Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளியானது பரீட்சை பெறுபேறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
exam_b_0.jpg
2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு முடிவுகள் சற்று முன்னர் வெளியானது. இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகளை http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1b2b6a32c0201239e2165ce255399ee4.jpg

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி யாழ். மாவட்டத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முன்னிலை வகிக்கின்றது.

 
25 இற்கும் அதிகமான மாணவிகள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் 9 மாணவிகள் ஆங்கில மொழியில் பரீட்சைக்கு தோற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
(பெயர் விபரங்கள் விரைவில் ஒன்லைன் உதயனில்)
 

http://www.onlineuthayan.com/News_More.php?id=409232823003269643

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெளியாகியுள்ள 2013 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 100 வீத சித்தியடைந்துள்ளனர்.
இதன் அடிப்படையில் 9 பேர் 9 ஏ சித்தி பெற்றுள்ளனர். இவர்களில் 4 பேர் ஆங்கில மொழி மூலமும் 5 பேர் தமிழ் மொழி மூலமும் தோற்றிச் சித்தியடைந்துள்ளனர்.

அத்துடன் சமயம், தமிழ், கணிதம், வரலாறு, ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், நாடகமும் அரங்கியல், சங்கீதம், சித்திரம், புவியியல், குடியுரிமை கல்வி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், சுகாதாரம், விவசாயம் போன்ற பாடங்களில் 100 வீத சித்தியினையும், ஆங்கில பாடத்தில் 99 வீத சித்தியினையும், விஞ்ஞான பாடத்தில் 99.5 வீத சித்தியினையும், வர்த்தக பாடத்தில் 99 வீத சித்தியினையும் பெற்றுள்ளனர்.

9ஏ சித்திகள் :

தமிழ் மொழி மூலம்

1) கணேசலிங்கம் பிரசாந்
2) தேவகுமாரன் ரஜிந்தன்
3) கனகலிங்கம் சங்கீத்
4) சிவபாலன் சங்கீத்தன்
5) யோகேஸ்வரன் சுவஸ்திகன்

ஆங்கில மொழி மூலம்

6) சத்தியசீலன் கோகுலன்
7) பத்மநாதன் மேஷிகன்
8) சிவயோகம் சரண்யன்
9) ஆனந்தகுமார் வேதாகுலன்

8 ஏ சித்திகள் :

தமிழ் மொழி மூலம்

1) விக்னராஜா நிரோஜன்
2) சோதிலிங்கம் பிரகலாதன்
3) பாலசுந்தரம் தாருஷன்
4) கணேசலிங்கம் அருட்சங்கர்
5) ரவீந்திரன் பானுப்பிரியன்
6) திருமாறன் இளமாறன்
7) கஜரொகானன் கஜானன்
8) பாஸ்கரதேவன் கோபிநாத்
9) குலசிங்கம் கணபாலன்
10) செல்வரட்ணம் லாவர்த்தன்
11) சிவபாதசுந்தரம் மதுரிகன்
12) பரமேஸ்வரன் ரதீஷன்
13) இராமநாதன் சதுர்ஷன்
14) யோகந்திரராஜா சாகித்யன்
15) சிவகுமார் சிவசங்கர்
16) லிங்கரத்தினம் சுபாகரன்
17) இலட்சுமணகுமார் டிலக்ஷிகன்
18) சுகந்தன் டினோஷன்
19) கேதீஸ்வரன் நவநீதன்
20) நிர்மலரட்ணம் நிரோஜன்
21) சுரேஸ்குமார் சிந்துஜன்
22) பரமேஸ்வரன் தர்ஷனன்
23) சதானந்தன் திருமாறன்
24) துரைராஜா துஸ்யந்தன்
25) ஆனந்தராசா கஜானன்
26) மகேந்திரராசா மதுரன்
27) திருச்செல்வம் கவிச்சரன்
28) சண்முககுலகுமாரன் சரவணன்
29) சிற்றம்பலம் சூரியகுமார்
30) செந்தில்குமரன் சுகான்ஜன்
31) ஸ்ரீஸ்கந்த்ராஜா விஜயசாந்
32) ஆறுமுகம் விதுஷாந்
33) முருகேசபிள்ளை டினேஸ்குமார்

ஆங்கில மொழி மூலம்

34) இரவீந்திரன் ஆரூரன்
35) ஜெயக்குமார் ஆர்த்தன்
36) தெய்வேந்திரம் ஆதவன்
37) ஜெயக்குமார் லக்சுஜன்
38) சந்திரகுமார் சிவபிரியன்
39) லோகேஸ்வரன் தினேசன்
40) திருஞானசம்பந்தன் ஆகாசன்
41) விசுவநாதன் கோபிகன்
42) வெற்றிவேல் நிஷோதன்
43) சிவபாலன் பராபரன்
44) சிவராசன் தர்மிகன்

 

http://www.jhc.lk/online/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டத்தில் வேம்படி முன்னிலையில் ; 28 மாணவிகள் 9 ஏ சித்தி

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி யாழ். மாவட்டத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முன்னிலை வகிக்கின்றது.
 
28 மாணவிகள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் 8 மாணவிகள் ஆங்கில மொழியில் பரீட்சைக்கு தோற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில மொழியில்  பரீட்சைக்கு தோற்றியவர்களில் அபிராமி ரவிதரன், ஜனந்தினி சிவபாலன்,லக்சிகா உதயகுமார் இந்துலேகா கிறிஸ்ரியன், ராகவி ராகவன், சங்கவி சதானந்தராஜா, சத்மிகா சிறிகணேசன், டிலுசியா பத்மநாதன் ஆகியோரும் தமிழ் மொழியில் விஸ்ணுபிரியா ரவீந்திரன், பிரியங்கா நித்தியானந்தராஜா, ரபினி சண்முகலிங்கம், அபிராமி நற்குணம், கஜேந்தினி பாலேந்திரராஜா, நிசானி பூலிங்கம், சுபேஸ்கா மோகன்ராஸ், ரவிதாரணி கோகுலாநந்தன், டிலுக்சா அன்ரன் ஜேசுதாஸ், ரக்‌ஷனா ரவீந்திரன், கௌதமி விஜயகுமார், சங்கவி திருச்செல்வம், கௌசியா சுந்தர், சுவஸ்திகா ஞானசம்பந்தன், சஜிந்தா ஜீவரட்ணராஜா, சாருகா சற்குணராஜா, மதுஷா சிவயோகன், சர்மினி ஜெயசீலன், ருக்‌ஷிகா நவரட்ணம், நிலுஜா மகாதேவன் ஆகியோர் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இவர்களில் 8 ஏ சித்தியை 85 மாணவிகளும், 7 ஏ சித்தியை 33 மாணவிகளும் பெற்றுள்ளனர்.

இதேவேளை பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகள் அனைவரும் க.பொ.த உயர்தர கல்வியைத் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=208092823003670890#sthash.mf8hCjmb.dpuf

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைமுடிவுகள்  இன்று (03) வெளியாகிய நிலையில்  யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் 9 பேர் 9 'ஏ' சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இதில் 5 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும், 4 பேர் ஆங்கில மொழிமூலமும் 9 'ஏ' பெறுபேற்றினைப் பெற்றுள்ளனர்.

இதனைவிட 44 மாணவர்கள் 8 'ஏ' பெறுபேறுகளை பெற்றுள்ளதுடன், அவர்களில் 33 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும், 11 பேர் ஆங்கில மொழி மூலமும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/105678--9-9-.html

வாழ்த்துக்கள் மாணவ செல்வங்களே.

தொடர்ந்து எமது உதவிகள் என்றும் இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

கல்வியே  எம்மை  விடுவிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மாணவர்களே!

எனது கிராமத்தில் இருக்கும் ஒரு சிறு பாடசாலை, 10 ம் வகுப்பு வரைதான் இருக்கிறது. பல மாணவர்கள் அருகிலுள்ள பெரிய பிரபல பாடசாலைகளுக்கு 5ம் வகுப்பிற்கு பின்பு போய் விடுவார்கள். மிஞ்சி இருக்கும் மாணவர்கள் தான் மட்டுபடுத்தபட்ட வளங்களை பயன்படுத்தி GCSE பரிட்சை எழுதுவார்கள். அந்த 20 இக்கும் குறைவான மாணவர்களில் ஒருவர் 9A எடுத்துள்ளார், மூவர் 6எ மேல் எடுத்துள்ளார்கள். 13 மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி உடையவர்கள் ஆகுரார்கள். இவர்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.

"கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையில் யா/ பொலிகண்டி இ.த.க. பாடசாலையில் சிவகுமார் தனுஷ்குமார் எனும் மாணவன் 9 A சித்திபெற்றுள்ளதுடன் இன்னும் பல மாணவர்கள் 6 A க்கும் மேலான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். சிற்சபேசன் -7ABC ஜெயப்பிரபா -6A 2BC பிரமிளா- 6A2BS பிரியங்கா -5A 3BC பெற்றுள்ளதுடன் பாடசாலையில் 13 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது" நன்றி பொலிகை.கொம்

  • கருத்துக்கள உறவுகள்
 

முல்லை பாடசாலை க.பொ.த முடிவுகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்றைய தினம் இணையத்தளம் மூலம் கிடைக்கப் பெற்றதையடுத்து முல்லைத்தீவு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து அதியுயர் பெறுபேறுகளாக முல்லை.செம்மலை மகா வித்தியாலய மாணவி செல்வி க.நிதர்சனா மற்றும் முல்லை.வித்தியானந்தா கல்லூரியிலிருந்து சி.விநிஜா, பே.டயல்சியா ஆகியோர் ஒன்பது பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி பெற்றுள்ளனர். 
 
DSC06640.JPG

- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=501522825704781812#sthash.RJJFg7gj.dpuf

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறப்பாக செயற்பட்ட அனைவரையும் வாழ்த்துகிரேன் :D

சென்ட்ரல் கோலிச் இந்தமுறை பிக்-மேட்ச் உடன் கொஞ்சம் கூட மினக்கட்டதால இப்படி 9 A / 8 A எடுக்க முடியாமல் போனதை மனவருத்ததுடன் அறிய தருகிறோம்...( சும்மாதான் - எனக்கு அங்கத்தைய செய்தி ஒன்றும் தெரியாது- :icon_idea:

அதேவேளை வேம்படி போல புலமை பரிசில் சோதினையில் அதி கூடிய பிள்ளிகளை பெற்ற மாணவர்களை மட்டும் எடுக்கும் இந்துக் கல்லூரியும் அடுத்தமுறை குறைந்தது 10 பேருக்காவது 10 A எடுத்து சாதனை படைக்க வாழ்த்துகிறேன் :rolleyes:

மட்டக்களப்பு வின்சன்ட் கல்லூரியில் 18 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்தி

வெளியாகியுள்ள கா.பொ.த.சாதாரண தர முடிவுகளின் படி மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 52 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 79 மாணவர்கள் எட்டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் பி.கோவிந்தராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய கல்லூரியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்று சாதனை படைத்துள்ளதுடன் வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் இருந்து 18 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 21 மாணவர்கள் எட்;டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் புனித மைக்கேல் கல்லூரியில் 14மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 21 மாணவர்கள் எட்டு பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.இதேபோன்று புனித சிசிலியா பெண்கள் பாடசாலையிலும் 14 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 12 மாணவர்கள் 08 பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.

மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இரண்டு மாணவர்கள் ஒன்பது ஏ ;சித்திகளைப்பெற்றுள்ளதுடன் இரண்டு மாணவர்கள் எட்டு பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.

கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் இருந்து தோற்றியவர்களில் இரண்டு மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 10மாணவர்கள் எட்டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.

இதேபோன்று கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் இரண்டு மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் ஏழு மாணவர்கள் எட்டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.

அத்துடன் ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவன் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் இரண்டு மாணவர்கள் எட்டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 44 ஒன்பது ஏ சித்திகளும் 59 எட்டு ஏ சித்திகளும் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 52 ஒன்பது ஏ சித்திகளும் 79 எட்டு ஏ சித்திகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் கோவிந்தராஜா தெரிவித்தார்.

 

http://www.thinakkathir.com/?p=57738

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.