Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக தானே நடுகடலில் வைத்து விசாரிகின்றார்கள் அவர்களுக்கு திருப்த்தியா இருந்தால் ஏற்றுக்கொள்ளுவார்கள் ஆனால் ஆஸ்திரேலியா கேட்க்கும் கேள்வி உங்களுக்கு உயிர் பாதுகாப்பு தான் வேண்டும் என்றால் நீங்கள் புறப்பட்ட இடத்திலையே நின்று இருக்கலாமே ... அதாவது இந்தியாவிலே....

நடுக்கடலில் நீதிமன்றம் அமைக்கப்பட்டிருந்தால் அது வரவேற்கப்பட வேண்டியதே...

மற்றது, இந்தியாவை விட்டுவிட்டு ஏன் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்கள் என்கிற உண்மையையும் அந்த நடுக்கடல் நீதிமன்றம் கண்டு அறிந்திருக்கும் என நம்புகிறேன்.

  • Replies 247
  • Views 12.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ லிங்க் மூலமகாக அதிகாரிகளால் அகதிகளுக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது....

இதான் பிந்தி கிடைத்த செய்தி....p

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளை அவுஸி ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என்றால்.. ஐநாவிடம் கையளிக்கலாம். இவர்களில் உண்மையான அகதிகளுக்கு ஐநாவே நாடுகளோடு தொடர்பு கொண்டு அகதி அந்தஸ்த்தை பெற்றுக் கொடுக்கும்.

https://www.immi.gov.au/media/fact-sheets/61protection.htm

இவர்கள் UN Refugee convention கையெழுத்து இட்டவர்கள். அதன்படி தாங்கள் எவ்வாறு நடப்போம் என்பதையும் அவர்களே தங்கள் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். குறிப்பாக, அகதி கோரிக்கை நிராகரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் மேன்முறையீடு செய்யும் வழிவகைகளையும் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் சொன்னதை அவர்களே பின்பற்றாத நிலைதான் அங்குள்ளது.

மேலும் Refugee Convention இல் கையெழுத்து வைத்தமைக்காக உலக விவகாரங்களில் எவ்வளவு செல்வாக்கு இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது என்பதையும் ஆராய வேண்டும். இராஜதந்திர வியங்களில் பலன் இல்லாமல் கையெழுத்து வைத்திருக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

The Refugees Convention defines a refugee as a person who:

is outside their country of nationality or their usual country of residenceis unable or unwilling to return or to seek the protection of that country due to a well-founded fear of being persecuted for reasons of race, religion, nationality, membership of a particular social group, or political opinionis not a war criminal and has not committed any serious non-political crimes or acts contrary to the purposes and principles of the United Nations.

இது UN Refugee Convention இன் அகதி ஒருவருக்கான வரைவிலக்கணம். இதில் எங்குமே ஐநாவில் பதிந்துவிட்டுத்தான் வரவேண்டும் என்பது இல்லை. வரிசையில் வரவேண்டும் என்பதும் இல்லை. அதெல்லாம் வெறும் அரசியல் காரணிகளே..

  • கருத்துக்கள உறவுகள்

தாங்களும் அகதிகளா வந்ததும் பத்தாமல் இருக்கிறவையையும் அகதிகளா கூப்பிட நினைப்பது தான் மிகப்பெரிய சோகம் ...

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் சொல்வது என்னவென்றால் கோத்தாவிடம் இருந்து இவர் அகதிதான் என்று சான்றிதழ் எடுத்துக்கொண்டு கட்டுநாயக்கா வழியா "முறையா" வாங்கோ. மற்றும் படி no que jumping. செம காமடி.

அளவு கணக்கில்லாமல் அகதிகள் வந்தால் தங்களால் கட்டுபடுத்த முடியாது என்று அவுஸ்திரேலியா முடிவு செய்தால் வேறு என்ன செய்ய முடியும்??? அதற்கும் யாரவது வழி சொல்லுங்கோவன்?

நாங்கள் தமிழர்கள் கப்பலில் மாட்டுபட்டார்கள் என்று குமுறுகிறோம்....அதே கப்பலில் ஆப்கானிகளோ வேறு யாரோ இருந்திருந்தால் என்ன சொல்லுவோம்?

 

அவுசிக்கு தமிழரும் ஒன்று தான் மற்றவர்களும் ஒன்று தான்..இப்போ அவர்கள் அகதிகள் அங்கு வருவதை குறைப்பதற்காக மற்றவர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்புகிறார்கள்....தமிழரை திருப்பி அனுப்புகிறார்கள்....இந்த கப்பலை உள்ளே விட்டாலும் அவர்கள் எல்லாரும் காம்புக்கு தான் போவார்கள்.....

கப்பலை உள்ளே விட சொல்லுபவர்கள்...அவுஸ் அரசுக்கு ஆளுக்கு $10000 ஒவ்வொரு வருசமும் அனுப்புங்களேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலை உள்ளே விட சொல்லுபவர்கள்...அவுஸ் அரசுக்கு ஆளுக்கு $10000 ஒவ்வொரு வருசமும் அனுப்புங்களேன்.....

 

கப்பலால் வந்தவர்களுடன் போய் பேசவே மாட்டார்கள் பிறகு எப்படி பணம் அனுப்புவார்கள்

கப்பலால் வந்தவர்களுடன் போய் பேசவே மாட்டார்கள் பிறகு எப்படி பணம் அனுப்புவார்கள்

 

இன்னொரு புது பழக்கமும் தொடங்கி இருக்கு...கப்பலால் வந்தவர்களின் கையறு நிலையை பயன் படுத்தி சுரண்டவும் சிலர் வெளிகிட்டிருகிரார்கள் (குறைந்த ஊதியத்துக்கு வேலை வாங்கி.....)

தமிழர்களுக்கு தமிழர்கள் செய்வது போல்...நிச்சயமாக மற்ற இனமும் தங்கள் இனத்தவர்களுக்கு இதையே செய்வார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தற்பொழுது உள்ள நிலவரப்ப டி தமிழர்கள் அகதிகளாக வரவேண்டிய அவசியம் இப்பொழுது இல்லை இதுவே எமது அரசின் கருத்து அப்பிடி உயிர் பாதுகாப்பு வேண்டும் என்றால் இவளவு ஆபத்தான கடல் பயணங்களை தாண்டி ஆஸ்திரேலியா வரவேண்டியதும் இல்லை.....அருகில இந்தியாக்கு போகலாம்.....

சும்மா தமிழ் இணையதளங்களில் வரும் செய்திகளை மட்டும் வைத்து நாங்கள் இலங்கை நிலவரங்களை பேசி விட முடியாது.....

மற்றது ஈழத்தமிழர்களை தொடர்ந்தும் அகதிகளாக பார்க்க சர்வதேசம் விரும்பவில்லை காரணம் அங்கே தமிழர்கள் இருந்தால் தான் சர்வதேசத்தால் ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்......

அதுமட்டுமல்லாமல் இந்த படகு இல்லை இனி எந்த படகு வந்தாலும் இது தான் கதி

இந்த படகோடு இந்தோனேசிய பக்கம் இருந்து 50 பேரோட வந்த இன்னும் ஒரு padakai இழுத்துக்கொண்டு போய் இந்தோனேசியா பக்கமே விட்டாச்சு....

சோ யார் என்ன சொன்னாலும் இது தான் எமது அரசின் முடிவு

So better luck next time boat people

ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் அகதிகள் ஆக்குவதில் தான் தமிழ் தேசியம் இருக்கும் என்றால் அந்த தமிழ் தேசியம் தேவையே இல்லை

 

அவுஸின் அகதிகளுக்கான தொடர்பாடல் அதிகாரி சுண்டல்

அவர்கள் தங்கள் நாட்டு அரசின் இலங்கை அகதிகளுக்கான நிலைப்பாட்டை விளக்கமாகத் தந்திருக்கின்றார்.

இதிலை வேடிக்கை என்னவென்றால் அவுஸ் அரசும் இலங்கை அரசும் பேசி அகதிகளுக்கெதிராக எடுக்கும் சட்ட நடவடிக்கைகள்

ஐ நாவின்  அகதிகளுக்கான  சாசனத்திற்கு எதிரானது என்பதை அவர் மறந்துவிட்டார்.

 

பொருளாதார அகதிகள் மட்டுமே இப்போது கப்பல் மூலம் அவுசிற்கு வருகின்றார்களாம். இத்தனை பணத்தை வைத்திருப்பவன் சாவையும் மீறி கப்பல் பயணத்தை மேற்கொள்வானா?

சிங்கள அரசின் கைகளால் கொல்லப்படலாம் என அஞ்சி சிக்கலான கப்பல் பயணத்தை எதிர் நோக்கும் இந்த அகதிகளை பொருளாதார அகதிகள் எனப் பிரச்சாரம் செய்யும் அவுஸின் அகதிகளுக்கான பேச்சாளரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. :icon_idea:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா,அமேரிக்கா,பிரிட்டன், இந்தியா,அவுஸ்ரேலியா, சிறிலங்கா,மற்றும் எனைய நாடுகள் முள்ளிவாய்காலில் என்கவுன்டரில் எமது போராளிகளயும் அதன் தலைமைபீடத்தையும் அழித்தார்களோ அதே போன்றுதான் இந்த அகதி விவகாரமும்......அகதிகள் உருவாகாமல் இருப்பதற்கு ஐநா எதாவது உருப்படியான நட்வடிக்கை எடுக்க வேண்டும் சும்மா சட்டங்களை இயற்றி வைத்து பிரயோசனம் இல்லை......உலகத்தில் தற்பொழுது உருவாகும் அகதிகளை பராமரிக்க ஐ.நாவிலும் பணமில்லை,அகதி அந்தஸ்து கொடுக்கும் நாடுகளிலும் பணமில்லை.......பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உடனடியாக பெற்றுகொடுத்தாலே அகதிகள் உருவாகுவது குறையும்...அகதிகள் உருவாகுவதற்கு முக்கிய காரணமே ஐ.நா.சபை தானோ என எண்ணத்தோன்றுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

அளவு கணக்கில்லாமல் அகதிகள் வந்தால் தங்களால் கட்டுபடுத்த முடியாது என்று அவுஸ்திரேலியா முடிவு செய்தால் வேறு என்ன செய்ய முடியும்??? அதற்கும் யாரவது வழி சொல்லுங்கோவன்?

நாங்கள் தமிழர்கள் கப்பலில் மாட்டுபட்டார்கள் என்று குமுறுகிறோம்....அதே கப்பலில் ஆப்கானிகளோ வேறு யாரோ இருந்திருந்தால் என்ன சொல்லுவோம்?

அவுசிக்கு தமிழரும் ஒன்று தான் மற்றவர்களும் ஒன்று தான்..இப்போ அவர்கள் அகதிகள் அங்கு வருவதை குறைப்பதற்காக மற்றவர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்புகிறார்கள்....தமிழரை திருப்பி அனுப்புகிறார்கள்....இந்த கப்பலை உள்ளே விட்டாலும் அவர்கள் எல்லாரும் காம்புக்கு தான் போவார்கள்.....

கப்பலை உள்ளே விட சொல்லுபவர்கள்...அவுஸ் அரசுக்கு ஆளுக்கு $10000 ஒவ்வொரு வருசமும் அனுப்புங்களேன்.....

இது கையெழுத்து வைத்தவர்கள் யோசிக்கவேண்டிய விடயம். இதுதான் பிரச்சினை என்றால் இதையல்லவா காரணமாகக் கூற வேண்டும்??

சுவிசிலும்தான் அகதிகள் வந்து இறங்குகிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அங்கு குடியுரிமை கிடைப்பது குறைவு. அதேபோல அவுஸ்திரேலியாவும் சட்ட்தை இறுக்கமாக வைக்கலாம். செலவு கட்டுபடியாகாவட்டால் ஐநா மூலமாக ஒரு நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மக்கள் குடியிருப்புக்களில் பிரச்சினை பண்ணுகிறார்கள் என்றால் இன்ன இத்தில்தான் வாழவேண்டும் என்று அனுமதிக்கலாம்.

இவை எதுவுமே சரிவராவிட்டால், ஐநாவின் அகதிகள் சாசனத்தில் இருந்து வெளியேறலாம். ஆனால் அவ்வாறு வெளியேறாமல் இவர்கள் பின்னுக்கு நிற்பதற்கு ஏதோ ஒரு வலுவான காரணம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இது கையெழுத்து வைத்தவர்கள் யோசிக்கவேண்டிய விடயம். இதுதான் பிரச்சினை என்றால் இதையல்லவா காரணமாகக் கூற வேண்டும்??

சுவிசிலும்தான் அகதிகள் வந்து இறங்குகிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அங்கு குடியுரிமை கிடைப்பது குறைவு. அதேபோல அவுஸ்திரேலியாவும் சட்ட்தை இறுக்கமாக வைக்கலாம். செலவு கட்டுபடியாகாவட்டால் ஐநா மூலமாக ஒரு நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மக்கள் குடியிருப்புக்களில் பிரச்சினை பண்ணுகிறார்கள் என்றால் இன்ன இத்தில்தான் வாழவேண்டும் என்று அனுமதிக்கலாம்.

இவை எதுவுமே சரிவராவிட்டால், ஐநாவின் அகதிகள் சாசனத்தில் இருந்து வெளியேறலாம். ஆனால் அவ்வாறு வெளியேறாமல் இவர்கள் பின்னுக்கு நிற்பதற்கு ஏதோ ஒரு வலுவான காரணம் உள்ளது.

 

போரபோக்கில் ஐ.நா சபையே அப்படி செய்தாலும் செய்யும்..... :D

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலில் வருகின்றவர்கள் பொருளாதார அகதிகளே இல்லை என்று வாத்தியார் ஐயா சொன்ன ஜோக்க கேட்டு உருண்டு பிரண்டு சிரிக்கிறன்.....:D

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் அரசிற்கு ஆதரவு  கொடுப்பதாக  நினைத்து இலங்கை அரசின் பிரச்சாரத்திற்குத் துணை போகாமல் தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக அவர்களுக்குப் புகலிடம் அளிக்கக் கோரி அவுஸ் நாட்டில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் முன்வரவேண்டும்.

 

மனித  நேய அமைப்புக்களின் உதவியுடன்அவுஸின் அகதிக்கான  சட்டங்களை திருத்தி அமைக்க நிகழ்ச்சி நிரல்களைத் தயார்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

MOST of the 1300 asylum-seekers on Manus Island appear likely to have their refugee claims rejected as Tony Abbott backs a warning from Papua New Guinea that a “good majority” of the detainees are economic migrants.

The Prime Minister’s remark came as he denied holding any “specific” talks with his PNG counterpart Peter O’Neill about a move late on Friday to shut down a judicial inquiry into the treatment of people at the Manus Island detention centre.

தொழில் கட்சி ஆட்சியில் இருந்தால் உடனே அகதிக்கான அந்தஸ்த்து கிடைத்திருக்கும் என்று சொனவர்கள் 2013 ஆம் ஆண்டு தொழில் கட்சி வெளிவிவகார அமைச்சர் சொன்னதை வாசிக்கவும்....

:D

“People are coming here, not now as a result of persecution, but because they’re economic refugees who have paid money to people smugglers.” - Foreign minister Bob Carr, Meet the Press, June 9.

Labour foreign minister at that time :D

Edited by SUNDHAL

ஆஸ்ரேலியாவில் தற்போது வசிப்பவர்களில் பெரும்பாலானோர் சென்று குடி ஏறியவர்கள் தான், கப்பலில் வரும் அகதிகளுக்கும் புகலிடம் கொடுத்தால் என்ன குறைந்து போடுவார்களா ?   

ஐ.நா,அமேரிக்கா,பிரிட்டன், இந்தியா,அவுஸ்ரேலியா, சிறிலங்கா,மற்றும் எனைய நாடுகள் முள்ளிவாய்காலில் என்கவுன்டரில் எமது போராளிகளயும் அதன் தலைமைபீடத்தையும் அழித்தார்களோ அதே போன்றுதான் இந்த அகதி விவகாரமும்......அகதிகள் உருவாகாமல் இருப்பதற்கு ஐநா எதாவது உருப்படியான நட்வடிக்கை எடுக்க வேண்டும் சும்மா சட்டங்களை இயற்றி வைத்து பிரயோசனம் இல்லை......உலகத்தில் தற்பொழுது உருவாகும் அகதிகளை பராமரிக்க ஐ.நாவிலும் பணமில்லை,அகதி அந்தஸ்து கொடுக்கும் நாடுகளிலும் பணமில்லை.......பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உடனடியாக பெற்றுகொடுத்தாலே அகதிகள் உருவாகுவது குறையும்...அகதிகள் உருவாகுவதற்கு முக்கிய காரணமே ஐ.நா.சபை தானோ என எண்ணத்தோன்றுகிறது

 

 

இதுக்குத் தான் அறிஞ்ஞர் அண்ணா அப்பவே சொன்னார்..

 

I know

You know

You know..  U.N.O 

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் அரசிற்கு ஆதரவு கொடுப்பதாக நினைத்து இலங்கை அரசின் பிரச்சாரத்திற்குத் துணை போகாமல் தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக அவர்களுக்குப் புகலிடம் அளிக்கக் கோரி அவுஸ் நாட்டில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் முன்வரவேண்டும்.

மனித நேய அமைப்புக்களின் உதவியுடன்அவுஸின் அகதிக்கான சட்டங்களை திருத்தி அமைக்க நிகழ்ச்சி நிரல்களைத் தயார்படுத்த வேண்டும்.

சுண்டலை யாரும் இப்படி அவமானப்படுத்தியதில்லை
  • கருத்துக்கள உறவுகள்

MOST of the 1300 asylum-seekers on Manus Island appear likely to have their refugee claims rejected as Tony Abbott backs a warning from Papua New Guinea that a “good majority” of the detainees are economic migrants.

The Prime Minister’s remark came as he denied holding any “specific” talks with his PNG counterpart Peter O’Neill about a move late on Friday to shut down a judicial inquiry into the treatment of people at the Manus Island detention centre.

தொழில் கட்சி ஆட்சியில் இருந்தால் உடனே அகதிக்கான அந்தஸ்த்து கிடைத்திருக்கும் என்று சொனவர்கள் 2013 ஆம் ஆண்டு தொழில் கட்சி வெளிவிவகார அமைச்சர் சொன்னதை வாசிக்கவும்....

:D

“People are coming here, not now as a result of persecution, but because they’re economic refugees who have paid money to people smugglers.” - Foreign minister Bob Carr, Meet the Press, June 9.

Labour foreign minister at that time :D

 

அகதிகள் விடயத்தில் தொழில்கட்சியும் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. பசுமைக்கட்சியினர்தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். முன்பு அகதியாகவந்த தமிழர்களில் பலர் இப்பொழுது அகதியாகவரும் தமிழர்களைப் பார்த்து திருப்பி அனுப்பவேண்டும் சொல்வதினைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதிலும் துடுப்பாட்ட அணிக்கு நான் சிறிலங்கன் என்று சொல்லி ஆதரவு தருவதும், அகதிகள் விடயத்தில் நான் அவுஸ்திரெலியன் என்று சொல்வதும் வேடிக்கையாக இருக்கிறது

இது கையெழுத்து வைத்தவர்கள் யோசிக்கவேண்டிய விடயம். இதுதான் பிரச்சினை என்றால் இதையல்லவா காரணமாகக் கூற வேண்டும்??

சுவிசிலும்தான் அகதிகள் வந்து இறங்குகிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அங்கு குடியுரிமை கிடைப்பது குறைவு. அதேபோல அவுஸ்திரேலியாவும் சட்ட்தை இறுக்கமாக வைக்கலாம். செலவு கட்டுபடியாகாவட்டால் ஐநா மூலமாக ஒரு நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மக்கள் குடியிருப்புக்களில் பிரச்சினை பண்ணுகிறார்கள் என்றால் இன்ன இத்தில்தான் வாழவேண்டும் என்று அனுமதிக்கலாம்.

இவை எதுவுமே சரிவராவிட்டால், ஐநாவின் அகதிகள் சாசனத்தில் இருந்து வெளியேறலாம். ஆனால் அவ்வாறு வெளியேறாமல் இவர்கள் பின்னுக்கு நிற்பதற்கு ஏதோ ஒரு வலுவான காரணம் உள்ளது.

 

இன்னும் சிலவருடங்களில் எல்லா வெள்ளை நாடுகளும் இதை (அகதிகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சட்டங்களை) மாற்றி அமைக்க போகிறார்கள் :)

அதற்கான முன்னேற்ப்பாடு தான் இது....

இது எல்லாம் முஸ்லீம்களால் வந்தது --அவர்கள் தான் குடியேறும் நாடெல்லாம் முக்காடோடு திரிந்து எல்லாரையும் கலவரப்படுத்துகிறார்கள்..சீக்கியர்கள் தொப்பியோடு திரிந்தாலும் தமது சமயத்தை மற்றவர்கள் மேல் திணிப்பது இல்லை....ஆனால் முஸ்லீம்கள் உலகை புனிதமாக்குகிறோம் என்று எல்லாருக்கும் பிரச்னை

 

தெருவுக்கு தெரு கோயிலும் மசூதியும் முளைத்தால்...வெள்ளைகள் எவ்வளவு காலம் தான் பொறுக்க முடியும் :)

ஆஸ்ரேலியாவில் தற்போது வசிப்பவர்களில் பெரும்பாலானோர் சென்று குடி ஏறியவர்கள் தான், கப்பலில் வரும் அகதிகளுக்கும் புகலிடம் கொடுத்தால் என்ன குறைந்து போடுவார்களா ?   

 

எவ்வளவு காலத்துக்கு...எத்தனை பேருக்கு????

இங்குள்ளவர்களுக்கு 40%வரி விதித்து வருபவர்களுக்கு செலவு செய்வதென்றால்....எத்தனை பேருக்கு செய்ய சொல்லுகிறீர்கள்????

  • கருத்துக்கள உறவுகள்

தெருவுக்கு தெரு கோயிலும் மசூதியும் முளைத்தால்...வெள்ளைகள் எவ்வளவு காலம் தான் பொறுக்க முடியும் :)

 

குறைந்தது ஒரு முன்னூறு ஆண்டுகள். அவ்வளவு காலம் எங்களை ஆண்டிருக்கிறார்கள்தானே..!  :wub:

ஐ.நா,அமேரிக்கா,பிரிட்டன், இந்தியா,அவுஸ்ரேலியா, சிறிலங்கா,மற்றும் எனைய நாடுகள் முள்ளிவாய்காலில் என்கவுன்டரில் எமது போராளிகளயும் அதன் தலைமைபீடத்தையும் அழித்தார்களோ அதே போன்றுதான் இந்த அகதி விவகாரமும்......அகதிகள் உருவாகாமல் இருப்பதற்கு ஐநா எதாவது உருப்படியான நட்வடிக்கை எடுக்க வேண்டும் சும்மா சட்டங்களை இயற்றி வைத்து பிரயோசனம் இல்லை......உலகத்தில் தற்பொழுது உருவாகும் அகதிகளை பராமரிக்க ஐ.நாவிலும் பணமில்லை,அகதி அந்தஸ்து கொடுக்கும் நாடுகளிலும் பணமில்லை.......பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உடனடியாக பெற்றுகொடுத்தாலே அகதிகள் உருவாகுவது குறையும்...அகதிகள் உருவாகுவதற்கு முக்கிய காரணமே ஐ.நா.சபை தானோ என எண்ணத்தோன்றுகிறது

 

ஐ.நா நுளம்புக்கு மருந்து அடிக்க மட்டும் தான் சரி.... :)

அரசியல் விடயங்கள் அது எப்போதுமே அமெரிக்க-ஐரோப்பியரின் ஊது குழழ்

குறைந்தது ஒரு முன்னூறு ஆண்டுகள். அவ்வளவு காலம் எங்களை ஆண்டிருக்கிறார்கள்தானே..!  :wub:

 

என்கிற படியால் தான் அவர்கள்  mathematical modelling செய்து பார்த்து விட்டு இப்போ எல்லாத்தையும் குறைக்க...நிறுத்த பார்க்கிறார்கள் :)

இப்படியே விட்டால் 50-60 வருடங்களில் முஸ்லீம்களும் , வேறு நாட்டில் பிறந்தவர்களுமே கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை ஆளும் நிலைக்கு வருவார்கள் :)

 

அமெரிக்காவில் இப்போதே 30% hispanic :) :)

 

இந்த மேற்கு நாடுகள் இந்த அகதி என்று படம் காட்ட வெளிக்கிட்டது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து யூதரையும், படித்தவர்களையும் தங்கம் மற்றும் விலையுயர்ந்த செல்வத்தோடு  ஓடிவர சொல்ல தான்....ஆனால் அவர்களுக்கு தெரியுமா... ஆசியாவில் இருந்து வந்து கொத்துரொட்டி கடையும், இடியப்ப கடையும், சவர்மா கடையும்  போடுவீங்கள் என்று... :)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களைக் கொன்ற சிங்கள அரசுடன் துடுப்பாட்டம் விளையாடிவருகிறது அவுஸ்திரெலியா, இங்கிலாந்து நியூசிலாந்து. ஆனால் முகாம்பே அரசு வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நடந்ததினால்(இத்தனைக்கும் ஒரு வெள்ளையும் சாகவில்லை) சிம்பாவேக்கு எதிரான துடுப்பாட்டத்தினைப் புறக்கணித்தது அவுஸ்திரெலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து. சிம்பாவேயில் இருந்து படகுகளில் வெள்ளைகள் வந்தால் அவுஸ்திரெலியா என்ன செய்யும்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அகதி விண்ணாணமெல்லாம்.. மேற்கு நாடுகள் உலக அரங்கில் தாங்கள் செல்வாக்கு செலுத்த எடுத்துக்கொண்ட விடயங்களாகவே நான் பார்க்கிறேன். சோவியத் யூனியன், சீனா, தற்போதைய ரஷ்யா இவற்றை உலக அரங்கில் ஜனநாயக விழுமியங்கள் அற்றவர்களாக காட்டுவதற்கு இந்த அகதி உள்ளெடுப்பு உதவுகிறது. 

 

மேலும் வியட்நாம் போரின் பின்னர் ஏராளமான வியட்நாம் அகதிகள் அமெரிக்காவுக்கு வந்தார்களாம். அதுபோல ஈராக் போரின் பின்னும் ஈராக்கியர்கள் வந்தார்கள். ஈரானியர்களும் வந்துள்ளார்கள். இவர்கள் அமெரிக்காவின் கைப்பாவைகளாக செயற்படுவது கண்கூடு.

 

ஈழப்பிரச்சினையிலும் பல அமைப்புகள் மேற்குலக சார்பு நிலை எடுத்து அரசியல் செய்கிறோம் என்று சொல்வது வாடிக்கை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.