Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழந்தைகளை நாம் அதிகம் வதைக்கிறோமா?

Featured Replies

சில தலைமுறைகள் முன்னர் வரையில் குழந்தைகளுக்குக் கதைகள் ஏராளமாக எளிதாகச் சென்றடைந்தன. தினம் தினம் கதைகள் கேட்பார்கள், சுவையான, சுவாரஸ்யமான கதைகள். விடுமுறை நாட்களின் மாலைகளும் இரவுகளும் பாட்டி சொல்லும் கதைகளால் நிரம்பி இருக்கும். பாட்டியின் வழியே கதை கேட்க அத்தனை ஆர்வமாக இருப்பார்கள் பேரன் பேத்திகள். உணவு உண்ணும் பொழுதில் இருந்து ஆரம்பித்துவிடும் இந்தக் கூற்று, நிலாவினைக்காட்டி தூங்க வைப்பது வரையில் தொடரும். கதை கேட்பது பெரும்பாலும் கூட்டாகவே நிகழும்.

கூட்டுக்குடும்ப வாழ்வின் மிக முக்கியமான அம்சம் பாட்டிமார்கள் வழியே கடத்தப்பட்ட கதைகள் தான். பெரியப்பா பிள்ளைகள், சித்தப்பா மற்றும் மாமன் பிள்ளைகள், பக்கத்துவீட்டுப் பொடிசுகள் என்று பாட்டி அருகே அமர்ந்து கதைக் கேட்கும் காட்சியே ஒரு கவிதை தான். பெரும்பாலும் நீதிபோதனைக் கதைகள், ஆன்மீகக் கதைகள், கடவுள் பக்தி வளர்க்கும் சின்னக் சின்னக் கதைகள், இராமாயண மகாபாரதக் கதைகள், வீரபராக்கிரமக் கதைகள், பேய் கதைகள், நல்லதங்காள் கதை, இவர்கள் வசிக்கும் நிலப்பரப்பில் நிலவும் கதைகள், வரலாறு, நாடோடிக்கதைகள் மேலும் பாட்டிகளின் கற்பனைக்கு ஏற்றவாறு கதைகள் அமையும்.

குழந்தைகளுக்குப் பாட்டிகள் என்றால் கொள்ளப்பிரியம். தாயிடம் கூட சில சமயம் கண்டிப்புகள் நிகழும். ஆனால் பாட்டிகளிடம் கண்டிப்பு வெளிப்படுவது அபூர்வம். எதையும் மன்னித்துவிடுவார்கள், மிகப் பாசமாக இருப்பார்கள், பிடித்த பலகாரங்களை செய்துகொடுப்பார்கள் இதனால் பாட்டிகளிடம் எல்லா குழந்தைகளுக்கும் நெருக்கம் அதிகமாக இருக்கும். இவர்கள் வழியே கதைக் கேட்பது அவர்களுக்குப் பேரானாந்ததைக் கொடுத்து இருந்தது.

மாறிவிட்ட சமூகச் சூழ்நிலைகளால் கூட்டுக்குடும்பம் சிதைந்தது போலவே குழந்தைகளுக்கான கதைக் கேட்டாலும் சிதைந்து போய்விட்டது. மாற்றத்தை குறை சொன்னால் முன்னேற்றம் இருக்காது. தனிக் குடும்பம் - இந்தச் சூழலில் அவர்களுக்கு கதைகள் எப்படிச் சொல்வது என்று சிந்திக்க வேண்டும்.
 
--
 
இருக்கும் சிலபல கூட்டுக்குடும்பங்களில் நிலைமை என்ன? பாட்டிகளும் தாத்தாக்களும் என்ன செய்கிறார்கள்? தொலைக்காட்சிப் பெட்டி முன்னர் இருக்கிறார்கள், சீரியல்களில் முழுகிவிடுகின்றனர் என்று பொதுப்பேச்சு இருக்கிறது. அவர்கள் வாழ்க்கை அவர்களே தீர்மானிக்கின்றனர். அதில் தவறில்லை. அவர்களிடம் கதைச் சொல்ல கூறினாலும் அவர்களிடத்தில் கதைகள் இல்லை என்பதே நிதர்சனம்.

கதைகளுக்கு இருக்கும் சக்தி அபாரமானது. அது சிறுவர்களின் வாழ்க்கைப் போக்கினை மாற்றிய வரலாறுகளை நாம் கேட்டிருக்கிறோம். சத்ரபதி சிவாஜியின் தாயார் கதைகள் மூலம் ஊட்டிய வீரம் அவரை மிகச்சிறந்த வீரனாக மாற்றியது. காந்தியின் தாயார் சிறுவயதில் கூறிய ஹரிச்சந்திரன் கதைகள் அவரை வாழ்க்கை முழுவதும் உண்மையையும் அஹிம்சையையும் கடைபிடிக்க வைத்தது. உலகபிரசித்திப் பெற்றவர்கள் பலரும் தன் பாட்டி அல்லது தாயார் கூறிய கதைகளே பெரிய உந்திசக்தியாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். நமக்கும் இருக்கும் விழுமியங்களுக்கான காரணங்களை ஆராய்ந்தால், அவைக்கான வித்து நாம் கேட்ட கதைகளில் இருந்தே வந்திருக்கும் உண்மை புரியும்.

இன்னும் ஏராளம் ஏராளமான நன்மையும் அவசியமும் கொண்ட கதைகளைச் சொல்ல பாட்டிமார்கள் இல்லை என்று புலம்பல்கள் வேண்டாம். அப்ப கதைகளே வேண்டாமா? ஏன் பாட்டிகள் மட்டும் தான் கதைகளைச் சொல்ல வேண்டும்? குழந்தைகளைப் பெற்றோர்கள் எங்கே சென்றார்கள் ? இனி ஒவ்வொரு பெற்றோரும் கதைச் சொல்லிகளாக மாற வேண்டும்.

தற்காலக் குழந்தைகளை நாம் அதிகம் வதைப்பதாகவே தோன்றுகிறது. ஐந்து வயதில் இருந்து கல்வி பயில

ஆரம்பித்தாலே போதும். அந்தச் சமயத்தில் பென்சில், பேனா பிடித்து அவர்கள் எழுத ஆரம்பித்தாலே போதும். அது தான் சரி என்கின்றனர் கல்வியாளர்கள். அதற்கு முன்னர் வரையில் இனிமையாகக் காலத்தைக் கழிக்கலாம், விளையாடலாம் என்கின்றனர். முதல் வகுப்பிற்குத் தயார் செய்கிறோம் என்று எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி தோன்றின. பின்னர் இந்த வகுப்புகளுக்குத் தயாரிப்பு என்று ப்ரீ கேஜிக்கள் உருவாயின. இன்னும் ஒரு படி மேலே சென்று ‘ப்ளே ஸ்கூல்’ என்று ஒன்று உருவாக்கி இருக்கிறார்கள். பல இடங்களில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் எட்டு மாதம் முதலே கிரெச்களில் விட்டுச் செல்கின்றனர். வேறு வழி இல்லாமலும் தவிப்பது நிதர்சனம்.

குழந்தைகள் அவர்களுடைய குழந்தைத் தன்மையினை கொண்டாடாமல் இருப்பதற்கு ஏற்பாடுகள் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இதில் வாழ்ந்து தான் தீர வேண்டும். சமூக மாற்றங்களை நிகழ்த்தியாக வேண்டும். கல்வியானது வியாபாரிகள் கைகளில் இருந்து பறிக்கப்படவேண்டும். அதே சமயம் தற்காலக் குழந்தைகளுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியாக வேண்டும்.

அந்த மாற்றுகளில் ஒரு நல்ல தீர்வாக கதைக் கூறுவது அமையும். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் வேகமாக வாழ்க்கை ஓட்டத்திற்கு ஒரு நல்ல ப்ரேக் கதைகள். குழந்தைகளுக்குக் கதைச் சொல்லும் அனுபவம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல இதைச் சொல்லும் பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய ஆறுதல். அவர்கள் உலகிற்கு அருகே செல்ல ஒரு நல்ல வாய்ப்பு. நம் குழந்தைகளுக்கு நாம் கதை சொல்லாமல் யார் சொல்லப்போகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் கதைச் சொல்லல் ஏகப்பட்ட தேவைகளக் கொண்டுள்ளது. ஆமாம் நம் குழந்தைகளை நம்மைவிட அதிகமாக யார் நேசித்துவிடமுடியும்.

 

http://tamil.webdunia.com/miscellaneous/literature/articles/1401/16/1140116018_1.htm

இப்பொழுது உள்ள பிள்ளைகளின் உணர்வுதிறன் வளர்சிக்கு ஏற்ப பெற்றோர்களும் வளர்ந்தாலே அவர்களுக்கு ஒரு சிறந்த கதைசொல்லியாக இருக்க முடியும் . இணைப்புக்கு நன்றி நிழல் .

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சக்காலமாய் நிழலியின் இணைப்புக்களில், 'பெடியனில்' இருந்து மனிதனாக மாறிவிட்ட ஒரு 'முன்னேற்றம்' காணப்படுகின்றது!

 

ஒரு பண்பட்ட தந்தையாக, அவர் தனது முகத்தைக் காட்டுவதுடன், அவரது இணைப்புக்களும் ஒரு விதமான 'சமூகப் படிப்பினைகளை' ஊக்குவிக்கும் விதத்தில் அமைகின்றன! 

 

ஆனால், என்னால் இந்தப் 'பெடியன்' மனநிலையிலிருந்து விடுபடுவது, இன்னும் கடினமாக இருக்கின்றது! :D

 

கோவிக்காதையுங்கோ நிழலி !நீங்கள் இன்னும் பெடியன் தான் !  :D

 

எனது அவதானத்தைச் சொன்னேன்! :o

 

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் மகளுக்கு இந்த சித்திரை வந்தால் 3 வயது ஆகப்போகிறது... தமிழை அச்சர சுத்தமாகக் கதைப்பா. ஆனால் ஆற அமர இருந்து கதை கேட்கும் பழக்கமே இல்லை! சரியான குழப்படி....வேலைக்குப்போய் வந்து; பிறகு வீட்டில் சமைத்து, கூட்டி, கழுவி அந்த வேலைகளுக்குள் இவளின் குழப்படிகளை குறும்புகளை ரசிக்க முடியாமல்...... ‘அடி தான் போட வேண்டி இருக்கு... ஒரு தாயாக என்னை நினைத்தே நான் கவலைப்படுகின்றேன். ....

 

கதை கேட்கும் பழக்கத்தை எப்படி ஏற்படுத்துவது என்று தெரியவில்லை. ஆற அமர இருந்து கேட்டாலே ஓரளவு அமைதியான பெண்ணாகிவிடுவாள்.

  • கருத்துக்கள உறவுகள்

என் மகளுக்கு இந்த சித்திரை வந்தால் 3 வயது ஆகப்போகிறது... தமிழை அச்சர சுத்தமாகக் கதைப்பா. ஆனால் ஆற அமர இருந்து கதை கேட்கும் பழக்கமே இல்லை! சரியான குழப்படி....வேலைக்குப்போய் வந்து; பிறகு வீட்டில் சமைத்து, கூட்டி, கழுவி அந்த வேலைகளுக்குள் இவளின் குழப்படிகளை குறும்புகளை ரசிக்க முடியாமல்...... ‘அடி தான் போட வேண்டி இருக்கு... ஒரு தாயாக என்னை நினைத்தே நான் கவலைப்படுகின்றேன். ....

 

கதை கேட்கும் பழக்கத்தை எப்படி ஏற்படுத்துவது என்று தெரியவில்லை. ஆற அமர இருந்து கேட்டாலே ஓரளவு அமைதியான பெண்ணாகிவிடுவாள்.

 

இப்படியான... மூன்று வயது குழந்தையின் குழப்படிகளை... நீங்களும் சேர்ந்து ரசியுங்கள்.

கூடுமானவரை.. உங்கள் நேரத்தை அவர்களுடன் செலவழியுங்கள். எல்லா.. முசுப் பாத்தியையும், படம் எடுத்து வையுங்கள்.

 

வீட்டில் தொலைக்காட்சி இருந்தால்.... பிள்ளையை கிட்ட நெருங்க விடாதீர்கள்.

மழலை பேசத் தொடங்கும் நேரத்தில்... தொலைக்காட்சி மொழி மிக... ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று வயதில் கதைகேட்கும் ஆர்வம் இருக்காது தமிழ்த் தங்கை. ஒரு ஐந்து வயதாவது வரவேண்டும். அதுவரை அவர்கள் போக்கில் விடுவதும் அவர்கள் இதுஎன்ன என்று அவர்களாகக் கேட்கும் விடயங்களைச் சொல்லிக் கொடுப்பதும் நன்று. அவரை வெளியே கூட்டிப் போனீர்கள் என்றால் உங்களுடன் நடந்து கொண்டே கதை கேட்பார்கள்.

எனது மகனுக்கு 6 வயது தான் இப்போது, ஆனா அவர்களுடைய புதிசாலித்தனதிற்க்கு முன்னால் என்னிடம் எதுவுமே இல்லயென்று தான் தோணுது. எனக்கு 6 வயது இருக்கும் போது எனக்கு எனது பெரியவர்கள் சொன்ன கதையை தான் எனது பிள்ளைக்கு நான் சொன்னன், நிலாவில் பாட்டி வடை சுடுறா என்று, ஆனா எனது மகன் என்னப்பார்த்து கேட்கிறான் ஏன் போய் சொல்லிறிஙள் என்று.அதற்கு பிறகு அவனே விளக்கம் சொல்ல ஆரம்பிச்சிட்டான் நிலாவைப்பற்றி. 6 வயதில் அவன் உலகத்தில் உள்ள கண்டங்கள், சமுத்திரங்கள், கனடாவின் மாகாணங்கள் எல்லாம் சொல்லிறான், அதைப்பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு.ஆனா you tube இல் சூர்யன், சந்திரன் ,பூமி பற்றிய documentary பார்க்கிறான். இந்த வயதில் இதெல்லாம் அளவுக்கு அதிகமோ என்ற கவலையாகவும் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகனுக்கு 6 வயது தான் இப்போது, ஆனா அவர்களுடைய புதிசாலித்தனதிற்க்கு முன்னால் என்னிடம் எதுவுமே இல்லயென்று தான் தோணுது. எனக்கு 6 வயது இருக்கும் போது எனக்கு எனது பெரியவர்கள் சொன்ன கதையை தான் எனது பிள்ளைக்கு நான் சொன்னன், நிலாவில் பாட்டி வடை சுடுறா என்று, ஆனா எனது மகன் என்னப்பார்த்து கேட்கிறான் ஏன் போய் சொல்லிறிஙள் என்று.அதற்கு பிறகு அவனே விளக்கம் சொல்ல ஆரம்பிச்சிட்டான் நிலாவைப்பற்றி. 6 வயதில் அவன் உலகத்தில் உள்ள கண்டங்கள், சமுத்திரங்கள், கனடாவின் மாகாணங்கள் எல்லாம் சொல்லிறான், அதைப்பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு.ஆனா you tube இல் சூர்யன், சந்திரன் ,பூமி பற்றிய documentary பார்க்கிறான். இந்த வயதில் இதெல்லாம் அளவுக்கு அதிகமோ என்ற கவலையாகவும் இருக்கு.

அதுமட்டுமில்லை.. அவை எங்களை கூப்பிட்டு வச்சு கதை சொல்லும்போதுதான் இன்னும் கொடுமையா இருக்கும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமில்லை.. அவை எங்களை கூப்பிட்டு வச்சு கதை சொல்லும்போதுதான் இன்னும் கொடுமையா இருக்கும்.. :D

 

அதிலும் பெண் குழந்தைகள் சொல்லும் கதைகளில் கட்டாயம் ஒரு "விட்ச்" இருப்பா! :lol:

  • தொடங்கியவர்

கொஞ்சக்காலமாய் நிழலியின் இணைப்புக்களில், 'பெடியனில்' இருந்து மனிதனாக மாறிவிட்ட ஒரு 'முன்னேற்றம்' காணப்படுகின்றது!

 

ஒரு பண்பட்ட தந்தையாக, அவர் தனது முகத்தைக் காட்டுவதுடன், அவரது இணைப்புக்களும் ஒரு விதமான 'சமூகப் படிப்பினைகளை' ஊக்குவிக்கும் விதத்தில் அமைகின்றன! 

 

 

நிழலிக்கு வயசாகுது என்று சுற்றி வளைச்சு சொல்றாராம் (தனக்கு வயசாகுது இல்லையாம்) :)

 

 

கதை கேட்கும் பழக்கத்தை எப்படி ஏற்படுத்துவது என்று தெரியவில்லை. ஆற அமர இருந்து கேட்டாலே ஓரளவு அமைதியான பெண்ணாகிவிடுவாள்.

 

இலகுவான வழி, பிள்ளைக்கு நீங்கள் வெளியே போயிருக்கும் போது கண்ட விடயங்களை சுவாரசியமாக சொல்வதுதான். நீங்கள் ஒரு நல்ல கதைசொல்லியாக மாறும் போது பிள்ளையும் கதை கேட்கத் தொடங்குவார்.

 

வீட்டில் தொலைக்காட்சி இருந்தால்.... பிள்ளையை கிட்ட நெருங்க விடாதீர்கள்.

மழலை பேசத் தொடங்கும் நேரத்தில்... தொலைக்காட்சி மொழி மிக... ஆபத்தானது.

 

அனுபவர் பூர்வமான உண்மை இது. அப்படியே பிள்ளை தொலைக்காட்சி பார்க்க விரும்பினால் அவர்களின் வயதுக்கேற்ற நிகழ்ச்சிகளை மட்டும் போட்டுக் காட்டுங்கள். (3 வயதுக்குரிய வீடியோக்கள் நிறைய உள்ளன)

மூன்று வயதில் கதைகேட்கும் ஆர்வம் இருக்காது தமிழ்த் தங்கை.

 

தவறு மெசோ அக்கா. தாலாட்டுக் கூட குழந்தைக்கு நாம் சொல்லும் ஒரு வகையான கதை சொல்லுதல் தான். 3 வயது பிள்ளைகள் மிருகங்களையும், பறவைகளையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பிக்க தொடங்குவர். அவர்களுக்கான கதையின் பாத்திரங்களாக இவற்றைச் சொன்னால் கேட்பர். ஆனால் 5 நிமிடங்களுக்கு மேல் வைத்து அறுக்கக் கூடாது. கதை  சொன்ன பிறகு, அவர்களையும் ஒரு கதை சொல்லச் சொல்லிப் பாருங்கள்... தாம் கண்ட விடயங்களை அங்கொன்று இங்கொன்றாக வைத்து பின்னுவர்...

ஆனா you tube இல் சூர்யன், சந்திரன் ,பூமி பற்றிய documentary பார்க்கிறான். இந்த வயதில் இதெல்லாம் அளவுக்கு அதிகமோ என்ற கவலையாகவும் இருக்கு.

 

உங்கள் மகனாவது பரவாயில்லை.. என் மகன் எந்த நேரமும் விலங்குகள் பற்றிய விவரணம் தான் பார்ப்பது. திடீரென்று 'அப்பா வரிக்குதிரை சாய்ந்து படுக்கும் போது எந்தப் பக்கம் படுக்கும்' என்று கேட்டு உயிரை வாங்குவான்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு வயசாகுது என்று சுற்றி வளைச்சு சொல்றாராம் (தனக்கு வயசாகுது இல்லையாம்) :)

 

 

நான் பார்த்த வரை நிழலிக்கு "the curious case of Benjamin Button" மாதிரி வயசு குறைஞ்சு கொண்டு தான் போகுது! முன்னர் முகப்பில "காமம், கலவி, கல்வி" எண்டு போட்டிருந்தது, இப்ப கல்வியக் காணேல்ல, காமமும் கலவியும் தான் எஞ்சி நிக்குது! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.