Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

img1140306046_1_1.jpg
 
FILE

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் இன்று மாலை செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிமுகவை சேர்ந்த யாரும் தங்களை தேடி வராததால் தாங்கள் அக்கூட்டணியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். இரு கட்சிகளும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கப் போவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1403/06/1140306046_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

கொமறேட்ஸ் இது ரொம்ப லேட் கொமரேட்ஸ் 

  • கருத்துக்கள உறவுகள்

இரு வருடங்களின் முன்பு தேர்தல் நேரம் வைகோவுக்கு நேர்ந்தது இன்று உங்களுக்கு இதுதான் ஜெயா ஸ்டைல்.

தனித்துப் போட்டியிட்டால் கட்டுப்பணம் கூட கிடைக்காது. வேலை இல்லாமல் கிடைக்கும் நேரத்தில் கம்யூனிசம் என்றால் என்னவென்றாவது இனிப் படிக்கட்டும். வெறும் மதசார்பின்மை மட்டுமே கொள்கையாக கொண்டு மிச்ச எதற்கும் குரல் கொடுக்காத வெற்று கம்பூனிஸ்டுகள் இவர்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் தி மு க விற்கு ஆதரவு தெரிவித்து தேர்தலில் இருந்து விலகுகிறோம் என்ற அறிவிப்பும் வரும்.

எத்தனை தரம் சூடு கண்டாலும் ஏன் பூனைகள் அடுப்பை நோக்கி வருகின்றன  :blink:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு சீட் கொடுத்ததால்தான் அதிமுக அணியில் இருந்து விலகினோம்: டி. ராஜா

 

 

 

டெல்லி: அதிமுக கூட்டணியில் ஒரு இடம் கொடுக்கப்பட்டதால்தான் வெளியேறினோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா விளக்கம் அளித்துள்ளார். லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் இருந்து வெளியேறுவதாக நேற்று இடதுசாரிகள் அறிவித்தனர். அதற்கு முன்னதாகவே "நண்பர்களாக சேர்ந்தோம்.. நண்பர்களாக பிரிவோம்" என்று அதிமுகவே சொல்லிவிட்டது.

 

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி. ராஜா , இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவிடம் தலா 3 தொகுதிகள் கேட்டன. ஆனால் அ.தி.மு.க ஒரு தொகுதிதான் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தது. தமிழகத்தில்தான் இரண்டு இடதுசாரி கட்சிகளும் இணைந்து செயல்படுகின்றன. தமிழகத்தில் இடதுசாரி கட்சிகளுக்கு பாரம்பரியமாக ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். அதனால் ஒரு இடம் அளிப்பதை ஏற்க இயலாமல் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றார்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/why-left-parties-calls-off-aiadmk-allinace-195078.html

 

  • கருத்துக்கள உறவுகள்

திமுக கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள் வந்தால் ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி

சென்னை: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, ‘ஜனநாயக முற்போக்கு'' கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். முன்னர், வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க கூட் டணியில் இணைந்து போட்டியிட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்து இருந்தன.

 

07-karunanidhi-11-600.jpg

 

 

ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு முன்னதாகவே தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா. அப்போது அவர் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடுக்குப் பிறகு வேட்பாளர்கள் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தலா 4 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தன. அ.தி.மு.க. சார்பில் அவர்களுக்கு தலா ஒரு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கூறப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக இருகட்சியினரும் கூட்டாக அறிவித்தனர். இந்நிலையில், தி.மு.க. தலைமையிலான ‘‘ஜனநாயக முற்போக்கு'' கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று இரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

 

இடதுசாரிகள்..

கேள்வி:- இடதுசாரி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுமா?

பதில்:- அழைப்பு விடுக்க கூடாது என்று ஒன்றுமில்லை. கூட்டணி...

கேள்வி:- வந்தால் கூட்டணியில் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:- அழைப்பு விடுக்கப்பட்டு வந்தால் ஏற்றுக்கொள்வோம்.

இவ்வாறு கருணாநிதி கூறினார். 

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/karunanidhi-invites-communist-parties-195041.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அரசியல் பரத்தையர் தொழிலை விட மோசமானது. இதில் இலங்கை தமிழ்/சிங்களகட்சிகள் எவ்வளவோ மேல்......

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தனித்துப் போட்டியிட இடதுசாரிகள் முடிவு- அதிமுகவுக்கு காரத் எச்சரிக்கை

நாகப்பட்டனம்:

 

 

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முடிவு செய்துள்ளன. தங்களைத் தவிர்த்து விட்டு தமிழகத்தில் அதிமுகவால் வெல்ல முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

 

லோக்சபா தேர்தலில் அதிமுக அணியிலிருந்து வெளியேறி விட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது அடுத்த நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய நாகப்பட்டனத்தில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டது. கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். கீழ வெண்மணியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்க காரத் நாகை வந்தார். இதற்கு முன்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

 

09-prakash-karat6-600.jpg

 

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் பிரகாஷ் காரத் கூறுகையில், வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளன. எங்களது ஆதரவு இல்லாமல், எங்களைத் தவிர்த்து விட்டு தமிழக தேர்தல் களத்தில் அதிமுகவால் வெ்ற்றி பெற முடியாது என்பதை உணர்த்துவோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் ஊழலற்ற, மதச்சார்பற்ற, அரசு அமைப்பதற்கு ஒத்த கருத்துக்கள் கொண்ட கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுவோம் என்றார் காரத்.

 

 

இதன் மூலம் இடதுசாரிகள் தனியாக ஒரு கூட்டணியாக மாறியுள்ளனர். இதைத் தொடர்ந்து அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு கூட்டணிகளுடன் இடதுசாரிகள் தனியாக 5வது அணியாக இணைகின்றனர். இதன் மூலம் தமிழக லோக்சபா தேர்தல் களம் 5 முனைப் போட்டியைச் சந்திக்கிறது.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/cpm-serious-discussion-on-poll-strategy-tn-195171-lse.html

  • கருத்துக்கள உறவுகள்

கம்யூனிஸ்டுகள் தனித்துப் போட்டியிட்டு,
தமது வண்டவாளத்தை, தண்டவாளத்தில் ஏற்றப் போகிறார்கள் போலுள்ளது.
பேசாமல்... இந்தத் தேர்தலை புற‌க்கணிக்கின்றோம் என்று சொன்னால்,
இருக்கிற‌ மரியாதையும், காற்றில் பறக்காமல் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இரு வருடங்களின் முன்பு தேர்தல் நேரம் வைகோவுக்கு நேர்ந்தது இன்று உங்களுக்கு இதுதான் ஜெயா ஸ்டைல்.

 

காங்கிரசும்... தன்னை ஆரும் சேர்ப்பார்களா என்று...

இலவு காத்த கிளியாய்... காவலிருக்கு.

கதர்ச்சட்டையை கண்டவுடன், மற்றக் கட்சிகள் எல்லாம்... தாழ்ப்பாள் போடுறாங்க.

 

xdec26_1698729f.jpg.pagespeed.ic.pF9tLYE 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.