Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயே உனக்காயும் விபூசிக்காகவும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தாயே உனக்காயும் விபூசிக்காகவும்.
523617_10152056650593002_309994609_n_zps
 
அம்மா அம்மா என - நீ
அழைத்துச் சொல்லும் துயரத்தின் ஈரம்
நெஞ்சுக்குள் நெருப்பாய் மூண்ட நாட்கள்
இன்று போல.....!
உன்னைக் கைவிடோமென நம்பிய
உனது பிள்ளைகளின் கனவுகள் மீது
உனது நம்பிக்கைகள் து(த)ளிர்த்துக் கொண்டன.
 
உனது கண்ணீரை உனது துயரங்களை
நீ சொல்லியழுகிற போதெல்லாம்
மறுமுனையில் உனக்காய் 
உனது குழந்தைகளுக்காய்
அழுத நாட்கள் அதிகம் தாயே....!
 
நிலம் மீட்கும் போரில் பிள்ளைகள்
விதையாகிப்போன பின்னும்
வீரத்தின் அடையாளமாய் அவர்கள்
விட்டுச் சென்ற கனவுகள் வாழும் நிலத்தில்
வாழும் கனவோடுதானே வன்னியைப் பிரியாமல் 
அங்கேயே வாழ விரும்பினாய்....!
 
ஏன்றாவது திரும்புவான் கடைக்குட்டியென்ற
கனவைத் தானே தாயே என்றென்றும் புலம்புவாய்
அவனது வரவைத் தானே நீ தினமும் ஏந்தினாய்...!
'காணாமற்போனவர்கள் ஒருநாள் வருவார்கள்'
நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் வரிசையில் நீ
அவனைத் தேடித்தானே அலைந்து திரிந்தாய்....!
 
காணாமற்போனவனை நாங்களும் தேடித்திரிந்தோம் 
என்றாவது வருவானென நீ நம்பியது போலவே நம்பினோம்.
இன்றோ உன்னையும் உனது மீதி நம்பிக்கையான
குழந்தையையும் பறிகொடுத்து
உங்களிருவரையும் தேடுகிறோம் தாயே....!
 
மீண்டு வருவீர்களென்ற நம்பிக்கையில்
தாயே உனக்காயும் விபூசிக்காகவும்
மனுக்களோடு மனிதவுரிமையாளர்கள் 
மனங்கள் மட்டுமல்ல – அவர்
கண்களும் திறக்குமென்ற நம்பிக்கையோடு
தாயே உங்கள் விடுதலைக்காக
உலகெங்கும் வேண்டுகிறோம்.....!
 
16.03.2014
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபஞ்சப் பெருவெளியில்
எந்தத் தாய்க்கும் நேராத கொடுமை
இந்தத் தாய்க்கு நேர்ந்திருக்கிறது...

 

பெற்ற மகனைத் தேடியவரைப்
பிடித்துப் போய்ச் சிறையிட்ட
பெருங் கொடுமை...!

 

போதாதற்கு-
பருவம் வந்து பத்தே நாளேயான
பாச மகளையும் கைது செய்திட்ட
பாதகர் கொடுமை...!!

 

விழி திற உலகே,
விரைந்தவர் விடுதலை பெறவே...!!

 

கண்ணீரை வரவழைத்து விட்ட
கவிதை தந்தீர் சாந்தி...
வாழ்த்துக்கள்!
 

தமிழர் நம் வாழ்வைத்
தழுவட்டும் விரைவில் சாந்தி...!!

 
 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தகவல் : காணாமல் போன தனது சகோதரனைத் தேடியழுத 13 வயதுச் சிறுமி விபூஷிகா, கடந்த 14.03.2014 அன்று அவளது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரால் பட்டப்பகலில் கிராமத்தவர் முன்னிலையில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டாள்.

கவிதைக்கான குறிப்பு : எப்பொழுதும் தனது சகோதரனைக் கேட்டு அழுது ஓலமிட்ட அத் தமிழ் சகோதரி இப்பொழுது கடத்தப்பட்டிருக்கிறாள். காவல்துறைத் தலைமையகம் அறிவித்திருப்பதைப் போல அதனை மனிதாபிமானக் கடத்தலா எனத் தீர்மானிப்பது உங்கள் கையிலிருக்கிறது.
vipooshika.jpg

நரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள

விபூஷிகா எனும் சகோதரி

விமானத்தைக் காணவில்லை

உலக வரைபடமே இங்கே பார்

யோசனைகளோடு விம்மியழுது

உதித்த சூரிய மகள் எங்கேயெனச் சொல்

அண்ணன்மார் மூவருக்கு இளையவள்

அன்னையின் விழிகளோ அன்பின் உறைவிடம்

அதுதான் ஐயாக்களே தமிழனின் பாசம்

அதுவன்றி வாழ்க்கையே போராட்டம் தங்கையே

கொடிய கனவொன்றைப் போல

மூத்தவர்கள் இருவர் மரித்திட

முப்பொழுதும் பார்த்திருந்த

இளைய அண்ணனும் கடத்தப்பட

பனையழகு எல்லாம் அழிந்த பூமியில்

ஸ்வரம் இழந்த பாடலானாள்

இரட்சகனைத் தேடியதால் – நரகத்துக்கு

கொண்டு செல்லப்பட்டுள்ள சகோதரியொருத்தி

கற்றறிந்த சிலுவைக் குறிகளுக்கு

சத்தியத்தில் இடமில்லை

குரலெழுப்பிப் பூத்த மலரொன்று

சிதைகிறது இரகசியமாக

அவளுமொரு சிறுமி

இருந்திருக்கக் கூடும் கனவுகள் ஆயிரம்

இன்னும் கண்டிருக்கக் கூடும்

எப்பொழுதாவது ஒரு புன்னகைத் துளியை

உலகம் ஒரு சிறைக்கூடம்

நலிந்தவர்கள் மட்டும் சிக்கிக் கொள்ளும் சதி பீடம்

இன்றும் வலி தந்திருக்கக் கூடும்

ஒரு கொடியவனின் பார்வை

வேண்டுமென்றே கடத்தப்பட்டாள் கறுப்புத் திலகமிட்டவள்

உருவழித்து தீப்பற்றியெரிகிறது எனது இருதயம்

உருகவில்லையா செவிமடுக்கையில் உம் மனங்கள்

நரக நதியினின்றும் மீண்டிட

நீந்திடு விபூஷிகா!

சிங்கள மூலம் : கஸுன் மகேந்திர ஹீனடிகல

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

 

 

free_vipooshika.jpg

http://inioru.com/

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தாயும் மகளும் சேமமாய் விடுதலை  பெற பிரார்த்திப்போம் .

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கையே விபூசிக

தளிர் நீயென்று

உனக்கும் விடுதலை வேண்டியே

போராட நான் புறப்பட்டேன்

ஆயிரம் ஆயிரம் தோழர் தோழியரை

மண்தோண்டி வித்துடலாய்

விதைத்து விட்டு

உங்கள் வாழ்வுக்காய்

நானும் வீழத்துநிந்தேன்,

சாவு என்னை நெருங்கவில்லை

சத்தியமாய் உயிர் பயத்தால்

நான் ஊர் தாட்டவில்லை

அண்ணாவை காட்டுங்கோ

என்று -நீ

அழுத போதெல்லாம்

நெஞ்சமே வெடிக்கிறது

உனக்காக நாம்

போராடப்போனோம்-இன்று

எமக்காக நீ போராடி நின்றாய்

உன் கண்ணீருக்கும்

பதில் வந்துசேரும்.

பயந்து ஓடியவர் என்று

எம்மை சிலர் சொல்லட்டும்.

நாம் பழி தீர்க்குமட்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

அந்த  சிறு கொழுந்துக்காக கவிதை எழுதிய  அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் விடுதலை பெற பிரார்த்திப்போம்

இந்த பிள்ளைக்காக கவிதைகள் தந்தவர்களுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.