Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுவர்களின் சந்தை சாவகச்சேரியில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
child4.JPG

 child1.JPG

child2.JPG

child3.JPG

child4.JPG

child6.JPG

 

சிறுவர் தொழிற்சந்தையின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று காலை 10.30 மணி முதல் சாவகச்சேரி  டிறீபேர்க் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.

 
செலான் வங்கியினால் தென்மராட்சி பாடசாலை மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நான்கு பாடசாலைகளில் இந்தத் தொழிற்சந்தை நடத்தப்படுகின்றது.
 
இதில் தரம் 5 க்கு உட்பட்ட மாணவர்களால் அவர்களது வீடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 
 
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்வி பிரதிப் பணிப்பாளர் சி.சிவத்துரையும், சிறப்பு விருந்தினராக செலான் வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் வி.சிவகரன் மற்றும் கல்லூரி முதல்வர் து.அருந்தவபாலன்  ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது இலங்கை மகளிர் கூடைப்பந்தாட்ட அணித்தலைவி தர்ஜினியும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
 
இதேவேளை இந்த நிகழ்வில் சிறந்த விற்பனையாளர்கள் மூவருக்கு பரிசில்கள் வழங்கப்பட உள்ளன. குறித்த தொழிற்சந்தையின் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் மாணவர்களின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படவுள்ளது.
 
தொழிற்சந்தையின் மூன்றாம் நாள் நிகழ்வு நாளை வியாழக்கிழமை மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியிலும்  நான்காம் நாள் நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பொறுக்கித்தனமான வணிக, நிதிநிறுவனங்கள் தங்களது விளம்பரத்துக்காக சிறுவர்களைப் பயன்படுத்துகின்றது. இது உள்நாட்டௌ மற்ரும் சர்வதேச சிறுவர்பாதுகாப்பு விதிகளின்படி குற்றச்செயலாகும். இதுபற்றி சம்பந்தப்பட்டோருக்கு கண்டணத்தைத் தெரிவிப்பதும், சட்ட நடவடிக்கை எடுப்பதும், தகமையுடயோராகிய வடக்கு மாகாணசபையினதும் வடக்குக் கிழக்கு அரசியல்கட்சிகளதும் கடமையாகும்.

 

சிறுவர்களை தங்கள் வியாபார உத்திக்காய்ப் பயன்படுத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களை தங்கள் வியாபார உத்திக்காய்ப் பயன்படுத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.


(தலைப்பைப்பார்த்தால்

சிறுவர்களையே  விற்குமாப்போலிருக்கு......) :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இது சம்பந்தமாக பிற நாடுகளைப்பற்றி எனக்கு தெரியாது.
ஆனால் ஜேர்மனியில் நான் இருக்குமிடத்தில் இப்படி சிறுவர் சந்தைகள் இருக்கின்றது.
பழைய புத்தகங்கள் ,பழைய விளையாட்டுப்பொருட்கள் என விற்பனை செய்வார்கள்.இது சிறுவர்களுக்கு அனுபவங்களை கொடுக்கும்.
பல வங்கிகளும் பிள்ளைகளுக்கு பரிசில்களை வழங்கி சேமிப்பை ஊக்குவிக்கின்றன. வருடத்தில் ஒரு நாளை இதற்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கியுள்ளனர்.
 
சாவகச்சேரி சந்தையின் உள்நோக்கம் எனக்குத்தெரியாது. :rolleyes:

சிறுவர்களிடம் சேமிப்பை ஊக்கிவிப்பது நல்ல விடயம், ஆனால் இந்த வழிமுறை சரியா என்பதுதான்  புரியவில்லை ..

  • கருத்துக்கள உறவுகள்

 

இது சம்பந்தமாக பிற நாடுகளைப்பற்றி எனக்கு தெரியாது.
ஆனால் ஜேர்மனியில் நான் இருக்குமிடத்தில் இப்படி சிறுவர் சந்தைகள் இருக்கின்றது.
பழைய புத்தகங்கள் ,பழைய விளையாட்டுப்பொருட்கள் என விற்பனை செய்வார்கள்.இது சிறுவர்களுக்கு அனுபவங்களை கொடுக்கும்.
பல வங்கிகளும் பிள்ளைகளுக்கு பரிசில்களை வழங்கி சேமிப்பை ஊக்குவிக்கின்றன. வருடத்தில் ஒரு நாளை இதற்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கியுள்ளனர்.
 
சாவகச்சேரி சந்தையின் உள்நோக்கம் எனக்குத்தெரியாது. :rolleyes:

 

 

 

அது  இங்கும் உண்டண்ணா

ஆனால் அது எமது வீட்டில் பாவித்த

பாவிக்க முடியாத பொருட்களை விற்பது

அதை brocante  என்பார்கள்  இங்கு.

ஆனால் அது சிறுவர்களுக்கு மட்டுமானதல்ல

குடும்ப  சகிதமாக  விற்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களுக்கு சுய தொழில் வாய்ப்பை பழகப்படுத்துவது வரவேற்கப்பட வேண்டியது..... இங்கே 12 வயதில் மக்டொனால்டுக்கு வேலைக்கு அனுப்புகின்றார்கள் இதெல்லாம் பெரிய விஷயமா.....

பாடசாலைக்கு போகாமல் கடைக்கு அனுப்பிவைத்தால் அது பிழை .

பகுதி நேரமாக அதுவும் சுய கைத்தொழில் பொருட்களை ஊக்கிவிப்பது என்றால் மிக நல்ல விடயம் .

பாரட்டப்பட வேண்டிய விடயம்.

 

சிறுவராக இருக்கும் போதே உழைப்பின் அருமையையும் சேமிப்பிதால் வரும் பயன்களையும் அறிந்து கொண்டால் தான் வளர்ந்து வந்த பின் நியாயமான வழிகளினூடாக உழைக்க மனம் வரும். பதின்ம வயதுகளில் பகுதி நேர வேலைக்கு போகின்றவர்கள் வளர்ந்த பின் நல்ல நிலைக்கு வந்துள்ளதை பலரிடம் அவதானித்துள்ளேன்.

 

அர்ஜுன் கூறுவது போன்று, படிக்க விடாமல் வேலைக்கு அனுப்புவதுதான் தவறு. ஆனால், இங்கு சிறுவர்கள் இதனை பகுதி நேரமாக, அதுவும் பெற்றோர்கள், கல்வி வலய அதிகாரிகள் போன்றோரின் நேரடியான கவனிப்பின் கீழ் செய்வதால் அவர்களது திறமைகள் மேலும் வளரவே செய்யும். சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் வெறுமனே கவர்ச்சி விளம்பரங்களில் தங்கியிருக்காமல் சமூக அக்கறையுடன் கூடிய இத்தகைய விடயங்களின் மூலம் தங்களை பிரபலப்படுத்துவதும் வரவேற்க வேண்டிய விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கலையில் சேமிப்பு என்பது- வங்கியில் பணம், போடுவது, குப்பையில் போடுவதற்க்கு சமன் ..இங்கேயும் அதே நிலைதான் ..ஆனால் சிறுவர்களின் பெயரில் பணம் போடுவதைப் போன்றா மூட்டாள் தனம் உலகில் எதுவும் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அந்த மாதிரி இன்றேஸ்ட்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் அந்த மாதிரி இன்றேஸ்ட்

 

அதைவிட மோசமான பணவீக்கம் ..சின்ன பிள்ளைகளின் பெயரில் போட்டால் திருப்பி எடுக்கிற வயதில் அதட்க்கு டோபிதான் வாங்கி சூப்பலாம் :)

 

எனக்கு தெரிந்தவர்கள் 70/80 இல் காசை போட்டு விட்டு 2000இல் போய் எடுத்தால் , ஒரு காலத்தில் ஒரு பெண்ணுக்கு நகை செய்யக்கூடிய அளவில் இருந்த பணத்த்திக்கு ஒரு கால் பவுன் பென்றானும் செய்ய முடியாமல் இருந்தது ...யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் சிறுவர்களின் பெயரில் பணம் போட வேண்டாம் என்று ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.