Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டில்லியில் டென்மார்க் சுற்றுலாப் பயணி மீது பாலியல் தாக்குதல் (மேலதிக இணைப்பு)

Featured Replies

மத்திய டெல்லியில் ஒரு டென்மார்க் பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து டெல்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை மாலை டெல்லியில் பஹர்கஞ் என்ற இடத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து வழி தவறிய, இந்த 51 வயது பெண் சுற்றுலா பயணியை ஒரு கும்பல் தாக்கி அவரிடமிருந்த பொருட்களைக் கொள்ளையடித்து, அவர் கத்தி முனையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் காவல் துறை கூறுகின்றனர்.

 

இன்று புதன்கிழமை காலை அந்த பெண் இந்தியாவிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் கூறுகின்றன.

2012 ஆண்டு டெல்லியில் ஒரு பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் பாலியல் வன்முறை மீதான கவனம் அதிகரித்துள்ளது.

அந்த வன்முறை சம்பவம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்து, இந்திய அரசாங்கம் பாலியல் வன்முறை மீதான சட்டங்களை கடுமையாக்கியுள்ளது.

131227170045_india_rape_464x261_ap.jpg

இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டங்கள் -- குற்றங்கள் நின்றபாடில்லை

அந்த பெண் தனது ஹொட்டல் சென்றடைந்தவுடன், அதன் மேலாளரிடம் இந்த சம்பவத்தை கூறியதாகவும், மேலாளர் காவல் துறையை அனுகி பின் காவல் துறை விசாரணை செய்து வருவதாகவும் போலிஸ் துறைக்காகப் பேசவல்ல ராஜன் பகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

டெல்லியின் மத்தியில் உள்ள கனாட் பிலேஸ் என்ற இடத்திற்கு மிக அருகில் உள்ள பஹர்கஞ் அதிக வெளிநாட்டு சுற்று பயணிகள் வந்து போகும் இடமாகும்.

கடந்த மார்ச் மாதம் மத்திய பிரதேசத்தில் ஒரு சுவிட்சர்லாந்து சுற்றுலாப் பயணி, ஒரு கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சம்பவத்தில் அவருடைய கணவரும் தாக்கப்பட்டார். அந்த குற்றத்திற்காக கடந்த ஜூலை மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

 

http://www.bbc.co.uk/tamil/india/2014/01/140115_danishnationalrape.shtml

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்
யோகாசனம் படிக்க நம்பி வந்த நெதர்லாந்து 24 வயசுப் பொம்பிளை பிள்ளையை, சர்மா என்ற யோகாசன வாத்தி முந்தநாள் பாலத்காரம் செய்து தப்பி ஓடுகையில், விமான நிலையத்தில் பிடி பட்டார் என்று நேற்று வாசித்தேன்.
 
இவங்கள், adults only, english படங்களைப் பார்த்து விட்டு வெள்ளை காரர் கலாச்சாரம் அப்பிடித் தான் போல எண்டு நினைச்சு தப்பா நடக்கினம் போல கிடக்குது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

18518544,pd=2,mxw=720,mxh=528.jpg

 

இந்திய மக்களை குறைசொல்லி பிரயோசனமில்லை......இந்திய அரசு இருக்கெல்லே இந்திய அரசு....அதுதான் இந்திய அரசியல்வாதிகளை நடு றோட்டிலை வைச்சு ------------------------- நாடு தானாய் திருந்தும்.

51 வயது மனுசியை கூடவா இவங்கள் விடவில்லை? 

 

கேடு கெட்டவங்கள்.

  • தொடங்கியவர்

டென்மார்க் பெண்ணை பலாத்காரம் செய்த இருவர்கைது - நால்வர் தலைமறைவு

டெல்லி: டெல்லியில் ஹோட்டலில் டென்மார்க் பெண்ணை பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு பேர் தலைமறைவாகிவிட்டனர்.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் கடந்த 1-ந் தேதி டெல்லி வந்தார். சுற்றுலா வழிகாட்டியாக இருந்து வரும் அவருக்கு வயது 51. டெல்லியில் அவர் பகர்கஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டல் அமெக்ஸ் இன்னில் தங்கி இருந்தார்.

திங்களன்று அவர் இந்தியா கேட் அருகே உள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு சென்றிருந்தார். மாலை 4 மணிக்கு வெளியில் வந்த அவருக்கு ஓட்டலுக்கு திரும்பிச் செல்ல வழி தெரிய வில்லை.

கன்னட் பகுதியில் தவித்துக் கொண்டிருந்த அவரை 6 பேர் கும்பல் ரெயில்வே ஆபீசர்ஸ் கிளப் பின் பகுதியில் உள்ள மைதானத்துக்கு கடத்திச் சென்றது. அங்கு கத்தியை காட்டி மிரட்டி 6 பேரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர்.

இரவு 8 மணிக்கு அவர்களிடம் இருந்து விடுபட்ட அந்த பெண் ஒரு ரிக்ஷாவில் ஏறி ஓட்டலுக்கு திரும்பினார். பிறகு டென்மார்க் தூதர் உதவியுடன் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். டென் மார்க் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தனர். அதை ஏற்க மறுத்த அந்த பெண் புதன்கிழமை காலை விமானத்தில் டென்மார்க் புறப்பட்டு சென்று விட்டார்.

இதற்கிடையே டெல்லியில் டென்மார்க் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வே போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதையடுத்து டெல்லி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி டென்மார்க் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரில் 2 பேரை கைது செய்தனர். அவர்கள் பெயர் ராஜா மற்றும் மகேந்தர் என்று தெரிய வந்துள்ளது. மற்ற 4 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

- See more at: http://oneindia.in/tamil/news/india/danish-tourist-gang-raped-2-arrested-191474.html

அடிமையை வைத்து துன்புறுத்திய தெவயானிக்காக அமெரிக்காவை பகைதவர்கள் எங்கே?

  • தொடங்கியவர்

டென்மார்க் பெண்ணுக்கு வாக்கு இல்லை, அதனால் அவரது பலாத்காரம் ஆம் ஆத்மிக்கு பெரிதல்ல: காங். எம்.பி.

டெல்லி: டெல்லி ரயில் நிலையம் அருகே பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட டென்மார்க் பெண் வாக்காளர் இல்லை என்பதால் அவரது விவகாரம் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிதாக தெரியவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீக்சித் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் ஆட்சி செய்யும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் மாணவி ஒருவர் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பூதாகரமாக வெடித்து அனைத்து கட்சிகளும் காங்கிரஸை தாக்கிப் பேசின. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு டெல்லி ரயில் நிலையம் அருகே டென்மார்க்கைச் சேர்ந்த 51 வயது பெண் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சியை தாக்கிப் பேசியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி.யும் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித்தின் மகனுமான சந்தீப் தீக்சித் கூறுகையில்,

இந்த பலாத்கார விவகாரத்தை ஆம் ஆத்மி கட்சி பெரிதாக எடுத்துக் கொள்ளாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த டென்மார்க் பெண்ணுக்கு டெல்லியில் ஓட்டு இல்லை என்பதால் தான் அதை கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். 2012ம் ஆண்டில் நடந்த பலாத்காரத்தை கண்டித்து நடந்த போராட்டங்களில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்றது உடகங்களின் பார்வையை பெறத் தான் என்றார்.

- See more at: http://oneindia.in/tamil/news/india/danish-woman-not-voter-so-rape-not-an-issue-aap-congress-191446.html

  • தொடங்கியவர்

பலாத்கார சம்பவம்.... டெல்லி போலீசுக்கு கேஜ்ரிவால் வார்னிங்

டெல்லி: டெல்லியில் நடைபெறும் பலாத்கார சம்பவங்களை தடுக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் நேற்று முன்தினம் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவரை 8 பேர் கும்பல் ஒன்று நகரின் மையப்பகுதியிலேயே கடத்தி சென்று பலாத்காரம் செய்தது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றங்களை தடுக்க, மக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதனையடுத்து ஏராளமான பேர், நகரின் மைய பகுதியிலேயே ஒரு சிலர் போதை பொருள் விற்கின்றனர் மற்றும் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர் என்று புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து டெல்லி சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பார்தி நேற்று நள்ளிரவு அதிரடியாக ரோந்து பணியில் ஈடுபட்டார்.

மக்கள் புகார் தெரிவித்த இடங்களில் விபசாரத் தடுப்பு பிரிவு போலீசார் எவ்வாறு பணிபுரிகின்றனர் என்பதை ஆய்வு செய்தார். அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரியை சோம்நாத் கண்டித்தார்.

பின்னர் இது குறித்து சோம்நாத் பார்தி கூறுகையில், போலீசார் நான் சொல்வதையும் கவனிப்பதில்லை. பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றார். டெல்லி போலீசார் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மாநில அமைச்சர்களை கண்டுகொள்வதில்லை என ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி போலீசாரை எச்சரித்திருக்கிறார். டெல்லி போலீசார் மெத்தனமாக இருக்கின்றனர் என்றும் பலாத்கார சம்பவத்துக்கு பொறுப்பான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

- See more at: http://oneindia.in/tamil/news/india/delhi-police-a-highly-compromised-force-arvind-kejriwal-191494.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே இதையெல்லாம் தடுக்கமுடியவில்லை.. டில்லி போலிஸ் இனிமேல் வீட்டுக்குப் போகவேண்டியதுதான்..

ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே இதையெல்லாம் தடுக்கமுடியவில்லை.. டில்லி போலிஸ் இனிமேல் வீட்டுக்குப் போகவேண்டியதுதான்..

அப்படியென்றால் எப்படி ஏழை பெண்களை கூட்டா ஸ்டேசனுக்குள் வைத்து கற்பழிப்பது?

http://timesofindia.indiatimes.com/city/jaipur/Woman-claims-SHO-cops-gangraped-her-in-police-station/articleshow/27761471.cms

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியென்றால் எப்படி ஏழை பெண்களை கூட்டா ஸ்டேசனுக்குள் வைத்து கற்பழிப்பது?

 

நீங்கள் இந்திய திரைப்படங்களை  ஒழுங்காக பார்க்கவில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது..... :D

ஆம் ஆத்மி தான் முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

நீங்கள் இந்திய திரைப்படங்களை ஒழுங்காக பார்க்கவில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது..... :D

படம் பார்த்து பண்ணிய ஆராய்ச்சியின் படி இந்தியாவில் பெண்ணுக்கு அநியாயம் நடந்தால்.....

விஜய் நாயை அவிழ்த்துவிட்டு கலைதிருப்பார், சூர்யா இருபது தொன் எடையை இறக்கியிருப்பார், கமலகாசன் சந்தைக்கு போறன் என்று பில்டிங் கூரை ஏறி இருப்பார், அஜித் நான் நிரபராதி என்று கறுப்பு கண்ணாடியுடன் கண்டபாட்டுக்கு சுட்டு கொண்டு ஓடி இருப்பார்!

ஆங், மறந்திட்டன் எந்திரனுக்கு பியூஸ் அடித்து அவரே பெண்ணை கடத்திவிடுவார்.

:D

Edited by விவசாயி விக்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகச் சொன்னீர்கள் விவசாயி பச்சை முடிஞ்சுட்டுது...! :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.