Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு தேநீர் விடுதியும் இரு நாற்காலிகளும்... [இசைக்கவிதை]

Featured Replies

ஒரு தேநீர் விடுதியும் இரு நாற்காலிகளும்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
324, காலி வீதி , வெள்ளவத்தை, கொழும்பு -06

 


 

 

சில வேளைகளில்....
சில இடங்களையும் சில சம்பவங்களையும் கூட
காதல் தொற்றிக்கொள்கிறது!
அதன்  இனிய நினைவுகளால்...
மனம் கொஞ்சம்... தன்னைத்தானே  தேற்றிக்கொள்கிறது!!

காத்திருப்புக்களும் சந்திப்புகளும்
கைகுலுக்கிக்கொள்ளும் அழகான இடம்தான்....
அந்த தேநீர்விடுதி!
வழமையான அந்த மேசையும் நாற்காலிகளும்
அந்த இருவருக்காகவே காத்திருக்கும்...!
காதலர்களை அமரவைத்து அழகுபார்ப்பதில்
அதற்கும் கொள்ளைப் பிரியம்...!!
அங்குள்ள பணியாளரைப்போலவே
இவற்றிற்கும் இவர்கள் நன்கு பரிட்சயம்!!!

அவளுக்காகக் காத்திருந்த  
பலதடவைகளில் நான் பார்த்திருக்கிறேன்.....!
அவள் வரும்போது...
வண்ணங்களையும் வாசனையையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறாள்!
திடீரென்று எல்லாமே..... அழகாக மாறும் மாயம்,
அங்கேதான் நடந்திருக்கிறது!!
காற்றிலாடும் அவளது துப்பட்டா....
வண்ணத்துப்பூச்சிகளை பறக்கவிட்டுக்கொண்டே இருக்கும்!


சூடாறிய தேநீர் அப்படியே காத்திருக்க...
ஆறுதலாய் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன
மெளனங்கள்!
அங்கு....
தேநீர் எப்பொழுதும் இனித்ததில்லை!
குடித்துத் தந்த மீதித் தேநீரில்...
நிறையக் காதலும் கலந்திருந்தது..!
இனியவள் அருகில் இருக்க...
இனிப்பாக வேறெதுவும் இருந்ததில்லை...!!

மென்மையை ரசிக்க ஆரம்பித்ததே
அவள் மென்கரங்களில்தான்! -நான்
பெண்மையை ரசிக்க ஆரம்பித்ததும்
அவள்  நாற்குணங்களில்தான்!!
ஒரு தேவதையை அருகில் உட்காரவைத்து
தேநீரையும் அன்பையும் பரிமாறியபடியே
கழிந்த பொழுதுகள் இனிமையானவை!

கடிகாரம் மீது பலதடவை கோபித்துக்கொள்வதும்,
கடுகதி வேகத்தில் சுற்றும்... முட்களைப் பார்த்து முறைத்துக்கொள்வதும்,
ஐந்தைந்து நிமிடங்களால் பிரியாவிடைகளை தள்ளிப்போடுவதும்,
'இன்னும் கொஞ்சநேரம்.....' என கெஞ்சிக்கொள்வதும்,
அப்போதைய அன்றாட அனுபவங்களாய்....
இருவரையும் ஆக்கிரமித்திருந்தன!

பிரிவுகள் மீண்டும் சந்திப்பதற்காய் அமையும்வரை...
அவை தற்காலிகமானவைதான்...!
இனிமையானவையும்கூட..!! - ஆனால்
நிரந்தரமான பிரிவுகள்...
சில இடங்களையும் பல சம்பவங்களையும்
ஒன்றுமில்லாத வெறுமையாக்கி விடுகிறது.

மீண்டும்.... அந்த தேநீர்விடுதியையும்
வெறுமையான அந்த நாற்காலிகளையும்
தனியாக பார்க்கும் திராணியற்ற மனதினை
அதன் இனிய நினைவுகளால்
கொஞ்சம் தேற்றிக் கொள்கிறது மனசு!

காதலைப்போலவே... அதன் நினைவுகளும்
மாயங்கள் செய்யும்!
காயம்பட்ட  மனதிற்கு..... மனமே
மருந்து போட்டுக்கொள்ளும் மாயத்தினை,
காதல்நினைவுகளால் மட்டுமே நிகழ்த்த முடிகிறது...!!!


*****     *****     *****     *****     *****     *****     *****     *****    *****     *****

hotel-omega-inn.jpg

 

நீண்ட நாட்களின் பின்னர்  அந்த தேநீர் விடுதியின் படத்தினை தற்செயலாக மீண்டும் பார்க்க நேர்ந்தபொழுதில்

மனதில் தோன்றிய கிறுக்கல் ( சனிக்கிழமை இராப்பொழுதில் திராட்சை இரசத்தை பருகியபடி~~~ ) :wub::rolleyes:

 

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் கவிதை வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் கவிதை கலக்கல் ...! :D

  • தொடங்கியவர்

சூப்பர் கவிதை வாழ்த்துகள்

 

மிக்க நன்றி புத்தன்.... :)

  • தொடங்கியவர்

கவிதையின் கவிதை கலக்கல் ...! :D

 

மிக்க நன்றி சுவியண்ணை. :)

 

 

 

 

 

 

இக்கவிதைக்கான  இசை ~ஒலி வடிவத்தினையும் இப்பொழுது இணைத்திருக்கின்றேன். :)

 

 

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையிலும், பார்க்க அந்தப்பெண்ணை நினைக்கத் தான் பாவமாக இருக்கின்றது! :o

 

நன்றாக அமையவிருந்த வாழ்வொன்றை, அநியாயமாகத் தொலைத்திருக்கிறாள்!

 

கவிதை வழமையை விடவும் கொஞ்சம் தூக்கலாக் கிடக்கு!

 

திராட்சை ரசமாக்கும்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசைக் கவிதைக்கு ஏற்ற‌ படத் தொகுப்பு, மிகப் பொருத்தமாக உள்ளது. :)

கவிதைக்கு வாழ்த்துக்கள் அனுபவம் போல :)

உங்கள்  ஆக்கம் பார்த்தேன் . கவிதையை எழுதுவது ஒரு சுகம் . அதை விட இசை ஒளியமைப்புடன் கவிதையை சொல்வது இன்னொருவகையான சுகம் . முன்னைய அக்கங்களுடன் ஒப்பீட்டளவில் தூக்கிச் சாபிட்டது இந்த ஆக்கம் . கவிதையின் பாடுபோருளைப் பற்றி நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை .உங்கள்  மன உணர்வுகளுக்கு மதிப்புத் தருகின்றேன் . எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் கவிதை :)  :)   .

  • தொடங்கியவர்

கவிதையிலும், பார்க்க அந்தப்பெண்ணை நினைக்கத் தான் பாவமாக இருக்கின்றது! :o

 

நன்றாக அமையவிருந்த வாழ்வொன்றை, அநியாயமாகத் தொலைத்திருக்கிறாள்!

 

கவிதை வழமையை விடவும் கொஞ்சம் தூக்கலாக் கிடக்கு!

 

திராட்சை ரசமாக்கும்! :lol:

 

மனச்சாட்சிகளின் வினாக்களுக்கு விடைகளையும் அவையே சொல்லியாக வேண்டும்.

இப்பொழுது எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. :mellow:

 

திராட்சை ரசம் உள்ளுக்க போனால்... கவிதை ரசம் தானா வெளியால வரும். அது இயல்புதானே புங்கை!!?? :wub::lol:

அப்படி வராட்டில்.....  காசு கொடுத்து குடிச்ச தண்ணியும் வீண் ஆயிடுமல்லவா? :rolleyes::lol:

  • தொடங்கியவர்

இசைக் கவிதைக்கு ஏற்ற‌ படத் தொகுப்பு, மிகப் பொருத்தமாக உள்ளது. :)

 

கருத்துக்கு மிக்க நன்றி அண்ணை! :)

  • தொடங்கியவர்

கவிதைக்கு வாழ்த்துக்கள் அனுபவம் போல :)

 

கொஞ்ச நஞ்ச அனுபவமா............. :rolleyes:  எவ்வளவு இருக்கு அஞ்சரன்! :wub::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.