Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தத்தை நிறுத்த பிரபாகரன் ஒப்புக்கொள்ளவில்லை: ப.சிதம்பரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

index(737).jpg
'இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்திய அரசு சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்' என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

புதியதலைமுறை டி.வி.யில் இடம்பெற்ற நிகழ்சியொன்றில் பேசிய போதே அமைச்சர் சிதம்பரம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

'இன்றைய அரசியல் நிலை, சிவகங்கை தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தமிழக அரசின் தடை, லோக்சபா தேர்தல் கூட்டணி, ராஜீவ் படுகொலை, இலங்கை இறுதிக்கட்டப் போர் நிலவரம் பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 

'இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் நிறுத்தவில்லை. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஒரே பிடிவாதத்துடன் போராடினார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். 

'போரை நிறுத்துமாறு இந்தியா இரு தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்த போதிலும் இரண்டு தரப்பினரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. போரை நிறுத்தச் சொல்லி பிரபாகரனிடம் இந்திய அரசாங்கம் எவ்வளவு சொல்லியும் கடைசிவரை அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான் அவர் மரணமடைய நேரிட்டது. இந்தியா சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்' என்று சிதம்பரம் கூறியுள்ளார். 

'மீனவர்கள் பிரச்சினையில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், இருதரப்பு மீனவர்களையும் அழைத்துப் பேசவும் இந்திய அரசு தயாராகவே உள்ளது. ஆனால் தமிழக அரசு அதற்கு தயாராகவில்லை. அதற்கான திகதியை இன்னமும் குறிப்பிடவில்லை' என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணை முடிந்து தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. விசாரிக்கப்பட வேண்டியவர்கள் இன்னமும் இருக்கிறார்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம், 

'தற்போதைக்கு நிலவும் கருத்துக்கள் வாக்குமூலங்கள் அல்ல. பிற்காலத்தில் எழுந்த சிந்தனைகள். அவர்கள்தான் வழக்கைத் தொடர்ந்தார்கள். கார்த்திக்கேயன்தான் கருத்து சொல்ல வேண்டும். என்னால் கருத்துச் சொல்ல முடியாது' என்றார். 

'விசாரணையில், தீர்ப்பில், சந்தேகம் உள்ளது என்ற பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்து மறு விசாரணை நடத்தக் கோர வேண்டும். நிராபராதி என்று வரும் பட்சத்தில் அதை அரசு ஏற்றுக்கொள்ளும். அதற்காகத்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என்றும் அமைச்சர் சிதம்பரம் மேலும் கூறியுள்ளார். 

 
 

கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த போது ஆழும் கட்சியில் ஒரு பகுதியாக இருந்த அவரிடம், "பிரபாகரனும், இலங்கை அரசும் யுத்த்த்தை நிறுத்த மறுக்கிறார்கள், இதானால் இந்தியா அதில் தலையிடாது" என்று கூறியிருக்கலாம். ஆனால் கருணாநிதி தனக்கு மத்திய அரசு யுத்த நிறுத்தம் வந்துவிட்டதாக அறிவித்தது என்றும் அதனால்த்தான் உண்ணாவிரத்ததை கை விட்டதாகவும் சொல்கிறார்.

 

மேலும் யுத்த நிறுத்தத்திற்கு பிரபாகரன் போயிருந்தால் இந்தியா அவரை காப்பாற்ற எப்படியான திட்டம் வைத்திருந்தது என்று சிதம்பரம் சொல்லவில்லை. ஆனால் எப்படியும் சமாதானத்துக்கு உடன்படாமல் அரசு மட்டும் யுத்தத்தை தொடர்ந்திருக்கும் என்றும்தான் சொல்கிறார்.

 

சிதம்பரம் பங்கெடுத்து, மத்திய அரசு முன் நின்று, புலிகளின் ஒவ்வொரு குடும்பந்தில் பால்குடி குழந்தை வரையும் அழித்தார்கள் என்பதுதான் உண்மை. இப்போது பாலச்சந்திரன் போன்றவர்களின் கதைகள் வெளியே வந்த்தால் இப்படி பேசுகிறார். இதைதான் "எந்த சமாதான பேச்சு வார்த்தைகளுக்கும் இந்தியா ஒத்துவரவில்லை" என்று கூறுவதின் மூலம் சொலெயும் சொல்கிறார்.

 

வரவிருக்கும் ஐ.நா 25ம் தொடர் மனித உரிமைகள் அமர்வுக்கு வெளிப்படையாக ஆதரவு திரட்ட சிதம்பரம் முன்வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம் தேர்தலை நோக்கு வைச்சு.. எல்லாப் பழியையும் பிரபாகரன் மீது போட்டுவிட்டு தான் தப்பிக்க நினைக்கிறார். சிதம்பரம் சொல்வது சுத்தப் பொய். புலிகள்.. சார்க் தலைவர்கள் மாநாட்டினை முன்னிட்டும்.. ஒரு நிரந்தர யுத்த நிறுத்தத்திற்கு முனைப்பாகவும்.. ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை கடைப்பிடித்தனர். ஆனால் அதனை சிறீலங்கா அரசும்.. இந்தியாவும் பிற உலக நாடுகளும்.. அப்போது மதித்து நடக்கத்தவறி இருந்தன. எல்லோரும் பெரு அழிவோடு.. போரை முன்னெடுப்பதில் மட்டுமே முனைப்புக்காட்டினர். அதில் சிதம்பரத்திற்கும் குறிப்பிடத்தக்க அளவு பங்குள்ளது. அதனை அவர் இப்போ மறைத்து தமிழக மக்களிடையே.. தேர்தல் வாக்குகளுக்காக.. தன்னை சுத்தமானவராக காட்ட முயல்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான.. ஏமாற்று அறிக்கை.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவில் இத்தகைய கலந்துரையாடல்களை நடத்துபவர்களிடம் நிறைய‌ தரவுகள் இல்லாமையால், சிதம்பரம் போன்றவர்கள் கதை அளந்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் புலிகள் ஒரு வலிந்த தாக்குதலாக கடைசியாக நடத்தியது, மண்டைதீவுத் தரையிறக்கம் மட்டுமே, மற்றவை யாவும் முறியடிப்புத் தாக்குதல்களாகவே இருந்தன. சிதம்பரம் யாரை முட்டாள் ஆக்க முயற்சிக்கின்றார்? ஆனந்தபுரத் தாக்குதல் கூட முறியடிப்புத் தாக்குதலாகவே இருந்தது. இதை விட மேல நெடுக்காலபோவன் சொன்னது போல ஒருதலைப்பட்ட யுத்தநிறுத்தத்தைப் புலிகள் அறிவித்தும் இருந்தனர். நிச்சயம் சிதம்பரம் தன் கொலைப்பழியில் இருந்து தப்பிக்க நாடகம் போடுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கிறார்.போரை நடத்தியதே இந்திய அரசுதான்.இந்த முறை தேர்தலில் காங்கிரசுக்கு சங்குதான்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
இப்பவாச்சும் வெளியிலே வந்து உண்மையை சொன்னீர்களே. நன்றி ஐயா.
 
தமிழர்களில்  சிலர் இந்தியாவும் கூடி நின்று தமிழர்களை அழித்ததாக இப்பவும் நம்புகிறார்கள்.
 
உங்களை போன்ற சத்தியவாங்களின் வாய்கள் மூடியிருப்பதால்தான் அவர்கள் அப்படி நம்புகிறார்கள்.
 
 
பிரபாகரன் சிறிய பிழைகள் எத்தனைகள் விட்டார் என்பது தெரியவில்லை.
உங்களை போன்றவர்கள் பெருகிகிடக்கும் தமிழ் இனத்திற்கு போராடியதுதான் மகா மன்னிக்க முடியாத பிழை.
 
உங்களைபோன்றவர்கள் இருக்கும் போது அவருக்கு ஏன் இந்த தேவை இல்லாத போராட்ட வேலை??
 
இவங்க லூசு பயலுக நீங்கள் உண்மையை சொன்னாலும் எத்தனை பேர் கேட்க போகிறான்கள்?
 
உங்களுக்கு தில்லியிலே பல சேவகம் செய்ய இருக்கும் நீங்க போய் அத பாருங்க ஐயா.
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தங்களுக்கு தெரியாமல் எவ்வளவு தமிழ் மக்களை கொன்றார்கள் என தெரியாது என்பவர் இந்தியாவின் பொறுப்புள்ள அமைச்சராக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே தேர்த்தலில்(கடந்த) கள்ள வாக்குகள் மூலம் வெற்றி பெற்றவர் இம்முறையும் அதனையே செய்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தங்களுக்கு தெரியாமல் எவ்வளவு தமிழ் மக்களை கொன்றார்கள் என தெரியாது என்பவர் இந்தியாவின் பொறுப்புள்ள அமைச்சராக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே தேர்த்தலில்(கடந்த) கள்ள வாக்குகள் மூலம் வெற்றி பெற்றவர் இம்முறையும் அதனையே செய்வார்.

 

 

இவர்கள் எல்லோரும் தற்போதைய  வட  கொரிய  அதிபரிடம் கொடுக்கப்படவேண்டிய தமிழரின் சனியர்கள்......... :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

g.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.