Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 40 ஆவது ஆண்டு நினைவு நாளை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 40 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை வெள்ளிக்கிழமை யாழ்.முற்றவெளியில் நினைவு கூரப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டிலேயே இவர்கள் நினைவுகூரப்படவுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சூழ்ச்சியினால் 1974 ஆம் ஆண்டு உயிர்நீத்த இந்த தமிழுணர்வாளர்களை சங்கதி24 குழுமமும் நினைவுகூர்கின்றது.

1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணம் முற்ற வெளியில் இடம்பெற்றது. இதன் போது சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சில பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் நாலாபுறமும் சிதறுண்டு ஓடினர். இதன்போது மின்சார வயர்களில் சிக்கியும் பல பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த வன்முறைகளில் எல்லாமாக 9 பொதுமக்கள் உயிரிழந்திருந்தனர்.

இந்த மாநாட்டிற்காக சுழிபுரத்தைச் சேர்ந்த 14 வயதான நந்தகுமார், தொல்புரத்தைச் சேர்ந்த 15 வயதான கேசவராசன், நாச்சிமார்கோயிலடியைச் சேர்ந்த 20 வயதுடைய சிவானந்தன், நாயன்மார்கட்டைச் சேர்ந்த 27 வயதுடைய தேவரத்தினம், பளையைச் சேர்ந்த 28 வயதுடைய யோகநாதன், கோப்பாயைச் சேர்ந்த 54 வயதுடைய பொன்னுத்துரை, நாயன்மார்கட்டைச் சேர்ந்த 60 வயதுடைய ஆறுமுகம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 60 வயதுடைய சிங்கமரிங்கம் மற்றும் பருத்தித்துறையைச் சேர்ந்த சரவணபவன் ஆகிய தமிழ் உறவுகள் தமது இன்னுயிர்களை ஈந்தனர்.

இவர்கள் அனைவரது நினைவாகவும் யாழ்.முற்றவெளியில் 9 நினைவுத் தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவுத் தூபியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நினைவஞ்சலி இடம்பெறவுள்ளது.

தமிழர்களை அடக்கியொடுக்க நினைக்கின்ற சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சூழ்ச்சியினால் அன்று உயிர்நீத்த இந்த தமிழுணர்வாளர்களுக்கு சங்கதி24 குழுமமும் தனது கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறது.

 
 
  • கருத்துக்கள உறவுகள்

Monuments.jpg

 

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில்...

ஸ்ரீலங்கா பொலிசாரால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு,

40´ம் ஆண்டு நினைவு அஞ்சலிகள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பதாவது ஆண்டு நினைவஞ்சலிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

b054daeef87a7a758888e4a611349257.JPG

உலக தமிழராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நாற்பதாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் யாழ் முற்றவெளிப்பகுதியில் உள்ள நினைவுத்தூபிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்,

1974ஆம்ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம்திகதி நான்காவது தமிழராய்ச்சி மாநாடு யாழ் முற்றவெளிப்பகுதியில் இடம்பெற்றது. 

இந்த மாநாட்டிற்கு அரசாங்கத்தின் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த மகாநாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடியிருந்த வேளையில் மக்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் திட்டமிட்டு கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 1974ற்கு பின்னரும் 1977, 1981,1983 ஆம் ஆண்டுகலவரங்களாலும் பலர் கொல்லப்பட்டனர்.  இத்தனை காலமாக தமிழர்களின் விடுதலைக்காக பலர் தமது உயிரை மாய்த்தும் இன்னமும் தமிழர்களுக்கு விடுதலை பிறக்கவில்லை.

இந்த விடுதலைக்காக பாடுபட்டு பலரது உயிர் இழப்புக்கள் தான் சர்வதேச மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த வேளை தொடர்சியாக மக்கள் பலர் எழுந்து பல வழிகளில் நடத்திய போராட்டத்தில் சர்வதேச மயப்படுத்தப்பட்டுமுள்ளது.

மேலும்  பல்லாயிரக்கணக்கானவர்களை கொலை செய்ததால் அரசாங்கத்திற்கெதிராக போர்க்குற்றம் சுமத்தப்பட்டு சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் இடம்பெறுகின்றது.

அதுமட்டுமல்லாது மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஜ.நா.மனித உரிமை பேரவையில் சர்வதேச போர்க்குற்றம் தொடர்பான விசாரணை இடம்பெறவுள்ளது. 

இந்த பிரேரணை நம்பகத்தன்மையாக இடம்பெறவேண்டும் உண்மைகள் தக்கவிதமாக வெளிக்கொணர படவேண்டும் .

அவ்வாறு போர்க்குற்றச் சாட்டின்மூலம் சர்வதேசத்தின் தீர்மானம் எடுக்க நீண்ட அணுகுமுறைகள் காணப்பட்டால் உடனடியாக நமது தமிழ் இனத்தை முடக்கும் இராணுவங்கள் எங்கள் மண்ணில் குவிக்கப்பட்டும், சிங்கள குடியேற்றங்கள் திணிக்கப்பட்டும் வருகின்றது.

இன அடையாளமே அழிக்கப்பட்டிருப்பதை இல்லாமல் செய்தும் எங்களுடைய நிலம் தமிழ் நிலமாக உருப்பெற நாம் இணைந்து போராட வேண்டும். 

அத்துடன் ஜனநாயக ரீதியாக அறவெளியிலே சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க பாடுபட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

11(17).jpg

 

77(1).jpg

 

22(5).jpg

 

55(1).jpg

 

66.JPG

 

44(1).jpg

http://www.onlineuthayan.com/News_More.php?id=627102567810138956

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..!!

 

அஞ்சலி செலுத்தும் போதில், அஞ்சலிக்கு உரிய இடத்தை, அழகுபடுத்துவதற்கும் சிங்களவன் அனுமதி வேண்டுமா..??

  • கருத்துக்கள உறவுகள்

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில்...

ஸ்ரீலங்கா பொலிசாரால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு,

40´ம் ஆண்டு நினைவு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதாவது மிச்சி இருக்கே. இன நல்லிணக்கம் .. நாடு ஐக்கியமாக்கல்.. என்று சிங்களப் படைகளுக்கு நினைவு ஸ்தூபி கட்டிக்கொண்டு.. தமிழர்களின் அடையாளங்களை இடிப்பது போல.. இடிக்காமல் விட்டாங்களே.

 

நினைவஞ்சலிகள். :(:rolleyes:

Edited by nedukkalapoovan

கொல்லப்பட்டவர்களுக்கு நினைவு அஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

Monuments.jpg

 

அந்நேரம் யாழ். மாநகர சபை மேயராக இருந்த, காலம் சென்ற‌ துரையப்பாவிடம் அனுமதி கேட்டால் கிடைக்காது என்பதால்,
அருகில் இருந்த சிங்கள காவல் துறையினரின்.. கண்களில் படாமல்,
இந்த நினைவுத்தூபியை... ஒரே ஒரு இரவில் கட்டியதாக ஞாபகம்.
 

 

இதாவது மிச்சி இருக்கே. இன நல்லிணக்கம் .. நாடு ஐக்கியமாக்கல்.. என்று சிங்களப் படைகளுக்கு நினைவு ஸ்தூபி கட்டிக்கொண்டு.. தமிழர்களின் அடையாளங்களை இடிப்பது போல.. இடிக்காமல் விட்டாங்களே.

 

நினைவஞ்சலிகள். :(:rolleyes:

 

யாழ். கோட்டையில் இராணுவ முகாம் இருந்த காலத்தில்... இது பலமுறை உடைக்கப்பட்டது என நினைக்கின்றேன்.

ஒவ்வொரு முறை... உடைக்கும் போதும், அதன் எல்லை விரிவடைந்து சென்று.... கடைசியில், கோட்டையில் இருந்த இராணுவத்தையே... புலிகள் விரட்டி அடித்து விட்டார்கள். அது தான்... தமிழ்த்தாயின் சிறப்பு. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.