோசனைகள் நடத்தி வருகின்றார் என்று கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

  

தற்போதைய சூழலில் கட்சிமீது மக்கள் வெறுப்பு காட்ட ஆரம்பித்துள்ளதுடன் சில உறுப்பினர்களை விலகவும் வலியுறுத்தியுள்ளனர். இதனால் கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் அதை இவர்கள் அனைவரும் அடிப்படையில் ஏற்றுக் கொண்டு உள்ளனர் என்றும் குறிப்பாக சமூக அக்கறை உடைய புத்திஜீவிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கட்சியில் காத்திரமான இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று இவர்களில் ஒரு சாரார் வலியுறுத்தி உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. கட்சியை கலைப்பதுதான் இறுதியான நிரந்தர தீர்வு என்றால் அமைச்சர் அதற்கும் தயங்க மாட்டார் என்றும் அறியப்படுகிறது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98637&category=TamilNews&language=tamil

கொஞ்சம் நேரம் கடந்த யோசினை...

சுதந்திர கட்ச்சியில் சேருவதுதான் டக்கிளசின் எதிர்காலத்துக்கு நல்லது... கூட்டமைப்பில் முன்னமே சேர்ந்து இருந்தால் முதலமைச்சர் பதவி கிடைச்சு இருக்கலாம்..

சொந்த சின்னமான வீணையில் இருந்து அடிமைத் சின்னமான வெற்றிலைக்கு மாறியபோதே ஈபிடிபி கட்சி கலைக்கப்பட்டு விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அதை  எல்லாம் எசமானர் பார்த்துக்கொள்வார்  மாமா...

நீங்கள் நினைத்தால் கலைக்கும்படியா  நிலமை இருக்கு....

செய்த வேலைகள் இருக்கு......

கலைப்பார் ஆன கலைக்கமாட்டார்

சிறீதர் தியட்டரின் விலை மட்டும் கேட்டு சொல்லுங்க :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிறீதர் தியட்டரின் விலை மட்டும் கேட்டு சொல்லுங்க :icon_idea:

 

கால் நூற்றாண்டு வாடகையை  நீங்க  முதலில் செலுத்தினால்....

கேட்டுச்சொல்கின்றேன்

வசதி  எப்படி?? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மக்களுக்குப் பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருக்கிறார். இவரும்..முக்கிய ஒரு போர்க்குற்றவாளில் ஒருவர். இவரை அவற்றில் இருந்து தப்பிக்க அனுமதிக்க முடியாது. இவர் செய்த தவறுகளுக்கு தண்டனை பெற்றே ஆக வேண்டியவர். இராணுவத் துணைப்படையை நீண்ட காலம் இயக்கி படுகொலைகளில் இவர் ஈடுபட்டுள்ளார். அதில் ஈடிபிடி யின் நாமம் சர்வதேச ரீதியில் சிதைந்து போனதுமட்டுமன்றி மனித உரிமைகள் ரீதியில் பலமான கண்டனங்களை சந்தித்துக் கொண்டும் உள்ளது.

 

இந்த நிலையில்.. அதனை கலைக்கிறன் வர்ணம் பூசுறன் என்று கதை அளக்கிறார். ஊடகவியலாளர்..நிமலராஜன் உட்பட்ட பல கொலைகளில் இவர் நேரடி பங்களிப்பில் இருந்தவர். இவர் ஒரு கொடூரமான ஆள். இவரின் நடிப்பு எனியும் எடுபட வாய்ப்பில்லை. இவரின் பின்னால் போறவர்கள் எச்சரிக்கையோடு அதைச் செய்ய வேண்டும். காரணம்.. தவறுகளை நீட்டிக் கொண்டு போக.. அவர்களும் இவருக்கு உதவினால்.. அவர்களுக்கும் தண்டனைக்குரிய மனிதர்களாக மாறும் நேரம் அதிகம் இருக்காது.

 

இந்த மனிதர் என்ன செய்தாலும் செய்த படுகொலைகளுக்கு இன அழிப்பு குற்றங்களில் இருந்து தப்பிக்கவே அனுமதிக்க முடியாத மனிதர்.

Edited by nedukkalapoovan

கால் நூற்றாண்டு வாடகையை நீங்க முதலில் செலுத்தினால்....

கேட்டுச்சொல்கின்றேன்

வசதி எப்படி?? :icon_idea:

தியேட்டர் உரிமையை பெற்றுத் தந்தால் கருத்தான படங்கள் போடுவாரா என்டு சொல்லுங்க அண்ணை :D

தியேட்டர் எவ்வளவு விலை என்றாலும் முடித்துவிடலாம் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உப்பை திண்டால் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்.  

உப்பை திண்டால் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்.

அப்போ மகிந்தாவும் கோத்தாவும் இந்துமா கடலையல்லோ குடிக்க வேனும்.....

கமல் காதலால் சுட்டாரா அல்லது மேலிடத்து அரச கட்டளைகளினால் சுட்டாரா தெரியாது. உள்ளே போனால் என்ன அல்லது வெளியே இருந்தால் என்ன அவர் இனி SLFPக் குறைய எதற்கும் போக முடியாது. 

 

அவர் SLFPக்கு போனால், அவர் விரும்பியோ விரும்பமலோ எதிர்க்கட்சி தலைவர் பதவியுடன் மட்டும்தான் போக வேண்டும். அதை செயலாளர் நாயகத்தால் இனி தடுக்க முடியாது. 

 

செயலாளர் நாயகம் தெரிவு குழுவுக்கு போக மறுத்தார். இசைபிரியாவின் கொலையை விசாரிக்க் சொன்னார். இப்படி அரசை நடக்க முடியாதவற்றில் சீண்டினார். அதன் பலன் இதில் நன்றாக அரசிடம் மாட்டிவிட்டார். இதனால் EPDP ஆதர்வாளகளுக்கும், EPDP யில் இருக்கும் SLFP ஆதரவாளர்களுக்கு மிடைல் பல கதியால்கள் தறிப்பு நடக்கலாம். இது செயலாளர் நாயகத்தின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். 

 

கட்சி கலைப்பது பலரை பாது காக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியைக் கலைத்துவிட்டு... பிழைப்புக்கு என்ன செய்யப் போறாங்கள்?
திரும்பவும்.... ஓடு பிரித்து, களவு எடுக்கிற பிளானோ..... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தியேட்டர் உரிமையை பெற்றுத் தந்தால் கருத்தான படங்கள் போடுவாரா என்டு சொல்லுங்க அண்ணை :D

தியேட்டர் எவ்வளவு விலை என்றாலும் முடித்துவிடலாம் :icon_idea:

 

 

ஆமாம்

முக்கியமாக

தம்பி  சீமானின் படங்களை

மக்கள் கூட்டம் போதாது  என்று  முகநூலில்  வந்த  செய்தியை காரணம் காட்டி தூக்கக்கூடாது :lol:  :D  :D 

Edited by விசுகு

ஆமாம்

முக்கியமாக

தம்பி  சீமானின் படங்களை

மக்கள் கூட்டம் போதாது  என்று  முகநூலில்  வந்த  செய்தியை காரணம் காட்டி தூக்கக்கூடாது :lol:  :D  :D 

 

அப்புறம் மக்கள் முன்னாள் மக்கள் பின்னால் என்று மாறிடும் வேணாம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.