Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டுமாயின் தெற்கிலுள்ள தமிழர்களை என்ன செய்வது?

Featured Replies

வடக்கில் உள்ள சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டுமென்றால் தெற்கில் உள்ள தமிழர்களை என்ன செய்வது? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்திற்கு ஏற்ப வடக்கை நிர்வகிக்க முடியாது என்று தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இலங்கையில் எங்கும் வாழ்வதற்கு சிங்களவர்களுக்கு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டார்.
PIC-1.jpg_3.JPEG
 
இராணுவ முகாம் என்ற பெயரில் வடக்கில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போதே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
 
வடக்கு தமிழ் மக்களின் பகுதி, தெற்கு சிங்கள மக்களின் பகுதியென எல்லைகள் பிரிக்கப்படவில்லை வடக்கில் வாழ்கின்ற சிங்கள மக்களை விடவும் அதிகமான தமிழர்கள் தெற்கில் வாழ்கின்றனர். வடக்கில் எவ்வாறு சிங்கள மக்கள் வாழ முடியாதென குறிப்பிடுவது? யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தது சிங்களவர்கள். வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்வது சிங்கள மக்கள். அவ்வாறு இருக்கையில் சிங்களவர்கள் வாழ முடியாது என குறிப்பிடுவது எவ்விதத்திலும் நியாயமற்றதாகும்.
 
வடக்கில் சிங்கள குடியேற்றம் இடம்பெறவில்லை. வடக்கில் சிங்கள மக்கள் வாழ்ந்த நிலங்கள் மற்றும் அவர்களின் உரிமைகளையே மீண்டும் பெற்றுக் கொடுக்கின்றனர். யுத்த காலகட்டத்தில் பல்லாயிரக் கணக்கான சிங்கள மக்களை விடுதலைப் புலிகள் விரட்டியடித்தனர். அவர்களின் நிலங்களை யார் மீண்டும் பொற்றுக் கொடுப்பது. இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் தனி ஆட்சியினை நடத்த முயற்சிக்கின்றது. தனி ஈழத்தினை உருவாக்கி மீண்டுமொரு பிரிவினைக் கோட்பாட்டை உருவாக்குகின்றனர். எனவே, அதற்கு இடமளிக்க கூடாது.
 
வடக்கில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற வேண்டும் என்றால் தெற்கில் வாழும் தமிழர்களை என்ன செய்வது? அவர்களையும் வெளியேற்றவா கூட்டமைப்பு சொல்கின்றது? இன்று நாட்டில் பிரிவினை வாதத்தினை தூண்டுவதும் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை பரப்புவதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரேயாவர். அவர்களை கட்டுப்படுத்தினால் நாட்டில் பிரிவினை வாதம் தடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் தமிழர்கள் படைப்பலம்.. காடைப் பலம்.. கஞ்சா பலம்.. பிக்கு பலம்.. சிங்கள அரச பலம்.. என்று பலங்களோடு.. வாழவில்லை மிஸ்டர் சம்பிக்க. படிச்ச படிப்புக்கு மூளையை யூஸ் பண்ணி யோசிக்கனும். இல்ல சும்மா கிடக்கனும்.

 

வடக்கில் யாரும் சொந்த உழைப்பில்  காணி விற்றால் வாங்கி.. வாழலாம். ஆனால் இராணுவத்தை ஏவி.. அந்த நிலத்துக்கு பூர்வீகமான மக்களை அடித்து விரட்டி.. நிலங்களை அபகரித்து.. அங்கு குடியேற்றங்கள் செய்வதை தான் தவறு என்கிறார்கள்.

 

விடுதலைப்புலிகள் கூட சுதந்திர தமிழீழம் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல என்று எப்பவோ கூறிவிட்டார்கள். சிங்கள மக்கள்.. சிங்கள பேரினவாத அரசின் கருவிகளாக இல்லாமல்.. பொதுமக்களாக அவர்களுக்குரிய உரிமையோடு வாழ தமிழீழத்தில் உரிமை உள்ளது.. என்பதையும்.. சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் புரிந்து கொள்வது அவசியம்.

 

இப்படியே தெற்கு தமிழர்கள்.. என்று.. இனவாதம் பேசி..எதுவும் ஆகாது. 1983 இல் நீங்கள் உருவாக்கிய நிலை தான் அந்த நாட்டில் பிரிவினையை ஆளப்படுத்தியது என்பதை உணர இன்றும் மறுக்கிறீர்கள். அங்கு தான் தவறே உள்ளது. எல்லா தவறும் உங்களிடம் தான்.. மிஸ்டர் சம்பிக்க.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசித்து சம்பிக்க மனம் மாறி விட்டதாயும் இனி இனவாதமே பேசுவதில்லை என்று கூறியதாய் கொழும்புச் செய்திகள் சொல்கிறன.

தமிழே தெரியா இனவாதிக்கு யாழில் பதில் சொல்வானேன்? அறப்படிச்சு.....

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசித்து சம்பிக்க மனம் மாறி விட்டதாயும் இனி இனவாதமே பேசுவதில்லை என்று கூறியதாய் கொழும்புச் செய்திகள் சொல்கிறன.

தமிழே தெரியா இனவாதிக்கு யாழில் பதில் சொல்வானேன்? அறப்படிச்சு.....

 

அறப்படிச்சது தாங்கள் தான்.. அரைகுறையா யோசிக்கிறீர்கள்.

 

சம்பிக்கவை நோக்கி இதனை சொல்லத்தக்கவர்கள் யாழை வாசிக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்..! உங்களுக்குத் தெரியாததது.. எங்கள் குற்றமல்ல. உங்களின் அறியாமை..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லீட்டாளும்? சும்மா போங்கண்ணா, இந்த வயசிலயும் கிச்சி கிச்சு மூட்டி விளயாடுறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பிக்க இப்ப இல்லைன்னாலும் சுடலை ஞானம் பிறக்கும் போது சிந்திச்சுப் பார்க்க உதவலாம். உங்களுக்கு அதுவும் பிறக்க வாய்ப்பில்லைப் போலத் தெரியுது. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சங்கமித்த  இங்கு வந்தால் கூட

இந்தளவுக்கு எழுதமாட்டார்........... :D

 

அவரது வளர்ப்புகள் அதைப்பார்த்துக்கொள்வார்கள் :lol:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சங்கமித்த  இங்கு வந்தால் கூட

இந்தளவுக்கு எழுதமாட்டார்........... :D

 

அவரது வளர்ப்புகள் அதைப்பார்த்துக்கொள்வார்கள் :lol:

 

இவர்களை, அவ்வளவுக்கு...... சிங்களவன், மூளைச் சலவை செய்து வைத்திருக்கின்றான். :D  :lol:

இதை வாசித்து சம்பிக்க மனம் மாறி விட்டதாயும் இனி இனவாதமே பேசுவதில்லை என்று கூறியதாய் கொழும்புச் செய்திகள் சொல்கிறன.

தமிழே தெரியா இனவாதிக்கு யாழில் பதில் சொல்வானேன்? அறப்படிச்சு.....

 

இப்ப என்ன சொல்லவாறியள்...???

 

யாழுக்கை கருத்து சொல்லுறது வேலையத்த வேலை எண்டோ இல்லை சொல்லுறதாக இருந்தால்  நீங்கள் மட்டும் கருத்து சொல்லலாம் எண்டா....??? 

 

ஒண்டுக்கும் புண்ணியம் இல்லை எண்டால் உங்கட பொன்னான நேரத்தை இதுக்கை ஏன் நிண்டு செலவளிக்கிறீயள்...?? 

 

என் கருத்தையும் சொல்லிப்போடுறன்...   சம்பிக்கவுக்கு தமிழிலை மட்டும் இல்லை  சிங்களத்தில் சொன்னாலும் இது புரியாது...  

 

உதாரணத்துக்கு இங்கை தமிழர் எண்டு சொல்லிக்கொண்டு யாழ்ப்பாணத்திலை பாண் வாங்கி சுதந்திரமாக சாப்பிடுகிறம் எண்டு சுதந்திரம் எண்டால் என்ன எண்டு வகுப்பெடுக்கிற அரை குறையள் மாதிரி தான்... 

 

வெலங்கிச்சா.....?? 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்லவாறியள்...???

 

யாழுக்கை கருத்து சொல்லுறது வேலையத்த வேலை எண்டோ இல்லை சொல்லுறதாக இருந்தால்  நீங்கள் மட்டும் கருத்து சொல்லலாம் எண்டா....??? 

 

ஒண்டுக்கும் புண்ணியம் இல்லை எண்டால் உங்கட பொன்னான நேரத்தை இதுக்கை ஏன் நிண்டு செலவளிக்கிறீயள்...?? 

 

என் கருத்தையும் சொல்லிப்போடுறன்...   சம்பிக்கவுக்கு தமிழிலை மட்டும் இல்லை  சிங்களத்தில் சொன்னாலும் இது புரியாது...  

 

உதாரணத்துக்கு இங்கை தமிழர் எண்டு சொல்லிக்கொண்டு யாழ்ப்பாணத்திலை பாண் வாங்கி சுதந்திரமாக சாப்பிடுகிறம் எண்டு சுதந்திரம் எண்டால் என்ன எண்டு வகுப்பெடுக்கிற அரை குறையள் மாதிரி தான்... 

 

வெலங்கிச்சா.....?? 

 

 

பச்சை  முடிஞ்சுது. :D  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களை, அவ்வளவுக்கு...... சிங்களவன், மூளைச் சலவை செய்து வைத்திருக்கின்றான். :D  :lol:

 

சிறித்தம்பி!! சிங்களவன்  மூளைச்சலவை செய்யேல்லை......ஒட்டுமொத்தமாய் கழட்டியே விட்டுட்டான்... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி!! சிங்களவன்  மூளைச்சலவை செய்யேல்லை......ஒட்டுமொத்தமாய் கழட்டியே விட்டுட்டான்... :lol:  :D

 

சிங்களம்  இரண்டு  வழிகளை  மட்டுமே  தமிழருக்கு விட்டு வைத்துள்ளது

 

1- போராடி  அழிதல்

2- காலில் விழுந்து  அழிதல்

 

அவர்கள் இரண்டாவதை  தெரிவு செய்துள்ளார்கள்  அவ்வளவு  தான். 

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி!! சிங்களவன்  மூளைச்சலவை செய்யேல்லை......ஒட்டுமொத்தமாய் கழட்டியே விட்டுட்டான்... :lol:  :D

 

குமாரசாமி அண்ணை.....

முந்தி மூளையிலை,  "நட்டை" தான்.... சாதுவாக லூசாக்கி விடுவார்கள்.

இப்போ மூளையையே.... கழட்டுற அளவுக்கு. சிங்களவன், கெட்டிக்காரனாகி விட்டான். :D  :icon_idea:

Edited by தமிழ் சிறி

குமாரசாமி அண்ணை.....

முந்தி மூளையிலை, "நட்டை" தான்.... சாதுவாக லூசாக்கி விடுவார்கள்.

இப்போ மூளையையே.... கழட்டுற அளவுக்கு. சிங்களவன், கெட்டிக்காரனாகி விட்டான். :D:icon_idea:

சிங்களவன் அவர்களது மூளையை கழட்டவில்லை, என் என்றால் கழட்ட அவர்களிடம் மூளை என்ற ஒரு விடயம் இருந்தால் தானே!!!!

சிங்களம்  இரண்டு  வழிகளை  மட்டுமே  தமிழருக்கு விட்டு வைத்துள்ளது

 

1- போராடி  அழிதல்

2- காலில் விழுந்து  அழிதல்

 

அவர்கள் இரண்டாவதை  தெரிவு செய்துள்ளார்கள்  அவ்வளவு  தான். 

 

எங்கட ஆக்களுக்குதான் சனம் ஊரிலை இருந்து தப்பி வெளிநாடு வாறது பிடிக்காது  சிங்களத்தை எதிர்க்கிறதும் பிடிக்காது...  அதை தானே சொல்ல வாறியள்...?? 

தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் விவாதம் நடத்துவது யாழ்களத்தில் தான். தலைப்பை பற்றி கவலையில்லை ஆளாளுக்கு தனக்கு பிடிக்காவதவர்களை திட்டி, கேலி செய்து தீர்க்க வேண்டியது தான். வீட்டில் பொழுது போகாமல் விட்டால் அல்லது வேலை இல்லாமல் விட்டால் இங்கு வந்து திட்டி சுகம் பெறவேண்டியது தான்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் விவாதம் நடத்துவது யாழ்களத்தில் தான். தலைப்பை பற்றி கவலையில்லை ஆளாளுக்கு தனக்கு பிடிக்காவதவர்களை திட்டி, கேலி செய்து தீர்க்க வேண்டியது தான். வீட்டில் பொழுது போகாமல் விட்டால் அல்லது வேலை இல்லாமல் விட்டால் இங்கு வந்து திட்டி சுகம் பெறவேண்டியது தான்.

 

 

உங்கள் குற்றம்சாட்டுதல் உண்மை  தான்

ஆனால் இதற்குள் நானும் இருப்பதால் ஒன்றை  மட்டும் என்னால் உறுதியாக  சொல்லமுடியும்

அதற்காக  நீங்கள் குறிப்பிட்ட   காரணத்துக்குள் நானில்லை

 

ஆனால் ஒன்றை  நீங்கள் புரிந்து கொள்ளணும்

குழப்பவாதிகள்  இருக்கும் எந்த இடமும் அமைதியாக  இருக்க  வாய்ப்பில்லை

அது குடும்பமாக இருந்தாலென்ன

கூட்டமாக  இருந்தாலென்ன??? :(  :(  :(

ஒழுங்காக  இருப்பவரும்  

அமைதியை  இழக்க  வைக்கப்படுவர்....... :(

உங்கள் குற்றம்சாட்டுதல் உண்மை தான்

ஆனால் இதற்குள் நானும் இருப்பதால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும்

அதற்காக நீங்கள் குறிப்பிட்ட காரணத்துக்குள் நானில்லை

ஆனால் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளணும்

குழப்பவாதிகள் இருக்கும் எந்த இடமும் அமைதியாக இருக்க வாய்ப்பில்லை

அது குடும்பமாக இருந்தாலென்ன

கூட்டமாக இருந்தாலென்ன??? :(:(:(

ஒழுங்காக இருப்பவரும்

அமைதியை இழக்க வைக்கப்படுவர்....... :(

நான் கூறிய கருத்து தலைப்போடு நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தமான விடயங்களைப்பற்றி சமூகப்பொறுப்போடும் இன மொழிப்பற்றுதலோடும் reality யைப் புரிந்து கள உறுப்பினர்களை ஓரளவுக்காவது மதித்து கருத்து தெரிவிக்கும் உறவுகளுக்கானதல்ல.

எந்த பொறுப்பும் இல்லாது குறிப்பிட்ட கள உறுப்பினருடன், அல்லது வேறு ஒரு சிலருடன் உள்ள காழ்புணர்வவு அல்லது விரோதம் காரணமாக முழு இனத்தையுமே எள்ளி நகையாடும் அல்லது இழிவுபடுத்தும் விதமாக கருத்து என்ற பெயரில் எதையோ எழுதுபவர்களையே நான் சுட்டிக்காட்டினேன். எனது கருத்து தங்களை புண்படுத்தியருந்தால் மன்னிக்கவும்.

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.