Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அர்ஜெண்டினா: தாயின் கள்ளக்காதலனால் கர்ப்பமான சிறுமி- கருக்கலைப்புக்கு கோர்ட் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பியூனோஸ்: தாயின் கள்ளக்காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான 14 வயது சிறுமியின் கருவை கலைக்க அர்ஜென்டினா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 
 
அர்ஜெண்டினா தலைநகர் பியுனோஸ் ஐரெஸ்-சில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சால்டோ என்ற நகரில் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர வயது பெண், தனது கணவரை விவாக ரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்தர். 
 
முதல் கணவர் மூலம் பிறந்த தனது 14 வயது மகளையும் தன்னுடன் வைத்து அவர் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று, அந்த பெண் வெளியே சென்றிருந்தபோது குடிபோதையில் இருந்த அவரது கள்ளக்காதலன் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்து விட்டார். 
 
தற்போது 9 வார கருவை வயிற்றில் சுமந்திருக்கும் தன் மகளுக்கு கருக்கலைப்பு செய்வதற்காக அந்த பெண் ஒரு தனியார் ஆஸ்பத்திரியை நாடினார். 
 
சால்டோ நகரின் சட்டதிட்டங்களின்படி, இங்கு கருக்கலைப்பு என்பது கொடிய குற்றமாக கருதப்படுகிறது. எனவே, அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்து விட்ட டாக்டர், 'நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி வந்தால் கருக்கலைப்பு செய்ய தயார்' என்று தெரிவித்தார். 
 
இதனையடுத்து, சால்டோ நகரின் குடும்ப கோர்ட்டில் தனது மகளுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என அந்த பெண் முறையீடு செய்தார். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டர் சோரியா, கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டார். கருவை கலைத்துக் கொள்வதற்கான மனுதாரரின் உரிமையை விட, இன்னும் இந்த பூமியை பார்த்திராத அந்த கருவின் வாழ்வுரிமை தனக்கு பெரிதாக தெரிவதாக தெரிவித்த நீதிபதி, கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தார். 
 
குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுத்து, யாருக்காவது தத்து கொடுத்துவிடும் படியும் அந்த சிறுமிக்கு நீதிபதி அறிவுரை கூறினார். 
 
இந்த தீர்ப்பை கேட்டு கொதித்துப் போன சிறுமியின் தாயார் ‘எனது மகள் தேவை இல்லை என்று கருதும் ஒரு கருவை இன்னும் 8 மாதம் அவள் வயிற்றில் சுமந்திருந்து, பிள்ளையாக பெற்றெடுக்க வேண்டும் என்று ஒரு நீதிபதி கூறுவது கொடுமையான தீர்ப்பாக உள்ளது. 
 
இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிகள்:

1) கள்ளக்காதலன்

2) தாய்

3) நீதிபதி

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் தாய் என்ற பெண் தான் முதன்மைக் குற்றவாளி. 1. கள்ளக்காதல் பிடிச்சது. 2. அவனோடு வாழ என்று சொந்தக் கணவனை விரட்டி அடிச்சது. 3. கள்ளக் காதலனுக்கு சந்தர்ப்பம் அளித்து சிறுமியை வீட்டில் தனிய விட்டுச் சென்றது. 4. இப்போ ஒருவனே..தனக்கும் கள்ளக் காதலன்.. மகளுக்கும் கள்ளக் காதலன் என்ற கேடுகெட்ட நிலையில்.. சிறுமியை கருக்கலைப்புக்கு வற்புறுத்துவது. 5. சிறுமியின் எதிர்காலத்தை தனது கள்ளக்காதல் காம இச்சைக்காக தாய் என்ற பெண் நாசமாக்கியது. இப்படியான பெண்களுக்கு தண்டனை.. ஓட ஓட கதறக் கதற சுட்டுக் கொல்லனும்.இதுங்க பூமில இருந்து யாருக்கு என்ன நன்மை. இதுங்க உலகிற்கே தவறான உதாரணங்கள் ஆகின்றன.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ஜென்டினா நீதித்துறை கொஞ்சம் பரவாயில்லைப் போல தான் கிடக்கு!

 

இதே நம்ம இந்தியாவாய் இருந்தால், அப்பீல் தீர்ப்பைப் பிறந்த பிள்ளை தான் போய்க் கேட்க வேண்டியிருக்கும்! :D

செய்தித்தாள் தலைப்பே தவறு. விவாகரத்து செய்த பெயர் தனக்கு பிடித்த காதலனுடன் சேர்ந்து வாழ்வது மேற்கத்திய நாடுகளில் இயல்பானது. அதில் தவறு எதுவும் இல்லை. இங்கு குற்றம் என்பது அந்த காதலன் 14 வயது சிறுமி மீது அத்துமீறி வல்லுறவு புரிந்தது என்பதே. பெண்ணின் தாய் அது எதிர் பார்த்திருக்க மாட்டார். இங்கு கள்ளக்காதலன் என்ற வார்த்தை தமிழ் இந்திய ஊடகங்களால் செய்தியில் கிக் ஏற்படுவதற்குவதற்காக பாவிக்கப்பட்ட வார்த்தையாகும்.

Edited by tulpen

குற்றவாளிகள்:

1) கள்ளக்காதலன்

2) தாய்

3) நீதிபதி

நான் நீதிபதியை முதலாவதாக போட விரும்புகிறேன். குற்றவாளி என்பவன் மது போதையில் இருந்தான். தாய் மன்மத போதையில் அலைந்தாள். நீதி வழங்க வேண்டிய பொறுப்பில் இருந்த இந்தாள் எதிலும் கட்டுப்படாத மத போதையில் இருந்தார். 

நான் நீதிபதியை முதலாவதாக போட விரும்புகிறேன். குற்றவாளி என்பவன் மது போதையில் இருந்தான். தாய் மன்மத போதையில் அலைந்தாள். நீதி வழங்க வேண்டிய பொறுப்பில் இருந்த இந்தாள் எதிலும் கட்டுப்படாத மத போதையில் இருந்தார்.

விவாகரத்து செய்த ஒரு பெண் தனக்கு பிடித்த காதலனுடன் சேர்ந்து வாழ்வது மன்மதபோதையா? அவருக்கு அந்த உரிமை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

செய்தித்தாள் தலைப்பே தவறு. விவாகரத்து செய்த பெயர் தனக்கு பிடித்த காதலனுடன் சேர்ந்து வாழ்வது மேற்கத்திய நாடுகளில் இயல்பானது. அதில் தவறு எதுவும் இல்லை. இங்கு குற்றம் என்பது அந்த காதலன் 14 வயது சிறுமி மீது அத்துமீறி வல்லுறவு புரிந்தது என்பதே. பெண்ணின் தாய் அது எதிர் பார்த்திருக்க மாட்டார். இங்கு கள்ளக்காதலன் என்ற வார்த்தை தமிழ் இந்திய ஊடகங்களால் செய்தியில் கிக் ஏற்படுவதற்குவதற்காக பாவிக்கப்பட்ட வார்த்தையாகும்.

 

 

இங்கு  கள்ளக்காதலன் என்ற  வரிகள் தப்புத்தான்.

 

ஆனால் இது போன்ற  இரண்டாவது திருமணங்களின் போது தாயக்கு இருக்கவேண்டிய  பொறுப்பை இந்தத்தாய் உணரவில்லை  அல்லது  அதை செய்யவில்லை  என்பதே குற்றச்சாட்டு.

இது  போன்ற  திருமணங்களில் ஆண்கள் தாயைவிட அதற்கு அடுத்த தான  உள்ள  மகள்மீதே அதிக  கவனம் செலுத்தவர் என்பதை அந்த தாய் உணர்ந்திருக்கணும்.

இவரது இரண்டாவது கணவரின் வயசு தெரியவில்லை என்ற போதும் அந்த வயசு  தெரியவந்தால்

அதிலும் தாயின் சுயநலம் இருப்பது தெரியவரலாம்.

அத்துடன் அவரது இரண்டாவது கணவரின் தப்பை  இந்தத்தாய் எங்கும் கண்டிக்கவில்லை.

அவரது பிள்ளையை  அழிப்பதிலேயே  கருத்தாக  இருக்கிறார். :(  :(  :(

 

எனது வாக்கு நெடுக்கின் கருத்துக்கே............

இங்கு கள்ளக்காதலன் என்ற வரிகள் தப்புத்தான்.

ஆனால் இது போன்ற இரண்டாவது திருமணங்களின் போது தாயக்கு இருக்கவேண்டிய பொறுப்பை இந்தத்தாய் உணரவில்லை அல்லது அதை செய்யவில்லை என்பதே குற்றச்சாட்டு.

இது போன்ற திருமணங்களில் ஆண்கள் தாயைவிட அதற்கு அடுத்த தான உள்ள மகள்மீதே அதிக கவனம் செலுத்தவர் என்பதை அந்த தாய் உணர்ந்திருக்கணும்.

இவரது இரண்டாவது கணவரின் வயசு தெரியவில்லை என்ற போதும் அந்த வயசு தெரியவந்தால்

அதிலும் தாயின் சுயநலம் இருப்பது தெரியவரலாம்.

அத்துடன் அவரது இரண்டாவது கணவரின் தப்பை இந்தத்தாய் எங்கும் கண்டிக்கவில்லை.

அவரது பிள்ளையை அழிப்பதிலேயே கருத்தாக இருக்கிறார். :(:(:(

எனது வாக்கு நெடுக்கின் கருத்துக்கே............

அதாவது சாதாரணமான மனித தவறை புரிந்த அந்த பெண்ணை நடுத்தெருவில் சுட்டு கொல்லவேண்டும் என்ற கருத்துக்கா உங்கள் வாக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது சாதாரணமான மனித தவறை புரிந்த அந்த பெண்ணை நடுத்தெருவில் சுட்டு கொல்லவேண்டும் என்ற கருத்துக்கா உங்கள் வாக்கு.

அந்தத் தாய் என்ற பெண் தான் முதன்மைக் குற்றவாளி.

1. கள்ளக்காதல் பிடிச்சது.

2. அவனோடு வாழ என்று சொந்தக் கணவனை விரட்டி அடிச்சது.

3. கள்ளக் காதலனுக்கு சந்தர்ப்பம் அளித்து சிறுமியை வீட்டில் தனிய விட்டுச் சென்றது.

4. இப்போ ஒருவனே..தனக்கும் கள்ளக் காதலன்.. மகளுக்கும் கள்ளக் காதலன் என்ற கேடுகெட்ட நிலையில்.. சிறுமியை கருக்கலைப்புக்கு வற்புறுத்துவது.

5. சிறுமியின் எதிர்காலத்தை தனது கள்ளக்காதல் காம இச்சைக்காக தாய் என்ற பெண் நாசமாக்கியது. இப்படியான பெண்களுக்கு தண்டனை..

.இதுங்க பூமில இருந்து யாருக்கு என்ன நன்மை. இதுங்க உலகிற்கே தவறான உதாரணங்கள் ஆகின்றன..

 

இது  தான்

போதுமா???

****  இவை  சாதாரண  மனித தவறுகள் கிடையாது

இன்றைய  சகல  சிக்கல்களுக்கும் மூலகாரணம்  இவைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

விவாகரத்து செய்த ஒரு பெண் தனக்கு பிடித்த காதலனுடன் சேர்ந்து வாழ்வது மன்மதபோதையா? அவருக்கு அந்த உரிமை இல்லையா?

வெள்ளைக்காரர் இயற்றி வைத்துவிட்டார்கள் என்பதற்காக எல்லாச் சட்டங்களுமே நல்ல சட்டங்கள் அல்ல.. பல சட்டங்கள் அவர்களின் வாழ்க்கை முறைக்கு தோதாக அமைக்கப்பட்டுள்ளன.. உதாரணமாக..

1) ஒரு கணவன், மனைவி அவர்களது குழந்தையுடன் ஒரே கட்டிலில் நித்திரை கொண்டால் குற்றமாக காணப்படலாம் (நோர்வே சம்பவம்?? ). ஆனால் ஊர் பேர் தெரியாத ஆணை வீட்டுக்குள் விட்டு அதே குழந்தைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.. அது அவளின் சுதந்திரம்..

2) குழந்தைக்கு குளிக்க வார்க்கும்போது தவறுதலாக கை தாங்குப்பட்டுவிட்டால் (உண்மைச்சம்பவம்) பிள்ளையைத் தூக்கிக்கொண்டு போய் வளர்ப்பு பெற்றோரிடம் விட்டுவிடுவார்கள். பிற்பாடு அந்த வளர்ப்புப் பெற்றோர் பாலியல் சேட்டை புரிந்தால் இழப்பீடு, மற்றும் தண்டனையுடன் முடித்துக்கொள்வார்கள்..

3) குற்ற விசாரணைகளில் பௌதீக சான்றுகள் இல்லாவிட்டால் கொலைகாரர்களையும் வெளியே விட்டுவிடுவார்கள். (பல குறறவாளிகள் தப்பிக்கலாம்.. ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிற அடிப்படையில்.. - நல்ல கருத்தியல் ). ஆனால் வெளிநாட்டு அமைப்புகளை பௌதீக சான்றுகள் எதுவுமின்றி பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பார்கள்.. :rolleyes: அதன்மூலம் மனிதப் பேரவலத்துக்கு மறைமுகக் காரணிகள் ஆவார்கள்.. :huh:

இப்படி பலது இருக்கு.. :D

விவாகரத்து செய்த ஒரு பெண் தனக்கு பிடித்த காதலனுடன் சேர்ந்து வாழ்வது மன்மதபோதையா? அவருக்கு அந்த உரிமை இல்லையா?

மேற்குநாட்டு நியமங்களின் படி குற்றம் நடகாதவரைக்கும் தாய் தனது சுதந்திரத்தை பொறுப்பாக பாவித்தார் என்றாகும்.

 

இரண்டாம் தடவைவையாக குடிகாரனுடன் உறவுவைத்து திரும்ப விவாரத்துக்கு போய்.........

 

தனது தவறுக்களையும் ஏற்கத்தாயாரக வேண்டும். பிள்ளைக்கு தந்தையாக வரவேண்டியனை சரியாக தேடியிருந்த்த வேண்டும். ஆப்பிட்ட ஒருத்தனை வீட்டு கூட்டி வந்து படுத்தெழும்பாமல்  தன்னைத்தான் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆணாதிக்க சமூகமும் கருத்துக்களும் வளர்க வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தித்தாள் தலைப்பே தவறு. விவாகரத்து செய்த பெயர் தனக்கு பிடித்த காதலனுடன் சேர்ந்து வாழ்வது மேற்கத்திய நாடுகளில் இயல்பானது. அதில் தவறு எதுவும் இல்லை. இங்கு குற்றம் என்பது அந்த காதலன் 14 வயது சிறுமி மீது அத்துமீறி வல்லுறவு புரிந்தது என்பதே. பெண்ணின் தாய் அது எதிர் பார்த்திருக்க மாட்டார். இங்கு கள்ளக்காதலன் என்ற வார்த்தை தமிழ் இந்திய ஊடகங்களால் செய்தியில் கிக் ஏற்படுவதற்குவதற்காக பாவிக்கப்பட்ட வார்த்தையாகும்.

சரியான விளக்கம். அத்துடன் ஆர்ஜென்ரீனா போன்ற நாடுகளில் கத்தோலிக்க நடைமுறைகள் உள்ள சட்டங்களால் கருக்கலைப்பு சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்கவேண்டும்.

கள்ளம் கபடமில்லாத வளரும் சிறுவர்களை தமது பாலியல் இச்சைக்கு இரையாக்கும் காமுகர்கள் தண்டனையில் இருந்து தப்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அந்தத் தாய் என்ற பெண் தான் முதன்மைக் குற்றவாளி.

இது  தான்

போதுமா???

****  இவை  சாதாரண  மனித தவறுகள் கிடையாது

இன்றைய  சகல  சிக்கல்களுக்கும் மூலகாரணம்  இவைதான்.

ஓம். பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் பெண் ஒரு கட்டத்தில் புணர்ச்சியை விரும்பி ஏற்றுக்கொள்கின்றாள் என்று முன்னர் நீங்கள் சொன்னபடியால் இப்படிச் சொல்வதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம் <_<

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆணாதிக்க சமூகமும் கருத்துக்களும் வளர்க வாழ்க.

 

ஒரு பெரும் அநியாயம் நடந்துள்ளது

அதில் ஒரு கருத்தை பதிய  தங்களால் முடியவில்லை

எவ்வாறு  இப்படி மற்றவர்களில் குற்றம் சொல்லி  ஒதுங்கமுடிகிறது

இதுவும் குற்றமே........... :(  :(  :(

சரியான விளக்கம். அத்துடன் ஆர்ஜென்ரீனா போன்ற நாடுகளில் கத்தோலிக்க நடைமுறைகள் உள்ள சட்டங்களால் கருக்கலைப்பு சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்கவேண்டும்.

கள்ளம் கபடமில்லாத வளரும் சிறுவர்களை தமது பாலியல் இச்சைக்கு இரையாக்கும் காமுகர்கள் தண்டனையில் இருந்து தப்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

 

ஓம். பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் பெண் ஒரு கட்டத்தில் புணர்ச்சியை விரும்பி ஏற்றுக்கொள்கின்றாள் என்று முன்னர் நீங்கள் சொன்னபடியால் இப்படிச் சொல்வதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம் <_<

 

 

 

அந்த திரி  இன்னும் உள்ளது

அங்கு வந்து விவாதிக்கவும்.

இவ்வாறு தூக்கி  திரிவதை சாடுபவர் என்று இதுவரை நினைத்திருந்தேன்.... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

அந்த திரி  இன்னும் உள்ளது

அங்கு வந்து விவாதிக்கவும்.

இவ்வாறு தூக்கி  திரிவதை சாடுபவர் என்று இதுவரை நினைத்திருந்தேன்.... :(  :(  :(

நீங்கள் இந்தத் திரியில் இட்ட கருத்துக்கள் அந்தத் திரியில் விவாதித்ததில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளாதவர் என்பதைக் காட்டவே பயன்படுத்தியிருந்தேன். அதே சிந்தனையோட்டம் இருக்கும்வரை பெண்களை இலகுவாகப் பழிபோடலாம். அத்தோடு அந்தத் திரியில் சடைஞ்சுகொண்டு வெளியேறியிருந்தீர்கள் என்பதால் விவாதிக்க எதுவும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இந்தத் திரியில் இட்ட கருத்துக்கள் அந்தத் திரியில் விவாதித்ததில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளாதவர் என்பதைக் காட்டவே பயன்படுத்தியிருந்தேன். அதே சிந்தனையோட்டம் இருக்கும்வரை பெண்களை இலகுவாகப் பழிபோடலாம். அத்தோடு அந்தத் திரியில் சடைஞ்சுகொண்டு வெளியேறியிருந்தீர்கள் என்பதால் விவாதிக்க எதுவும் இல்லை!

 

நீங்கள் இரண்டு திரிக்கும் எதைப்புரிந்து கொண்டீர்கள் என்பது தெரியாது

 

எனக்கு

இது

ஒரு தாயால் தன் பிள்ளைக்கு ஏற்படுத்தப்பட்ட கொடுமையாகவும்

 

அது

ஒரு ஆணை எப்படியும் ஆட்கொணர்ந்து விடலாம்

ஆனால்

பெண்ணை அப்படி முடியாது  என்பதாகவுமே தெரிந்தது

அதற்காகவே  பலரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது

எல்லோரமே ஓடி ஒழிந்து கொண்டார்கள்

இதுவரை

ஆண்களை  எந்தப்பெண்ணும்   மடக்கிவட முடியும் என்பதே அந்ததிரியிலிருந்து

நான் கற்றுக்கொண்டதாக உள்ளது.

அந்த  விவாதத்திலிருந்து இதைக்காட்டியே  நான்  விலகியிருந்தேன்

குற்றம் சாட்டும்முன் மீண்டும் படிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா, உங்கள் சிந்தனைமுறை எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. அது நல்லவிடயம்!

ஆனால் பெண்களைப் பற்றிய பார்வை பிற்போக்குத்தனமானது. மேற்கு நாடுகளில் திருமணம் புரிந்தவர்கள் பிடிக்காவிட்டால் விவாகரத்துச் செய்துவிட்டு இன்னுமொருவருடன் வாழ்வது தப்பில்லை. ஆனால் வருபவன் நல்லவனா, காமுகனா என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளமுடியாத அப்பெண்ணைக் குற்றம் சாட்டுவது பிழையானது. உண்மையில் குற்றவாளி அக் காமுகனும், வேண்டாத கருவை மதச் சட்டங்களால் கலைக்கத் தடுக்கும் நீதித்துறையுமே.

மேற்கு நாடுகளில் பெருமளவு சிறுவர்கள் step father களால்தான் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் என்று தரவுகள் உள்ளன. அதற்காக பெண்களையா குற்றம் சாட்டி உள்ளே பிடித்துப் போடுகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரும் அநியாயம் நடந்துள்ளது

அதில் ஒரு கருத்தை பதிய  தங்களால் முடியவில்லை

எவ்வாறு  இப்படி மற்றவர்களில் குற்றம் சொல்லி  ஒதுங்கமுடிகிறது

இதுவும் குற்றமே........... :(  :(  :(

 

 

வணக்கம் அண்ணோய் இங்கு இந்தச்செய்தியை ஒரு ஊடகம் அதற்குரிய தர்மத்தை மறந்து செய்தியைப்பரபரப்பாக்கும் நோக்கில் செய்தியின் தன்மையைப்பதிந்திருக்கிறது. முதலில் இச்செய்தி ஊடகத்தில் பகிரப்பட்ட விதம்  ஒரு வக்கிரத்தனத்தைக் கொண்டுள்ளது அதனைப்புரிந்து கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அப்பாதிப்பினின்று வெளியே வரச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. நீண்ட உளவியல் தாக்கத்தை மட்டுமே வழங்கியிருக்கிறது நீதி.  வல்லுறவை செய்த காமுகனைத் தண்டிக்கவில்லை. மாறாக ஏதுமறியாத சிறுமி நீதியின் பெயரால் தண்டனைக்குள்ளாகியிருக்கிறாள். நான் நினைக்கிறேன் அந்த நீதிபதியும் நிச்சயம் ஆணாகத்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இதுவரையில் பூமியில் உதிக்காத ஒரு சிசுவின் உயிரைப்பாதுகாப்பதாக நினைத்து வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணை மனக்காயங்களுடன் போராடும்படி நீதி உரைத்திருக்க மாட்டார். அந்தச் சிறுமியைப் பொறுத்தவரை நீதி மாபெரும் தவறை இழைத்திருக்கிறது.

 

இங்கு கருத்து வைத்தவர்களும் அந்தச்சிறுமியன் தாயாரே முதன்மைக்குற்றவாளி என்று சாடுபவர்களும் மூக்கைப் பொத்தினால் வாயைத் திறந்து சுவாசிக்கத் தெரியாதவர்கள்..... ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்... அந்தத் தாயாரின் அனுமதியோடா இந்த விபரீதம் அரங்கேறியது? இதில் கள்ளக்காதலன் என்ற பதம் வேறு... மஞ்சள் பத்திரிகை எழுதும் கூட்டம் செய்தி எழுதினால் இப்படித்தான் செய்திகள் வரும்..... இதில் தாயின் மேல் எத்தவறும் இல்லை வெளியே போயிருக்கும் தாய் இப்படி ஒரு சம்பவம் நிகழும் என்று நினைத்திருக்க முடியாது. அப்படியே தாய்க்கு மனதில் கரவு தோன்றியிருந்தால் மகளைத் தனியே விட்டுச் சென்றிருக்க முடியாது. ஒரு தாயாக நேர்ந்த விபரீதத்தில் இருந்து மகளை மீட்கும் பொறுப்பில் தாய் செயற்பட்டிருக்கிறார். அது நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. இப்போது மகளின் துயரிலிருந்து அவளைமீட்கவும் முடியாமல் நீதியின் பெயரால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு அவலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

 

தவறு செய்தவனுக்கு இழுத்து வைத்து அறுத்திருக்கவேண்டும். அந்தச்சிறுமியின் எதிர்கால நன்மையைக்கருத்தில் கொண்டு நீதி வழங்கி இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணோய் இங்கு இந்தச்செய்தியை ஒரு ஊடகம் அதற்குரிய தர்மத்தை மறந்து செய்தியைப்பரபரப்பாக்கும் நோக்கில் செய்தியின் தன்மையைப்பதிந்திருக்கிறது. முதலில் இச்செய்தி ஊடகத்தில் பகிரப்பட்ட விதம்  ஒரு வக்கிரத்தனத்தைக் கொண்டுள்ளது அதனைப்புரிந்து கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அப்பாதிப்பினின்று வெளியே வரச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. நீண்ட உளவியல் தாக்கத்தை மட்டுமே வழங்கியிருக்கிறது நீதி.  வல்லுறவை செய்த காமுகனைத் தண்டிக்கவில்லை. மாறாக ஏதுமறியாத சிறுமி நீதியின் பெயரால் தண்டனைக்குள்ளாகியிருக்கிறாள். நான் நினைக்கிறேன் அந்த நீதிபதியும் நிச்சயம் ஆணாகத்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இதுவரையில் பூமியில் உதிக்காத ஒரு சிசுவின் உயிரைப்பாதுகாப்பதாக நினைத்து வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணை மனக்காயங்களுடன் போராடும்படி நீதி உரைத்திருக்க மாட்டார். அந்தச் சிறுமியைப் பொறுத்தவரை நீதி மாபெரும் தவறை இழைத்திருக்கிறது.

 

இங்கு கருத்து வைத்தவர்களும் அந்தச்சிறுமியன் தாயாரே முதன்மைக்குற்றவாளி என்று சாடுபவர்களும் மூக்கைப் பொத்தினால் வாயைத் திறந்து சுவாசிக்கத் தெரியாதவர்கள்..... ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்... அந்தத் தாயாரின் அனுமதியோடா இந்த விபரீதம் அரங்கேறியது? இதில் கள்ளக்காதலன் என்ற பதம் வேறு... மஞ்சள் பத்திரிகை எழுதும் கூட்டம் செய்தி எழுதினால் இப்படித்தான் செய்திகள் வரும்..... இதில் தாயின் மேல் எத்தவறும் இல்லை வெளியே போயிருக்கும் தாய் இப்படி ஒரு சம்பவம் நிகழும் என்று நினைத்திருக்க முடியாது. அப்படியே தாய்க்கு மனதில் கரவு தோன்றியிருந்தால் மகளைத் தனியே விட்டுச் சென்றிருக்க முடியாது. ஒரு தாயாக நேர்ந்த விபரீதத்தில் இருந்து மகளை மீட்கும் பொறுப்பில் தாய் செயற்பட்டிருக்கிறார். அது நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. இப்போது மகளின் துயரிலிருந்து அவளைமீட்கவும் முடியாமல் நீதியின் பெயரால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு அவலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

 

தவறு செய்தவனுக்கு இழுத்து வைத்து அறுத்திருக்கவேண்டும். அந்தச்சிறுமியின் எதிர்கால நன்மையைக்கருத்தில் கொண்டு நீதி வழங்கி இருக்கவேண்டும்.

வீட்டில் தனது 13 வயது சிறுமியை தனியாக விட்டுவிட்டு பக்கத்தில் பத்துநிமிட தூரத்தில் உள்ள கடைக்குச் சென்று வருகிறாள் தாய். சட்டத்தின்படி சிறுமி பாதுகாப்பு அற்றவள் ஆகிவிடுகிறாள். ஆளைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

அதே சிறுமியை தனது காதலனின் பொறுப்பில் வீட்டில் விட்டுவிட்டுச் செல்கிறாள் ஒரு தாய் (அவன் காமுகன் எனத் தெரியாது.) சட்டத்தின்படி சிறுமி "பாதுகாப்பில்" உள்ளாள்.

இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் தனது 13 வயது சிறுமியை தனியாக விட்டுவிட்டு பக்கத்தில் பத்துநிமிட தூரத்தில் உள்ள கடைக்குச் சென்று வருகிறாள் தாய். சட்டத்தின்படி சிறுமி பாதுகாப்பு அற்றவள் ஆகிவிடுகிறாள். ஆளைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

அதே சிறுமியை தனது காதலனின் பொறுப்பில் வீட்டில் விட்டுவிட்டுச் செல்கிறாள் ஒரு தாய் (அவன் காமுகன் எனத் தெரியாது.) சட்டத்தின்படி சிறுமி "பாதுகாப்பில்" உள்ளாள்.

இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? :rolleyes:

 

உங்கள் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன் இசை. இக்கருத்தை நான் ஏற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் தாயை குற்றவாளி ஆக்க முயல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது..... காதலுக்குக் கண் இல்லையோ இல்லையோ..... நீதிக்கு கண்ணும் கிடையாது கனிவும் கிடையாது... அதனால் நிரபராதிகள் பல சந்தர்ப்பங்களில் தண்டனைக்குள்ளாகும் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

1-விசுகு ஐயா, உங்கள் சிந்தனைமுறை எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. அது நல்லவிடயம்!

 

2- ஆனால் பெண்களைப் பற்றிய பார்வை பிற்போக்குத்தனமானது. மேற்கு நாடுகளில் திருமணம் புரிந்தவர்கள் பிடிக்காவிட்டால் விவாகரத்துச் செய்துவிட்டு இன்னுமொருவருடன் வாழ்வது தப்பில்லை. ஆனால் வருபவன் நல்லவனா, காமுகனா என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளமுடியாத அப்பெண்ணைக் குற்றம் சாட்டுவது பிழையானது. உண்மையில் குற்றவாளி அக் காமுகனும், வேண்டாத கருவை மதச் சட்டங்களால் கலைக்கத் தடுக்கும் நீதித்துறையுமே.

3-மேற்கு நாடுகளில் பெருமளவு சிறுவர்கள் step father களால்தான் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் என்று தரவுகள் உள்ளன. அதற்காக பெண்களையா குற்றம் சாட்டி உள்ளே பிடித்துப் போடுகின்றார்கள்?

 

1- நன்றி  ஐயா

அப்படியே  இருந்துவிட்டுப்போகின்றேன்.

எனக்கு ஆறுமுகநாவலரைப்பிடிக்காது

ஆனால் நான் எடுக்கும் பல முடிவுகளுக்குள் நாவலர் இருந்துவருவதை எனது அனுபவத்தில் கண்டிருக்கின்றேன்

இதற்கு நான் என்ன  ஐயா  செய்யமுடியும்.............???

 

 

2  மற்றும் 3 - இது பெரிய  விடயம்

இதற்கான  விவாதங்களை

நெடுக்கு மற்றும் இசையுடன் தொடருங்கள்.

இந்த திரியில் tulpen அண்ணா, கிருபன் அண்ணா ஆகியோரின் கருத்தே எனதும். :rolleyes:

சகாறா அக்கா எழுதியதில் சில வரிகளை தவிர ஏனையவற்றை ஏற்கிறேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் tulpen அண்ணா, கிருபன் அண்ணா ஆகியோரின் கருத்தே எனதும். :rolleyes:

சகாறா அக்கா எழுதியதில் சில வரிகளை தவிர ஏனையவற்றை ஏற்கிறேன். :rolleyes:

 

 

ஆமா

அவாவை  எழுத வைக்கப்பட்ட பாடு எனக்குத்தானே  தெரியும்??? :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் tulpen அண்ணா, கிருபன் அண்ணா ஆகியோரின் கருத்தே எனதும். :rolleyes:

சகாறா அக்கா எழுதியதில் சில வரிகளை தவிர ஏனையவற்றை ஏற்கிறேன். :rolleyes:

 

 

எது இழுத்து வைத்து அறுப்பதா? :lol:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.