Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காசும் கடவுளும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகனுக்கு  பரீட்சை

மாரியம்மன் கோயிலுக்கு போயிருந்தேன்

 

பரீட்சையில தேர்வாகணும்

நானும் கும்பிட்டு

மகனையும் கும்பிடவைத்து

அர்சனை

ஐயருக்கு காசு

உண்டியலில் பணம் என வெளியில்வரும்  போது

ஒரு ஐம்பது ஈரோக்கள்  காலி..

 

வெளியில் வந்ததும்

மகன் சொன்னான்

உங்களிடம் காசு  இருந்ததால்

நான் பாசாகிவிடுவேன்

காசு இல்லாதவன்.......?

பணம் இருப்பவர்களிடம்தான் கல்வியும் போய்ச் சேருகிறது.  

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=144394#entry1034599

 

 

  • கருத்துக்கள உறவுகள்

-----

வெளியில் வந்ததும்

மகன் சொன்னான்

உங்களிடம் காசு  இருந்ததால்

நான் பாசாகிவிடுவேன்

காசு இல்லாதவன்.......?

 

பெடியள்.... உசாராத்தான் இருக்கிறார்கள்.

பாவம்... ஐயரும் பிழைத்துப் போகட்டுமே... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணம் இருப்பவர்களிடம்தான் கல்வியும் போய்ச் சேருகிறது.  

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=144394#entry1034599

 

 

இது  உண்மைதானே  தமிழச்சி

 

அந்தக்காலத்திலிருந்து

பணம் படைத்தோரே படித்து உயர் பதவிகளுக்கு சென்றனர்.

பணம்

எல்லாவற்றையும் தீர்மானிக்கத்தொடங்கி  பல நூற்றாண்டுகளாகிவிட்டன.

 

எனது மூத்தவன்

இன்னும் ஒரு வருடம் வெளிநாட்டில் படித்தால்

தனது வருமானத்தை இரட்டிப்பாக்கமுடியும் என்றான்

ஆனால் என்னால் இதற்கு மேல் முடியாது

எனது விரல் வீக்கத்துக்கு இதுவே பெரிது

 

ஆனால் பணமுள்ளவனால் தொடர்ந்து  படித்து

மேலே செல்லமுடியும்...

 

நன்றி  வருகைக்கும்  கருத்துக்கும் சகோதரி

இது  உண்மைதானே  தமிழச்சி

 

அந்தக்காலத்திலிருந்து

பணம் படைத்தோரே படித்து உயர் பதவிகளுக்கு சென்றனர்.

பணம்

எல்லாவற்றையும் தீர்மானிக்கத்தொடங்கி  பல நூற்றாண்டுகளாகிவிட்டன.

 

எனது மூத்தவன்

இன்னும் ஒரு வருடம் வெளிநாட்டில் படித்தால்

தனது வருமானத்தை இரட்டிப்பாக்கமுடியும் என்றான்

ஆனால் என்னால் இதற்கு மேல் முடியாது

எனது விரல் வீக்கத்துக்கு இதுவே பெரிது

 

ஆனால் பணமுள்ளவனால் தொடர்ந்து  படித்து

மேலே செல்லமுடியும்...

 

நன்றி  வருகைக்கும்  கருத்துக்கும் சகோதரி

 

தாயகத்தில் முன்னர் அந்த நிலை இருக்கவில்லையே.   பணம் படைத்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படித்தார்கள்.  பணம் இல்லாதவர்கள் படித்து முடித்ததும் தாயகத்திலேயே வேலை செய்தார்கள். 

 

வெளிநாடுகளில் இந்தப் பிரச்சனை இல்லை விசுகு.  இங்கு அரசாங்கமே லோன் கொடுத்துப் படிப்பிக்க வைக்கிறது.  நாமே பணம் கொடுத்துப் படிக்கும் நிலையிருந்திருந்தால் வெளிநாட்டிற்கு வந்த அனைவருமே தொழிற்சாலைகளில்தான் வேலை பார்த்திருப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் முன்னர் அந்த நிலை இருக்கவில்லையே.   பணம் படைத்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படித்தார்கள்.  பணம் இல்லாதவர்கள் படித்து முடித்ததும் தாயகத்திலேயே வேலை செய்தார்கள். 

 

வெளிநாடுகளில் இந்தப் பிரச்சனை இல்லை விசுகு.  இங்கு அரசாங்கமே லோன் கொடுத்துப் படிப்பிக்க வைக்கிறது.  நாமே பணம் கொடுத்துப் படிக்கும் நிலையிருந்திருந்தால் வெளிநாட்டிற்கு வந்த அனைவருமே தொழிற்சாலைகளில்தான் வேலை பார்த்திருப்போம்.

 

எனது சகோதரி  ஒருவர் லண்டனில் உள்ளார்

அவரது வருமானத்துக்கும் மேலாக ரியூசன் காசு கட்டுகின்றார்

தொலைபேசி  எடுத்தால்  மூச்சு வாங்குவார்

கேட்டால்

ஓட்டம்

ஓட்டம்

ஓட்டம்

 

ஒரு ரியூசன் முடிய அடுத்தது

ஒரு நாள் பேசிப்போட்டேன்

பொடியள் படித்து வாறதுக்குள்ள நீ போய்ச்சேரப்போறாய் என.

வகுப்பில் முழுப்பேரும்  ரியூசன் படிக்கும் போது

தனது பிள்ளை பின் தங்கிவிடுமாம்.. :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ரியூசன் எண்டால் என்னெண்டு தெரியாத ஆக்கள் லண்டனிலை எங்கடை சனம் வீட்டை ஒரு கிழமைக்கு இருந்தால் காணும். :D
 
பெடியளுக்கு சாப்பிடவே நேரமில்லை. :D

எனது சகோதரி  ஒருவர் லண்டனில் உள்ளார்

அவரது வருமானத்துக்கும் மேலாக ரியூசன் காசு கட்டுகின்றார்

தொலைபேசி  எடுத்தால்  மூச்சு வாங்குவார்

கேட்டால்

ஓட்டம்

ஓட்டம்

ஓட்டம்

 

ஒரு ரியூசன் முடிய அடுத்தது

ஒரு நாள் பேசிப்போட்டேன்

பொடியள் படித்து வாறதுக்குள்ள நீ போய்ச்சேரப்போறாய் என.

வகுப்பில் முழுப்பேரும்  ரியூசன் படிக்கும் போது

தனது பிள்ளை பின் தங்கிவிடுமாம்.. :(  :(  :(

 

இது அவர்கள் தங்கள் பிள்ளைகளில் நம்பிக்கையில்லாத் தன்மையைக் காட்டுகிறது.  லண்டனில், உயர்தரத்தின்போது மட்டுமே ரியூசன் தேவைப்படும்.  இவர், ஒடும் ஓட்டத்தை நிறுத்திவிட்டு, வீட்டில் பிள்ளைகள் படிக்கும்போது கவனிப்பதோடு, சின்ன வயதிலிருந்தே அவர்களது மதிப்பெண்களை அவதானித்து வந்திருந்தால் இந்த ஓட்டம் தேவையிருக்காது.  ஆனால், எம்மவர்கள் மத்தியில் ரியூசன் என்பது ஊறிப்போய் விட்டது.  அடுத்த தலைமுறையோடாவது இது அழியட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இருப்பதை விட.... இங்கிலாந்தில் "ரியூசன்" கலாச்சாரம் அதிகம் இருப்பதை.. அவதானித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பக்கம் காசும் கல்வியும் இந்தப்பக்கம் காசும் கடவுளும்
இடையில் எல்லாவற்றுக்கும் மூளை என ஒன்று இருக்க வேண்டும்
அது வேலை செய்யாவிட்டால் எத்தனை கடவுளிடம் சென்றாலும் எத்தனை 

காசைக் கொட்டினாலும் எந்தப் பிரயோசனமும் இல்லை.


பகுத்தறிவாளிகள் பலர்  பகுத்து அறிபவர்கள் சிலரே :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பக்கம் காசும் கல்வியும் இந்தப்பக்கம் காசும் கடவுளும்

இடையில் எல்லாவற்றுக்கும் மூளை என ஒன்று இருக்க வேண்டும்

அது வேலை செய்யாவிட்டால் எத்தனை கடவுளிடம் சென்றாலும் எத்தனை 

காசைக் கொட்டினாலும் எந்தப் பிரயோசனமும் இல்லை.

பகுத்தறிவாளிகள் பலர்  பகுத்து அறிபவர்கள் சிலரே :)

 

 

உதையெல்லாம் கடந்து  போயாச்சு வாத்தியார்

படிக்காதவனையும் காசு படிப்பிக்கும் என்று நிரூபிக்கப்பட்டு பலவருடமாகிறது....

  • கருத்துக்கள உறவுகள்

மகனுக்கு  பரீட்சை

மாரியம்மன் கோயிலுக்கு போயிருந்தேன்

 

பரீட்சையில தேர்வாகணும்

நானும் கும்பிட்டு

மகனையும் கும்பிடவைத்து

அர்சனை

ஐயருக்கு காசு

உண்டியலில் பணம் என வெளியில்வரும்  போது

ஒரு ஐம்பது ஈரோக்கள்  காலி..

 

வெளியில் வந்ததும்

மகன் சொன்னான்

உங்களிடம் காசு  இருந்ததால்

நான் பாசாகிவிடுவேன்

காசு இல்லாதவன்.......?

முருகன் சிவனுக்கு உபதேசித்தான்!

 

சிவன் வெட்கப்படவில்லை!

 

சிரித்தான்....!

 

அவனுக்குள் ஒரு குரல் ...!

 

வயதா முக்கியம்?

 

வார்த்தைகள் தானே முக்கியம்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகன் சிவனுக்கு உபதேசித்தான்!

 

சிவன் வெட்கப்படவில்லை!

 

சிரித்தான்....!

 

அவனுக்குள் ஒரு குரல் ...!

 

வயதா முக்கியம்?

 

வார்த்தைகள் தானே முக்கியம்! :D

 

முருகனது  உபதேசம்

சிவனுக்கு வெட்கத்தை தரவில்லை

ஓங்கி குட்டியது போலிருந்தது

வயதா முக்கியம்

வார்த்தைகள் தானே முக்கியம்

அதனால் தான் இங்கு படைத்தோம் அதை :icon_idea:

 

நன்றியண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.